search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜயசாந்தி"

    • விஜயசாந்தி பா.ஜ.க.வை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
    • தென்னிந்தியாவின் அரசியல் எப்போதும் சுயமரியாதைக்கான பொது உணர்வுகளால் வழி நடத்தப்படுகிறது.

    திருப்பதி:

    நடிகை விஜயசாந்தி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அதன் பிறகு பல மாதங்களாக அவர் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. மேலும் அரசியல் குறித்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை.

    தெலுங்கானாவில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் விஜயசாந்தி பா.ஜ.க.வை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது :-

    தென்னிந்தியாவின் அரசியல் எப்போதும் சுயமரியாதைக்கான பொது உணர்வுகளால் வழி நடத்தப்படுகிறது. இந்த கொள்கை நீண்ட காலமாக தொடர்கிறது. இந்திய நிலப்பரப்பில் தென்னிந்திய மாநிலங்கள் தேடும் சுயமரியாதையை பா.ஜ.க. புரிந்து கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் தெலுங்கானாவிற்கு பி.ஆர்.எஸ். கட்சி தேவை இல்லை என்ற பா.ஜ.க.வினர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    • கடந்த சட்டசபை தேர்தவில் 19 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
    • நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது 2018 மற்றும் 2019 தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

    ஐதராபாத்:

    தென்னிந்திய சினிமாக்களில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை விஜயசாந்தி. பாரதிய ஜனதாவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இவர், பின்பு அம்மா தெலுங்கானா என்ற பெயரில தனிக்கட்சியை தொடங்கினார்.

    அதன்பிறகு தனது கட்சியை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைத்துக்கொண்டார். பின்பு கடந்த 2014-ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து வெளியேறிய நடிகை விஜயசாந்தி, காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசில் தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்த அவர், கடந்த 2020-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இணைந்தார்.

    அதில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரசில் அவர் தேர்தல் பிரசார குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் நடிகை விஜயசாந்தி காங்கிரசுக்கு சென்றிருப்பது, பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து நடிகை விஜயசாந்தி கூறியிருப்பதாவது:-

    எனது அரசியல் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவுக்கு எதிரான போராட்டம். ஆனால் பாரதிய ஜனதாவும், பி.ஆர்.எஸ்.(பாரத் ராஷ்டிர சமிதி)-ம் ரகசிய உறவில் உள்ளனர். அதனால் தான் சந்திரசேகரராவ் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தும், மத்திய அரசு அவரிடம் விசாரணை கூட நடத்தவில்லை.

    இப்போது அவருக்கு எதிராக கடுமையாக போராடுவது காங்கிரஸ் மட்டும் தான். அதனால் தான் காங்கிரசில் சேர்ந்துள்ளேன். கடந்த சட்டசபை தேர்தவில் 19 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 2019-ல் அவர்களில் 12 பேர் பி.ஆர்.எஸ்.-ல் சேர்ந்தனர்.

    அப்போது சந்திரசேகர ராவுக்கு எதிராக காங்கிரசால் போராட முடியாது என்பது தெரிந்ததால், பாரதிய ஜனதாவில் சேர்ந்தேன். தற்போது ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் பலமாக போராடி வருகிறது.

    நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது 2018 மற்றும் 2019 தேர்தலில் நான் போட்டியிடவில்லை. வருகிற லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தான் முடிவு செய்யும். சந்திரசேகரராவ் என்னை பின்தொடர்ந்து அழிக்க பார்க்கிறார்.

    இவ்வாறு நடிகை விஜயசாந்தி கூறியிருக்கிறார்.

    • விஜயசாந்தி, தனது ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவர் ஜி.கிஷன் ரெட்டிக்கு அனுப்பினார்.
    • தெலுங்கானாவில் ஒரு மாதத்திற்குள் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 4-வது முக்கிய தலைவர் இவர்.

    நடிகை விஜயசாந்தி பா.ஜ.க. தேசிய செயற்குழு பொறுப்பு வகித்து வந்தார். அவர் பா.ஜ.க.வில் இருந்து நேற்று முன்தினம் விலகினார்.

    தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 2 வாரங்கள் உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு மேலும் ஒரு பெரிய அடியாக இது கருதப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்காமல் இருந்த விஜயசாந்தி, தனது ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவர் ஜி.கிஷன் ரெட்டிக்கு அனுப்பினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

    விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகிய நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே முன்னிலையில் நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார்.

    தெலுங்கானாவில் ஒரு மாதத்திற்குள் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 4-வது முக்கிய தலைவர் இவர்.

    • 1997-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கட்சியின் மகளிர் பிரிவு பொதுச்செயலாளராக விஜயசாந்தி பணியாற்றினார்.
    • தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 180-க்கும் மேற்பட்ட படங்களில் விஜயசாந்தி நடித்துள்ளார்.

    திருப்பதி:

    நடிகை விஜயசாந்தி பா.ஜ.க. தேசிய செயற்குழு பொறுப்பு வகித்து வந்தார். அவர் பா.ஜ.க.வில் இருந்து நேற்று விலகினார்.

    தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 2 வாரங்கள் உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு மேலும் ஒரு பெரிய அடியாக இது கருதப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்காமல் இருந்த விஜயசாந்தி, தனது ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவர் ஜி.கிஷன் ரெட்டிக்கு அனுப்பினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளார். தெலுங்கானாவில் ஒரு மாதத்திற்குள் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 4-வது முக்கிய தலைவர் இவர்.

    முன்னாள் எம்.பி.க்கள் கோமதிரெட்டி, ராஜகோபால் ரெட்டி, ஜி.விவேகானந்த் மற்றும் மற்றொரு தலைவர் எனுகு ரவீந்தர் ஆகியோர் பா.ஜ.க.வில் இருந்து விலகினர்.

    இதில் ராஜகோபால் ரெட்டியும் விவேகானந்தரும் காங்கிரசில் இணைந்தனர்.

    தெலுங்குத் திரைப்படங்களில் அதிரடி வேடங்களில் நடித்ததற்காக 'லேடி அமிதாப்' என்று பிரபலமான விஜயசாந்தி, 1997-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கட்சியின் மகளிர் பிரிவு பொதுச்செயலாளராகப் பணியாற்றினார்.

    தெலுங்கானாவுக்கு தனி மாநிலம் கோரி போராடுவதற்காக, 2005-ல் பா.ஜ.க.வில் இருந்து விலகி தெலுங்கானா என்ற தனி அமைப்பை உருவாக்கினார். பின்னர் அவர் சந்திரசேகர ராவ் கட்சியில் இணைந்து 2009-ல் மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    ஆகஸ்ட் 2013-ல், தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, டி.ஆர்.எஸ். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக விஜயசாந்தியை இடைநீக்கம் செய்தது.

    பின்னர் காங்கிரஸில் சேர்ந்த அவர், 2014 தேர்தலில் மேடக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    2020-ல் பா.ஜ.க.வுக்குத் திரும்பினார். தற்போது அதில் இருந்து விலகியுள்ளார்.

    விஜயசாந்தி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கஜ்வேல் மற்றும் காமிரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட போவதாக சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
    • சந்திரசேகர ராவ் கட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு எப்போதும் தயங்குவதில்லை என பா.ஜ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் மாதம் 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

    முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இந்த முறை கஜ்வேல் மற்றும் காமிரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சந்திரசேகரராவை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாக பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை விஜயசாந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    சந்திரசேகர ராவ் கட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு எப்போதும் தயங்குவதில்லை என பா.ஜ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள். எனவே சந்திரசேகரராவுக்கு எதிராக நான் காமரெட்டியில் போட்டியிட வேண்டும் என விரும்புவதில் தவறில்லை.

    எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம் அல்ல என்றாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில வியூக முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

    சந்திரசேகர ராவ் போட்டியிடும் தொகுதியில் முதிராஜ் சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் நடிகை விஜயசாந்தியை களமிறக்கவதற்கான கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சசிகலா தனது வருங்கால அரசியல் பயணம் குறித்து விஜயசாந்தியுடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    சென்னை:

    ஜெயலலிதாவின் தோழி சசிகலா தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    அப்போது அவர் அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்குவேன் என்றும், அ.தி.மு.க.க்கு தான் தலைமை தாங்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாகவும் கூறி வருகிறார்.

    அ.தி.மு.க. தலைவர்கள் தற்போதும் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், சிலர் மட்டுமே தன்னை எதிர்க்கிறார்கள் என்றும் சசிகலா கூறி இருந்தார்.

    இப்படி அ.தி.மு.க.வை மீட்க சசிகலா ரகசிய திட்டம் தீட்டி காய்களை நகர்த்தி வருகிறார்.

    இது தொடர்பாக கடந்த வாரம் சசிகலா அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுக்கு தான் நிச்சயம் தலைமை தாங்குவேன். அதற்கான நம்பிக்கை 100 சதவீதம் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சசிகலாவை பா.ஜனதா முன்னாள் எம்.பி.யான விஜயசாந்தி சமீபத்தில் ரகசியமாக சந்தித்துள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த நேரத்தில் தி.நகரில் உள்ள இல்லத்தில் வெளிப்படையாக சந்தித்த விஜயசாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ரகசியமாக சந்தித்துள்ளார்.

    இந்த சந்திப்பின்போது சசிகலாவின் வருங்கால அரசியல் பயணம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை பாரதிய ஜனதா கட்சி கட்டுப்படுத்தி வருவதாக கூறப்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருப்பவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகவே விஜயசாந்தி சசிகலாவை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


    உடல்நலம் குன்றி சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் பதவியை இழந்திருந்த நேரத்தில் தன்னை முதல் - அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பியதாக விஜயசாந்தி கூறியுள்ளார். #Jayalalithaa #Vijayashanti
    சென்னை:

    சினிமா, அரசியல் இரண்டிலும் தடம் பதித்தவர் நடிகை விஜயசாந்தி.

    ஐதராபாத்தில் வசித்து வரும் இவர் இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இதற்கு முன்னர் பாரதிய ஜனதாவில் இருந்தார்.

    ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ படம் விஜயசாந்தியை பட்டி தொட்டியெல்லாம் தெரிய வைத்தது. ரஜினி, கமலுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் இப்போது முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவோடு நெருங்கிய நட்பு பாராட்டிய விஜயசாந்தி, சென்னை வரும்போது போயஸ்கார்டன் சென்று அவரை சந்தித்து பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

    உடல்நலம் குன்றி சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் பதவியை இழந்திருந்த நேரத்தில் தன்னை முதல் - அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பியதாக விஜயசாந்தி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த அதிரடி பேட்டி வருமாறு:-



    எனது திரைப்படங்களை பார்த்து ஜெயலலிதா பல முறை என்னை பாராட்டியுள்ளார். இதனால் எங்களுக்குள் நட்பு அதிகரித்தது. போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். 2 காலிலும் கட்டை விரல்களில் நகங்கள் நீக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது. சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். நான் ஆறுதல் கூறி நம்பிக்கையுடன் பேசினேன்.

    அப்போது பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருந்தது. ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன்.

    அரசியல் தொடர்பாகவும் என்னோடு மனம் விட்டு பேசுவார். சொத்து குவிப்பு வழக்கு பிரச்சனையால், ஜெயலலிதா பதவி இழந்திருந்த நேரத்தில் அ.தி.மு.க.வில் சேருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்.

    அப்போது ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு நம்பிக்கையான ஒருவரை எதிர் பார்க்கிறேன் என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் அப்போதைய சூழலில் என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தெலுங்கானாவுக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அதனால் தமிழக அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது என்று கூறி விட்டேன்.

    இதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா அதன் பின்னரே ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கினார். நான் இருக்க வேண்டிய இடத்தில்தான் அப்போது ஓ. பன்னீர்செல்வம் இருந்தார்.

    சசிகலாவுடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. நமக்கு வேண்டப்பட்டவர் கஷ்டத்தில் இருக்கும் போது, அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். அவரது கணவர் நடராஜன் மறைந்ததும் மன்னார்குடி சென்று அஞ்சலி செலுத்தினேன்.

    பெங்களூர் சிறையில் சசிகலாவையும் சந்தித்து பேசினேன். இதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்றப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்தி. மோடியின் சூழ்ச்சி.

    ரஜினி சீக்கிரம் அரசியலுக்கு வர வேண்டும். தமிழக மக்களின் சார்பில் நானும் அவருக்கு அழைப்பு விடுக்கிறேன். கமலை பொறுத்த வரையில் அரசியலுக்கு வந்து விட்டார். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு விஜயசாந்தி கூறியுள்ளார். #Jayalalithaa #Vijayashanti
    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை நடிகை விஜயசாந்தி சந்தித்து பேசினார். #vijayashanthi #sasikala

    பெங்களூர்:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவரை துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான விஜயசாந்தி சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார்.

    இதுகுறித்து சிறை வட்டார தரப்பில் கூறும்போது, நடிகை விஜயசாந்தி நேற்று முன்தினம் சசிகலாவிடமும் சிறைத்துறையிடமும் முன் அனுமதி பெற்று சசிகலாவை சந்தித்தார். இருவரும் சுமார் 1 மணி நேரம் தனிமையில் பேசி கொண்டிருந்தனர் என தெரிவித்தனர்.

    இந்த சந்திப்பின் போது, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தையும் சேர்க்க வேண்டும் என்று சசிகலாவிடம் கூறியதாக தகவல் வெளியானது.

    இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் மிக நெருங்கிய நண்பராக நடிகை விஜயசாந்தி இருந்து வந்தார். ஏற்கனவே பலமுறை சசிகலாவை சிறையில் சந்தித்து பேசி இருக்கிறார்.


    நான் கடந்த வாரம் ஐதராபாத் சென்றிருந்தபோது சசிகலாவை சந்திக்க அனுமதி பெற்று தாருங்கள் என்று என்னிடம் கேட்டார். அதன்படி அவரை சந்திக்க அனுமதி பெற்று கொடுத்தேன். அவர் ஐதராபாத்தில் இருந்து வந்து சசிகலாவை சந்தித்து விட்டு சென்றார். இதில் அரசியல் எதுவும் இல்லை. வழக்கமான சந்திப்புதான். இந்த சந்திப்பு குறித்து எங்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும் தெரியும். இந்த சந்திப்பை அரசியல் ஆக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #vijayashanthi #sasikala

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் நிலைக்க கடின உழைப்பு தேவை என்று நடிகை விஜயசாந்தி அறிவுரை வழங்கியுள்ளார். #Rajinikanth #KamalHaasan #VijayaShanti
    ஐதராபாத்:

    நடிகை விஜயசாந்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவுக்கு சென்று வெற்றி பெற்றவர்.

    1980 களில் இருந்து 2005-ம் ஆண்டு வரை தென்னிந்திய படங்களில் ஆக்‌‌ஷன் கதாபாத்திரங்களிலும் நடித்து அதிரடி நாயகியாக வலம் வந்தார். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்.

    ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கால்பதித்தவர் தற்போது அதில் மும்முரமாக இயங்கி வருகிறார்.

    ஐதராபாத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை விஜயசாந்தியிடம் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-


    திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக உழைக்க வேண்டும். அதுவும் கடின உழைப்பு. அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல. நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கானாவுக்காக இருபது ஆண்டுகள் போராடி இருக்கிறேன்.

    இன்று எனது கனவு நிறைவேறியிருக்கிறது. ரஜினி, கமல் யார் வந்தாலும் கண்டிப்பாக மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும். நிற்கவேண்டும். இவை எல்லாம் கடினமாக இருக்கும். அதை அவர்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #KamalHaasan #VijayaShanti
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விஜயசாந்தி பிரசாரம் செய்துவரும் நிலையில், விரைவில் நக்மா பிரசாரம் செய்ய உள்ளார். #TelanganaAssemblyElections #Vijayashanti #Nagma
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது.

    முதல்வர் சந்திரசேகரராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து ஆட்சியை கலைத்தார்.

    இதையடுத்து தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

    சந்திரசேகரராவ் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவர்கள் தொகுதிகளில் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளனர்.



    தெலுங்கானா தேர்தலில் காங்கிரசும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகையும், நிர்வாகியுமான நக்மா பிரசாரம் செய்கிறார். இதே போல் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிக்கிறார்.

    நடிகை விஜயசாந்தி ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மெகபூபா நகர் மாவட்டத்தில் வாக்காளர்களை சந்தித்து காங்கிரசுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் திவிரமாக உள்ளது. இதனால் பிரசாரத்தில் நட்சத்திர பட்டாளங்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. #TelanganaAssemblyElections #Vijayashanti #Nagma

    ×