என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலப்புழா"

    • பிரேமலு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகரான நஸ்லென்.
    • ஆலப்புழா ஜிம்கானா ஒரு ஜாலியான காமெடி ஸ்போர்ட்ஸ் டிராமாவாக திரைப்படம் உருவாகியுள்ளது

    பிரேமலு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகரான நஸ்லென். இவர் தற்பொழுது காலித் ரஹ்மான் இயக்கத்தில் ஆலப்புழா ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காலித் ரஷ்மான் இதற்கு முன் உண்டா, லவ் , தல்லுமாலா போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆலப்புழா ஜிம்கானா ஒரு ஜாலியான காமெடி ஸ்போர்ட்ஸ் டிராமாவாக திரைப்படம் உருவாகியுள்ளது. 12 ஆம் வகுப்பில் ஃபெயிலான நண்பர்கள் கூட்டம் ஒரு விளையாட்டு துறையில் போட்டிப் போட்டு வென்றால் நமக்கு கிரேஸ் மதிப்பெண் கிடைக்கும் அதை வைத்து நாம் கல்லூரி சேரலாம் என்ற நம்பிக்கையுடன் பாக்சிங் கத்துக் கொள்கின்றனர். ஆனால் இவர்கள் கற்றுக் கொண்ட பாக்சிங் உண்மையான வீரர்களுக்கு முன் வெறும் சாதரணமாக இருக்கிறது. இதுதான் படத்தின் ஒன்லைன் கதையாகும்.

    திரைப்படம் வெளியாகி மக்களின் வரவேற்பை கருத்தில் கொண்டு கேரளாவில் படத்தின் காட்சிகள் அதிகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் படத்தின் இடம்பெற்ற பொட்டு பொட்டு பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இப்படத்தை காலித் மற்றும் ஸ்ரீனி சசீந்தரன் இணைந்து எழுதியுள்ளனர். நஸ்லேன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இவருடன் லுக்மான் அவரன், கணபதி, சந்தீப் பிரதீப், அனக்ஹா ரவி , கோட்டயம் நஸீர் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை விஷ்ணு விஜய் மேற்கொள்ள, ஒளிப்பதிவை ஜிம்ஷி காலித் செய்துள்ளார்.

    • 5-வது கர்ப்பமானதை யாருக்கும் தெரிவிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • நேற்று வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன். இவரது மனைவி அஸ்மா (வயது35). இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அஸ்மா மீண்டும் கர்ப்பமானார். அஸ்மாவுக்கு முதலில் இரண்டு குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் வைத்து பிறந்துள்ளது. 3 மற்றும் 4-வதாக அவருக்கு வீட்டில் வைத்தே குழந்தை பிறந்துள்ளது.

    இந்நிலையில் 5-வது குழந்தையையும் வீட்டில் பிரசவம் பார்த்து பெற்றோருக்கு கணவன்-மனைவி இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனால் 5-வது கர்ப்பமானதை அக்கம் பக்கதத்தினர் யாருக்கும் தெரிவிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அஸ்மாவுக்கு நேற்று வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிரசவத்தின் போது அஸ்மா பரிதாபமாக இறந்துவிட்டார்.

    அவருக்கு பிறந்த குழந்தை பெரும்பாவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. பிரசவத்தின் போது அஸ்மாவுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் சிராஜூதீன் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் தான் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 13 முதல் 18 வரை 45 நிமிடங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.
    • தண்டவாளம் மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்சூர், இடப்பள்ளி, மாவேலிக்கரா மற்றும் கருநாகப்பள்ளி ரெயில் நிலைய எல்லைகளிலும், மாவேலிகரா-செங்கனூர் மற்றும் சாஸ்தான் கோட்டா கருநாகப்பள்ளி பிரிவு களிலும் தண்டவாளம் மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது. ரெயில் எண்: 16382 கன்னியாகுமரி-புனே சந்திப்பு தினசரி எக்ஸ் பிரஸ் அக்டோபர் 18, 21,24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (4 நாட்கள்) கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவது காயங்குளம் சந்திப்பு மற்றும் ஆலப்புழா வழியாக எர்ணாகுளம் சந் திப்பு செல்லும். இந்த ரெயில் மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் நிறுத்தத்தைத் தவிர்க்கும்.

    அம்பலப்புழா, ஹரிபாட், ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் தற்காலிக நிறுத்தம் வழங்கப்படும்.

    ரெயில் எண்:16382 கன்னியாகுமரி-புனே சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படுவது அக்டோபர் 15 முதல் 21 வரை (7 நாட்கள்) கன்னியாகுமரியில் இருந்து காலை 09.40 மணிக்கு (1 மணி நேரம் தாமதமாக) புறப்படும்.

    ரெயில் எண்:16127 சென்னை எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 13 முதல் 18 வரை (6 நாட்கள்) வழித்தடத்தில் 45 நிமிடங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×