என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஞ்சு சாம்சன்"

    • சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே தொடரில் விளையாடியிருந்தால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார்.
    • சஞ்சு சாம்சனுக்கு எனது ஆதரவு, மற்ற கேரள மாநில வீரர்களை பாதுகாப்பேன் என சபதம் எடுத்ததாக ஸ்ரீசந்த் மீது குற்றச்சாட்டு.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். இவருக்கு பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    கேரள கிரிக்கெட் சங்கம் சஞ்சு சாம்சனை விஜய் ஹசாரே தொடரில் விளையாட வைக்கவில்லை. இதில் விளையாடியிருந்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார் என ஸ்ரீசந்த் தெரிவித்தார்.

    மேலும், சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இருப்பேன், கேரள மாநில வீரர்களை பாதுகாப்பேன் என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஸ்ரீசந்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் நேற்று சிறப்ப பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீசந்துக்கு 3 வருடம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீசந்த் கேரளா கிரிக்கெட் லீக்கில் கொல்லம் ஏரியஸ் அணியின் துணை உரிமையாளர் ஆவார். லக்கில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் திருப்திகரமான பதில் அளித்திருந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இருப்பினும், அணி நிர்வாகத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

    • டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.
    • இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்குதான் என தெரிவித்தார் சஞ்சு சாம்சன்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால், நிதிஷ் ரானா அரை சதம் கடந்து அவுட்டாகினர்.

    இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:

    காயம் ஏற்பட்டதால் என்னால் பேட் செய்ய முடியவில்லை. இதனால் நான் களத்திற்கு மீண்டும் வரவில்லை. தற்போது நல்ல முறையில் உணர்கின்றேன். என் உடல் நலம் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்துவிட்டு அடுத்த போட்டியில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

    உண்மையில் நாங்கள் நன்றாகத்தான் பந்து வீசினோம். போட்டியின் சில கட்டத்தில் டெல்லி அணி அபாரமாக விளையாடினார்கள். எனினும் அதையும் சமாளித்து நாங்கள் பேட்டிங் செய்தோம்.

    என்னுடைய பீல்டர்களுக்கும், பவுலர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அணி வீரர்கள் இன்று களத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்குதான். அந்த அளவுக்கு எங்கள் அணியில் பலமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நாங்கள் பவர் பிளேவிலும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தோம்.

    ஆனால் டெல்லி அணியில் இடம் பெற்றிருக்கும் மிட்செல் ஸ்டார்க் என்ற ஒரே வீரரால் தான் நாங்கள் தோற்றோம். உலகின் மிகச் சிறந்த பவுலர் என்று மீண்டும் ஸ்டார்க் நிரூபித்து இருக்கின்றார். இதனால் மிட்செல் ஸ்டார்க்கிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் தான் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.

    நாங்கள் பேட்டை கடுமையாக சுற்றி ரன்கள் அடிக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் போட்டியை எங்களிடமிருந்து ஸ்டார்க் கவர்ந்து சென்று விட்டார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் எங்கள் அணியில் ஒரு நல்ல உத்வேகம் கிடைத்திருக்கும். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது என தெரிவித்தார்.

    • குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்க இயலவில்லை.
    • 2-வது முறையாக ராஜஸ்தான் அணி விதி மீறலில் ஈடுபட்டுள்ளது.

    நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

    குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்க இயலவில்லை. பந்து வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கடைசி ஓவரில் அந்த அணி 30 யார்டு வட்டத் துக்குள் 5 வீரரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 2-வது முறையாக அந்த அணி விதி மீறலில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியான் பராக்குக்கு ரூ.12 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தது.

    மேலும், சஞ்சு சாம்சனை தவிர்த்து அணியில் விளையாடிய மற்ற வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • பவுலிங்கின் போது நாங்கள் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கூடுதலாக விட்டுக் கொடுத்துவிட்டோம்.
    • பேட்டிங்கின் போது முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தோம் என தெரிவித்தார்.

    அகமதாபாத்:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியது.

    இந்நிலையில், தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:

    பவுலிங்கின் போது நாங்கள் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கூடுதலாக விட்டுக் கொடுத்துவிட்டோம். அதேபோல் பேட்டிங்கின் போது முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தோம்.

    குறிப்பாக ஹெட்மயர் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளியபோது என் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டேன். அங்குதான் ஆட்டம் எங்களின் கைகளில் இருந்து நழுவியது.

    பவுலிங்கில் ஆர்ச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்தது. சுப்மன் கில் விக்கெட்டை திட்டமிட்டபடி எடுக்க முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் திட்டமிட்டது வேறு, ஆனால் செயல்படுத்திய திட்டம் வேறு. அடுத்த போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாளை பார்க்க வேண்டும்.

    சில நேரங்களில் டிபென்சில் மட்டுமின்றி, சேசிங்கில் போட்டிகளை வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். டாஸ் முடிவு குறித்து போட்டிக்கு பின் மாற்றி செய்திருக்கலாமா என்று தோன்றுவது சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு அணியாக டிபென்சில் மட்டுமல்லாமல் சேசிங்கிலும் வெல்ல முயற்சித்தோம் என தெரிவித்தார்.

    • நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
    • இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது சஞ்சு சாம்சன் கோபத்தில் "பேட்"டை தூக்கிப்போட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.
    • அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சண்டிகர்:

    ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி பெற்ற 32-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு அதிக வெற்றிகளை தேடித் தந்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் ஷேன் வார்னே 31 ஆட்டங்களில் வென்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

    • முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே சஞ்சு விளையாடினார்.
    • முதல் மூன்று போட்டிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. அந்த தொடரின் போது சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் ஐபிஎல் தொடரின் முதல் சில ஆட்டங்களை அவர் தவறவிடுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அவர் தனது பேட்டிங் உடற்தகுதிய நிரூபித்த காரணத்தால் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக விளையாடினார். இதனால் இந்த மூன்று போட்டிகளுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.

    சென்னைக்கு எதிரான போட்டி முடிந்த கையோடு தனது விக்கெட் கீப்பிங் தகுதியை நிரூபிக்க வேண்டி சஞ்சு சாம்சன் பெங்களூருவில் உள்ள என்சிஏவிற்கு சென்றுள்ளார்.

    அங்கு நடந்த பரிசோதனையில் தேர்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்த போட்டிகளில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவதுடன் அணியின் விக்கெட் கீப்பராகவும் சஞ்சு சாம்சன் விளையாடுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே விளையாடுவேன் என்று சஞ்சு கூறியிருந்தார்.
    • முதல் மூன்று போட்டிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

    இப்போட்டி முடிந்த கையோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது காயத்தை சந்தித்த அவர், அதற்காக அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தார். இதனால் அவர் தனது காயத்தில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து பணியாற்றி வந்தார்.

    இதனால் ஐபிஎல் தொடரின் முதல் சில ஆட்டங்களை அவர் தவறவிடுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அவர் தனது பேட்டிங் உடற்தகுதிய நிரூபித்த காரணத்தால் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே விளையாடுவேன் என்று கூறியிருந்தார். இதனால் இந்த மூன்று போட்டிகளுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் தனது விக்கெட் கீப்பிங் தகுதியை நிரூபிக்க வேண்டி சஞ்சு சாம்சன் தற்போது என்சிஏவிற்கு சென்றுள்ளார். இந்த பரிசோதனையில் சஞ்சு சாம்சன் தேர்ச்சியடையும் பட்சத்தில், அவரும் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவதுடன் அணியின் விக்கெட் கீப்பராகவும் விளையாடுவார். இதன் காரணமாக பரிசோதனை முடிவு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

    • ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.
    • ராஜஸ்தான் அணியின் அடுத்த போட்டியில் இருந்து சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்த உள்ளார்

    ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக கேப்டன் ரியான் பராக்கிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.

    ராஜஸ்தான் அணியின் அடுத்த போட்டியில் இருந்து சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
    • ரியான் பராக் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார்.

    ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுவதால் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டவுள்ளார். காயம் காரணமாக சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டும் இந்த போட்டிகளில் விளையாடுவார் என்று அறிவிக்கப்ட்டது.

    அதன்படி ரியான் பராக் கேப்டனாக செயல்பட்ட முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. தற்போது 3 ஆவது போட்டியில் இன்று சென்னை அணியை கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் எதிர்கொள்கிறது.

    2024 இல் 4 ஆம் வரிசையில் களமிறங்கி சிப்பாராக விளையாடிய ரியான் பராக் இந்தாண்டு 3 ஆம் வரிசையில் களமிறங்கி 4 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்நிலையில், ரியான் பராக் குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "ரியான் பராக் 4 ஆம் வரிசையில் இருந்து 3 ஆம் வரிசைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். ரியான் பராக் எங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

    நேர்மையாகச் சொல்லப் போனால், ரியான் பராக் எவ்வளவுக்கு எவ்வளவு பந்துகள் விளையாடுகிறாரோ அவ்ளவுக்கு அவ்வளவு அணிக்கு நல்லது. ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அனால் அவருக்கு பேட்டிங் செய்ய நிறைய நேரம் தருவதற்காக 3 ஆம் இடத்தில தற்போது இறங்குகிறார்.

    அவருக்கு அதிக நேரம் கிடைத்தால், அவர் அதிக ரன்கள் எடுக்க முடியும், அது அணிக்கு பயனளிக்கும். அவர் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்" என்று தெரிவித்தார்.

    • சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்குவார்கள்.
    • ஜாஃப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, பாசல்ஹக் பரூக்கி, மபாகா, ஆகாஷ் மத்வால், அசோக் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    பேட்ஸ்மேன்கள்

    சுஞ்சு சாம்சன், ஷுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, குணால் ரத்தோர், ஷிம்ரன் ஹெட்மையர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், த்ருவ் ஜுரேல், ரியான் பராக்

    ஆல்-ரவுண்டர்கள்

    நிதிஷ் ராணா, யுத்வீர் சிங்

    பந்து வீச்சாளர்கள்

    ஜாஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், துஷார் தேஷ்பாண்டே, பாசல்ஹக் பரூக்கி, க்வேனா மபாகா, அஷோக் சர்மா, சந்தீப் சர்மா,

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    சஞ்சு சாம்சன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். ஆனால் முதல் 3 போட்டிகளில் சஞ்சு சாம்சன் (கைவிரலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை) பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெய்ஸ்வால் உடன் தொடக்க வீரராக களம் இறங்குவது யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    மிடில் ஆர்டர் வரிசை

    நிதிஷ் ராணா, ஹெட்மையர், ரியான் பராக், த்ருவ் ஜுரேல் ஆகியோர் உள்ளனர். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி அணியில் உள்ளார். இவர் களம் இறக்கப்படுவாரா? என்பது பின்னர்தான் தெரியவரும். இவர்களுடன் ஷுபம் துபே, குணால் ரத்தோர் உள்ளனர்.

    தொடக்க ஜோடி சரியாக விளையாடவில்லை என்றால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியை எப்படி அழைத்துச் செல்வது என்பதை பார்க்க சுவாரஷ்யமாக இருக்கும்.

    வேகப்பந்து வீச்சு

    ஜாஃப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, பாசல்ஹக் பரூக்கி, மபாகா, ஆகாஷ் மத்வால், அசோக் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    இதில் சந்தீப் சர்மா, தேஷ்பாண்டே, ஜாஃப்ரா ஆர்ச்சர், பரூக்கி, மபாபா, மத்வால் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இதனால் வேகப்பந்து வீச்சில் பலமாகவே உள்ளது.

    சுழற்பந்து வீச்சு

    மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் மட்டுமே முதன்மை சுழற்பந்து வீச்சாளர்கள். இவர்களுடன் குமார் கார்த்திக்கேய சிங் உள்ளார். ரியான் பராக் பகுதி நேரமாக சுழற்பந்து வீசக்கூடியவர். மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா ஆடும் லெவனில் இடம் பிடித்தால் சுழற்பந்து வீச்சு வலுவானதாகவே கருதப்படும்.

    வெளிநாட்டு வீரர்கள்

    ஹெட்மையர், ஆர்ச்சர், தீக்ஷனா, ஹசரங்கா, பரூக்கி, மபாகா. இந்த 6 பேரில் ஹெட்மையர், ஆர்ச்சர் மற்றும் இரண்டு ஸ்பின்னர்கள் தீக்ஷனா, ஹசரங்கா ஆகியோருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஹெட்மையருக்குப் பதிலாக இம்பேக்ட் பிளேயராக ஒருவரை களம் இறக்கலாம்.

    ராஜஸ்தான் எப்போதுமே தொடரின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடும். 2-வது பாதியில் மோசமாக விளையாடி பிளேஆஃப் சுற்றை எட்ட முடியாத நிலை ஏற்படும். இல்லையெனில் புள்ளிகளில் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியாத ஏற்படும். இந்த முறை இதை மாற்றிக்காட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • 23-ந் தேதி சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.
    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது.

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 23-ந் தேதி சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணி விளையாடும் முதல் 3 போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டுமே இடம்பெறுவார் என்றும் ஆர்ஆர் குறிப்பிட்டுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பிசிசிஐ இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

    ராஜன்ஸ்தான் அணி விளையாடிய பயிற்சி போட்டியில் ரியான் பராக் 64 பந்தில் 144 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும்.

    ×