என் மலர்
நீங்கள் தேடியது "பூண்டி ஏரி"
- கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஏரிகளிலும் 9.50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.
- சென்னையில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தொடர்ந்து எடுக்கப்படுவதால் நீர் இருப்பு வேகமாக குறைந்து வந்துள்ளது.
சென்னை:
புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 5 ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி. ஆகும்.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 2.71 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. புழல் ஏரியில் 2.51 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியில் 0.78 டி.எம்.சி. தண்ணீரும், சோழவரம் ஏரியில் 0.18 டி.எம்.சி. தண்ணீரும், தேர்வாய் கண்டிகை ஏரியில் 0.50 டி.எம்.சி. தண்ணீரும் இருப்பில் உள்ளது.
5 ஏரிகளிலும் மொத்தம் 6.68 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த நீரை வைத்து சென்னையின் குடிநீர் தேவையை 6 மாதங்கள் பூர்த்தி செய்ய முடியும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஏரிகளிலும் 9.50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.
தற்போது கடந்த ஆண்டை விட 2.82 டி.எம்.சி. தண்ணீர் குறைவாக உள்ளது. மேலும் சென்னையில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தொடர்ந்து எடுக்கப்படுவதால் நீர் இருப்பு வேகமாக குறைந்து வந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி இந்த 5 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும். அதன் மூலம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- செம்பரம்பாக்கம் வரத்து 400 கன அடி, திறப்பு 261 கன அடி மற்றும் வீராணம் வரத்து 201 கன அடியும், திறப்பு 483 கன அடியுமாக உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளின் (நீர்த்தேக்கங்கள்) மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கன அடி (224.297 டி.எம்.சி.) ஆகும். தற்போது, வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வரும் நிலையில், அனைத்து நீர்த்தேக்கங்களிலும் 1 லட்சத்து 93 ஆயிரத்து 393 மில்லியன் கன அடி (193.393 டி.எம்.சி.) அதாவது 85.40 சதவீதம் இருப்பு உள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கியமான நீர்த்தேக்கங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, வேலூர் ஆண்டியப்பனூர் ஓடை, மோர்த்தானா, தர்மபுரியில் நாகாவதி, கிருஷ்ணகிரியின் சூளகிரி சின்னாறு, திண்டுக்கல் சிறுமலையாறு ஓடை, வர்தமா நதி, மதுரை சாத்தையாறு, தேனி சண்முகாநதி, சோத்துப்பாறை, விருதுநகரின் சாஸ்தா கோவில், கோவை த.நா.சோலையாறு, ஈரோடு குண்டேரிபள்ளம், வரட்டுப்பள்ளம், சேலம் மேட்டூர் ஆகிய நீர்த்தேக்கங்கள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன.
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதில் பூண்டி ஏரிக்கு வரத்து 650 கன அடியும், திறப்பு 53 கன அடியுமாக இருக்கிறது. இதேபோல் சோழவரம் வரத்து 177 கன அடி, திறப்பு 3 கன அடி, புழல் வரத்து 373 கன அடி, திறப்பு 292 கன அடியாக இருக்கிறது.
செம்பரம்பாக்கம் வரத்து 400 கன அடி, திறப்பு 261 கன அடி மற்றும் வீராணம் வரத்து 201 கன அடியும், திறப்பு 483 கன அடியுமாக உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம் முழுவதும் நிரம்பி உள்ளதால் வரும் 120 கன அடி நீர் முழுவதும் திறந்துவிடப்படுகிறது.
இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவான 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.), தற்போது 8 ஆயிரத்து 384 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அனைத்து நீர் நிலைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட தகவல்களை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
- கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது.
- புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் உள்ளன. கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இந்த 2 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்ததால் 2 ஏரிகளில் இருந்தும் 100 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,730 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. நேற்று 84 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 141 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.
ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 21 அடியில் 18.60 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 292 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் 2,668 மி.கன அடி தண்ணீர் உள்ளன. நேற்று 33 கன அடி ஆக இருந்த நீர்வரத்து தற்போது 219 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 24 அடியில் 20.26 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
ஏரியில் இருந்து 70 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வரும் நாட்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இதில் 2503 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
- சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 108 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகளில் நீர் இருப்பு தொடர்த்து உயர்ந்து வருகிறது.
பூண்டி ஏரியின் நீர்மட்டம் 2 டி.எம்.சி.யை தாண்டி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி ஆகும். இன்றைய நிலவரப்படி 2,023 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக 450 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக சோழவரம் மற்றும் சென்னைக்கு 53 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இதில் 2503 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 227 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 192 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி ஆகும். 457 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக 257 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. இதில் இன்றைய நிலவரப்படி 2484 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 139 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவதால் 139 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 108 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கண்ணன்கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடி நிரம்பி வழிகிறது.
- தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகில் உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா கால்வாய் உள்ளது.
- கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறை வேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம் பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணாநீர் திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
பூண்டி ஏரியில் மதகு கிணறு அமைக்கும் பணிகள் மற்றும் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் ஜூலை மாதத்தில் கிருஷ்ணா நதி நீர் பெறவில்லை.
இந்த நிலையில் வடகிழக்கு பருமழை தீவிரமடைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகமானது. ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ததால் கண்டலேறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது.
இந்த அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போது 55 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரை குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 424 கன அடி வருகிறது. பூண்டி ஏரிக்கு 400 கன அடி வந்து கொண்டிருக்கிறது.
ஓரிரு நாட்களில் கிருஷ்ணா தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 32 அடியாக பதிவானது. 2.241 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 400 கன அடி வீதம், மழைநீர் வினாடிக்கு 410 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகில் உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா கால்வாய் உள்ளது. கடந்த காலங்களில் பெய்த பலத்த மழைக்கு ஊத்துக் கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்து ஆலப்பாக்கம் வரை 8.3 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் சேதமடைந்தது. இதன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
6.3 கிலோமீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்தன. பருவமழை தீவிரமடைந்ததையொட்டி பலத்த மழை பெய்ததால் பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- பூண்டி நீர் தேக்கத்துக்கு வருகை தரும் பறவைகளுக்கான பார்வையாளர் மாடம் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய சுற்றுலா தளமாக மாற்றப்பட உள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
செங்கல்பட்டு:
பூண்டி, செங்கல்பட்டு கொளவாய் ஏரி, திருப்பூர் ஆண்டிபாளையம் ஏரி பகுதியில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி, சாகச விளையாட்டுகள் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறி இருப்பதாவது:-
பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீர் விளையாட்டுகள், பல்வேறு வகையான படகுகள், வாட்டர் ஸ்கூட்டர்கள், விரைவுப் படகுகள் வசதிகள் கொண்டு வரப்பட உள்ளது.
பூண்டி நீர் தேக்கத்துக்கு வருகை தரும் பறவைகளுக்கான பார்வையாளர் மாடம் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய சுற்றுலா தளமாக மாற்றப்பட உள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான கொளவாய் ஏரி அமைந்துள்ளது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை இங்கு ஏற்படுத்துவதன் மூலம் அதிக சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்பாக அமையும். இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் ஏரியில் படகு சவாரி நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதோடு, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உள்ள சுற்றுலா பயணிகளை இது பெரிதும் கவரும் என்பதோடு, சுற்றுலாத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த மாதத்தில் பலத்த மழை கொட்டியபோது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
- பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 38 கன அடி வீதம் பேபி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்ப ரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 26-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 410 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு இன்று காலை பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் சிறப்பு பூஜை நடத்தி தண்ணீரை கால்வாயில் திறந்து விட்டனர். வினாடிக்கு 255 கனஅடி வீதம் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி ஆகும். இன்று காலை நிலவரப்படி 19. 39 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. ஆகும். தற்போது 2.455 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
போதுமான தண்ணீர் இருக்கும் நிலையில் தற்போது பூண்டி ஏரியின் தண்ணீரும் வந்து கொண்டு இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த மாதத்தில் பலத்த மழை கொட்டியபோது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 32.49 அடியாக பதிவானது. 2.376 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 410 கன அடியும், மழை நீர் வினாடிக்கு 170 கன அடியும் வருகிறது.
பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 38 கன அடி வீதம் பேபி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கண்டலேறு அணையில் அதிகஅளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு தொடர்ந்து இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும்.
- வருகிற பிப்ரவரி மாதம் கண்டலேறு அணையை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நேரத்தின் போதும், வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போதும் நல்ல மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
மேலும் தமிழகம்-ஆந்திரா இடையேயான நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆந்திராவில் இருந்து 12 டி.எம்.சி. தண்ணீர் 2 கட்டமாக தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு இன்னும் சில நாட்களில் 10 டி.எம்.சி.யை எட்டிவிடும்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போதைய நிலவரப்படி 9.459 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
தமிழகத்துக்கு தற்போது வினாடிக்கு 557 கன அடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. அதை வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிக்க கோரி ஆந்திர அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் கண்டலேறு அணையை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஜனவரிக்குள் மீதமுள்ள 6.5 டி.எம்.சி.யை பெறுமாறு நீர்வளத்துறையிடம் ஆந்திரா அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆந்திர அரசு தரும் தண்ணீர் முழுவதையும் சேமித்து வைப்பது இயலாத காரியம் என்பதால் ஜனவரி மாதத்துக்குள் 4 டி.எம்.சி. தண்ணீரை பெற திட்டமிட்டுள்ளோம். இன்றைய நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் 8 மாதங்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது", என்றார்.
- தொடர்ந்து பெய்யும் மழையால் உபரிநீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
- ஏரிக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறப்பும் உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் மாண்டஸ் புயலை தொடர்ந்து சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்யும் மழையால் உபரிநீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
ஏரிக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறப்பும் உயர்த்தப்பட்டது.
இதன் எதிரொலியால், கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 80 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரி முழு கொள்ளவை எட்டி உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34.43 அடி வரை தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் பலத்த மழையால் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், கிருஷ்ணா கால்வாய் மூலம் வரும் 450 கனஅடி நீர் மற்றும் மழை நீர் ஆகியவை சேர்ந்து பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.
இதற்கிடையே பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளதால் இன்று காலை உபரி நீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் பூண்டியை சுற்றி உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்றாம் பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, ஏறையூர், பீமன் தோப்பு, கொரக்கதண்டலம், சோமதேவம்பட்டு, மெய்யூர், தாமரைப்பாக்கம் திருக்கண்டலம் ஆத்தூர், பாண்டிக்காவனூர், ஜெக நாதபுரம், புதுக்குப்பம், கன்னிபாளையம், வன்னி பக்கம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயில்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், காரனோடை, மீஞ்சூர், எண்ணூர் உள்ளிட்ட 50 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி ஆகும். இதில் தற்போது 2,960 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தபடி உள்ளனர்.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக பூண்டி ஏரி நீர்தேக்கத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றில் குறுக்கே செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.இதனால் திருவள்ளூரில் இருந்து கிருஷ்ணாபுரம், ரங்காபுரம், நம்பாக்கம், வல்லாத்துக்கோட்டை, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏரி, ஆறுகளில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- கனமழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
- ஏரியின் பாதுகாப்பைக் கருதி உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர்.
பெரியபாளையம்:
மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஏரியிலிருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர். நேற்று 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையே, பெரியபாளையம் அருகே மஞ்சங்காரனை ஊராட்சியை சேர்ந்த கோட்டைக்குப்பம் கிராமம், ஈஸ்வரன் கோவில் பகுதியில் 60 பேர் வசித்து வந்தனர். இதில், 42 பேர் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், கோட்டைக்குப்பம் பகுதியில் இருந்து 18 பேர் மட்டும் நேற்று வெளியேற முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் பேரிடர் மீட்புப் படையினர் 10 பேர் கொண்ட குழுவினர் ரப்பர் படகு மூலம் அங்கு சென்றனர். அவர்களை பத்திரமாக படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதன்பின், அவர்கள் அனைவரும் மஞ்சங்காரணையில் உள்ள சமுதாயக்கூடத்தில் தங்க வைக்க வருவாய் ஆய்வாளர் சரவணன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்தனர். தங்களது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
கொசஸ்தலை ஆற்றை கடக்க முடியாமல் 18 பேர் அவதிப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து 5,900 கனஅடியாக குறைந்தது.
- பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி இதில் 2,839 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
சென்னை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. தொடர் மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியை தாண்டியது. இதையடுத்து நேற்று பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஏரிக்கு வரும் நீர்வரத்து 5,900 கனஅடியாக குறைந்தது. இதனால் உபரி நீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி இதில் 2,839 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் 34 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.