search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பட்டி"

    • பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.
    • இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும் செய்யும் ஆற்றல் கொண்டது கருப்பட்டி.

    பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்ற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதை பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனைஅட்டு, பானாட்டு என்றும் சொல்வார்கள்.

    கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறுசுறுப்பாக்குவதோடு, மேனி பளபளக்கவும் வைக்கும். பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும் செய்யும் ஆற்றல் கொண்டது கருப்பட்டி.

    காபியில் சர்க்கரைக்குப் பதிலாக, கருப்பட்டி போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும், கிராமங்களில் கருப்பட்டிக்காபி குடிக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. இதனாலதான் சர்க்கரை நோயாளிகளும் கருப்பட்டிக்காபி குடித்து வருகிறார்கள்.

    இதன் நிழலாகத்தான் தற்போது பரவிக் கிடக்கும் இயற்கை உணவங்களிலும் கருப்பட்டிக்காபி வாசனை பரவ ஆரம்பித்திருக்கிறது. இது தவிர கருப்பட்டி அல்வா, கருப்பட்டி பணியாரம், கருப்பட்டி பால்கோவா, கருப்பட்டி களி என நீண்டு கொண்டே போகும். கருப்பட்டி கலந்த பதார்த்தங்களில் கலந்திருப்பது உண்மையான கருப்பட்டிதானா..? நாம் கடைகளில் வாங்கும் கருப்பட்டியும் உண்மையான கருப்பட்டிதானா..?

    ஒரிஜினல் கருப்பட்டி எது? போலி கருப்பட்டி எது என்பதை எளிதில் அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி? 20 வருடம் அனுபவமுள்ள தொழிலாளி கூறும்போது,

    * கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. அதே நேரத்தில் கருப்பட்டியை மெல்லும் போது, வாசனையில்லாமல், சர்க்கரையின் இனிப்புச்சுவை மட்டும் உணர முடிந்தால் அது போலி கருப்பட்டி.

    * முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.

    * கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது ஒரிஜினல் கருப்பட்டி.

    * கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப்பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலி.

    * வயது முதிர்ந்த கிராமத்து ஆட்கள் கருப்பட்டியின் அடிப்பாகத்தை நுகர்ந்து பார்த்து அதன் மணத்தை வைத்து ஒரிஜினலா, போலியா என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.


    * தேங்காயைத் தட்டிப்பார்ப்பது போல, கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி கருப்பட்டி.

    * ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டிதுண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.

    * நாள்பட்ட கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.

    * கருப்பட்டி வாங்கும்போது தட்டிப்பார்த்தும், நுகர்ந்தும் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சிறு துண்டை உடைத்து வாயில் போட்டு மென்று பாருங்கள். கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையில் நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்.

    • உடன்குடி வட்டாரபகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டிக்கு தனி மவுசுஉண்டு.
    • கருப்பட்டி என்று ஊர் பெயரோடு தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று விற்பனையாகும்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டாரபகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டிக்கு தனி மவுசுஉண்டு. உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று விற்பனையாகும்.

    இந்த கருப்பட்டி ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் உற்பத்தியாகும். பனங்கற்கண்டு, வெள்ளை நிற புட்டு கருப்பட்டி இப்படி எல்லாம் தயாரிப்பார்கள். தற்போது பனைமரம் ஏரி இறங்குவதற்கு வசதியாக அந்த மரத்தில் உள்ள தும்புகள், காய்ந்த ஓலைகள், தேவையற்றபனைமரமட்டைகள் ஆகிய வற்றை அப்புறப்படுத்தி, பதனீர் தரும் பாளைஎந்த இடையூறும் இல்லாமல் வருவதற்காக இந்த ஆரம்பகட்ட பணிகளை தொடங்குவார்கள்.

    இப்போது அந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து உற்பத்தியாளர் ஒருவர் கூறும்போது, இந்த வருடம் வருகின்ற மார்ச் மாதம் புதிய கருப்பட்டி உற்பத்தியாகி சந்தைக்கு விற்பனைக்கு வந்து விடும் என்றார்.

    • தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்:

    ரேஷன் கடைகளில் மாதந்தோறும் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்ககோரி தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் துறையூர் பெ.பிரபாகரன், வர்த்தக அணித் தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், அவைத்தலைவர் அற்புதம், தமிழ்நாடு நாடார் பேரவை பொருளாளர் எஸ்.சதாசிவம், துணை பொதுச் செயலாளர் கே.வெற்றிராஜன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர்கள் கரூர் லோகநாதன், என்.அன்புகிருஷ்ணன், மதுரை மாநகர செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் எஸ்.எம்.தாளைக்கண்ணன், மாநில மகளிர் அணி துணைத்தலைவி விக்டோரியா, கவிதா காந்தி, மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சங்கரன், சிவகங்கை மாவட்டத் தலைவர் ஜேசுபாஸ்கர், சமூக ஆர்வலர் ராணி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் கலந்து கொண்டனர்.

    • கருப்பட்டி தயாரிக்க மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.
    • ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி பகுதியில் கருப்பட்டி தயாரிப்புதான் அந்த பகுதி மக்களின் பிரதான தொழில் ஆகும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி வி.வி.ஆர்.நகர், லால்பகதுார் சாஸ்திரி தெருவில் 100-க்கும் மேற்பட்டகுடியிருப்புகள் உள்ளன. கருப்பட்டி தயாரிப்புதான் இவர்களின் பிரதான தொழில் ஆகும்.

    ஆண்டுக்கு 6 மாதம் இந்த தொழிலில் வருமானம் கிடைக்கிறது.அதன்பின்னர் பதனீர் சீசன் இல்லாதால்அன்றாட வருமானத்திற்கு சிரமப்படுகின்றனர். இந்த பகுதி பெண்கள் 2018-ம் ஆண்டு பனைத்தொழில் மேம்பாட்டு திட்டத்தில் வங்கியில் அரசு மானியத்துடன் ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கி முறையாக கட்டி முடித்துள்ளனர்.

    அதன் பிறகு அரசு மானியத்துடன்கடன் வழங்கவில்லை. மீண்டும் அரசு மானியத்துடன் வங்கியில் கடன் வழங்க வேண்டும் என்று வி.வி.ஆர்.நகர் தலைவி அந்தோணியம்மாள் தலைமையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் மனு கொடுத்தனர்.

    அவர்கள் கூறுகையில், ஆண்டு தோறும் தை முதல் ஆவணி வரை கருப்பட்டி தயாரித்து விற்கிறோம். வியாபாரிகளிடம் முன்பணம் வாங்குவதால் குறைந்த விலைக்கு வாங்கி வியாபாரிகள் அதிக லாபம் அடைகின்றனர். ஏற்கனவே வங்கியில் கடன் கொடுத்தனர். தற்போது சில புரோக்கர்கள் ரூ.10 ஆயிரம் கமிஷன் கொடுத்தால் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தருவதாக பேரம் பேசுகின்றனர். கடந்த முறை வாங்கிய கடனை முறையாக கட்டியுள்ளோம். எனவே எங்களுக்கு சிறு தொழில் மேம்பாட்டு திட்டத்தில் வங்கியில் அரசு மானியத்தில் கடன் வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றனர்.

    • திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
    • 4 ஆயிரம் கிலோ தென்னங் கருப்பட்டியை கொண்டு வந்திருந்தார்கள்.

    குன்னத்தூர் :

    குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 4 ஆயிரம் கிலோ தென்னங் கருப்பட்டியை கொண்டு வந்திருந்தார்கள். தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.85 வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த தகவலை கூட்டுறவு கருப்பட்டி சம்மேளன மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைவர் தெரிவித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 7 விவசாயிகள் 118 மூட்டைகள் (6,161 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடந்த ஏலத்தில் ரூ.4.45 லட்சத்திற்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.78-க்கும், குறைந்த பட்சமாக ரூ.58-க்கும், சராசரியாக ரூ.76-க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆர்.மாரியப்பன் செய்திருந்தார். 

    ×