என் மலர்
நீங்கள் தேடியது "கட்டாய மதமாற்றம்"
- கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக பல மாநிலங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன.
- கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
புதுடெல்லி:
கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக பல மாநிலங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன. இவற்றில் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.
இந்நிலையில், கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
வலுக்கட்டாய மதமாற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி வழக்கறிஞரும், பா.ஜ.க. தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை. இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத சுதந்திரத்தை பாதிக்கிறது. கட்டாய மதமாற்றம் நிறுத்தப்படாவிட்டால் மிகவும் கடினமான சூழ்நிலை உருவாகும்.
மத சுதந்திரம் இருக்கலாம், ஆனால் கட்டாய மதமாற்ற சுதந்திரம் இல்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். இது தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கட்டாய மதமாற்ற விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். நவம்பர் 22-ம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும் என தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தது.
- இந்த பொதுநல மனு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.
- தமிழக அரசின் கருத்தை மனுவாக தாக்கல் செய்யுங்கள்.
புதுடெல்லி :
பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் தத்தர், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோரை தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமில்லை என வாதிட்டார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், இந்த விவகாரத்தை மாநில சட்டப்பேரவையிடம் விட்டுவிட வேண்டும். மனுதாரர் பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்பதால், இந்த பொதுநல மனு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. மனுதாரருக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு இருக்கிறது என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்துக்கு அரசியல்சாயம் பூச வேண்டாம். தமிழக அரசின் கருத்தை மனுவாக தாக்கல் செய்யுங்கள். மனுதாரர் பா.ஜ.க.வை சேர்ந்தவராக இருந்தாலும், இந்த விவகாரத்தை தொடர்ந்து விசாரிக்க விரும்புகிறோம் என தெளிவுபடுத்தினர்.
அப்போது மீண்டும் வக்கீல் வில்சன், தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. மனுதாரர் தவறான தகவலை தெரிவித்துள்ளார் என்றார்.
அதற்கு நீதிபதிகள், இதுபோன்று வாதங்களை மறுத்து வாதிட பல காரணங்கள் இருக்கலாம். கோர்ட்டு விசாரணையை வேறு எதுவாகவும் மாற்றிவிட வேண்டாம். குறிப்பிட்ட மாநிலத்தில் நடைபெறும் கட்டாய மதமாற்ற புகார் குறித்து கவலைகொள்ளாது, ஒட்டுமொத்த நாட்டிலும் கட்டாய மதமாற்ற புகார் பற்றி கவலைகொள்கிறோம். ஒரு மாநிலத்தை மட்டும் குறிவைப்பதாக நினைத்து அரசியலாக்க வேண்டாம் என்றனர்.
மேலும், கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான விவகாரம் என்பதால், சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் உதவ வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அப்போது மூத்த வக்கீல், வழக்கின் தலைப்பை மாற்ற வேண்டும் என்ற யோசனை தெரிவித்தார்.
அதையும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்று, கட்டாய மதமாற்ற புகார்கள் குறித்து தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு என மாற்றியது. மேலும், இந்த பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, விசாரணையை பிப்ரவரி 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.
- மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிக அபராதம் உள்ளது.
- பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க இதே போன்ற சட்டங்கள் உள்ளன.
கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை தனது அரசு கொண்டுவரும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எங்கள் அப்பாவி மகள்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்பவர்களுக்கு எதிராக எங்கள் அரசாங்கம் மிகவும் கண்டிப்புடன் இருக்கும்.
அவர்களை கட்டாயப்படுத்துபவர்களை நாங்கள் விடமாட்டோம். அத்தகையவர்களை வாழ அனுமதிக்கக்கூடாது. மத சுதந்திரச் சட்டத்தின் மூலம், கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் விதியை விரிவுபடுத்த நாங்கள் பாடுபடுகிறோம் என்று தெரிவித்தார்.
இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டு , இஸ்லாத்திற்கு அவர்களை மாற்றி முஸ்லிம் ஆண்கள் "லவ் ஜிஹாத்" செய்கின்றனர் என பாஜக கூறி வருகிறது. எனவே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்களுக்கு எதிரான கடந்த 2021 மார்ச்சில் அன்று மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் மத சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்கப்படும்.
திருமண மூலம் மதமாற்றம் செய்தல், அச்சுறுத்தல், செல்வாக்கு மற்றும் வற்புறுத்தல் ஆகியவை மூலம் மதமாற்றம் செய்தல் ஆகியவை இந்த சட்டத்தின்கீழ் அடங்கும்.
மதத்தை மறைத்து திருமணம் செய்தால், மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படலாம். இந்நிலையில் இந்த சட்டத்தின்கீழ் கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்படும் என மோகன் யாதவ் தற்போது கூறியுள்ளார்.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க இதே போன்ற சட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த சட்டங்கள் மூலம் விரும்பி வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்பவர்கள், மதம் மாறுபவர்கள் குறிவைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.