search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாசம்"

    • பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு.
    • உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.

    உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.இதற்குமுன் டுவிட்டர் என்றழைக்கப்பட்ட செயலி எலான் மஸ்க் வாங்கியதற்கு பிறகு அதில் பல மாற்றங்களை அமைத்து, புது லோகோ, புது பிராண்டிங் செய்து 2023 ஆம் ஆண்டு எக்ஸ் என்று பெயரையும் மாற்றினார்.

    பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு. அதில் பல செயலிகள் அரை நிர்வாண புகைப்படங்களையும், நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்ய அனுமதிப்படு கிடையாது. அதை மீறி நாம் அதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டால் அந்த செயலியில் இருந்து நம்முடைய அக்கவுண்டை முடக்கிவிடுவர்.

    தற்பொழுது எக்ஸ் தளத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் நாம் இனிமேல் ஆபாச தரவுகளையும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்யலாம். 18 வயதிற்கு கீழ் செயலியை பயன்படுத்துவோர் இந்த ஆபாசங்களை பார்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

    ஒருவரை துன்புறுத்தும் காட்சிகளோ, மைனர் வயதுடையவரின் பாலியல் சீண்டுதல்களோ, அனுமதியின்றி வற்புறுத்தும் காட்சிகளோ இடம் பெறாது என தெரிவித்துள்ளனர். ஆபாசமான புகைப்படங்களை நீங்கள் ப்ரொஃபைல் பிக்-ஆக வைக்கமுடியாது எனவும் கூறியுள்ளனர்.

    இந்த அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த அறிக்கை மற்ற சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக், டிக்டாக் போன்றவற்றில் இருந்து மாறுப்பட்டவையாக இருக்கிறது.

    எக்ஸ் தளத்தின் இந்த அறிக்கையினால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆபாச திரைப்படங்களை எளிதில் பார்க்க கூடியதாக அமையும் என நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    • கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர்
    • ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்

    பல்லடம், செப்.24-

    பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று முன்தினம் மாலை கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே குடி போதையில் வந்த முதியவர் ஒருவர் பெண்களை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மனைவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார்.

    மதுரை

    மேலூர் நரசிங்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவருக்கு வண்டியூரை சேர்ந்த பெண்ணுடன் திருமணமானது.

    ராஜ்குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் இது குறித்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இந்த நிலையில் ராஜ்குமார் பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜ்குமாரின் பேஸ்புக் பக்கம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து பரப்பியது தெரிய வந்தது.

    இதையடுத்து மனைவி யின் ஆபாச படங்களை இணையதளத்தில் பரப்பிய ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • காரைக்காலில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரகளையில் ஈடுபட்டு வருவதாக நெடுங்காடு காவல்நிலை யத்திற்கு தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நெடுங்காடு நல்லாத்தூர் கடைவீதி அருகே, பொது இடத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் ஆபாச மாக பேசி ரகளையில் ஈடுபட்டு வருவதாக நெடுங்காடு காவல்நிலை யத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 5 பேர் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றபோது, போலீசார் அந்த 5 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்க ளில் 4 பேர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச்சேர்ந்த சத்தியராஜ்(வயது30), சிலம்ப ரசன்(32), சசிகுமார் (28), மதன்ராஜ்(30) மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த சுரேஷ்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பொது மக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய ரகளை யில் ஈடுபட்ட குற்றத்தி ற்காக 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல், காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் மேலவாஞ்சூர் ஆசாரிதெரு அருகே பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய கலையரசன்(20) சூரியா(22) ஆகிய 2 பேரை திரு.பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

    • பெண்ணை ஆபாசமாக பேசிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே வரலொட்டி பகுதியை சேர்ந்த ராமர் மனைவி கஸ்தூரி (வயது 35). ராமர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.

    கஸ்தூரி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவரை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, சோனை முத்து ஆகியோர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கஸ்தூரி மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×