search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228547"

    • திருமங்கலம் அருகே வயலில் இறந்த ராணுவ வீரர் சுருண்டு விழுந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி பக்கம் உள்ள கரடிக்கல் புன்னனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதுரை வீரன் (வயது40). இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    ராணுவ வீரரான இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் பணி ஓய்வு பெற்று ஊருக்கு திரும்பினார். அதன்பிறகு ஊரில் உள்ள தன்னுடைய வயலில் விவசாயம் செய்து வந்தார். புன்னனம்பட்டியில் உள்ள தனது வயலில் தற்போது சோளம் விதைத்துள்ளார். நேற்று வயலுக்கு சென்றிருந்த அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆட்டோ மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு மதுரை வீரனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ஆதிலட்சுமி ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் மூழ்கி ராணுவ வீரர் பலியானார்.
    • இவர் கடந்த 9-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே அனுப்பபட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது25). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 9-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அவர் நண்பர்கள் 5 பேருடன் திருவேடகம்-மேலக்கால் தடுப்பணை அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது குளித்து கொண்டிருந்த வினோத்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அய்யங்காளை என்பவரின் மகன் அன்பரசன் ஆகியோர் சுழலில் சிக்கினர்.

    இதுபற்றி தீயணைப்பு மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் ஆற்றில் மூழ்கிய 2 பேரையும் தேடினர். இதில் அன்பரசனின் உடல் மீட்கப்பட்டது. ஆனால் வினோத்குமார் உடல் கிடைக்கவில்லை. அவரது உடலை தொடர்ந்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஆற்றில் மூழ்கி பலியான வினோத்குமார் உடல் இன்று காலை மிதந்தது. அவரது உடலை தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் மீட்டனர்.

    பலியான வினோத்குமாருக்கும், நிறைமதி என்ற பெண்ணுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் வினோத்குமார் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • திருமங்கலம் அருகே விடுமுறையில் வந்த ராணுவவீரர் உயிரிழந்தார்.
    • வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.

     திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கப்பலூர் பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்(42). அரியானா மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்தார். 5 தினங்களுக்கு முன்பு வடிவேல் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.

    நேற்று வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்பு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வடிவேல் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மனைவி பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே விபத்தில் பலியான ராணுவ வீரர் நினைவாக ஆம்புலன்ஸ் சேவை தி.மு.க. மாவட்ட செயலாளர் தொடங்கி வைத்தார்.
    • ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைக்கு ஏற்பாடு செய்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள உலகாணி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து-மீனாட்சி தம்பதியரின் மகள் பாலமுருகன். இவர் ராணுவ வீரராக பணியாற்றினார். 6 வருடத்திற்கு முன்பு ஊருக்கு வந்திருந்த நிலையில் பாலமுருகன் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

    பாலமுருகனின் 29-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சகோதரர் பால்பாண்டி மற்றும் குடும்பத்தினர் சார்பில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைக்கு ஏற்பாடு செய்தனர்.

    இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவை தொடக்க விழா சின்ன உலகாணி கிராமத்தில் நடந்தது. இதில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர தி.மு.க. செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதிமூலம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் லாவண்யா, எஸ்.கே.ஜி. மருத்துவமனை மருத்துவர் அமுதகுமார், வேலு மருத்துவமனை மருத்துவர் சரவணன், கூடக்கோவில் தலைமை ஆசிரியர்கள் ஞானம்மாள், மோகன், ஆசிரியர் செந்தில்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×