என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்காசி"

    • கூட்டமைப்பு தலைவர் டி.கே .பாண்டியன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    கடையம்:

    கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் 14 -வது கூட்டம் யூனியன் வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் டி.கே .பாண்டியன் தலைமை தாங்கினார்.மூத்த தலைவர்கள் அழகு துரை, ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முகமது உசேன் வரவேற்றார். கூட்டத்தில், ஊராட்சிகளில் நிலுவையில் உள்ள நிதி பற்றாக்குறையை தமிழக அரசு உடனடியாக சீரமைக்க வேண்டும், கலைஞர் வீடு, பிரதமர் வீடு, இலவச ஆடு, மாடு ஆகியவற்றை வழங்க வேண்டும், ஊராட்சி மன்ற தலைவருக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும், குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளையும் மற்றும் அனுமதிச்சீட்டு ஆய்வு ,அனுமதி வழங்க ஊராட்சி மன்ற தலைவருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொட்டல் புதூர் கணேசன், தெற்கு கடையம் முத்துலட்சுமி ராமதுரை, கீழாம்பூர் மாரிசுப்பு, மேலாம்பூர் குயிலி லட்சுமணன்,திருமலையப்பபுரம் மாரியப்பன், பாப்பான்குளம் முருகன், தெற்கு மடத்தூர் பிரேம ராதா ஜெயம், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன் , மந்தியூர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் நன்றி கூறினார்.

    • தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.

    தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார்.

    நகர்மன்ற உறுப்பினர் காதர் மைதீன், ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் மாரியப்பன், தென்காசி கேன்சர் சென்டர் இயக்குநர் பாரதிராஜா, நிலா ஸ்வீட்ஸ் உரிமையாளர் பிரபுதேவகுமார், வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், வாசகர் வட்ட துணைத்தலைவர் மைதீன், ஆசிரியர் ஆறுமுகம், ஓவிய பயிற்சியாளர் ஜெயசிங், அரவிந்த் யோகாலயா பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஷெரீப், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, செங்கோட்டை நகரச்செ யலாளர் வெங்கடேஷ், கோமதி நாயகம், சமீம், இஸ்மாயில், ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, வக்கீல் கண்ணன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.

    கிளை நூலகர் சுந்தர் நன்றி தெரிவித்தார்.விழா ஏற்பாடுகளை நூலகர்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, அம்பை நூலகர் சதீஷ், வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தை ஜேசு, முருகேசன் செய்திருந்தனர்.

    • கடையம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார்.
    • சிதம்பரம் டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.

    கடையம்:

    கடையம் அருகே ஆசீர்வாதபுரம் தாமிரபரணி குடிநீரேற்றும் நிலையம் அருகே இன்று காலை தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார்.

    தகவலறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர் காக்கிநிற ஆடையில் இருந்ததால் டிரைவராக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    அதில், அவர் நெல்லை மாநகர் தச்சநல்லூரை சேர்ந்த சிதம்பரம் (வயது 34) என்பதும், தென்காசியில் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. அந்த வழியாக சென்ற வாகனம் மோதி அவர் இறந்தாரா? அல்லது அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • பா.ஜனதாவின் நிர்வாகிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தென்காசி:

    தென்காசியில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் தென்காசி மாவட்ட பா.ஜனதாவின் அணி பிரிவு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் நிர்வாகிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன்,அருள் செல்வன், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொரு ளாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகவும், கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் கிருஷ்ணன், தென்காசி மாவட்ட பா.ஜனதா கட்சி பார்வையாளர் மகாராஜன், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் கோதை மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜனவரி மாதம் பாரதீய ஜனதா கட்சியின் அணி பிரிவுகள் சார்பில் தென்காசியில் மாபெரும் மாநாடு நடத்துவது என்றும், பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயங்களையும், பாதிக்க ப்படும் விஷயங்களையும் முன்னெடுத்து போராட்டம் நடத்துவது, மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பூத்களிலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்துவது, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி வரவேற்று பேசினார். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துலட்சுமி, முத்துக்குமார், பால்ராஜ், மாவட்ட செயலாளர்கள் சுப்பிர மணியன், அர்ஜுனன், புலிக்குட்டி,ராஜலட்சுமி மற்றும் மாவட்ட அணி பிரிவு தலைவர்கள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புளியம்பட்டி தெருவில் சேரும் சகதியுமாக சாலைகளில் காட்சியளிக்கிறது.
    • பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.

    சாம்பவர்வடகரை:

    சாம்பார்வடகரை 2-வது வார்டு புளியம்பட்டி தெருவில் உள்ள பொதுமக்கள் சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரில் புளியம்பட்டி தெருவில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ள கழிவு நீர்களும் வாறுகால் வசதி பயனளிக்காமல் சேரும் சகதியுமாக சாலைகளில் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லாததால் பொதுமக்கள் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 5-ந்தேதி தென்காசி வருகிறார்.
    • 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

    தென்காசி:

    முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 5-ந்தேதி தென்காசி மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிறார்.

    முதல்-அமைச்சர்

    இதற்காக தென்காசி அருகே உள்ள கணக்குப்பிள்ளை வலசையில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவில் தென்காசி மாவட்டத்தில் முடிவுபெற்ற பணிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

    தொடர்ந்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழா நடைபெறும் இடத்தினை தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்தார்.

    அப்போது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், கலெக்டர் ஆகாஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக தென்காசி வருவதையொட்டி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கட்சியின் சார்பில் சுமார் 60 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    • குடும்பநல சிகிச்சை இரு வாரவிழா 21-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதத்தை தென்காசி மாவட்ட இணை இயக்குனர் பிரேமலதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை இரு வாரவிழா கடந்த 21-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவுரையின்படி ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதத்தை தென்காசி மாவட்ட இணை இயக்குனரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் டாக்டருமான பிரேமலதா, குடும்ப நல துணை இயக்குனர் ராமநாதன் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரதம் மூலம் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சையின் சிறப்பம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் ராஜேஷ், மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வெள்ளைச்சாமி, மகப்பேறு பிரிவு முதன்மை குடிமை மருத்துவர் புனிதவதி, அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் ஸ்வர்ணலதா, கார்த்திக், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் டேவிட் ஞானசேகர், புள்ளி விபர உதவியாளர் வேலு, வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர்கள் , செயின்ட் மேரி செவிலியர் கல்லூரி விரிவுரையாளர் மற்றும் மாணவிகள், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • வானவில் மன்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலோசியஸ் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.
    • நகர்மன்றத் தலைவர் சாதிர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி நகராட்சியில் 13-வது வார்டுக்கு உட்பட்ட நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலோசியஸ் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சீவலமுத்து முன்னிலை வகித்தார். தென்காசி வட்டார கல்வி அலுவலர் சண்முக சுந்தரபாண்டியன் வரவேற்றார். தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார்.

    விழாவில் தென்காசி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜ், எஸ்.எஸ்.ஏ. மேற்பார்வையாளர் (பொறுப்பு) சரஸ்வதி மற்றும் அறிவியல் ஆசிரியை கவுசல்யா, நகர்மன்ற உறுப்பினர்கள் நாகூர்மீரான் மற்றும் ராசப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார். ஏற்பாட்டினை ஆசிரியர்கள் வின்சென்ட், மணிமந்திரி, எப்சிபா, விமலா, யாஸ்மின், தமிழ்செல்வி, மாலையம்மாள் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் செய்திருந்தினர்.

    • பாவூர்சத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.
    • கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

    தென்காசி:

    தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. 45-வது பிறந்தநாள் விழா கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ், விஜயன், ஒன்றிய கவுன்சிலர்கள் வளன் ராஜா, ராஜேஸ்வரி மற்றும் மதிச்செல்வன், ஷாலி மேரி, ஜெகன், டேனியல், குருசிங், செந்தூர் உள்ளிட்ட தி.மு.க. பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    • மெட்ராஸ்-ஐ எனப்படும் கண்நோய் பாதிப்பு தென்காசியில் வேகமாக பரவி வருகிறது.
    • தட்ப வெப்பநிலை காரணமாகவே மெட்ராஸ்-ஐ அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    தென்காசி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை தொடர்ந்து தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே மெட்ராஸ்-ஐ எனப்படும் கண்நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதற்குள்ளான மாணவர்களை விடுப்பு எடுத்துக்கொள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகிறது.

    தட்ப வெப்பநிலை

    இந்த பாதிப்பானது திடீர் மழை மற்றும் வெயில் என தட்ப வெப்பநிலை மாறி மாறி ஏற்பட்டு வருவதன் காரணமாகவே அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த முறை தென்காசியில் வழக்கத்தைவிட அதிகமானோர் இந்த கண்நோய்க்கு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கண்களில் எரிச்சலுடன் அரிப்பும், கண்கள் சிவப்பு நிறமாக மாறுவதும், கண்ணில் வீக்கம், உறுத்தல், க‌ண்க‌ளி‌ல் ‌நீ‌ர் வடித‌ல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இந்த பாதிப்பு பாதிக்கப்பட்டவரின் உடமைகளை நேரடியாக தொடுவதன் மூலம் பரவலாம்.

    தடுக்கும் வழிமுறைகள்

    இந்த பரவலை தடுக்க க‌ண் வ‌லிக்கு‌ம் போது, தா‌ன் பய‌ன்படு‌த்து‌ம் பொரு‌ட்களை ம‌ற்றவ‌ரோடு ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள‌க் கூடாது. த‌னியாக சோ‌ப்பு, துண்டு போ‌ன்றவ‌ற்றை‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். கண்வலி உள்ளவர்களைப் பார்ப்பதாலேயே இது ஒட்டிக் கொள்ளாது.

    ஒ‌வ்வொரு முறை உ‌ங்க‌ள் க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பிறகு‌ம், கையை சோ‌ப்பு போ‌ட்டு‌ கழுவ வே‌ண்டு‌ம். வெளியில் சென்று வந்தவுடன் கை, முகம் ஆகியவற்றை சோப்பு போட்டு கழுவுங்கள் என மாணவ-மாணவிகளுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • பல மினிபஸ்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டார கிராம பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், ஆவுடையானூர், கடையம், பூலாங்குளம், கழுநீர்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அவற்றில் பல மினிபஸ்கள் அனுமதி பெறப்பட்ட வழித்தடங்களில் இயக்கிடாமல் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து பலமுறை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தென்காசி வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் தெரி விக்கின்றனர்.

    உடனடி யாக அனுமதிக்கப் பட்ட வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சங்கரன்கோவில் மின்வாரிய தொ.மு.ச. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.
    • வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மின்வாரிய தொ.மு.ச. கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் மின்வாரிய தொ.மு.ச. மாநில பொதுச் செயலாளர் மணிமாறன் ஆலோசனையின் படி, சங்கரன்கோவில் மின்வாரிய தொ.மு.ச. சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், சேர்மன் உமா மகேஸ்வரி, தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், திட்டத்தலைவர் தங்கமாரிமுத்து, திட்ட பொருளாளர் சத்யராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மின்வாரிய தொ.மு.ச. கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து மின்வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார். இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, இளைஞர் அணி சரவணன், தி.மு.க. மாவட்ட மாணவரணி உதயகுமார், கார்த்திக், தொ.மு.ச.வை சேர்ந்த சத்தியராஜ், வெள்ளத்துரை, கலாவதி, கருப்பசாமி, கிருஷ்ணகுமார், பால்ராஜ், கிருஷ்ணசாமி, முத்துபாண்டியன் சிவசுப்பிரமணியன், பேச்சிமுத்து, தி.மு.க. அவைத்தலைவர் முப்புடாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கோட்டச் செயலாளர் சரவணமுருகையா செய்திருந்தார்.

    ×