search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைமுறை"

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • பத்திரப்பதிவு புதிய நடைமுறைகளில் குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளித்திட தமிழக முதல்-அமைச்சரிடம் முறையிடுவேன்.

    குளச்சல் :

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம் மலை சார்ந்த மாவட்டம் ஆகும். இது தமிழ்நாட்டிலேயே சிறிய மாவட்டம். இதன் பரப்பளவு 1672 சதுர கி.மீ. ஆகும். அரசு வனப்பகுதி 504.86 சதுர கி.மீ. இது மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 30.2 சதவீதம் ஆகும். கடற்கரையின் பரப்பளவு 36 சதுர கி.மீ. மீதி சுமார் 1200 சதுர கி.மீ. நிலப்பரப்பாகும். இதில் தான் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு தரப்பு மக்களின் கட்டி டங்கள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன. ஆனால் மக்கள் நெருக்கமாக வாழும் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

    சமீபகாலமாக மாவட் டத்தில் ஏழை, எளிய மக்கள் தங்கள் பெண் குழந்தை களின் திருமணம் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய போன்ற கொடிய நோய் தீர்க்க சிகிச்சைக்கு பணம் புரட்ட தங்கள் நிலங்களை விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் நிலங்களின் பத்திரப்பதிவின்போது பத்திரப்பதிவு புதிய வழி காட்டுதல்படி 33 அடி இடம் பாதைக்கு விட்டு கொடுக்க வேண்டி உள்ளது.

    பிற மாவட்டங்கள் அதிக நிலப்பரப்பு கொண்டது. அங்கு 33 அடி இடம் விட்டால் பாதிப்பு இல்லை. குமரி மாவட்டம் நிலபரப்பு குறைந்த பகுதியாகும். இப்படி இடம் விடுவதால் குறைந்த அளவு நிலம் வைத்துள்ளவர்கள் இடத்தை விற்க முடியாமல் இருந்து வருகிறார்கள். இத னால் நிலங்களை வாங்கு வதற்கு யாரும் முன்வருவ தில்லை. நிலங்களை வாங்க யாரும் முன்வராத நிலையில் திருமணம், அவசர பணம் தேவை போன்ற காரியங் களுக்கு நிலங்களை விற்ப னை செய்ய முடியாமல் உள்ளது.

    எனவே அரசு ஏழை, எளியவர்களை பாதிக்கும் பத்திரப்பதிவு புதிய நடை முறைகளில் குமரி மாவட் டத்திற்கு விலக்களித்து குமரி மாவட்ட பொது மக்களை பாதுகாத்திட வேண்டும். பத்திரப்பதிவு புதிய நடைமுறைகளில் குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளித்திட தமிழக முதல்-அமைச்சரிடம் முறையிடுவேன். இதனை வரும் சட்டமன்ற கூட்டத்திலும் வலியுறுத்தி பேசுவேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஊரமைப்புத்துறையிலும் விண்ணப்பிக்க வேண்டிய லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
    • லாக் இன் பாஸ்வேர்டு கொடுத்து விண்ணப்பித்தால், பரிசீலிக்கப்பட்டு உரியதாக இருந்தால் அடுத்த கட்டத்துக்கு ஏற்கப்படும். அல்லது நிராகரிக்கப்படும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் புதிய லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு, உள்ளாட்சி, மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குனரகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஆகியவற்றால் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகர ஊரமைப்புத்துறைக்குமான அதிகாரம் பகிர்ந்தளிக்க ப்பட்டுள்ளது.

    இப்போது மாநகராட்சிகளிலும், நகர ஊரமைப்புத்துறையிலும் விண்ணப்பிக்க வேண்டிய லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.ஆனால் கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட மற்ற உள்ளாட்சிகளில், வெவ்வேறு முறைகளில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பரப்பின் அடிப்படையில் நகர ஊரமைப்புத்துறைக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

    வெவ்வேறு அதிகார அமைப்புகளில் திட்ட அனுமதியை பெறுவதற்கு ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியது உள்ளது. இதை எளிமைப்படுத்தவும், விரைவுபடுத்தவும், திட்ட அனுமதிக்கு ஒற்றை சாளர முறையை கொண்டு வர வேண்டுமென்று, கிரெடாய் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நீண்ட காலமாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    இதன் அடிப்படையில் 2022 மே மாதத்தில் இருந்து, நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒற்றைச்சாளர முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.அனைத்து உள்ளாட்சிகளிலும் இதை நடைமுறைப்படுத்துவதோடு, உள்ளாட்சி மற்றும் நகர ஊரமைப்புத்துறைக்கும் ஒரே முகப்பில் விண்ணப்பிக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான புதிய மென்பொருள் (SINGLE WINDOW PORTAL) வடிவமைக்கப்பட்டுள்ளது.இனிவரும் நாட்களில் கிராம பஞ்சாயத்துகள் உட்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், எவ்வளவு பெரிய லே-அவுட், கட்டிடமாக இருந்தாலும் ஒரே ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்படும்.

    வரும் அக்டோபர் 2-ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.லே-அவுட் அமைக்கவும், கட்டடம் கட்டவும் விரும்புவோர், onlineppa.tn.gov.in என்ற இணைய முகப்பில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதில் லாக் இன் பாஸ்வேர்டு கொடுத்து விண்ணப்பித்தால், பரிசீலிக்கப்பட்டு உரியதாக இருந்தால் அடுத்த கட்டத்துக்கு ஏற்கப்படும். அல்லது நிராகரிக்கப்படும்.

    அதன்பின் ஆவணங்களை பதிவேற்றம் செய்து, லே-அவுட் விண்ணப்பத்துக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1.50 பைசா வீதமும், கட்டடத்துக்கு சதுர மீட்டருக்கு இரண்டு ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். லே-அவுட் அல்லது கட்டிடத்தில் பரப்பை பொறுத்து, அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு அல்லது நகர ஊரமைப்புத்துறைக்கு செல்லும்.உரிய அதிகார அமைப்பின் அலுவலர்கள், கள ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் திட்ட அனுமதி வழங்குவர்.

    புதிய இணைய முகப்பை எப்படி கையாள்வது என்பது குறித்து தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், பதிவு பெற்ற என்ஜினீயர்கள் ஆகியோருக்கு, மென்பொருளைத் தயாரித்துள்ள, இன்டர்லேஸ் நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி, மதுரைக்குப் பின் கோவையில் கற்பகம் பல்கலைக்கழகத்தில் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சிகளின் பணியாளர்கள், பதிவு பெற்ற என்ஜினீயர்கள் பங்கேற்றனர்.

    • மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்தது. .
    • அரசு ஆஸ்பத்திரிக்கு எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



    புதிதாக திறக்கப்பட்டுள்ள ஓபுளாபடித்துறை பாலத்தில் வந்த வாகனங்கள் மோதி இன்று விபத்து ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. தென் மாவட்டத்தின் மிக முக்கிய மருத்துவமனையாக இது உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகன பயன்பாடு அதிகம் காணப்படுகிறது.

    இதுபோல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், ஊழியர்கள், பயிற்சி டாக்டர்கள் மற்றும் 200-க்கும் குறைவில்லாத ஆம்புலன்சுகள் தினமும் பயணிக்கும் முக்கியமான சாலையாகவும் உள்ளது.

    இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட ஓபுளாபாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ள பனகல் சாலையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க ஒருவழிப்பாதையாக மாற்ற போலீசார் திட்டமிட்டு போக்குவரத்து மாற்றத்தை இன்று நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

    அதன்படி கோரிப்பா ளையம் சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பு நோக்கி செல்லக்கூடிய வாகன போக்குவரத்தில் மாற்றம் இல்லை. திருவள்ளுவர் சிலை, அண்ணா பஸ் நிலை யத்தில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய அரசு பஸ் மற்றும் வர்த்தக வாகனங்கள் பனகல் சாலை-சேவாலயம் சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, இடதுபுறமாக திரும்பி வைகை வடகரை சாலையின் வலதுபுறமாக சென்று செல்லூர், தத்தனேரி மற்றும் திண்டுக்கல் சாலைக்கு செல்ல வேண்டும்.

    தமுக்கம், தல்லாகுளம் செல்லும் வாகனங்கள் வைகை வடகரை சாலையை பயன்படுத்தி குமரன் சாலையில் வலதுபுறமாக திரும்பி பாலம் ஸ்டேஷன் சாலை, கோரிப்பாளையம் வழியாக செல்ல வேண்டும்.

    சிம்மக்கல் வழியாக பெரியார் பஸ் நிலையம் செல்லும் பஸ்கள் வைகை வடகரை சாலை வழியாக புதிதாக கட்டப்பட்ட ஓபுளா பாலம், முனிச்சாலை சந்திப்பு, யானைக்கல் வழியாக செல்ல வேண்டும். இதன் மூலம் ஏ.வி. பாலத்தின் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

    ஆனால், மருத்துவ மனைக்கு செல்லும் டாக்டர்கள், ஊழியர்கள் சிவசண்முகம்பிள்ளை சாலை கிழக்கு வாசல் வழியாக ஆஸ்பத்திரிக்கு செல்லலாம். சிவசண்மு கம்பிள்ளை சாலையில் இருந்து கோரிப்பாளை யத்திற்கு வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்புலன்சுகள் வைகை வடகரை, சிவ சண்முகம்பிள்ளை சாலை, மருத்துவமனை கிழக்கு வாசல் மற்றும் கோரிப்பா ளையம் சந்திப்பு வழியாக மருத்துவமனைக்கு செல்லலாம்.

    இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக சில வாகன ஓட்டிகள் அவதிபட்டனர். சிறுசிறு விபத்துக்கள் ஏற்பட்டன. இந்த விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • மருத்துவபடியை 300 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
    • பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (ஓய்வு பெற்றோர் பிரிவு) பொது செயலாளர் ஆறுமுகம், மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்ட பின், பென்ஷனர்கள், குடும்ப பென்ஷனர்கள், தங்கள் மருத்துவ செலவுக்கான முழுத் தொகையை பெற முடிவதில்லை.மிக குறைந்த மாத பென்ஷன் பெறுபவர்கள், மருத்துவ செலவு காப்பீடுக்கு மாத தவணையாக 497 ரூபாய் செலுத்துவது கடினம். ஐகோர்ட் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் படி, விருப்பமுள்ளவர்களை மட்டும் இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும்.

    இதற்கு பதிலாக பென்ஷனர்கள் அருகேயுள்ள அலோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட தங்களுக்கு உகந்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று மருத்துவ செலவினங்களை திரும்ப பெறும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.பென்ஷனர்கள் இறக்கும் போது வழங்கப்படும், ஈமகிரியை செலவின தொகையை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மருத்துவபடியை 300 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

    தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவீதம் 75 வயது கடந்தவர்களுக்கு, 15 சதவீதம் பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருப்பூர் நகரப்பகுதியில் மின் இணைப்பு பெறுவது சவாலாக மாறியுள்ளது.
    • உள்ளாட்சி அமைப்புகளிடம் பணி நிறைவு சான்று பெறுவது கட்டாயமாகியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் பகிர்மானத்தில், பனியன் நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் 2 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்தநிலையில் வளர்ந்து வரும் நகரப்பகுதியில் வீடு, கடைகள் மின் இணைப்பு கிடைக்காமல் தத்தளித்து வருகின்றன.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருப்பூர் நகரப்பகுதியில் மின் இணைப்பு பெறுவது சவாலாக மாறியுள்ளது. நூற்றுக்கணக்கான கடைகளுக்கு இணைப்பு பெற முடியவில்லை. வீட்டு இணைப்பாக இருந்தால் மாதம் 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்துவோம். தற்காலிக இணைப்பில் 5000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. பணி நிறைவு சான்று கிடைக்காததால், மக்களுக்கு நஷ்டம். மின்வாரியத்துக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதால் அவர்களும் கண்டுகொள்வதில்லை. தமிழக அரசு தலையிட்டு வணிக வளாகம், வீடுகள் மின் இணைப்பு பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்றனர்.

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பினர், முதல்வருக்கு அனுப்பிய மனுவில், பணி நிறைவு சான்று கிடைக்காமல் திருப்பூரில் மட்டும் வீடுகள், கடைகள் என 800 கட்டடங்கள் மின் இணைப்பு பெற முடியாமல் உள்ளன.தற்காலிக மின் இணைப்பை பயன்படுத்துவதால், மின் கட்டணமாக 200 முதல் 400 ரூபாய்க்கு பதிலாக, 4,000 ரூபாய் வரை செலுத்தி வருகின்றனர். தமிழக அரசு இதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் கூறுகையில்,மாநகராட்சி வார்டுகளில், கட்டுமான பணி நிறைவடைந்தது என விண்ணப்பித்தால் கள ஆய்வு நடத்தி பணி நிறைவு சான்று வழங்கப்படும். சான்று வழங்குவதில் எவ்வித குழப்பமோ, தயக்கமோ இல்லை. இதுவரை பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்என்றார்.

    மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ஸ்டாலின் பாபு கூறியதாவது:-

    கடந்த 2019 முதல் மின் இணைப்பு வழங்க, உள்ளாட்சி அமைப்புகளிடம் பணி நிறைவு சான்று பெறுவது கட்டாயமாகியுள்ளது. மூன்று குடியிருப்புகள் வரை கட்டப்படும் வீடுகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு உள்ளது. அதிலும் கட்டிடத்தின் மொத்த உயரம், 12 மீட்டருக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.மற்ற வீடுகள், கடைகள், தொழிற்சாலை கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் தேவை. உள்ளாட்சி அமைப்புகளிடம் பெறும் கட்டிட உரிமத்தில் உள்ளபடியே கட்டடம் அமைந்துள்ளது என்பதை உறுதி செய்யவே பணி நிறைவு சான்றிதழ் கேட்கிறோம். பணி நிறைவு சான்றிதழ் இல்லாவிட்டால் மின் இணைப்பு வழங்க இயலாது.

    ×