என் மலர்
நீங்கள் தேடியது "பிரியாணி"
- ‘பிரிஞ்சி' என்ற சைவ பிரியாணி கடைகள்தான் கைகொடுத்து வருகின்றன.
- ‘பிரிஞ்சி' கடைகளில் ரூ.20, ரூ.30, ரூ.40 என வெவ்வேறு கட்டணங்களில் பிரியாணி பொட்டலம் போட்டு விற்கப்படுகிறது.
சென்னை:
தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் குடும்ப செலவுகளை சமாளிப்பதற்காக கணவன், மனைவி என 2 பேரும் வேலைக்கு செல்லவேண்டிய நிலை இருக்கிறது. இதனால் காலையில் வேலைக்கு புறப்படுவது முதல் அலுவலகம், கம்பெனிகளுக்கு சென்றடைவது வரை பெரும்பாலான தம்பதிகள் கடுமையான நேர நெருக்கடியை சந்திக்கிறார்கள். இதுஒருபுறம் இருக்க, பிள்ளைகளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.
இத்தனை வேலைகளுக்கு இடையே சமையல் செய்வது என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த இல்லத்தரசிகள் வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் காலை உணவு சமைத்துவிட்டு, மதிய உணவுக்கு விடுமுறை அளித்துவிடுகிறார்கள். இதுபோன்ற சமயத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான சாலைகளில் புதிது, புதிதாக முளைத்துள்ள 'பிரிஞ்சி' என்ற சைவ பிரியாணி கடைகள்தான் கைகொடுத்து வருகின்றன.
'பிரிஞ்சி' கடைகளில் ரூ.20, ரூ.30, ரூ.40 என வெவ்வேறு கட்டணங்களில் பிரியாணி பொட்டலம் போட்டு விற்கப்படுகிறது. மிகவும் குறைந்த செலவில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பசியாறிவிடமுடியும் என்பதால் பெரும்பாலானவர்களின் பிரதான தேர்வாகவும் இவை இருக்கின்றன.
இந்தநிலையில், 30 ரூபாய் பிரியாணி சமைப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் இருப்பது பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் காட்சியல்ல. பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வதந்தி பரப்பி வருகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
- இருவர் அண்ணா சாலை ஓட்டலில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- திருவல்லிக்கேணி ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
சென்னை:
சென்னை அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஒரே ஓட்டலின் இரண்டு கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஓட்டல்களில் கடந்த 30-ந்தேதி பிரியாணி வாங்கி சாப்பிட்ட 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சஸ்மா, சமீரா ஆகிய இருவர் அண்ணா சாலை ஓட்டலில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விக்னேஷ், ரபேக்கா உள்பட 6 பேருக்கு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட பிறகு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் திருவல்லிக்கேணி ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் 8 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும்.
- இன்று வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பென்னே பாஸ்தா - 200 கிராம்
குடைமிளகாய் - 1
கேரட், பீன்ஸ் - விருப்பத்திற்கேற்ப
வெங்காயம் - 2
தக்காளி - 2
கொத்தமல்லி - அரை கட்டு
புதினா - அரை கட்டு
தயிர் - 2 கப்
உப்பு - தேவைக்கு
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்.
தாளிக்க…
எண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2.
செய்முறை :
குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு அரை பாகம் வெந்தவுடன் ஒரு வடிதட்டில் கொட்டி குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். அப்போது தான் பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.
கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி காய வைத்து முதலில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி, புதினா, குடைமிளகாயை போட்டு வதக்கவும்.
அடுத்து மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.
காய்கள் வதங்கிய பின் தயாராக வைத்துள்ள தயிரைப் போட்டு மூடி வைக்கவும்.
மசாலாப் பொருட்கள், காய்கறிகள் எல்லாம் சேர்ந்து வெந்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் போது பாஸ்தாவைச் சேர்த்துக் கலந்த பின்னர் இறக்கி சுடச்சுட பரிமாறவும்.
இப்போது சூப்பரான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி ரெடி.
சிப்ஸ், தயிர் பச்சடியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
- காரைக்குடியில் காலித் பிரியாணி ஓட்டலை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
- முன்னாள் அமைச்சர் தென்னவன்,நகர்மன்ற தலைவர் முத்து துரை கலந்துகொண்டனர்.
காரைக்குடி
தமிழகத்தின் பிரபல ஓட்டல்களில் ஒன்றான காலித் பிரியாணி ஓட்டல் கிளை திறப்பு விழா காரைக்குடியில் நடந்தது. எஸ்.ஏ.எம். குழும சேர்மன் சித்திக் வரவேற்றார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி ஓட்டலை திறந்து வைத்தார்.
முன்னாள் அமைச்சர் தென்னவன்,நகர்மன்ற தலைவர் முத்து துரை, துணைத்தலைவர் குணசேகரன், புதுவயல் பேரூராட்சி தலைவர் முகம்மது மீரா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
காரைக்குடியில் முதன்முறையாக அரேபியன் மந்தி பிரியாணி விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.ஆனந்த்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சத்யா ராஜா,அரசு வழக்கறிஞர் பாலசுப்பிர மணியன்,புதுவயல் பேரூராட்சி துணை தலைவர் பகுர்தீன் அலி,நகர்மன்ற உறுப்பினர்கள் கலா காசிநாதன்,சொ.கண்ணன்,முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ்,தொழிலதிபர் ஜெரா ல்டின் தாமஸ்,புதுவயல் சித்திக்,ஆப்பிள் மொபைல் உரிமையாளர்கள் செல்வம், வெங்கட்,அனைத்து கட்சி நிர்வாகிகள்,தொழிலதிபர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.எச்.ஏ.எம் குழும மேனேஜிங் டைரக்டர் எஸ்.முகம்மது பாசில் நன்றி கூறினார்.
- நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.
- அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஸ்நாக்ஸ் பட்டியலில், 4 மில்லியன் ஆர்டர்களுடன் சமோசா முதலிடத்தில் உள்ளது.
பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவு வகைகளை பட்டியலிட்டு வெளியிடுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை ஸ்விகி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது. ஸ்விகி பட்டியலில் பிரியாணி 7வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது.
ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.28 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. அதிகம் ஆர்டர் செய்த உணவுகளில் சிக்கன் பிரியாணியைத் தொடர்ந்து, மசாலா தோசை, சிக்கன் ப்ரைடு ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதன்மூலம் இந்தியர்களிடையே பிரியாணிக்கு உள்ள மவுசு குறையவில்லை என்பது தெரிகிறது.
அதேபோல் வெளிநாட்டு உணவுகளை வாங்கி உண்பதிலும் இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. இத்தாலிய பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமென் மற்றும் சுஷி போன்ற உணவுகளை அதிக அளவில் ஆர்டர் செய்ததாக ஸ்விகி கூறியிருக்கிறது. இத்தாலிய உணவான ரவியோலி மற்றும் கொரிய உணவான பிபிம்பாப் ஆகியவை பிரபலமான வெளிநாட்டு உணவு வகைகளையும் நிறைய ஆர்டர் செய்துள்ளனர்.
இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஸ்நாக்ஸ் பட்டியலில் மொத்தம் 4 மில்லியன் ஆர்டர்களுடன் சமோசா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பாப்கார்ன், பாவ் பாஜி, பிரஞ்சு ஃப்ரைஸ், கார்லிக் பிரட்ஸ்டிக்ஸ், ஹாட் விங்ஸ், டாக்கோ, கிளாசிக் ஸ்டஃப்டு கார்லிக் பிரட் மற்றும் மிங்கிள்ஸ் பக்கெட் ஆகியவை உள்ளன.
- கிறிஸ்துமஸ் என்றாலே கேக், பிரியாணி தான் ஸ்பெஷல்.
- சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
சீரக சம்பா அரிசி - 4 கப்
மட்டன் - அரை கிலோ
இஞ்சி, பூண்டு - 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
தயிர் - அரை கப்
லெமன் - 1
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
நெய் - அரை கப்
எண்ணெய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கிராம்பு - 3
பட்டை - 3 சிறிய துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை :
* மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.
* அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் பால் எடுத்து வைக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து வைக்கவும்.
* குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் கால் கப் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்த பின் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
* இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
* ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.
* பின்பு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும்.
* சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.
- விநோதமாக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன்கள் உதயகுமார் (வயது 25), சூரியா (20) விவசாயி. இவர்கள் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார்.
இதில் ஜூனியர் வேலூர் பைபாஸ் என்னும் அழைக்கப்படும் ஒரு வயதான கன்றுக்குட்டியை வளர்த்து வருகின்றனர். இந்தகுட்டிக்கு நேற்று பிறந்தநாள்.
இதனை வெகுவிமரிசையாக கொண்டாட உதயகுமார், சூர்யா இருவரும் முடிவு செய்தனர்.
இதற்காக உறவினர்கள், தெரிந்தவர்களை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தனர். வீட்டில் பிரமாண்டமாக அலங்காரம் செய்தனர். மேலும் கன்று குட்டியை குளிப்பாட்டி அலங்காரம் செய்து அழைத்து வந்தனர்.
உறவினர்கள் ஊர் பொதுமக்கள் எல்லோரும் நேற்று இவர்கள் வீட்டுக்கு வர இந்த மாட்டின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி விருந்து வைத்து கொண்டாடினர். விநோதமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கலந்து கொண்டு, கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர். கிராமங்களில் பொதுவாக பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை. கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுவதோடு சரி. ஆனால், அதே கிராமத்தில் ஒரு கன்றுகுட்டிக்கு இப்படி பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழா எடுத்ததை ஊரே நெகிழ்ச்சியுடன் பார்த்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று மனதார வாழ்த்தி சென்றனர்.
- காலிஃப்ளவரில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப்,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - கால் கப்,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் - அரை டீஸ்பூன்,
பட்டை - ஒரு துண்டு,
ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊற வைத்த பின்னர் நெய்யில் வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கொதிக்கும் நீரில் நறுக்கிய காலிஃப்ளவரை போட்டு, 2 நிமிடத்துக்குப் பிறகு தண்ணீரை வடிக்கவும்.
காலிஃப்ளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய்-விட்டு, மசாலா கலந்த காலிஃப்ளவரைப்போட்டு பொரித்தெடுக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
அடுத்து அதில் நெய்யில் வறுத்த அரிசியைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
இப்போது சூப்பரான காலிஃப்ளவர் பிரியாணி ரெடி.
- கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
- கீரையில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
வெந்தயக்கீரை- ஒரு கப்,
வெங்காயம் - 2,
தக்காளி - 1,
உருளைக்கிழங்கு - 2,
பச்சை மிளகாய் - 3,
பிரிஞ்சி இலை - 1,
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை தாளித்த பின்னர் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கிய பின்னர் உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.
அடுத்து அதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
இப்போது சூப்பரான கீரை பிரியாணி ரெடி.
இந்த பிரியாணி செய்ய எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.
- இந்த ஓட்டல் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
- உரிமையாளர் டிஜிட்டல் பேனர் மூலம் அறிவிப்பு செய்திருந்தார்.
திருத்தணி :
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சித்தூர் சாலையில் அசைவ ஓட்டல் ஒன்று 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 3-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 3 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என ஓட்டல் உரிமையாளர் டிஜிட்டல் பேனர் மூலம் அறிவிப்பு செய்திருந்தார்.
இதனையடுத்து நேற்று அதிகாலை முதல் அலைமோதிய அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து 3 ரூபாய்க்கு பிரியாணியை வாங்கி உணவகத்தில் அமர்ந்து அருந்தியும், பார்சல் வாங்கி கொண்டும் சென்றனர்.
- கத்தரிக்காயில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும்.
- இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ,
சின்ன வெங்காயம் - ஒரு கப்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
புளித்தண்ணீர் - 2 கப்,
தக்காளிச் சாறு - கால் கப்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம்- சிறிதளவு
அரைக்க :
காய்ந்த மிளகாய் - 5,
தனியா - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை :
* சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கத்திரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.
* பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.
* வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் போடு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்...
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
* அடுத்து அதில் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
* புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.
- மாட்டிறைச்சியில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- மாட்டிறைச்சியை கடையில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கிலோ,
பீப் (மாட்டிறைச்சி) - 1 கிலோ,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
வெங்காயம் - 500 கிராம்,
பழுத்த தக்காளி - 500 கிராம்,
பச்சை மிளகாய் - 5
கொத்தமல்லி, புதினா - தலா 1 கொத்து,
எண்ணெய் - 200 மில்லி,
நெய் - 50 மில்லி,
எலுமிச்சை -அரை பழம்
பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2,
பிரியாணி இலை - 2,
உப்பு தூள் - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும்.
பீப் (மாட்டிறைச்சி) கொழுப்பெடுத்து கழுவி தண்ணீரை வடிக்க வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தைசேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு புதினா, தயிர் சேர்க்கவேண்டும்.
அடுத்து தக்காளி, கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
அடுத்து உப்பு சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து பீப் (மாட்டிறைச்சி) சேர்த்து வேக விட வேண்டும்.
பீப் (மாட்டிறைச்சி) வெந்து கிரேவி பதம் வரும் வரை வேக விட வேண்டும்.
பீப் (மாட்டிறைச்சி) அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவேண்டும்.
தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின்மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விட வேண்டும்.
பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான ஆம்பூர் பீப் (மாட்டிறைச்சி) பிரியாணி ரெடி.