என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜிஆர்"

    • எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்தும், உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு நாளான 24-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அ.தி.முக. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.

    தொடர்ந்து, தலைமைக் கழகச்செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.

    அதனையடுத்து, எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சியில் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும்

    கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்தும், உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்சிக்காக என்ன செய்யப்போற ? கட்சியில தீவிரமாக ஈடுப்படு என்று எம்ஜிஆர் தொடர்ந்து கூறி வந்தார்.
    • நாடகத்திற்காக உழைத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்ததுபோக, ரூ.30 லட்சம் தேர்தல் நிதிக்காக வழங்கினேன்.

    பழம்பெரும் நடிகை லதா, மாலைமலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு..

    ராமநாதபுரம் ராஜாவின் மகளான நான் சினிமாவுக்குள் நுழைந்தது எனது பாக்கியம் என்றே கூறுவேன். எம்ஜிஆர் இயக்கிய அவருடைய சொந்த படத்தில் நான் அறிமுகமானேன். அந்த காலத்திலேயே வெளிநாட்டில் படப்படிப்பு என்று அடுக்கடுக்கான ஆச்சரியங்கள் என்னை எங்கேயோ கொண்டுபோய்விட்டது. அதே மாதிரி என்னை இதுவரை ராணியாகவே வாழவைத்துள்ளது.

    கட்சிக்காக என்ன செய்யப்போற ? கட்சியில தீவிரமா ஈடுப்படு என்று எம்ஜிஆர் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் எனக்கு நடிப்பு மீது ஈடுபாடு இருந்தது. எம்ஜிஆர் தலைமையிலேயே நாட்டிய நாடகம் ஏற்பாடு செய்து தமிழகம் முழுவதும் நடத்தினோம். இதில் 35 லட்சம் கிடைத்தது. நாடகத்திற்காக உழைத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்ததுபோக, ரூ.30 லட்சம் தேர்தல் நிதிக்காக வழங்கினேன்.

    நான் எல்லோருக்கும் கொடுத்தேன்.. நீ எனக்கு கொடுத்திருக்கிறாய் என்று எம்ஜிஆர் அடிக்கடி சொல்லுவார். அதன்பிறகு தேர்தலில் மாபெரும் வெற்றிப்பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.. என்றார்.

    • 'லத்தி' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்தது.
    • நடிகர் விஷால் தற்போது 'மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்த திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரித்திருந்தனர்.


    விஷால்

    'லத்தி' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்தது. இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஷால் தனது மார்பில் பிரபல நடிகரும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வருமான எம்.ஜி.ஆரின் படத்தை டாட்டூவாக போட்டுள்ளார்.


    எம்.ஜி.ஆரின் டாட்டூ

    இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டாட்டூ உண்மையானதா? அல்லது படத்திற்காக வரையப்பட்டாதா? என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

    • ஜனவசியத் தன்மை நிறைந்த ஒருவர் வாழ்வில் அடைய முடியாத வெற்றிகளே கிடையாது.
    • தொழில், வியாபாரம்,உத்தியோகம், அரசியல், கலைத்துறை போன்ற அனைத்து துறையிலும் வெற்றி பெற ஜனவசியம் மிக முக்கியம்.

    வசியம் என்றால் ஈர்ப்பு, கவர்தல், அடக்குதல், பழக்குதல், பணிதல் எனப் பொருள்படும்.வசியம் என்றால் சக மனிதர்கள் மேல் ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பு.

    ஒருவர் மேல் யாருக்கு வசியம் ஏற்படுகிறதோ அவர்களிடம் தங்கள் பாசத்தையும், உள்ளன்பையும் வெளிப்படுத்துவார்கள். ஒருவர் மேல் யாருக்காவது இனம் புரியாத ஈர்ப்பு, வசியம் இருந்தால் எந்த சூழ்நிலையிலும் பிரியமாட்டார்கள்.

    ஜனவசியம் என்றால் ஒருவரின் தோற்றம், நடை, உடை, பாவனை, செயல்பாடு போன்ற காரணிகளால் ஈர்க்கப்பட்டு பலர் அவருடன் நட்பாக பழகுவது அல்லது அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வ தாகும். ஜனவசியத் தன்மை நிறைந்த ஒருவர் வாழ்வில் அடைய முடியாத வெற்றிகளே கிடையாது.

    நமக்கு முன் பின் தெரியாதவர்கள் நமக்கு வேண்டிய செயல்களை செய்ய வைக்க ஜனவசியம் அவசியம். முன் பின் பழகாதவர்களால் ஒருவர் நற்பலன்களை பெறுவதற்கு ஜனவசியம் அவசியம்.தொழில், வியாபாரம்,உத்தியோகம், அரசியல், கலைத்துறை போன்ற அனைத்து துறையிலும் வெற்றி பெற ஜனவசியம் மிக முக்கியம்.

    உலக மக்கள் மத்தியில் புகழப்படுவதற்கு, தங்கள் பால் மக்களை வசியம் செய்வதற்கும் ஜனவசியம் மிக அவசியம். மிக எளிமையாக ஒருவருடைய திறமைகள் சிறப்பான முறையில் உலகில் பேசப்பட்டால் ஜனவசியம் நிறைந்தவர் எனக் கூறலாம்.

    நிமிர்ந்த நேர் கொண்ட பார்வையும், வேகமான நடையும் கொண்டவர்கள். குழந்தையைப் போல் எவரிடமும் சுலபமாக பழகுபவர்கள்.

    தன்னம்பிக்கையால் முடியாததையும் முடியும் என்பவர்கள். யாராலும் செய்ய முடியாத காரியத்தை கூட செய்து காட்டும் வல்லமை உடையவர்கள். வருமானத்திற்காக கஷ்டப்பட மாட்டார்கள். எந்த தொழில் செய்தாலும் பல மடங்கு லாபம் உண்டு. வசீகரத்தால் லாபத்தையும் திடீர் தன லாபத்தையும் பெறக்கூடியவர்கள்.

    இவர்கள் வெளித்தோற்றத்திற்கு வெகுளியாக காட்சியளித்தாலும் தங்கள் வேலைகள் மற்றும் செயல்களில் மிகுந்த காரியவாதிகள். சமூகத்தில் இவர்களுக்கென தனிப்பட்ட மதிப்பு மரியாதை இருக்கும்.

    வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதனை நேர்மறையாக எடுத்து கொள்ள கூடியவர்கள்.மனதில் தன்னம்பிக்கையும், தளராத லட்சியமும், செயல்களில் கண்ணும், கருத்துமாகவும் இருக்கக்கூடியவர்கள்.தன் பிரச்சினைகள் மட்டுமல்லாது மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் தங்களின் மதிநுட்பத்தால் தீர்த்து வைப்பார்கள். ஒரே சமயத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்தும் திறமை உடையவர்கள்.இவர்கள் சுக, போகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். மனதிற்கு பிடித்தவாறு விரும்பிய வாழ்க்கையை அமைத்து கொள்ளக்கூடியவர்கள். நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்கும்.

    பல திறமைகளை தன்னுள் கொண்டவர்கள் என்பதால் தான் மட்டும் அறிவாளி என்று நினைக்க கூடியவர். ரகசியத்தைக் வாழ்நாள் முழுவதும் காப்பவர்கள். பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்கள். ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் பிரபஞ்சத்திடமிருந்து இவர்களுக்குத் வந்து கொண்டே இருக்கும். மக்களைக்கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை. எத்தகைய நபர்களைச் சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை அவர்களுக்குச் சீக்கிரம் உணர்த்தி பல வருடகாலம் நண்பர்களாக நீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், பலமும் உண்டு.இவர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமையின் மூலம் விரைந்து உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள். கடும் உழைப்பால் புகழையும், பெருஞ்செல்வத்தையும் மிக சிறப்பாக தேடிக் கொள்வார்கள்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

     மனிதர்களாய் பிறந்தவர்கள் அனைவரும் ஜனவசியத்துடன் வாழ்வதை விரும்புவார்கள். ஜனவசியத்துடன் வாழ்க்கையில் வெற்றி நடை போடுபவர்கள் பலர் இருந்தாலும் பிறரை வசீகரிக்கும் தன்மையின்றி பலர் இருக்கிறார்கள். ஜோதிட ரீதியாக ஜனவசியத்தை அதிகரித்து வாழ்க்கையில் வெற்றி நடை போடுவது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.

    ஜோதிட ரீதியாக மனிதர்களுக்கு ஜன வசியத்தை வழங்குவதில் காலபுருஷ 5-ம் அதிபதியான சூரியனும், கால புருஷ 9-ம் அதிபதியான குருவும் முன்னிலை வகிக்கிறார்கள். உதாரணத்திற்கு நமது மறைந்த முன்னால் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம்.

    28.1.1917காலை 6.30 மணிக்கு கண்டியில் பிறந்தவர்.இவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் நின்ற புதன், சுக்ரனுக்கு லக்ன அதிபதி குருவின் பார்வை. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் உச்சம் பெற்று பாக்கிய அதிபதி சூரியன் வாக்கு ஸ்தானத்தில் நிற்கிறார். இவர் உலகம் அறிந்த திரைக்கலைஞர், அரசியல் தலைவர்.

    லக்னத்தில் நின்ற புதன், சுக்ரன் மேல் குருவின் 9-ம் பார்வை பதிந்ததால் பார்த்த மாத்திரத்தில் எளிதில் ஒருவரை கவரும் அழகு, வசீகர தோற்றம்.

    நல்ல நடிப்புத் திறமை, கலைத்துறையில் வெற்றியைத் தந்தது. வாக்கு ஸ்தானத்தில் நின்ற சூரியன், செவ்வாய் பேச்சாற்றலால அனைவரையும் ஈர்க்கும் வல்லமையைத் தந்தது. இவருடைய பேச்சை வேதவாக்காக அனைவரும் கேட்டார்கள். 6-ம் அதிபதி சுக்ரன் ராகுவுடன் குருப் பார்வையில் நின்றதால் எதிரிகளை வெல்லும் வலிமை உண்டானது. பொது ஜனத் தொடர்பை குறிக்கும் ஏழாம் அதிபதி புதன் லக்னத்தில் நின்றதால் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள், அரசியல் தொண்டர்கள். இவை எல்லாவற்றுக்கும் மேல் சனி, குரு சம்மந்தம் இருப்பதால் தர்ம கர்மாதிபதி யோகம்.

    இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போதும் ஜனவசியத்தால் தேர்தலில் வெற்றி பெற்றார். இது போன்ற ஜனவசியம் நிறைந்த அரசியல் தலைவர், கலைத்துறை சாதனையாளர் உலகில் இல்லை என்றால் அது மிகைப்படுத்தலாகாது. அவர் மறைந்தாலும் அவருடைய ஜனவசியம் குறையவில்லை.

    எம்.ஜி.ஆர் என்ற பெயருக்கு ஓட்டுப் போடுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். "வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற பாடல் இவருக்கு மிகப் பொருந்தும்.

    ஜனவசியம் பெற ஒருவரின் ஜாதகத்தில் குருவும், சூரியனும் பலம் பெற வேண்டும் எனப்பார்த்தோம். எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜாதகத்தில் குருவும், சூரியனும் பலம் பெற்றதாலே ஜனவசியம் பெற்றவராக வாழ்ந்தார்.

    பரிகாரம்

    ஆக சுய ஜாதகத்தில் சூரியனும் குருவும் பலம் பெற்றால் ஜனவசியம் பெற்றவர்களாக உலகப் புகழ் பெற்று வலம் வர முடியும் என்பது தெளிவாகிவிட்டது.

    ஜனவசியம் இல்லாதவர்கள் எப்படி ஜனவசியம் பெற்று சாதனையாளர் பட்டியலில் இடம் பெற முடியும் என்று பார்க்கலாம். ஒருவரின் சுய ஜாதகத்தில் சூரியன், குருவை பலப்படுத்தினால் ஜனவசியம் நிரம்ப பெற்று சாதாரண மனிதனும் சாதனையாளர்களாக மாறலாம்.

    சூரியன்

    கால புருஷ 5-ம் அதிபதியான சூரியன் நவகிரகங்களில் முதன்மையான கிரகம். மனிதர்களுக்கு ஆன்ம பலம் வழங்குபவர். சுய ஜாதகத்தில் சூரியன் சுப பலத்துடன் வலுவாக இருந்தால் ஆன்மபலம் பெருகும். உடல் தேஜஸ் பெறும். ஜனவசியம் அதிகரித்து கவுரவம், புகழ், அந்தஸ்து, செல்வாக்கு,

    சொல்வாக்கு, குல தெய்வ அருள்கடாட்சம், நல்ல புத்திரர்கள், முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். சூரியன் கிழக்கு திசை அதிபதி என்பதால் சூரியன் பலம் பெற்றால் வீட்டில் நற்சக்திகள் நிரம்பி இருக்கும். சூரியன் பலம் குறைந்தால் ஆன்மா பலம் இழந்து மன அமைதிகுறையும். கடவுள் நம்பிக்கை இருக்காது.சித்து வேலைகள், ஏமாற்று வேலைகள் செய்து பிழைப்பு நடத்துவர். அரச தண்டனை, தண்டம் கட்ட நேரும். குடும்பத்தில் மதிப்பு, மரியாத குறையும். பொறுப்பற்றவராக இருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து ஜனவசியம் குறையும்.ஒருவருக்கு சமுதாய அங்கீகாரம், அரசின் ஆதரவு, முக்கிய பிரமுகர்களின் நட்பு, நல்ல பொருளாதாரம் ஆகியவற்றை ஜனவசியத்தின் மூலம் வழங்குபவர் சூரியபகவான்.

    சூரியனை பலப்படுத்த சூரிய பகவானின் அருளை பெற ஞாயிறு தோறும் விரதம் இருந்து சூரியனையும்,சிவபெருமானையும் வழிபட வேண்டும்.சூரிய விரதம் இருந்து சிவனை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆயுள் நீடிக்கும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது.முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். முக வசீகரம் ஜனவசியத்தை அதிகரித்து சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலையை ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.

    தன்னை எதிர்க்கும் எதிராளி அரசனாகவே இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து சூரிய பகவானை வழிபட்டால், எதிரிகள் வீழ்ந்து போவார்கள்.

    குரு பகவான்

    சுப கிரகங்களில் தலைமை கிரகமான குரு பகவான் மனிதர்கள் வாழ்வில் பல்வேறு உன்னதமான சுப பலன்களை வழங்குபவர். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். தெளிந்த ஞானம், நல்ல கல்வி, பெற்றோர், குல தெய்வ அருள், நல்ல பொருளாதாரம், சிறப்பான பழக்க வழக்கம், அரசியல் மற்றும் நிர்வாகத்தில் தலைமை பதவியில் அமர வைத்து பல மக்களை வழி நடத்தும் பொறுப்பு தருவார்.

    சமூகத்தில் பெரிய மனித தோரணை ஏற்படுத்தக் கூடியவர்.குரு என்றால் குழந்தை, பொருளாதாரம், அளவில்லாத பணம். அதனால் தான் அளவிற்கு அதிகமாக பணம் வைத்து இருப்பவர்களுக்கு குழந்தைகள் மூலம் மன வேதனையை தருவார் அல்லது குழந்தை பிறக்காது.

    நல்ல பண்பான பிள்ளைகளத் தரும் குருபகவான் அவர்களை நல்ல முறையில் வளர்க்கத் தேவையான பொருளாதாரத்தை வழங்குவதில்லை. குரு பார்க்க கோடி குற்ற நிவர்த்தி. குரு எந்த ஒரு ஜாதகத்திலும் கெட்டு போக கூடாது. இத்தகைய சுப பலன்களை வழங்கும் குருபகவான் சுய ஜாதகத்தில் சுப பலம் பெற்றால் ஜனவசியம் அதிகரிக்கும்.

    சென்ற இடமெல்லாம் பாராட்டும், பட்டங்களும், பதக்கங்களும் தேடி வரும். உட்கார்த்த இடத்திலிருந்து உலகை வளைத்து சட்டைப் பையில் வைத்துக் கொள்ள முடியும். தொழில், உத்தியோகத்தால் சமுதாய அந்தஸ்துடன் வாழ்பவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் சூரியன், குருபகவான் சுப வலுப்பெற்று ஜனவசியம் நிரம்பி இருக்கும்.

    குரு பலத்தை அதிகரிக்க வியாழக்கிழமை ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபட வேண்டும். அந்தணர்களுக்கு தான, தர்மம் வழங்க முத்தாய்பான ஜனவசியம் வந்து சேரும். பலர் பரிகாரம் எவ்வளவு காலம் செய்ய வேண்டும் என்று போன் பண்ணுகிறார்கள். நமது எண்ணங்களும், லட்சியங்களும் நிறைவேறும் வரை நம்பிக்கையோடு வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க நிச்சயம் நல்ல காலம் பிறக்கும்

    வாழ்வில் வெற்றிபெற, தொட்டது துலங்க பிரபஞ்ச சக்தியை பெற ஜனவசியம் தேவைப்படுகிறது. உடலுக்கு ஓரளவிற்குத்தான் சக்தி உள்ளது. ஆனால், மனம் என்பது இயற்கையை மீறி காலம் கடந்து நிற்கக்கூடியது. மனம் என்றால் ஆன்மா.அந்த ஆன்மாவின் ஆற்றலால் பலவிதமான சாதனைகளை புரியமுடியும். எனவே ஜனவசியத்தை அதிகரிக்க யந்திரம், தந்திரம், மாந்தரீகம், தாயத்து போன்றவற்றை நாடி நேரத்தையும், பணத்தையும் வீண் செய்து மன உளைச்சலை அதிகரிக்காமல் கூறப்பட்ட பரிகாரங்களை பயன்படுத்தி பயன் பெற வாழ்த்துக்கள்.

    • டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
    • இந்த வீடியோவிற்கு எதிராக பலர் குரல் கொடுத்தனர்.

    டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஒரு நபரின் உருவத்தில், வேறொரு நபரின் முகத்தை துல்லியமாக பதியச் செய்து போலியாக சித்தரிப்பதாகும்.


    சமீபத்தில் இந்த தொழில்நுட்பம் மூலமாக நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல், ஆலியா பட் என பலரின் புகைப்படங்கள் ஆபாசமான முறையில் மார்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த வீடியோக்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பலர் இந்த டீப்ஃபேக் (Deepfake) வீடியோவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.

    இதையடுத்து இது போன்ற போலி வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.



    இந்நிலையில், பல குழப்பங்களை உருவாக்கிய டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் தற்போது எம்.ஜி.ஆருக்கு உயிர் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் எம்.ஜி.ஆர் 'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்போன போக்கிலே' பாடலை பாடுகிறார். இந்த வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள் பல குழப்பங்களை செய்த டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் தற்போது தான் அருமையான ஒரு செயலை செய்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • தேமுதிகவின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து வருகிறது
    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு பிரேமலதா செல்லவில்லை

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்த விஜயகாந்த், தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவற்றிற்கு மாற்றாக கடந்த 2005 செப்டம்பர் 14 அன்று "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" (DMDK) எனும் புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சிக்கு முரசு சின்னம், தேர்தல் சின்னமாக கிடைத்தது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இக்கட்சியின் வாக்கு வங்கி சதவீதம், 2006 (சட்டசபை) - 8.38, 2009 (பாராளுமன்றம்) - 10.08, 2011 (சட்டசபை) - 7.88, 2014 (பாராளுமன்றம்) - 5.19, 2016 (சட்டசபை) - 2.39, 2019 (பாராளுமன்றம்) - 2.19 என தேர்தலுக்கு தேர்தல் குறைந்தவாறு உள்ளது.

    2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 29 சட்டசபை இடங்களை கைப்பற்றிய தேமுதிக, பதிவான வாக்குகளில் 6 சதவீதத்துக்கும் குறைவாக பெற்று, தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. அக்கட்சியின் சார்பில் வெற்றி பெறாததால் மாநில கட்சி அந்தஸ்தையும், முரசு சின்னத்தையும் இழக்கும் அபாய கட்டத்திற்கே வந்தது.

    சமீப சில வருடங்களாக அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், அக்கட்சியின் நிர்வாகிகளில் பலர் வேறு கட்சிகளுக்கு வெளியேறினர்; தொண்டர்களும் குறைய தொடங்கினர்.

    இந்நிலையில், டிசம்பர் 14 அன்று தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், பொது செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    தொடர்ந்து பிரேமலதா உரையாற்றும் போது, "பெண்களுக்கு அரசியல் ஒரு பெரும் சவால். ஜெயலலிதா சந்திக்காத சவால்களே இல்லை. விஜயகாந்திற்கு எம்.ஜி.ஆர்.தான் குரு; எனக்கு ஜெயலலிதாதான் ரோல் மாடல்" என குறிப்பிட்டார்.


    மேலும், மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு செல்லவில்லை. இந்த செயல் விமர்சகர்களால் முக்கியத்துவம் அளித்து பேசப்படுகிறது

    பல சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்ட "இரும்பு பெண்மணி" என அழைக்கப்பட்ட மறைந்த அதிமுகவின் பொது செயலாளர் ஜெயலலிதா ஒரு ஆளுமை மிக்க தலைவராக கருதப்பட்டவர். தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பக் கூடிய பெண் அரசியல் தலைவர்கள் இன்னும் உருவாகவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

    இப்பின்னணியில், பிரேமலதாவின் உரையும், மறைந்த அதிமுக தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப அவர் முன்னெடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    அதிமுகவின் பெரும் தலைவர்களை நினைவுகூர்ந்த அவரது பேச்சிலும், நினைவகங்களுக்கு செல்வதில் திமுகவை புறந்தள்ளுவதை போல் நடந்து கொண்டதும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன.

    பா.ஜ.க.வை உதறி விட்டு தேர்தலை சந்திக்க உள்ள அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தேமுதிக தயாராக உள்ளதாக அதிமுக தலைவர்களுக்கு மறைமுகமாக பிரேமலதா விடுக்கும் செய்தியாக சில விமர்சகர்கள் இதை கணிக்கின்றனர்.

    "கருப்பு எம்.ஜி.ஆர்." என ரசிகர்களால் அழைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். இடத்தை நிரப்ப விஜயகாந்த் முயன்றது போல், ஜெயலலிதாவிற்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி அதிமுகவின் வாக்கு வங்கியின் ஒரு பகுதியை அறுவடை செய்ய பிரேமலதா நினைக்கலாம் என்பது சில விமர்சகர்களின் கணிப்பு.

    இப்பின்னணியில், வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக எதிர்நோக்கப்படுகிறது.


    ஸ்டாலினே முதல்வர் வேட்பாளராக நிற்பாரா அல்லது தனது மகன் உதயநிதியை முன்னிறுத்துவாரா என்பது தெரியவில்லை.

    2017ல் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டு 2021 வரை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி களத்தில் இறங்க போகும் முதல் தேர்தல் இதுதான்.

    திமுகவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் என்ன சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதும் தற்போது தெளிவாகவில்லை.

    இவர்களுக்கு நடுவே தேமுதிக பொது செயலாளரின் கணக்குகள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    • ஜெயலலிதா சினிமா மற்றும் அரசியலில் தடம் பதித்து இரண்டிலும் வெற்றி கண்டவர்.
    • சினிமா மற்றும் அரசியலில் தடம் பதித்து மிகக்குறைந்த நாட்களிலேயே எதிர்க்கட்சி தலைவராகியவர் விஜயகாந்த்.

    டிசம்பர் திக்.... திக்... திக்...

    தமிழகத்தில் டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே ஒன்று இயற்கை பேரழிவு, மற்றொன்று தலைவர்கள் மரணம் என்பது தொடர் கதையாகி வருவது இன்றளவும் தொடரத்தான் செய்கிறது. அந்த வகையில்தான் இன்று கேப்டன் விஜயகாந்த்தும் மறைந்துள்ளார்.

    தமிழக மக்களால் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் எம்.ஜி.ஆர். சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் தடம் பதித்து இரண்டிலும் உச்சத்திற்கு வந்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். இவர் டிசம்பர் 24-ந்தேதி காலமானார்.

    அதேபோல் புரட்சித்தலைவி ஜெயலலிதா சினிமா மற்றும் அரசியலில் தடம் பதித்து இரண்டிலும் வெற்றி கண்டவர். அரசியலில் அவர் காட்டிய அதிரடிகள் ஏராளம். துணிச்சலின் அடையாளமாக கருதப்பட்ட அவரும் டிசம்பர் மாதம் 5-ந்தேதி காலமானார்.

    தே.மு.தி.க. நிறுவனரும் புரட்சிக்கலைஞர் என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டவருமான விஜயகாந்த் ஆக்ஷன் சண்டை காட்சிகளிலும், நெருப்பு பொறி பறக்க இவர் பேசும் வசனங்களும் மிகவும் பிரபலமானவை. அந்த வகையில் சினிமா மற்றும் அரசியலில் தடம் பதித்து மிகக் குறைந்த நாட்களிலேயே எதிர்க்கட்சி தலைவராகியவர்.

    கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி 29 எம்.எல்.ஏ.க்களை பெற்று எதிர்க்கட்சி தலைவரானவர். பல்வேறு சிறப்பு பண்புகள் பெற்ற விஜயகாந்த் டிசம்பரில் காலமாகியுள்ளார். முன்னதாக சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார், பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் டிசம்பர் மாதம் காலமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தபோதும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார்.
    • சினிமாவிலும், அரசியலிலும் அவர் எளிதில் வெற்றி பெற்றுவிடவில்லை.

    * மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிக்கு 3-வது மகனாக 25-8-1952-ம் ஆண்டு பிறந்தார் விஜயகாந்த். அவரது இயற்பெயர் விஜய ராஜ்.

    இவருக்கு நாகராஜ், பால்ராஜ், ராமராஜ், பிருதிவிராஜ் ஆகிய சகோதரர்களும், டாக்டர் விஜயலட்சுமி, திருமலாதேவி, சித்ரா, மீனா ஆகிய சகோதரிகளும் உள்ளனர்.

    * விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, இந்த தம்பதிக்கு விஜயபிரபாகர், சண்முகபாண்டியன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    * சிறு வயதிலேயே சினிமா மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக எம்.ஜி.ஆரின் படங்களை விரும்பி பார்ப்பார். சினிமா மோகத்தால் படிப்பு மீதான நாட்டம் குறைந்தது. இதனால் 10-ம் வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்தினார்.

    * மதுரையில் தனது தந்தை அழகர்சாமி நடத்தி வந்த அரிசி ஆலையை சிறிது காலம் கவனித்தார். ஆனால் சினிமா கனவுடன் சென்னை வந்தார். அவரது கனவு நிறைவேறியது. அவர் நடிகரானார். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

    * எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தபோதும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார். அதேபோல் த.மா.கா. தலைவர் ஜி.கே.மூப்பனார் மீதும் பெருமதிப்பு வைத்திருந்தார்.

    * மதுரையில் கடந்த 1990-ம் ஆண்டு நடைபெற்ற அவரது திருமணத்தை கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அந்த விழாவில் ஜி.கே.மூப்பனாரும் கலந்து கொண்டார்.

    தனது ரசிகர்கள் மத்தியில் பிரேமலதாவை அவர் மணம் முடித்தார். திருமணத்தில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

    * முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் நெருங்கி பழகினாலும், அரசியலில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வழியிலேயே பயணிக்க விரும்பினார்.

    அதன்படியே அவர் வழியிலேயே அரசியல் கட்சி தொடங்கினார். எம்.ஜி.ஆரை போன்று அடுத்தவர்களுக்கு உதவும் கொடை வள்ளல் குணம் விஜயகாந்தின் உள்ளத்திலும் குடியிருந்ததால் அவரை கருப்பு எம்.ஜி.ஆர். என்று தே.மு.தி.க.வினர் போற்றினார்கள். எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பண்ரூட்டி ராமச்சந்திரனும் விஜயகாந்துடன் அரசியல் பாதையில் கைக்கோர்த்தார்.

    * சினிமாவிலும், அரசியலிலும் அவர் எளிதில் வெற்றி பெற்றுவிடவில்லை. பல்வேறு போராட்டங்களுக்கு பின்னரே விஜயகாந்த், சாதித்தார். அவரது கட்சியில் இருந்து சில எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்றபோதும், தேர்தல்களில் தோல்வி கண்டபோதும் அவர் துவண்டுவிடவில்லை.

    * உடல்நிலை பாதிப்புதான் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. சினிமாவில் சாதாரண நடிகனாக நுழைந்து, புரட்சி கலைஞராக உருபெற்று கேப்டனாக நிலைத்து நின்றார். அதேபோல் அரசியலிலும் கேப்டனாகவே இருந்தார்.

    * 2001-ம் ஆண்டு செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் தனது பெற்றோர் பெயரில் ஸ்ரீ ஆண்டாள் அழகர் என்ற பொறியியல் கல்லூரியை கட்டினார். இந்த கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், கட்டண குறைப்பையும் அவர் நடைமுறைப்படுத்தினார்.

    * 'நான் படிக்காதவன். மற்றவர்களாவது படிக்கட்டும் என்று தான் ஆண்டு தோறும் ஏழை மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். கல்விக்காக செலவிடுவதை விட கல்வியை கற்றுக்கொடுக்க செலவிடலாம் என்று முடிவு செய்தேன். அதனால் இந்த பொறியியல் கல்லூரியை தொடங்கி இருக்கிறேன்', என்று விஜயகாந்த் அப்போது குறிப்பிட்டார்.

    • புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார்.
    • ஆயிரமாண்டு கடந்தாலும் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது!

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கருணாநிதியால்தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதை போல முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நேற்றுமுன்திளம் நடந்த விழாவில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர்.

    இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று!

    புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார். ஆயிரமாண்டு கடந்தாலும் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது! மறைக்கவும் முடியாது!

    அவரது உதவியால்தான் கருணாநிதியே முதலமைச்சரானார். சினிமா துறையை சிறைப்பிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்க சொல்லி கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே?.

    இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர். #TheGOATMGR

    இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருணாநிதி முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர். தான் முழுக்க முழுக்க காரணம்.
    • முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அவர்கள் எழுதிக்கொடுத்த உரையை அப்படியே படித்துவிட்டு செல்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்ணாவுக்கு பிறகு தி.மு.க.வில் யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற பிரச்சனை வந்தபோது, எல்லோரும் நாவலர் நெடுஞ்செழியனை சொல்லும்போது, எம்.ஜி.ஆர்.தான், முரசொலி மாறன் உள்ளிட்டோர் வந்து கேட்டதற்கு இணங்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோரிடம் பேசி கருணாநிதியை முதலமைச்சராக தேர்வு செய்ய செய்தார்.

    எனவே, கருணாநிதி முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர். தான் முழுக்க முழுக்க காரணம். இதை கருணாநிதி எங்கள் தங்கம் திரைப்பட விழாவிலேயே சொல்லி இருக்கிறார். இது தான் வரலாறு.

    ஆனால், கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஏதோ கருணாநிதியை புகழ வேண்டும் என்பதற்காக தவறாக வரலாற்றை மறைத்து பேசியது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதே போன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடத்தினார்கள். அங்கு 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்ட நிலையில் 899 பேர் தான் விழாவிற்கு வந்துள்ளனர். இதைவிட கருணாநிதியை கேவலப்படுத்தியது உலகத்தில் எதுவுமே இருக்காது. இந்த விழாவில், முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அவர்கள் எழுதிக்கொடுத்த உரையை அப்படியே படித்துவிட்டு செல்கிறார்கள். அதாவது, கருணாநிதியால் உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். என்று கூறுகிறார்கள். இதனை தமிழ்நாடு ஏற்குமா? எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏற்பார்களா?

    எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருக்கும் வரை கருணாநிதி பதவியில் இருந்தார். தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியே வந்த பிறகு கருணாநிதியால் அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ ஆகமுடியவில்லை. 11 ஆண்டுகள் வனவாசம் அனுப்பி வைத்த மாபெரும் தலைவர் தான் எம்.ஜி.ஆர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவராகவும் இருந்தார்.
    • எம்.ஜி.ஆரின் பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது என கூறியுள்ளார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் எம்.ஜி.ஆர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை இன்று நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவராகவும் இருந்தார். தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்த அவர் தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது என கூறியுள்ளார்.

    • மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். காலை 10.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி காரில் அங்கு வந்து இறங்கினார். அப்போது தொண்டர்கள் வாழ்த்து கோஷமிட்டனர்.

    தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அவரை வரவேற்று அழைத்து சென்றனர். பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.

    பின்னர் அவர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனையடுத்து 107 கிலோ எடை கொண்ட கேக் அங்கு தயார் செய்யப்பட்டிருந்தது. அதனை எடப்பாடி பழனிசாமி வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் மகளிர்களுக்கு சேலை வழங்கினார்.

    மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும் பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, பா.வளர்மதி, பா.பென்ஜமின், கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, வாலாஜாபாத் கணேசன், மாவட்ட செயலாளர்கள் டி.ஜெயக்குமார், நா.பால கங்கா, டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆதிராஜாராம், வி.என்.ரவி, தி.நகர் சத்யா, அசோக், ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன்,

    சிறுபான்மை பிரிவு சேவியர், சிவராஜ், இலக்கிய அணி செயலாளர் இ.சி.சேகர், மாவட்ட துணை செயலாளர் வளசை டில்லி, பெரும்பாக்கம் ராஜசேகர், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன், டாக்டர் சுனில், வடபழனி சத்தியநாராயண மூர்த்தி, மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், வேளச்சேரி மூர்த்திவேல் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னையில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தெருக்களிலும், மக்கள் சந்திக்கும் இடங்களிலும் எம்.ஜி.ஆர். படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஆங்காங்கே எம்.ஜி.ஆர். சினிமா பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தன.

    ×