search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜிஆர்"

    • பொன்மனச் செம்மல் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சி கண்ட தமிழினத்தின் திருநாள்!
    • மண்ணிலும் மக்கள் மனதிலும்‌ மாற்றமுடியாத இயக்கமாக இருக்கும்,

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    ஏழைகளின் ஏற்றமே நாட்டின் முன்னேற்றம் எனக் கருதி ஏழை எளியோரின் வலியுணர்ந்து வாரி தந்த வள்ளல்!

    தமிழ்நாட்டை சுயநலத்திற்காக சூறையாட நினைத்த சதிகார கும்பலுக்கு எதிராக சாட்டையை சுழற்றி கோட்டையில் கழக கொடியை பறக்க விட்ட பொன்னாள்!

    பொன்மனச் செம்மல் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சி கண்ட தமிழினத்தின் திருநாள்!

    30.06.1977-ல் முதன்முதலாக முதலமைச்சராக பதவியேற்று 11-ஆண்டுகள் கடைக்கோடி மக்களுக்காகவே கழக ஆட்சியை தந்தவர் நம் தங்கத்தலைவர்!

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வார்த்தை வரிகளுக்கு ஏற்ப நூறாண்டு தாண்டி நூற்றாண்டு கண்டாலும் மண்ணிலும் மக்கள் மனதிலும் மாற்றமுடியாத இயக்கமாக இருக்கும்! இயங்கும்! என்று கூறியுள்ளார்.

    • 1991 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கேயம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
    • ஆர்.எம்.வீரப்பன் பாட்ஷா திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

    சென்னை:

    எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் காலமானார்.

    அரசியல் வாழ்க்கையில் ஆர்.எம்.வீரப்பன் குறித்த தகவல்கள் பின்வருமாறு:-

    * அ.தி.மு.க. உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

    * ஆர்.எம்.வீரப்பன் 1977 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக இருந்தார்.

    * 1986 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் நெல்லை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

    * 1991 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கேயம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.


    * எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

    * எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவுடன் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.

    * ஆர்.எம்.வீரப்பன் பாட்ஷா திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

    * 1995 ஆம் ஆண்டு பாட்ஷா படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்துக்காக ஆர்.எம்.வீரப்பன் கலந்து கொண்ட போதுதான் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஓட்டு போட்டால் இந்த தமிழகத்தை ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது என ரஜினிகாந்த் பேசி பரபரப்பை கிளப்பினார். இந்த காரணத்திற்காகவே அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பனை கட்சியிலிருந்து நீக்கினார்.

    * இதையடுத்து ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

    • நிர்வாகிகளை நீக்கி பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
    • எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்களை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புதுச்சேரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்திய 3 பாஜக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகிகளை நீக்கி பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்களை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    • புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • புதுவையில் பா.ஜனதாவின் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் மும்முனைப்போட்டி உறுதியாகியுள்ளது.

    ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா, இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் அல்லது தி.மு.க., அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடுகிறது.

    பா.ஜனதா வேட்பாளர் யார்? என தெரியாத நிலையில் கிராமப்புற பகுதிகளில் தாமரை சின்னம் வரைந்து, மீண்டும் மோடி, வேண்டும் மோடி என தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் புதுவையில் பா.ஜனதாவின் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதில் மறைந்த அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தலைவர் நட்டா, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் படங்களை பிரசுரித்தும் வாக்களிப்போம் தாமரைக்கே எனவும் அச்சிட்டிருந்தனர்.

    மேலும் சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் மோடி பேசிய போது, தரமான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக்கொண்டனர் என்ற வரிகளையும் குறிப்பிட்டுள்ளனர்.

    இது கூட்டணியை விட்டு வெளியேறிய அ.தி.மு.க. தொண்டர்களின் வாக்குகளை இழுக்கும் தந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது புதுவை அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இரவோடு, இரவாக புதுவை அ.தி.மு.க. சார்பில் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுத்து ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், பிரதமர் மோடி, புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களுடன் பல்லடத்தில் பிரதமர் மோடி பேசிய வாசகங்களை குறிப்பிட்டுள்ளனர். எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது ஜெயலலிதாதான். அவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர் என்று பிரதமர் மோடி பேசியதை அச்சிட்டுள்ளனர்.

    மேலும் பிரதமர் மோடி பா.ஜனதா பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரின் ஒப்பற்ற புகழை பேசியதன் மூலம் எடப்பாடியார் தலைமையில் தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்துக்கு பா.ஜனதா அதன் கூட்டணி தொண்டர்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர்.

    புதுவையில் அ.தி.மு.க. வெற்றியை உறுதி செய்துள்ள பா.ஜனதா கூட்டணி தொண்டர்களுக்கு நன்றி, நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

    பாஜக - அ.தி.மு.க. கட்சிகள் இடையிலான இந்த திடீர் போஸ்டர் யுத்தம் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது அம்மா ஜெயலலிதா அவர்கள்தான்.
    • புதுச்சேரியில் இந்த முறைவாக்களிப்போம் தாமரைக்கே’ என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    புதுச்சேரி:

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி வைத்து போட்டியிட்டது. தற்போது இதில் விரிசல் ஏற்பட்ட நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா தனித்தனியே கூட்டணி அமைத்து களம்காண உள்ளன.

    இந்த சூழலில் புதுவை பா.ஜனதா லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா படத்துடன் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்திலும் வெளிவந்துள்ளது.

    அதில் பிரதமர் பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 'தரமான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக் கொண்டனர்' என்றும், 'எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது அம்மா ஜெயலலிதா அவர்கள்தான்.

    அவர் தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்'என்றும், 'புதுச்சேரியில் இந்த முறைவாக்களிப்போம் தாமரைக்கே' என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த போஸ்டரில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, புதுவை பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி., உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் ஆகியோரது படங்களும் இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க. வாக்குகளை தங்கள்வசம் இழுக்கவே இதுபோன்ற நடவடிக்கையில் புதுச்சேரி பா.ஜனதா கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    கூட்டணி முறிந்துள்ள நிலையில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரின் படங்களை போட்டு தாமரைக்கு வாக்கு கேட்கும் பா.ஜனதாவின் இந்த உத்தி, புதுவை அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். குறிப்பாக பல்லடத்தில் பேசிய பேச்சில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் மக்களுக்கு செய்தது என்ன என்பது பற்றி பெரிதாக குறிப்பிடவில்லை.

    10 ஆண்டுகளில் இந்த நாடு என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதையும், என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.

    குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்து பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார்.

    தமிழ்நாட்டில் கொள்கைகளை பேசி தன்னுடைய கட்சிகளை வளர்க்க வேண்டும் என்று பா.ஜனதா, பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இங்கு ஆட்சியில் இருக்கக்கூடிய தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது, அத்துடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களின் புகழை பேசுவது போன்ற யுக்தியை அவர் கையில் எடுத்திருக்கிறார்.

    பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை. தன் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நன்மதிப்பை நம்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு மோடி வந்து விட்டார் என்பதுதான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது.

    எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்தால் அ.தி.மு.க.வின் வாக்கை பெற முடியும் என நினைக்கிறார்கள். இதன் மூலம் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும், அதன் வாக்கு சதவீதத்தை சரிய செய்ய வேண்டும் என பா.ஜனதா கணக்கு போடுகிறது என்று உணர முடிகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடிய நிலை வந்தால் தமிழ்நாட்டிற்கு பெரிய தீங்கு விளையும். இதை தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் உணர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டி காட்டுகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், சுற்றி சுழன்று வந்து பிரசாரம் மேற்கொண்டா லும் தமிழ்நாட்டு மக்கள் மோடி வித்தையை நம்ப மாட்டார்கள்.

    பா.ஜனதாவுக்கு பெரிய செல்வாக்கு உருவாகாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அப்படி சொல்பவர்களை செருப்பால அடிப்பேன் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.
    • அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் இழுப்பதற்காகவும், அதிமுக வாக்குவங்கியை தன பக்கம் இழுப்பதற்கும் தான் பிரதமர் அவ்வாறு பேசி வருகிறார்

    திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் எம்.பி திருநாவுக்கரசர்.

    அப்போது, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சேர்வார்கள் என்று பாஜகவினர் சொல்கிறார்கள் அதன் வரிசையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக உங்களது பெயரையும் சொல்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "அப்படி சொல்பவர்களை செருப்பால அடிப்பேன். இனிமேல் சீமான் போல பேசலாம் என்று முடிவெடுத்து விட்டேன் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.

    மேலும், தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும் போது எல்லாம் மறைந்த தலைவர்களை பாராட்டி பேசி வருகிறார். குறிப்பாக ஜெயலலிதா எம்ஜிஆர் அவர்களை பாராட்டி பேசியது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் இழுப்பதற்காகவும், அதிமுக வாக்குவங்கியை தன்பக்கம் இழுப்பதற்கும் தான் பிரதமர் அவ்வாறு பேசி வருகிறார்" என அவர் பேசியுள்ளார். 

    • எனக்கு என்னென்ன தகுதியிருக்கிறது என்று சொல்வதற்கு பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை.
    • மாநாட்டில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் முதலமைச்சர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள்.

    கோவை:

    அ.தி.மு.க நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி ஆ.ராசா எம்.பி. அவதூறாக பேசியதாக கூறி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று அ.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்.பற்றி அவதூறாக பேசியதற்காக பாராளுமன்ற தேர்தலில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார்.

    தனக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது குறித்து ஆ.ராசா எம்.பி.யிடம் கோவையில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் பதில் அளித்து ஆ.ராசா எம்.பி. கூறியதாவது:-


    எனக்கு என்னென்ன தகுதியிருக்கிறது என்று சொல்வதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை. நான் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு பதிலாக வேறு வார்த்தை பயன்படுத்தி இருக்கலாம் என கூறுகிறீர்கள்.

    அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர், முதலமைச்சரை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை, முதலமைச்சர் குடும்பத்தினரை பற்றி பேசியது தொடர்பாக ஐகோர்ட்டில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    அதன்பிறகு நடந்த மாநாட்டில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் முதலமைச்சர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள். இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி முதலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். எம்.ஜி.ஆர் முகத்தை வைத்து தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது என பழனிசாமி கூறுகிறார். அது தனிக்கதை. அதைப்பற்றி பின்னர் தனியாக பேசுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில்தான் கோவையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.
    • தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி இவற்றை முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும்.

    அவினாசி:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பற்றி விமர்சித்து பேசிய ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து அவரது தொகுதியான நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியற்றவர்கள்தான் தி.மு.க.வினர். அதிலும் குறிப்பாக ஆ.ராசா போன்றவர் எம்.ஜி.ஆரை பற்றி இழிவாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. எம்.ஜி.ஆர். பற்றி இழிவாக பேசிய அவருக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

    தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்தது அ.தி.மு.க.தான். இந்த 30 ஆண்டுகால ஆட்சியில்தான் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது. பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் கல்வியில் புரட்சி ஏற்படுத்தினார்.

    50 ஆண்டுகால மக்களின் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் அத்திகடவு-அவிநாசி திட்டத்திற்கு ரூ. 1512 கோடி மாநில நிதி ஒதுக்கப்பட்டு 90 சதவீதம் முடிந்த நிலையில் 10 சதவீத பணியை முடிக்காமல் 2½ ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தொடங்கிய திட்டம் என்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    கடுமையான மின் கட்டண உயர்வால் திருப்பூர்-கோவை மாவட்டத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த குடிநீர் திட்டங்களுக்கு தி.மு.க.வினர் ஸ்டிக்கர் ஒட்டி திறக்கின்றனர். நாளை மறுநாள் 11-ந்தேதி உதயநிதி ஸ்டாலின் குடிநீர் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. முதியவர்கள் கொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகளை திருடும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில்தான் கோவையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி இவற்றை முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும்.

    கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க., பாதுகாப்பில்லாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    2019, 2021 தேர்தல் அறிக்கையை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்ததால் மகளிர் உரிமைத் தொகையை வழங்கினார்கள் . அதுவும் தகுதியின் அடிப்படையில் என மூன்றில் ஒரு பங்கு வழங்கினார்கள். இது தி.மு.க.வின் இரட்டை வேடம். திருப்பூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு.

    திருப்பூர் என்றாலே அந்நிய செல்வாணியை ஈட்டி தரும் நகருக்கு நிறைய ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றார். 11 நாட்கள் தங்கியிருந்தார். 3 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக செய்தி. ஆனால் அந்த 3 நிறுவனம் தமிழகத்தை சேர்ந்தது. சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் இந்த ஒப்பந்தம் போடவில்லை. வெளிநாடு செல்வதற்காக நாடகம் போட்டு சென்றுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க போகவில்லை. முதலீடு செய்ய போயுள்ளார்.

    ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சு, வந்த பின்னர் ஒரு பேச்சு என திமுக, அரசு இருக்கின்றது. தி.மு.க.வினர் கவர்ச்சிகரமாக பேசுவார்கள். தேர்தலுக்கு பின்னர் வாக்குறுதிகள் கரைந்து விடும்.

    எம்.ஜி.ஆரை பற்றி பேசிய ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சித்தால் இதுதான் தண்டனை என்பதை மக்கள் உணர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி., வேலுமணி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செ.ம.வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், தனபால், வி.பி.கந்தசாமி, கே.ஆர். ஜெயராம், அமுல் கந்தசாமி, தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன், பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் அமைப்பு செயலாளர் தாமோதரன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே அவினாசியில் திரண்டு போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தையொட்டி அவினாசியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவினாசியில் இன்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே தி.மு.க. அரசு நிறைவேற்றுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆரை இழிவாக பேசியதாக தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.

    * நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாக பேசுவதை கைவிட வேண்டும்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

    * கூட்டு குடிநீர் திட்டங்களை திட்டமிட்டு நிறைவேற்றியது அ.தி.மு.க.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே தி.மு.க. அரசு நிறைவேற்றுகிறது.

    * தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது என்று கூறினார்.

    • ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம்.
    • தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏழுமலை தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    1972-ம் ஆண்டில் 11 லட்சம் தொண்டர்களுடன் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி வழிநடத்தினார். அனைத்து தரப்பு மக்களாலும் சாதி, மத வித்தியாசம் இன்றி இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட பல்வேறு சட்டவிதிகளை எம்.ஜி.ஆர். வகுத்துச்சென்றார்.

    அவரது மறைவுக்குப் பிறகு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கொடுத்த பல்வேறு இடையூறுகளை தாண்டி 1½ கோடி தொண்டர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளராக 30 ஆண்டுகள் பணியாற்றி இந்த இயக்கத்தை வழிநடத்தினார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

    தற்போது எடப்பாடி பழனிசாமி, அடிப்படை தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்து கபளீகரம் செய்துள்ளார்.

    இன்றைக்கு சாதாரண தொண்டர்கள், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கூடிய சட்டவிதியை எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார். அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டருக்கும் உரிமையைப் பெற்றுத்தரும் நோக்கில், மாநிலம் முழுவதும் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள தொடங்கி, இதுவரை 24 மாவட்டங்களில் முடித்துள்ளேன்.

    எஞ்சிய மாவட்டங்களிலும் பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.

    தமிழக முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்ற பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் என 8 தேர்தல்களை சந்தித்தார். அத்தனை தேர்தல்களிலும் தோல்வியைத்தான் கண்டார்.

    ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம். ஆனால் இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை.

    தற்போது கூட்டணிக்கு யாரேனும் வருவார்களா என கட்சித்தலைமை அலுவலகத்தில் கதவை திறந்து வைத்துக்கொண்டு தலைவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கூட்டணிக்கு வாருங்கள் வாருங்கள் என அழைத்தாலும், அவர்களை நம்பி யாரும் வருவதில்லை. அ.தி.மு.க.வில் இந்த நிலை உருவாக யார் காரணம். மிகவும் பரிதாப நிலையில் கட்சி உள்ளது.

    தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர். இந்திய அரசியலில் தமிழ்நாடு அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக இருந்த காலம் மாறி விட்டது. தி.மு.க.வில் கருணாநிதி இருந்தார்.

    இப்போது ஸ்டாலின் உள்ளார். பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, மாநில வக்கீல் அணி செயலாளரும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான செஞ்சி கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, விஜய் சிறந்த திரைப்பட நடிகர். புதிய கட்சியை தொடங்கி உள்ள அவருக்கு எங்களுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் எதிர்வரும் சவால்களை சமாளித்து தமிழக அரசியலில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

    அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் கூட்டணி அமைக்க இருக்கிறோம். ஏற்கனவே நாங்கள் பா.ஜனதாவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். 10 ஆண்டுகள் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.

    உலகத்தில் இருக்கும் 20 வளர்ந்த நாடுகள், நரேந்திர மோடியின் நிர்வாகத்தையும், அயல்நாட்டின் அணுகுமுறையையும் பாராட்டியிருக்கிறார்கள். எனவே 3-வது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என்ற பொதுவான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக பா.ஜனதா பெரும்பான்மை பெற்று மீண்டும் மோடி, பிரதமராக வலம் வருவார் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதேபோல் ஸ்டாலினும் நான் வாரிசு அரசியல் செய்யமாட்டேன் என்று கூறினார்.
    • 2022-ம் ஆண்டு அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்து அமைச்சர் வரிசையில் 10-வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம், மதுரை மாநகர் மாவட்டம் மதுரை மேற்கு தொகுதி கழத்தின் சார்பில், பரவையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். பாட்டாளி மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக கட்சியை தொடங்கினார். எடப்பாடி யார் இன்றைக்கு கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளில் உலக அளவில் 7-வது இடத்திலும், இந்திய அளவில் 3-வது இடத்திலும், தமிழகத்தில் முதன்மையாக கழகத்தை உருவாக்கியுள்ளார்.

    தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல என கருணாநிதி கூறினார். ஆனால் ஸ்டாலினை துணை முதலமைச்சர் மற்றும் செயல் தலைவராக நியமித்தார். அதேபோல் ஸ்டாலினும் நான் வாரிசு அரசியல் செய்யமாட்டேன் என்று கூறினார்.

    ஸ்டாலின் வளர்ச்சி அடைய 50 ஆண்டுகள் ஆனது. ஆனால் அவரது மகன் உதயநிதி 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளார். 2019 ஆண்டில் மாநில இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது, 2021-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரானார். 2022-ம் ஆண்டு அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்து அமைச்சர் வரிசையில் 10-வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 3 சதவீதம் தான் வித்தியாசம். தற்போது தி.மு.க.விற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு, சிறு பான்மை மக்களிடத்தில் அ.தி.மு.க. வரவேற்பு ஆகியவற்றால் பாராளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும். பா.ஜ.க. கனவு பகல் கனவாக தான் போகும்.

    புலியைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாக, கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஸ்டாலின் திரைத் துறை மூலம் கொண்டாடினர். அதில் ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்றபோதும் வெறும் ஆயிரம் பேர் தான் அதில் பங்கேற்றனர். இதில் பேசிய உச்சநடிகர் எம்.ஜி.ஆர். வளர்ச்சிக்கு கருணாநிதியின் எழுத்து ஆற்றல் உதவியதாக என்று கூறுகிறார்.

    1971-ம் ஆண்டு ஒரு விழாவில் முரசொலி மாறன் பேசும்போது நாங்கள் கடன் வாங்கி இருந்தோம், வட்டி கட்ட முடியவில்லை அப்போது எங்களை காப்பாற்ற எங்கள் தங்கம் படத்தில் புரட்சித் தலைவரும், அம்மாவும் இலவசமாக நடித்துக் கொடுத்தனர். மீண்டும் எங்களுக்கு வாழ்வு கொடுத்தவர் 8-வது வள்ளல் எம்.ஜி.ஆர். என்று கூறினார்.

    அதனை தொடர்ந்து கருணாநிதி பேசும்பொழுது அவர் 8-வது வள்ளல் மட்டுமல்ல, திராவிட கர்ணன் என்று பாராட்டி எனக்கு வாழ்வு தந்தவர் புரட்சி தலைவர் என பேசினார். அப்போது முரசொலி கூட வந்தது என்பதை அங்கு பேசிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×