search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஷ்பு"

    • எல்லா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது.
    • எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நடப்பது உங்களுக்கு தெரியும்.

    தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டம் விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் SAM-GSICC கமிட்டி சங்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டது.

    இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் திருகர் நாம் பவுண்டேஷன் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டத்தில் கமிட்டி உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பூ, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, "எல்லா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது, ஏன் சினிமா மீது மட்டும் பழி போடுகின்றீர்கள்? ஏன் யாரும் அதைப் பற்றி மட்டும் பேச மறுக்கின்றனீர்கள்?"

    "ஐடி துறை, மற்ற துறைகளான மருத்துவம், கல்வித்துறை, அரசியல் என எங்கும் நடக்கவில்லையா? எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நடப்பது உங்களுக்கு தெரியும். அப்புறம் ஏன் சினிமாவை மட்டும் பிடித்துக் கொள்கின்றீர்கள்? எல்லா துறைகளிலும் கமிட்டி இருக்கனும்னு சொல்லுங்க நான் ஒப்புக் கொள்கிறேன். நான் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை," என்று தெரிவித்தார்.

    ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பட்டியல்:

    பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் 1 குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விடுக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும். மேலும் கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

    பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இமெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும், நேரடியாக மீடியாகளில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

    மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும்.

    • பெண்களை பாதுகாக்க முடியாத நிலையில் அவர் எடுத்த முடிவு சரியானதுதான்.
    • ஒவ்வொரு ஆணும் நம்ப முடியாத வலியையும் தியாகத்தையும் தாங்கிய ஒரு பெண்ணுக்குதான் பிறந்தான்.

    சென்னை:

    மலையாள திரை உலகில் புயலை கிளப்பி வரும் நடிகைகளின் பாலியல் புகார்கள் எதிரொலியாக மலையாள திரைப்பட நடிகர் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் மோகன் லால் உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளார்கள்.

    மோகன்லாலின் இந்த முடிவை குஷ்பு வரவேற்றுள்ளார். பெண்களை பாதுகாக்க முடியாத நிலையில் அவர் எடுத்த முடிவு சரியானதுதான். இனி சம்பவம் என்று நடந்தாலும் சரி அந்த கர்மா என்றாவது ஒருநாள் நம் தலையில்தான் விழும் என்ற பயம் வரும் என்றார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைத்துறையில் நிலவும் இந்த பிரச்சனையில் நிலைத்து நின்று வெற்றி பெற்ற பெண்களுக்கு பாராட்டுகள். தொடரும் இந்த துஷ்பிரயோகத்தை உடைக்க ஹேமா கமிட்டி அவசியப்பட்டது. ஆனால் செய்து முடிக்குமா?

    இந்த மாதிரி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது, பாலியல் உதவிகளை கேட்பது, பெண்கள் காலூன்றவோ அல்லது தங்கள் வாழ்க்கையை நடத்தவோ சமரசம் செய்துதான் ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது எல்லாத் துறைகளிலும் இருக்கிறது.

    ஒரு பெண் மட்டும் ஏன் இப்படி தவறான வழியில் தான் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்களும் இதை எதிர்கொண்டாலும் வேதனையை சுமப்பது பெண்கள்தான்.

    இந்த பிரச்சனை தொடர்பாக எனது மகள்களுடன் நீண்ட நேரம் உரையாடினேன். பாதிக்கப்பட்டவர்களிடம் இருக்கும் பச்சாதாபத்தையும், புரிதலையும் கண்டு வியந்தார்கள்.

    இன்று பேசுவதா? நாளை பேசுவதா? என்பது முக்கியமல்ல. பேசுங்கள். உடனடியாக பேசுவதுதான் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவும், திறமையாக விசாரணை நடத்துவதற்கும் உதவும்.

    அவமானம் வருமோ என்ற பயம். 'ஏன் செய்தாய்' என்ற கேள்விகளால் தயக்கம் வரும். பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு அந்நியராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எங்கள் ஆதரவு உண்டு.

    பாதிக்கப்பட்டவர்கள் ஏன் முன்பே வெளிப்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழலாம். அப்போது அவருடைய சூழ்நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை.

    ஒரு பெண்ணாகவும், தாயாகவும் பார்க்கும்போது இத்தகைய காயங்கள், சதையில் மட்டுமல்ல ஆன்மாவிலும் ஆழமாக பதிந்து போகின்றன.

    இந்தக் கொடூரச் செயல்கள் நமது நம்பிக்கை, அன்பு, வலிமை ஆகியவற்றின் அடித்தளத்தையே உலுக்குகின்றன. ஒவ்வொரு தாய்க்கும் பின்னால், வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு விருப்பம் இருக்கிறது, அந்த புனிதம் சிதைந்தால், அது நம் அனைவரையும் பாதிக்கிறது.

    என் தந்தையின் துஷ்பிரயோகம் பற்றி பேச இவ்வளவு நேரம் எடுத்தது ஏன் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் முன்பே பேசியிருக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எனக்கு நடந்தது, என் தொழிலை உருவாக்குவதற்கான சமரசம் அல்ல.

    நான் விழுந்தால் என்னைப் பிடிக்க வலிமையான கரங்களை எனக்குத் தருவதாக கருதும் நபரின் கைகளில் நான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்.

    அங்குள்ள அனைத்து ஆண்களிடமும், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நிற்கவும், உங்கள் அசைக்க முடியாத ஆதரவைக் காட்டவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு ஆணும் நம்ப முடியாத வலியையும் தியாகத்தையும் தாங்கிய ஒரு பெண்ணுக்குதான் பிறந்தான். பல பெண்கள் உங்கள் வளர்ப்பில் இன்றியமையாத பாத்திரங்களை வகிக்கிறார்கள்.

    உங்களை வடிவமைக்கிறார்கள்-உங்கள் தாய்மார்கள், சகோதரிகள், அத்தைகள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள். உங்கள் ஒற்றுமை நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்கலாம், நீதியும் கருணையும் வெல்லும். எங்களுடன் நிற்கவும், எங்களைப் பாதுகாக்கவும், உங்களுக்கு வாழ்க்கையையும் அன்பையும் வழங்கிய பெண்களை மதிக்கவும்.

    வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் குரல் ஒலிக்கட்டும், உங்கள் செயல்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் தகுதியான மரியாதை மற்றும் பச்சாதாபத்தை பிரதிபலிக்கட்டும். நினைவில் கொள்ளுங்கள், நாம் ஒன்றாக வலுவாக இருக்கிறோம், ஒன்றாக இருந்தால் மட்டுமே இந்த காயங்களை சரிசெய்து பாதுகாப்பான, அதிக இரக்கமுள்ள உலகத்திற்கு வழி வகுக்க முடியும்.

    பல பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தின் ஆதரவு கூட இல்லை என்பதை புரிந்து கொள்வோம். அவர்கள் கண்களில் நட்சத்திர கனவுகளுடன் சிறிய நகரங்களிலிருந்து வருகிறார்கள், பிரகாசமாக பிரகாசிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள், ஆனால் பெரும்பாலும் அவர்களின் கனவுகள் மொட்டுக்களிலேயே நசுக்கப்படுகிறது.

    இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுரண்டல்கள் இத்துடன் நிறுத்தப்படட்டும்.

    பெண்களே, வெளியே வந்து பேசுங்கள். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை ஒரு போதும் சரி செய்யவோ சமரசம் செய்யவோ வேண்டாம்.

    இந்த துயரங்களை அனுபவித்த அனைத்து பெண்களுடனும் நானும் நிற்கிறேன். ஒரு பெண்ணாகவும், ஒரு தாயாகவும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்கள் காலூன்றி நிற்க சமரசம் செய்ய வேண்டிய நிலை அனைத்து துறைகளிலும் உள்ளது.
    • நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் இளம்பெண்கள் பலர் மொட்டுகளாக நசுக்கப்படுகின்றனர்.

    மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில் புகாரளித்த பெண்களுடன் துணை நிற்பதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியிருப்பதாவது:-

    பாதிக்கப்பட்ட பெண்களுடன் ஒரு தாயாகவும் ஒரு பெண்ணாகவும் துணை நிற்கிறேன்.

    பெண்கள் காலூன்றி நிற்க சமரசம் செய்ய வேண்டிய நிலை அனைத்து துறைகளிலும் உள்ளது.

    பாலியல் புகார் தெரிவித்துள்ள பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் துணை நிற்க வேண்டும்.

    நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் இளம்பெண்கள் பலர் மொட்டுகளாக நசுக்கப்படுகின்றனர்.

    பெண்களே வெளியே வந்து பேசுங்கள். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை எந்த நிலையிலும் சமரசம் செய்யாதீர்கள்.

    No என்றால் கண்டிப்பாக No-தான் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காதீர்கள் என்று பெண்களுக்கு குஷ்பு அறிவுறுத்தி உள்ளார்.

    • மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளோம்.
    • மருத்துவ மாணவி கொலை குறித்து நான் கருத்து கூறவில்லை என பாஜகவை சேர்ந்த குஷ்பு கூறி உள்ளார்

    சென்னை:

    மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பி கனிமொழி ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,

    மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளோம்.

    மருத்துவ மாணவி கொலை குறித்து நான் கருத்து கூறவில்லை என பாஜகவை சேர்ந்த குஷ்பு கூறி உள்ளார். குஷ்புவை முதலில் சமூக வலைதளத்தை பார்க்க சொல்லுங்கள், நான் கருத்து கூறி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு கடந்த 2020-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
    • பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, கடந்த 2020-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார். 2021-ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதன்பின், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை குஷ்பு இன்று திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சம் நிதியுதவி

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் வீடுகள் நிலச்சரிவால் இழுத்துச் செல்லப்பட்டன. மேலும், மணல் சேற்றால் மூழ்கின. இதில் சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் நன்கொடை அளித்து வருகின்றனர்.

    அந்தவகையில், நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சமும், நயன்தாரா விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சமும் வழங்கினர்.

    இந்நிலையில், தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி, லிசி ஆகியோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர்.

    அது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "சென்னையைச் சேர்ந்த சிலர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் வயநாடு பேரிடர் நிவாரணத்திற்காக 1 கோடி ரூபாய் வழங்கினோம். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினோம்.

    ராஜ்குமார் சேதுபதி, சுஹாசினி மணிரத்னம், ஸ்ரீப்ரியா, மணிரத்னம், குஷ்பு சுந்தர், மீனா சாகர், ஜி ஸ்கொயர், கல்யாணி பிரியதர்சன், கோமளம் சாருஹாசன், லிஸ்ஸி லட்சுமி, மைஜோ ஜார்ஜ், ஷோபனா, ரஹ்மான் ஆகியோருக்கு நன்றி. வயநாடு மக்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எதிர்க்கும் அரசியல் கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
    • சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

    சென்னை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தம் குறித்து நடிகை குஷ்பு கூறியதாவது:-

    சமூகத்தில் சீர்திருத்தம் வரவேண்டும் என்று பேசிக் கொண்டே சீர்திருத்தத்தை தடுப்பதுதான் சிலரது வேலை. அதற்கு மதத்தையும், சாதியையும் கேடயமாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

    இஸ்லாமியர்களிடம் 'முத்தலாக்' முறையை மதத்தின் பெயரால் வைத்து கொண்டு பெண்களை அடிமையாக வைத்திருக்கிறார்கள். எந்த சமூகத்திலும் பெண்கள் முன்னேறினால் தான் உண்மையான முன்னேற்றம் வரும்.

    முத்தலாக் தடை சட்டத்தின் மூலம் அந்த அடிமை நிலையில் இருந்து பெண்கள் விடுவிக்கப்பட்டனர். சொத்து மீதான உரிமை கிடைத்துள்ளது.

    வக்பு வாரிய சட்ட திருத்தத்தையும் இமாம்களுடன் கலந்து ஆலோசித்துதான் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இத்தனை வருடங்களாக சுற்றி சுற்றி எந்த மாற்றத்தையும் காணாத நிலையில் இப்போதுதான் நம்பிக்கை வந்துள்ளது.

    இதை எதிர்ப்பவர்கள் பிரதமர் மோடி எதை கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை கொண்டவர்கள். மதத்தை தாண்டி சீர்திருத்தத்தை பற்றி ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்? மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து வைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்.

    எதிர்க்கும் அரசியல் கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் வாக்களிப்பது மதத்தையும், சாதியையும் காப்பதற்கு அல்ல. வேலை வாய்ப்பு வேண்டும். சமூகத்தில் மாற்றங்கள் நிகழ வேண்டும், சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

    மதங்களை சொல்லி காட்டி மக்களின் உணர்வுகளை மறைக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடிக்கும் தி.மு.க. தனது மந்திரி சபையில் எத்தனை இஸ்லாமியர்களுக்கு மந்திரி பதவி கொடுத்துள்ளது? அவர்களுடைய சிறுபான்மை நாடகத்தை கேட்டும், பார்த்தும் மக்கள் சலித்து போனார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடவுளால் யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.
    • கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இந்த ஹத்ராஸ் சம்பவம் தெடர்பாக குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    ஹத்ராஸ் பேரழிவிலிருந்து மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். கடவுளால் யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். கடவுள் சக்தியை நம்புபவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஏமாற மாட்டார்கள். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். உங்களின் ஒவ்வொரு சுவாச காற்றிலும் அதை உணர்கிறீர்கள்.

    ஹத்ராஸ் பேரழிவு கடவுளால் அனுப்பப்பட்டது அல்ல. கொல்லப்பட்ட 121 பேரும் தங்கள் கர்மாவால் உயிரிழக்கவில்லை. குருட்டு நம்பிக்கையால் உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவிகள். இந்த கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

    இதற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பார்க்கும் போதுதான் உண்மையாகவே 'கடவுளால் அனுப்பப்பட்டவர்' என்ற வாசகம் நியாயப்படுத்தப்படும்" என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவின் கீழே ஹத்ராஸின் பேரழிவிலிருந்து மக்கள் விழித்துக் கொண்டு 'நான் பயாலஜிக்கல்' ( Non-Biological ) என்று யாரும் இல்லை என்பதை புரிந்து கொள்வார்கள் என்று பத்திரிகையாளர் முகமது சுபைர் மோடியை கிண்டலடித்துள்ளார். மேலும், பலரும் குஷ்புவின் பதிவின் கீழ் மோடியை கிண்டல் செய்து வருகின்றனர்.

    மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

    கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியுள்ளார் என்று மோடி பேசிய நிலையில் கடவுளால் யாரும் அனுப்பட மாட்டார்கள் என்று குஷ்பு தெரிவித்துள்ளது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி நிறைய பிரச்சனை கொடுத்திருந்தார்கள்.
    • முதன் முறையாக 9 நாடுகளில் 25 நாட்கள் என கடந்து வெள்ளிவிழா கொண்டாடியது.

    சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992ம் ஆண்டு வெளிவந்த படம் அண்ணாமலை. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, ஜனகராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் ஏழை பால் வியாபாரி அண்ணாமலை மற்றும் பணக்கார ஹோட்டல் வியாபாரி அசோக், இருவருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயலும் அசோக்கின் தந்தை எதிர்க்கும் நட்பைச் சுற்றியே படக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

    இசை மற்றும் ஒலிப்பதிவு தேவாவால் இசையமைக்கப்பட்டது மற்றும் பாடல்களுக்கான வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். ஒளிப்பதிவை பி.எஸ்.பிரகாஷ், படத்தொகுப்பை கணேஷ் குமார் இருவரும் செய்திருந்தனர். 1992 காலங்கட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றது அண்ணாமலை படம்.

    இந்த படம் வெளியான சமயத்தில் பல பிரச்சனைகள் நடந்திருந்தது. அண்ணாமலை படத்துக்கு அப்போது ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி நிறைய பிரச்சனை கொடுத்திருந்தார்கள். படத்தின் போஸ்டர்கள் நிறைய ஓட்ட கூடாது என பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது. இதனால் படத்திற்கு போதிய அளவு விளம்பரமும் கிடைக்கவில்லை. இருந்தாலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமில்லாமல் 175 நாட்கள் ஓடி வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் அண்ணாமலை திரைப்படம் வெளியாக இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது குறித்து சமூக வலைதளங்களில் ரஜினியின் அண்ணாமலை படம் குறித்து பேசப்பட்டு வருகிறது. அதில் இடம் பெற்றுள்ள "மலைடா அண்ணாமலை" "அசோக் உன் காலெண்டரி குறிச்சு வைச்சுக்கோ" போன்ற வசனங்களும் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

    அண்ணாமலை படம் 32 ஆண்டு நிறைவடைந்ததையடுத்து தனது எக்ஸ்தளத்தில் அண்ணாமலை பட போஸ்டரை பகிர்ந்துள்ளார் குஷ்பூ. அதில் கூறியிருப்பதாவது.

    உலக சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளியாகிய அண்ணாமலை 27-6-1992ல் 56 அரங்கில் 50 நாள், 22 அரங்கில் 100நாள், 15 அரங்கில் 120 நாள், முதன் முறையாக 9 நாடுகளில் 25 நாட்கள் என கடந்து வெள்ளிவிழா கொண்டாடியது.

     அன்றைய ஆளுங்கட்சியின் தடைகளை வென்று, 61 வருட தமிழ் சினிமா வரலாற்றில் அதுவரையிருந்த வசூல் சாதனைகளை முறியடித்து புதிய வசூல் சாதனை படைத்த அண்ணாமலை இன்று 32 ஆண்டு நிறைவு அடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.
    • கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது அங்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது:-

    * பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது?

    * கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர்.

    * பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    * பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.

    * கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

    * கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு குஷ்பு கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹாரர் கதைக்களத்தை மையமாக வைத்து சுந்தர் சி அரண்மனை 1 படத்தை 2014 ஆம் ஆண்டு இயக்கினார்.
    • வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது அந்த வகையில் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

    தமிழ் சினிமாவில் அடுத்து வளர்ந்துக் கொண்டு வரும் ஃப்ரான்சிஸ் படமாக அரண்மனை திரைப்படம் இருக்கிறது, ஹாரர் கதைக்களத்தை மையமாக வைத்து சுந்தர் சி அரண்மனை 1 படத்தை 2014 ஆம் ஆண்டு இயக்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த இரண்டு பாகத்தை இயக்கினார்.

    இதன் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில் சுந்தர்.சி-க்கு தங்கையாக தமன்னா நடிக்க, தமன்னாவிற்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் பாடல் ஒன்றுக்கு குஷ்பு மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர்.

    இந்த படமானது கடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது அந்த வகையில் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

    இதன் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி கலகலப்பு-3 படத்தை இயக்கப் போவதாக தகவல் பரவியது. அது மட்டும் இல்லாமல் தமன்னா , வடிவேலு கூட்டணியில் புதிய படம் சுந்தர்சி இயக்கப் போகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர் சி, "பேய் படத்தில் ஏன் கவர்ச்சி இருக்கிறது என்று கேட்கிறார்கள். பேயாக இருந்தாலும் அது கவர்ச்சியாக வந்தால் தான் இங்க வியாபாரமே நடக்குது. அரண்மனை 5 ஆம் பாகத்திலும் கவர்ச்சி இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் அவர் அரண்மனை பாகம் 5 கட்டாயமாக இயக்கவுள்ளார் என உறுதியாகியுள்ளது. அடுத்த எந்த திரைப்படத்தை இயக்கப்போகிறார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மீண்டும் மீண்டும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி வருகிறார்.
    • பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் நடிகை குஷ்பு எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று சொல்வார்கள். அது போன்று மீண்டும் மீண்டும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி வருகிறார். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை. டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவர் அவதூறான கருத்துக்களை கூறி உள்ளார். இதனால் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடர உள்ளேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை திரும்ப அழைப்பதற்காக மட்டும் சஸ்பெண்டு செய்கிறார். ஏனென்றால் அவர்களை மகிழ்விக்க இந்த வகையான நோயுற்ற மனம் கொண்டவர்கள் தேவை.

    இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

    தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேசிய வீடியோ பதிவையும் நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    ×