என் மலர்
நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி"
- அதிகபட்ச மாக உ.கீரனூரில் 35 மி.மீட்டரும்
- குறைந்த பட்சமாக மாடாம் பூண்டியில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு,
கள்ளக்குறிச்சி 14, தியாகதுருகம் 32, கச்சிராயப்பாளையம் 9, கோமுகி அணை 7, மூரார்பாளையம் 9, வடசிறுவலூர் 12, அரியலூர் 12, கடுவனூர் 7, கலையநல்லூர் 25, கீழ்பாடி 12, மூங்கில்துறைப்பட்டு 8, ரிஷிவந்தியம் 18, அரியலூர் 12, மணிமுக்தா அணை 17, வானாபுரம் 13, மாடாம்பூண்டி 5, திருக்கோவிலூர் 29, திருப்பாலபந்தல் 7, வேங்கூர் 18, ஆத்தூர் 18, எறையூர் 10, ஊ.கீரனூர் 35 என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்ச மாக உ.கீரனூரில் 35 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக மாடாம் பூண்டியில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 327 மி.மீட்டராக வும், சராசரி 13.62 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த போதும், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின.
- 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
- அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
மேலும் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தேனி, ராமநாதபுரம், வேலூர், தென்சென்னை, புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் சேலம் வடக்கு தொகுதியை தவிர மற்ற 10 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வசம் உள்ளது. அப்படி இருந்தும் சேலம் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.
அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் குறைந்த வாக்குகள் பெற்றிருந்தார்.
இதையடுத்து முதல் கட்டமாக சேலம், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (8-ந்தேதி) ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இதில் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதனால் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.
- கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்கத்தவறி 5 உயிர்களைப் பலிகொண்டுள்ளது திமுக அரசு.
- அரசு விற்றால் நல்ல சாராயம்? தனியார் விற்றால் கள்ளச்சாராயமா?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததுடன், 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். கஞ்சா, குட்கா, அரசு விற்கும் மதுவினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவே நல்ல சாராயம் விற்பதாகக் காரணம் கூறிய திமுக அரசு, தற்போது கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்கத்தவறி 5 உயிர்களைப் பலிகொண்டுள்ளது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்கெட்டுள்ளது என்பதையுமே காட்டுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொடுந்துயரம் நிகழ்ந்தது. விழுப்புரத்தில் திமுக நிர்வாகியே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதும், அவருக்கும் சேர்த்து திமுக அரசு நிவாரணத்தொகை அறிவித்த கொடுமைகளும் நடைபெற்றது.
அதன் பிறகாவது திமுக அரசு விழிப்புற்று கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது மீண்டும் 5 உயிர்கள் பலியான துயரங்கள் நிகழ்ந்திருக்காது. அரசு விற்றால் நல்ல சாராயம்? தனியார் விற்றால் கள்ளச்சாராயமா? கள்ளச்சாராயத்தால் கண்ணுக்குமுன் அடுத்தடுத்து உயிர்கள் பலியாகும்போது மட்டும், மக்களின் மனக்கொந்தளிப்பிற்கு அஞ்சி உடனடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் திமுக அரசு, மெல்ல மெல்ல பல இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டுவரும் மலிவு விலை மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்துவது ஏன்? ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற திமுகவின் கடந்தகால வாக்குறுதி என்னானது? சாராய ஆலைகளை நடத்தும் திமுகவினர் தங்கள் ஆலைகளை இதுவரை மூடாதது ஏன்? கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவை போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா? போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர், அரசு நடத்தும் மதுக்கடைகளை இதுவரை மூடாதது ஏன்?
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையைத் தடுக்கத் தவறியதும், வீரன் மதுபானம், கோதுமை பீர் வகை என்று டாஸ்மாக் மதுவிற்பனையை அதிகப்படுத்தியதுமே முதன்மையான சாதனையாகும். மகளிருக்கு உதவித்தொகை தருவதாகப் பெருமை பேசும் திமுக அரசு, டாஸ்மாக் மது மற்றும் கள்ளச்சாராயத்தால் தந்தையையும், கணவரையும், பிள்ளைகளையும், உடன் பிறந்தாரையும் இழந்து தவிக்கும் பெண்களுக்கு என்ன பதில் கூறப்போகிறது? தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாகவுள்ள போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுப்பதில் திமுக அரசு தொடர்ந்து அலட்சியமாகச் செயல்படுவது ஏன்? கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வினைவிட, திமுக அரசிற்கு மதுவிற்பனையால் வரும் பல்லாயிரம் கோடி வருமானமும், அதன் மூலம் நடைபெறும் ஆட்சி அதிகாரமும்தான் முக்கியமானதா? என்ற கேள்விகளுக்கு என்ன பதில் கூறப்போகிறது.
ஆகவே, கள்ளச்சாராய விற்பனையை முற்று முழுதாக தடுக்கக் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசு நடத்தும் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- ஊருக்குள்ளேயே விற்பதால்தான் எல்லோரும் குடிக்கிறார்கள்.
- எல்லோருமே கூலி வேலைக்கு போகிறவர்கள் தான்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகள் பொதுமக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஆரம்பத்தில் சாவுக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல. வாந்தி, வயிற்று போக்குதான் என்று இடமாற்றம் செய்யப்பட்ட கலெக்டர் கூறியதை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்தனர். உடனடியாக தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பை குறைத்திருக்க முடியும் என்றார்கள்.
தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் கூறும்போது, `வாந்தி, வயிற்று போக்குக்கு காரணமே கள்ளச்சாராயம் தான். சாராய விற்பனை பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை மேட்டில் தாராளமாக நடக்கிறது. இது போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ளது. கண்டும் காணாமல் இருந்தது தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணமாகி விட்டதாக ஆவேசப்பட்டார்'.
கருணாபுரத்தை சேர்ந்த பெண்கள் கூறும்போது, `எங்கள் தெரு அருகில் உள்ள தெருக்களிலேயே சாராயம் விற்கிறார்கள். எல்லோருமே கூலி வேலைக்கு போகிறவர்கள் தான். கையில் காசு கிடைத்ததும் பாக்கெட்டில் சாராயத்தை வாங்கி குடிக்கிறார்கள்.
ஊருக்கு வெளியே எங்காவது விற்றால் வயதானவர்கள் அவ்வளவு தூரம் நடந்து சென்று குடிக்க யோசிப்பார்கள். ஊருக்குள்ளேயே விற்பதால்தான் எல்லோரும் குடிக்கிறார்கள்' என்றார்.
காலை 5 மணிக்கே ஒரு பாக்கெட் சாராயத்தை தனது கணவர் குடித்துவிட்டு கண் எரியுது, வயிறு வலிக்குது என்று துடித்ததாகவும் உடனே ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்ததாகவும் கூறினார்.
- புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கள்ளச்சாராய சாவுக்கு முக்கிய காரணமே அரசு செயலிழந்துள்ளது தான்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுர தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து 35 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. விஷச்சாராயத்தால் பலியான அனைவரும் ஏழை கூலி தொழிலாளர்கள். அவர்களின் குடும்பத்தினர் அல்லாடி தவித்து வருகின்றனர். கள்ளச்சாராய சாவுக்கு முக்கிய காரணமே அரசு செயலிழந்துள்ளது தான்.
எனவே இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளார்.
- தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை வாங்கி கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
1000 போலீசார் கிராமம் கிராமமாக சென்று சல்லடை போட்டு சாராய கும்பலை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணமான கண்ணுக்குட்டி என்ற கோவிந்தசாமி, தாமோதரன் மற்றும் விஜயா என்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் பின்னணி யில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கள்ளச்சாராய கும்பலை கூண்டோடு கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மேலும் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தொடங்கி இருப்பதால் கள்ளச்சாராய கும்பலை சேர்ந்த அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சின்னத்துரை என்பவர் கள்ளச்சாராய மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை தொடங்கி உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள மாவட்டங்களிலும் கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சுவதை காட்டுப்பகுதியில் வைத்து தொழில் போலவே பலர் செய்து வந்திருப்பதும், போலீசார் அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் கள்ளச்சாராய மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாராயத்தை சில்லரை விற்பனைக்கு வாங்கி சென்று பலரும் குடித்து வந்துள்ளனர். 70 வழக்குகளில் தொடர்புடைய இவர் தற்போது தலைமறை வாகியுள்ளார்.
அவரை பிடிப்பதற்கு போலீசார் அதிரடி வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர். அவருடன் கள்ளச்சாராய மொத்த விற்பனைக்கு துணையாக இருந்த 10 பேரும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர்.
அவர்களை பிடிப்பதற்கு போலீசார் வலை விரித்துள்ளனர். வியாபாரி சின்னத்துரையிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மறைத்து வைத்து 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளனர். அவர்கள் யார்-யார்? என்கிற பட்டியலையும் போலீசார் சேகரித்துள்ளனர்.
கள்ளச்சாராய கும்பலை பிடிக்க ஏற்கனவே 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டிருந்தன. தற்போது கூடுதலாக 5 தனிப்படைகளும் ஏற்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.
- மக்கள் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் போலீஸ் நிலையம் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஆளும் கட்சியை சேர்ந்த அதிகாரம் மிக்கவர்களே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலாக நகரத்தின் மையப் பகுதியில் போலீஸ் நிலையத்தின் அருகில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுமா? இது மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிகிச்சையில் இன்னும் எத்தனை பேர் குணமடைவார்கள் என்று தெரியவில்லை. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முதல் ஒவ்வொருவராக உயிரிழப்பதை பார்க்கும் போது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைகிறேன்.
கள்ளச்சாராயம் குடித்ததில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச்சாராய விற்ப னையை தடுக்க பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விட்டதே உயிரிழப்புக்கு காரணம்.
தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறி வருகிறது. அதை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளக்குறிச்சியில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பூத் வாரியாக அமைச்சர்களை நியமித்துள்ளனர். அந்த அக்கறையை கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காட்டி இருக்கலாம்.
ஆட்சி அதிகாரம் மட்டுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியம். மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை.
கள்ளச்சாராயம் குடித்து பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 10 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- கள்ளச்சாராயாம் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், பலரது உடல்நலம் மேலும் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சற்று முன்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.
இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட கருணாபுரம் கிராமத்திற்கும் உதயநிதி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.
- பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு.
- அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 23 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 10 பேர் என இதுவரையில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் 16 பேரும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
- சிகிச்சையில் உள்ளவர்களை காப்பாற்ற அரசு முழுவீச்சில் பணியாற்றி வருகிறது.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.
தொரடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கருணாபுரம் கிராமத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றார்.
அங்கு, உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
பிறகு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
261 பேர் கொண்ட மருத்துவ குழு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைகளை தொடர்ந்து கண்காணிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்களை காப்பாற்ற அரசு முழுவீச்சில் பணியாற்றி வருகிறது.
இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்துறை செயலாளர், டிஜிபி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்தால் தாய், தந்தையை இழந்த பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாரத்திற்கு உதவிகள் வழங்கப்படும்.
நேற்று முதல் 132 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
கள்ளச்சாராயம் எப்போதும் இருக்க கூடாது என்பது தான் அரசின் நோக்கம். கள்ளச்சாராயம் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த சம்பவத்திற்கு பிறகு இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
உரிய விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் இருப்பது உள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
- 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதில், 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
