search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233879"

    • சென்னையில் இருந்து 3-ந்தேதி புறப்படும் கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவனில் தங்குகிறார்.
    • 3 நாட்கள் ஊட்டி ராஜ்பவனில் தங்கியிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகிற 3-ந்தேதி ஊட்டி செல்கிறார். 1 வாரம் அங்கு தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    சென்னையில் இருந்து 3-ந்தேதி புறப்படும் கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவனில் தங்குகிறார். வருகிற 5,6,7 ஆகிய 3 நாட்கள் ஊட்டி ராஜ்பவனில் தங்கியிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் பங்கேற்கிறார்.

    இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார். காணொலி வாயிலாக பல்வேறு துணை வேந்தர்கள் இதில் பங்கு பெறுகிறார்கள்.

    இது தவிர வேறு சில நிகழ்ச்சிகளிலும் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 9-ந்தேதி சென்னை திரும்புவார் என தெரிகிறது.

    • சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா நாளை பதவி ஏற்கிறார்.
    • கவர்னர் மாளிகையில் நாளை சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதன் பிறகு பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 24-ந்தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

    இந்த நிலையில் மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா நாளை பதவி ஏற்கிறார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    • புதிய பாராளுமன்ற மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது.
    • ஒரு தலைபட்சமாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக நடத்த செங்கோல் உறுதுணையாக இருக்கும்.

    சென்னை :

    புதிய பாராளுமன்றத்தில் தமிழக செங்கோல் நிறுவப்படுவது தொடர்பாக சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற புதிய கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் போது 1947-ல் நடந்த ஒரு முக்கியமான சம்பவம். ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிந்து அவர்கள் கையில் இருந்து நமது மக்கள் கையில் ஆளுமை கிடைத்தபோது, அந்த ஆளுமையை, பரிமாற்றத்தை எப்படி செய்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய ஒரு நிகழ்ச்சி.

    அதை நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவே அதில் பங்கேற்று அந்த பரிமாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பரிமாற்றம் நடந்திருக்கிறது. செங்கோல் தான் அந்த பரிமாற்றம். அது நடந்த சமயம் இரவு 10.30 மணி முதல் 12 மணிக்குள்ளாக நடந்த விஷயம். அந்த பரிமாறுதல் அப்போது தான் நடந்திருக்கிறது.

    நாம் கொண்டாடக்கூடிய சுதந்திரம், அந்த பரிமாற்றத்தால் கிடைத்தது. அந்த சுதந்திரத்தை நாம் கொண்டாடுகிறோம். ஆளுமை பரிமாறுதல் பூர்வீகத்தில் எப்படி நடந்தது என்பதை தேடி கண்டு பிடித்து இன்று வரை செய்கிறார்கள்.

    நாம் எந்த ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தோமோ அந்த ஆங்கிலேயர்கள் கூட இன்று அவர்களின் நாட்டில் 1670-ம் ஆண்டு வாக்கில் நடந்த அதே பாணியில் இன்றும் அங்கு அரசு பரிமாறுதல் நடக்கிறது. சுதந்திரம் என்பது செங்கோல் பரிமாற்றத்தால் கிடைத்தது.

    இந்த பரிமாறுதல் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெருமையான பங்கு இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியை மாற்றும் போது இதை எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.

    இந்தியாவில் எப்படி செய்தால் ஏற்புடையதாக இருக்கும் என்று கேட்டனர். அந்த ஏற்புடையது என்ன என்பதை விவரிக்க அப்போதைய பிரதமர் நேரு, ராஜாஜியிடம் கலந்து ஆலோசனை செய்தார். ராஜாஜி பின்னர் ஆதீனங்களை கலந்தாலோசனை செய்து திருவாவடுதுறை ஆதீனத்தின் மூலமாக அது தரும தண்டம் எனப்படும் செங்கோல் என கூறப்பட்டது.

    அந்த செங்கோலை அன்றைக்கு உற்பத்தி செய்யவில்லை. தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தில் இருக்கக் கூடிய ஒரு விஷயத்தை அழகாக எடுத்து சொல்லி அதை இன்னும் நமது நல்ல காலமாக அதை தயார் செய்த உம்மிடி ஜூவல்லர்ஸ் பெரியவர்கள் இருவரும் இன்றும் இருக்கிறார்கள். அவர்களும் இந்த நிகழ்ச்சி பற்றி பேச தயாராக இருக்கிறார்கள்.

    புதிய கட்டிடத்தை நிர்மாணம் செய்த தொழிலாளர்களையும், செங்கோலை செய்து கொடுத்த உம்மிடி பெரியவர்களையும், பிரதமர் நரேந்திர மோடி 28-ந்தேதி பாராளுமன்றத்தில் கவுரவிப்பார்.

    புதிய பாராளுமன்ற மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது. ஒரு தலைபட்சமாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக நடத்த செங்கோல் உறுதுணையாக இருக்கும். பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க தருமபுரி, திருவாவடுதுறை உள்ளிட்ட 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதை செங்கோல் குறிக்கிறது.

    ஆட்சி பரிமாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் முறை இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது.

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படுவது தமிழ்நாட்டிற்கு பெருமை. செங்கோல் நிறுவப்படுவதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. அடுத்த 100 வருடத்திற்கு நாட்டின் சின்னமாக செங்கோல் இருக்கப் போகிறது. மக்களுக்காகவாவது பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    ஜனாதிபதி பதவியை மிகவும் உயர்வாக கருதுகிறோம். அது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல. ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்ற கட்டிடத்தை திறக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும். பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் பாராளுமன்றத்துக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.

    செங்கோல் என்பது தமிழகத்துக்கு கவுரவமான, மிகப்பெரிய கவுரவம். புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது. முன்பு ஜனாதிபதியை விமர்சித்தவர்கள்தான் தற்போது அவரை கொண்டு விழாவை நடத்த வேண்டும் என்கின்றனர்.

    சைவ மதத்தை சார்ந்து செங்கோல் வைக்கப்படவில்லை. திருக்குறளில் செங்கோல் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது நிகழ்ந்த ஆட்சி பரிமாற்றத்தை மறு உருவாக்கம் செய்கிறோம்.

    எந்தவித மத அடையாளமும் இல்லாமல் மரபு ரீதியாக செங்கோல் வைக்கப்படுகிறது.

    நேரு பிரதமராக இருந்த போது அவரிடம் வழங்கப்பட்ட செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்படவில்லை. அது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த செங்கோலுக்கு உள்ள பெருமையை உணர்த்தும் வகையில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வைக்கிறார்.

    மதுரைக்கே அரசியாக விளங்கும் மீனாட்சி அம்மன் கையில் கூட செங்கோல்தான் உள்ளது. திருவிழா நேரங்களில் செங்கோலுடன் தான் மீனாட்சி அம்மன் காட்சி அளிப்பார். மதுரை எனது பிறந்த மண் என்பதால் இதை சொல்கிறேன்.

    புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதியை வைத்து திறக்கவில்லை என்று விவாதம் எழுகிறது. சமீபத்தில் சத்தீஷ்கரில் புதிய தலைமை செயலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். தெலுங்கானாவில் சட்டசபை கட்டிட திறப்பு விழாவுக்கு அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. முதலமைச்சர் தான் திறந்தார். ஆனால் இப்போது மட்டும் விமர்சனம் செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது.
    • வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை.

    சென்னை :

    தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வினர் புகார் மனு அளித்தனர். சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து பேரணியாக சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் 9 பேர் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் பேரணியில் பங்கேற்றதால் கிண்டி முதல் அண்ணாசாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில், கவர்னரை சந்தித்த பின் வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது.

    * சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம்.

    * 2 ஆண்டு கால தி.மு.க. அரசின் ஊழல் குறித்தும் புகார் கொடுத்துள்ளோம்

    * எங்கள் புகார் மனுவை பரிசீலிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    * விஷ சாராயா மரணம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை.

    * உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் விஷ சாராய மரணங்களை தடுத்து இருக்கலாம்.

    * அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏதும் நிகழவில்லை.

    * உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன.

    * வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.
    • பேரணியால் அண்ணாசாலை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக அறிவித்து இருந்தார். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.

    அதன்படி இன்று சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி வந்ததும் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி புறப்பட்டது. பேரணியால் அண்ணாசாலை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பேரணி ராஜ்பவன் வந்ததும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் மாளிகைக்குள் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு கொடுத்தார். எடப்பாடி பழனிசாமியுடன் 9 பேர் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர்.

    இதனிடையே அ.தி.மு.க.வினர் கவர்னர் மாளிகைக்குள் நுழைய முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷச் சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் பலா் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதால் கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

    இந்த நிலையில் மேலும் ஒரு சம்பவமாக தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது குடித்த குப்புசாமி, குட்டி விவேக் ஆகிய 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தி.மு.க. ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளச்சாராயத்தால் பலர் பலியாகி வருவதை கண்டதும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுக்க போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக அறிவித்து இருந்தார். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.

    அதன்படி இன்று காலையில் சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி வந்ததும் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி புறப்பட்டது.

    இதில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், தலைமைக் கழக நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை, விஜயபாஸ்கர், டி.கே.எம்.சின்னையா, செல்லூர் ராஜூ, பா.வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், ரமணா, மாதவரம் மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், வெங்கடேஷ் பாபு, சத்தியா, ராஜேஷ், வேளச்சேரி அசோக், ஆதிராஜாராம், கே.பி.கந்தன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளரான பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர்,

    அமைப்புச் செயலாளர் நெல்லை ஏ.கே.சீனிவாசன், கழக வர்த்தக அணி இணைச் செயலாளரான முன்னாள் சாத்தாங்குளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஏ.எம்.ஆனந்தராஜா, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணைச் செயலாளர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி எம்.சி. ஆயிரம் விளக்கு 117-வது வட்ட கழகச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சின்னையன் (எ) ஆறுமுகம், வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, மாணவரணி வக்கீல் ஆ.பழனி, முகப்பேர் இளஞ்செழியன், சைதை சொ.கடும்பாடி செக் போஸ்ட் எஸ்.வி.லிங்க குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், பகுதி செயலாளர் ஜெ.ஜான், கே.பி.முகுந்தன், சி.வி.மணி, கொளத்தூர் முன்னாள் பகுதி செயலாளர் கொளத்தூர் கே.கணேசன் திருமங்கலம் மோகன், அபிராமி பாலாஜி, பாடி பா.கிருஷ்ணன், அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் புரசை வி.எஸ்.பாபு, துறைமுகம் பயாஸ் இளைய கிருஷ்ணன், புளியந்தோப்பு எம்.ஆர்.சந்திரன், பகுதி கழக செயலாளர் பட்மேடு டி.சாரதி, ஜி.ஆர்.பி.கோகுல், கே.சி.கார்டன் சந்திரசேகர், நேரு நகர் எஸ்.கோதண்டன் வழக்கறிஞர் இஸ்மாயில், கொளத்தூர் கணேசன், எஸ்.ஆர்.விஜய குமார், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    • கவர்னர் மாளிகைக்கு வருகிற திங்கட்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இருந்து ஊர்வலமாக சென்று அதிமுகவினர் மனு கொடுக்கிறார்கள்.
    • கவர்னர் மாளிகையிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க உள்ளார்.

    அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மதுரையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொன்விழா மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

    அதன்பிறகு தி.மு.க. ஆட்சியின் 2 ஆண்டு கால அவல நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தி.மு.க.வின் அத்துமீறல்கள், முறைகேடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    குறிப்பாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ரூ.30 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு ஆடியோ பற்றி மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியை தி.மு.க. அரசு மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். விஷ சாராய பலி குறித்து அவர் பேசியதாவது:-

    விஷ சாராயம் குடித்தவர்களில் 62 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுதான் காரணம். ஆளும் கட்சி துணையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது.

    இந்த விஷயத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது.

    சட்டசபையில் நான் இதுபற்றி பேசியதற்கு கூட முதலமைச்சரிடம் இருந்து விளக்கமான பதில் வரவில்லை.

    எதிர்க்கட்சி தலைவர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லக் கூடாது என்பதற்காக பல்வேறு தகவல்களை முதலமைச்சர் மறைத்து விட்டார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வியாபாரிகள் பயந்தார்கள். தி.மு.க. ஆட்சியில் அந்த பயம் யாருக்குமே இல்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இப்போது இந்த வழக்கை திசை திருப்ப அரசு முயற்சி செய்கிறது.

    எனவே நாம் இந்த விஷயத்தை விடக்கூடாது. கவர்னரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம். தி.மு.க.வின் ஊழல்களையும் பட்டியலிடுவோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அ.தி.மு.க. சார்பில் வருகிற 22-ந்தேதி காலை 10.25 மணிக்கு சென்னை, சின்னமலை தாலுகா அலுவலக சாலை, ஏசு கிறிஸ்து சபை அருகில் இருந்து கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக புறப்பட்டு கவர்னர் மாளிகையை சென்றடைந்து முக்கிய நிர்வாகிகள் கவர்னரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வருகிற 22-ந்தேதி தி.மு.க. ஆட்சி மீது புகார் தெரிவித்து கவர்னரிடம் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டு அருகில் இருந்து ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளேன்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர் குலைந்துள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை. அமளிக்காடாக மாறி உள்ளது. இதுபற்றி விரிவாக கவர்னரிடம் மனு கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுநர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், சுற்றுலா இடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

    கொடைக்கானல்:

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று கொடைக்கானல் வருகிறார். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து கொடைக்கானலுக்கு கார்மூலம் செல்கிறார். வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானலுக்கு மாலை 4.30 மணிக்கு வருகிறார். எனவே மதியம் 2 மணிமுதல் மாலை 4.30 வரை வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

    இதேபோல் 16-ந்தேதி காலை 9 மணிமுதல் மதியம் 12 மணி வரை இந்த சாலையில் வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று இரவு கொடைக்கானல் கோகினூர் மாளிகையில் தங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை 11 மணிக்கு அன்னைதெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    மாலை 3 மணிக்கு பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிடுகிறார். பின்னர் 16-ந்தேதி கொடைக்கானலில் இருந்து கார்மூலம் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். ஆளுநர் வருகையையொட்டி தென்மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் தலைமையில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி அபினவ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன்(திண்டுக்கல்), பிரவீன்உமேஷ்டோங்கரே(தேனி), 2 ஏ.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பிக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆளுநர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், சுற்றுலா இடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. மேலும் மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    • கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் ஆளுநர் தங்கும் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு மற்றும் மோப்பநாய் சோதனை நடைபெறுகிறது.
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    திண்டுக்கல்:

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (14ம் தேதி) கொடைக்கானல் வருகை தருகிறார். நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் வருகை தருகிறார்.

    கொடைக்கானல் கோகினூர் மாளிகையில் தங்கும் அவர் நாளை மறுதினம் (15ம் தேதி) அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அன்று கொடைக்கானலில் ஓய்வெடுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி 16ம் தேதி காலை கார்மூலம் மதுரை சென்று பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    இதனை முன்னிட்டு இன்று முதல் கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் ஆளுநர் தங்கும் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு மற்றும் மோப்பநாய் சோதனை நடைபெறுகிறது. டி.ஐ.ஜி. அபினவ்குமார் தலைமையில் எஸ்.பி.க்கள் பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன் உமேஸ் டோங்கரே (தேனி), 2 ஏ.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பி.க்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைச்சாலையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு இன்று மதியம் 2 மணிமுதல் மாலை வரையிலும், வருகிற 16ம் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரையிலும் வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலை வழியாக மேலே செல்வதற்கும், மேலிருந்து கீழே இறங்குவதற்கும் அனுமதி இல்லை. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னரின் எந்த வார்த்தையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
    • தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தில் கூட தமிழக முதலமைச்சர் எல்லாவிதமான யோசனையும் செய்து ஏற்படுத்தி உள்ளார்.

    திருச்சி:

    திருச்சியில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் 80 சதவீதம் முடிந்து விட்டது. ம.தி.மு.க. ஊக்கம் வடிவம் கொண்டு வளர்ந்து வருகிறது. அதற்கான அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ம.தி.மு.க.வில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதுவரை இல்லாத துர்பாக்கியம், சாபக்கேடு தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி. இல்லாத அதிகாரத்தை தானே எடுத்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியை எதிர்த்து செயல்படுகிறார். இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக நம் தமிழகம் உள்ளது. எல்லோரும் பாராட்டும் நேரத்தில் கவர்னர் உளறிக்கொண்டு இருக்கிறார்.

    கவர்னரின் எந்த வார்த்தையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்துத்துவ ஏஜெண்டாக செயல்பட்டால் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம்.

    கவர்னர் கவர்னராக நடந்து கொள்ளவில்லை. அவர் ஒரு கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். இது போன்ற நிலை இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டதே இல்லை. இந்த தான்தோன்றிப் போக்கு சரியல்ல. கவர்னர் அவரது பதவியில் நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல.

    தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தில் கூட தமிழக முதலமைச்சர் எல்லாவிதமான யோசனையும் செய்து ஏற்படுத்தி உள்ளார். எது நல்லதோ அதை அவர் செய்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார். பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற நந்தினியை போல எல்லா மாணவிகளும் உருவாக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நேற்று முன்தினம் இரவு கவர்னர் மாளிகையில் இருந்து அமைச்சரவை மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
    • கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இருக்கைகள் போடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி பதவி ஏற்றது.

    அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 35 பேர் பொறுப்பில் உள்ளனர்.

    கடந்த ஆண்டு 2 தடவை அமைச்சரவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றி அமைத்தார். முதல் மாற்றத்தின்போது ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கருக்கு மாற்றப்பட்டது.

    2-வது முறை அமைச்சரவை மாற்றத்தின் போது உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

    மேலும் கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இது தவிர வீட்டு வசதி துறையில் இருந்து சி.எம்.டி.ஏ. பிரிக்கப்பட்டு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் கொடுக்கப்பட்டது.

    தி.மு.க. அரசு 3-வது ஆண்டை தொடங்கியுள்ள நிலையில் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் வரும் என்று தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை விடுவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். அதேசமயத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வு மான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நேற்று முன்தினம் இரவு கவர்னர் மாளிகையில் இருந்து அமைச்சரவை மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து புதிய அமைச்சர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இருக்கைகள் போடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

    இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு புதிய அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு 10.23 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சரியாக 10.29 மணிக்கு தர்பார் மாளிகைக்கு கவர்னர் வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் தேசியகீதம் இசைக்கப்பட்டது. பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு இருந்தனர். 10.31 மணிக்கு டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னரை தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து டி.ஆர்.பி. ராஜா எழுந்து பதவியேற்க தயாரானார். 10.34 மணிக்கு அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:-

    டி.ஆர்.பி.ராஜா எனும் நான் சட்டப்படி அமைக்கப் பெற்ற இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும் தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்பிற்கும், சட்டத்துக்கும் இணங்க அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி விருப்பு வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா கூறி பதவியேற்றுக்கொண்டார். அதற்கான ஆவணத்திலும் அவர் கையெழுத்திட்டார்.

    இதையடுத்து அவர் கவர்னரிடமும், முதலமைச்சரிடமும் வாழ்த்து பெற்றார். அவர்களுக்கு டி.ஆர்.பி.ராஜா பூங்கொத்துகளை வழங்கி வணக்கம் தெரிவித்தார்.

    பதிலுக்கு கவர்னரும், முதலமைச்சரும் புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்கள். அதன்பிறகு கவர்னர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரித்தபடி பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    10.38 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இறுதியில் தேசியகீதம் பாடப்பட்டது. 8 நிமிடங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. அதன்பிறகு முதலமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

    நிகழ்ச்சியில் அனைத்து அமைச்சர்கள், சபாநாயகர் அப்பாவு, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு எம்.பி., மேயர் பிரியா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதயசந்திரன், கார்த்திகேயன், கிருஷ்ணன், டி.ஜி.பி.சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர். புதிய அமைச்சராக பதவி ஏற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை பலதரப்பட்ட மக்களுக்காக தி.மு.க. ஆட்சியில் செய்துள்ளது.
    • பாரதிய ஜனதாவின் சலசலப்பு தமிழகத்தில் எந்த காலத்திலும் எடுபடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. அண்ணாகாலனி பகுதி சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    ஒரு காலத்தில் பெண்கள் படிக்க முடியாத நிலை இருந்தது. அப்போது பெண்கள் படிக்க வேண்டும் என்று சொன்னது திராவிட இயக்கம். முன்பெல்லாம் ஆண்களைவிட பெண்கள் குறைவாக படித்திருப்பார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. இப்போது ஆண்களை விட பெண்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கிறார்கள்.

    பெண்கள் தொடர்ந்து உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனால் பெண்கள் உயர் கல்வி படிக்கும் சதவீதம் அதிகரித்து உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை பலதரப்பட்ட மக்களுக்காக தி.மு.க. ஆட்சியில் செய்துள்ளது. தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இரட்டை ஆட்சி முறையை கவர்னர் தற்போது கொண்டு வர முயற்சித்து வருகிறார்.

    தி.மு.க. மற்றும் கலைஞரின் உடன்பிறப்புகள் இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டோம். தாய்மொழி தமிழ் மற்றும் வர்த்தகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் போது இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் கவர்னர் முயற்சிக்கிறார். கவர்னர் மாளிகையில் மாணவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரை அழைத்து அவரது கருத்துக்களை திணித்து வருகிறார். தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழகத்தின் பண்பாட்டிற்கு எதிரான கருத்தை திணித்து வருவதன் காரணமாகவே தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் முரண்பாடு இருக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில் எந்த ஒரு காரணமும் இல்லை.

    பெரியார் முதல் தற்போது உள்ள தி.மு.க. அரசு வரை விரும்புவது சமூகநீதி. ஆனால் கவர்னர் கொண்டு வர முயல்வது மனுதர்மம். பாரதிய ஜனதாவின் சலசலப்பு தமிழகத்தில் எந்த காலத்திலும் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×