search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளஸ்-2 தேர்வு முடிவுகள்"

    • கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைவாகும்.
    • பி.காம் படிக்க 99 சதவீதம் கட்ஆப் மதிப்பெண் தேவை.

    சென்னை:

    பள்ளி கல்வியில் இறுதி வகுப்பான பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம் என்றாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைவாகும்.

    என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கணித பாடத்துடன் இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண் முக்கியமாகும். இந்த 3 பாடங்களின் கூட்டு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. 3 பாடங்களில் எடுத்த மதிப்பெண் கணக்கீடு செய்து கட்-ஆப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    இயற்பியல், வேதியியல், பாடங்களில் மிக குறைந்த மாணவர்களே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். இதனால் பொறியில் கட்-ஆப் மதிப்பெண் குறைகிறது.

    கடந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் 3909 பேர் முழு மதிப்பெண் பெற்றனர். அதே போல் இயற்பியல் பாடத்தில் 812 பேர் நூற்றுக்கு நூறு பெற்று இருந்தனர். அதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு இந்த பாடங்களில் 100க்கு 100 பெற்றவர்கள் குறைவாகும்.

    இயற்பியல் பாடத்தில் 633 பேரும், வேதியியல் பாடத்தில் 471 பேரும் முழு மதிப் பெண் பெற்றுள்ளனர். ஆனால் பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் தொடர்பான பாடப்பிரிவுகளில் 8 ஆயிரம் இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக கட்-ஆப் மார்க் குறைய வாய்ப்பு உள்ளது.

    அதே நேரத்தில் வணிகவியல், பொருளியல் பாடங்களில் அதிகமான மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.

    வணிகவியலில் 6142 பேரும், பொருளியலில்3299 பேரும் சதம் அடித்ததால் டாப் கலை அறிவியல் கல்லூரிகளில் கட்-ஆப் மார்க் 99-100 வரை உயர வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:-

    இந்த வருடம் இயற்பியல், வேதியியல் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவாகும். கணிதப் பாடத்தில் 2587 பேர் நூற்றுக்கு நூறு எடுத்து உள்ளனர்.

    கட்-ஆப் மதிப்பெண் குறைவதற்கு முக்கிய காரணம் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு மட்டுமின்றி நிறைய பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 30 ஆயிரம் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கட்டாயமாக கட்-ஆப் மார்க் குறையும்.

    மேலும் வேளாண்மை, மீன்வளம், கால்நடை மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு கட்-ஆப் மார்க் குறையும்.

    தாவரவியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் சென்டம் குறைந்துள்ளதால் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.

    ஆனால் வணிகவியல், கணக்குப் பதிவியல் பாடங்களில் இந்த அணடு அதிக அளவிலான சென்டம் வாங்கி உள்ளனர். இதனால் டாப்-கலை கல்லூரிகளில் மிகக் கடுமையான போட்டி ஏற்படக்கூடும்.

    பி.காம் பாடப் பிரிவுகளுக்கு கடந்த ஆண்டு கடுமையான போட்டி இருந்தது. இந்த வருடம் அதை விட கூடுதலாக போட்டி ஏற்படும். 99 முதல் 100 வரை கட்-ஆப் மார்க் இடம் பெறக் கூடும்.

    பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரை 84 சதவீதமாக இருந்து வந்தது. அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் செயல்பாடு சிறப்பாக இருப்பதால் தேர்ச்சி அதிகரித்து உள்ளது.

    இதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு முக்கிய காரணமாகும். நன்றாக படித்தால் உயர் பதவிக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டதால் புதிய உற்சாகத்தை கொடுத்து உள்ளது. அதன் காரணமாக தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் கம்ப்யூட்டர் மையங்கள் மற்றும் வீடுகளில் இருந்து விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த வருடம் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    • ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதனை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அரை சதவீதம் அதிகமாகும்.

    மாணவ-மாணவிகள் தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்வதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் அல்லது பள்ளிகள் மூலமும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினாலோ, விடைத்தாள் நகல் பெறவோ விண்ணப்பிக்கலாம்.

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் துணைத் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் பள்ளி 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
    • இந்த பள்ளியில் 203 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர்.

    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 203 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். தற்ேபாது வெளியான தேர்வு முடிவுகளில் 203 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளி தொடர்ந்து 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை புரிந்துள்ளது. இந்த பள்ளி மாணவி பி.பூஜா 585 மதிப்பெண்ணுடன் முதலிடத்தையும், மாணவிகள் டி.நிரஞ்சனா, எஸ்.ஓவியா ஆகியோர் 582 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தையும் ஐஸ்வர்யா, ஏ.மணிபாலன், வி.ஆனிஜெர்லின் ஆகியோர் 575 மதிப்பெண்களுடன் 3-ம் டத்தையும் பிடித்தனர்.

    மேலும் வேதியியலில் 9 பேரும், கணினி அறிவியலில் 9 பேரும் உயிரியலில் 2 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முதல்வர் ஆர்.புனிதவள்ளி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் நிறுவனரும் தாளாளருமானஎம்.எஸ்.செங்கோல் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் மாணவ மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தேர்வு எழுதிய 203 மாணவர்களில், 95 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேலும், 24 பேர் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 6 பேர் 575 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கோவை மாவட்டம் பிளஸ்-2 தேர்வு முடிவில் தமிழக அளவில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
    • மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து தங்கள் முடிவுகளை பார்த்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மே 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடந்தது.

    கோவை மாவட்டத்தில் 119 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 35,033 மாணவ-மாணவிகள் எழுதினர். இதுதவிர 2,047 தனித்தேர்வர்களும் இந்த தேர்வை எழுதினர். இதையடுத்து பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ந் தேதி தொடங்கியது. இந்த பணிகளுக்காக கோவையில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

    ஒவ்வொரு மையங்களிலும் விடை த்தாள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதன்மை கண்காணிப்பாளர்கள், உதவி மதிப்பீட்டாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர்.விடைத்தாள் திருத்தும் பணிக்கு, அனைத்து ஏற்பா டுகளும் செய்யப்பட்டது.

    இன்று காலை தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கோவை மாவட்டம் 96.91 சதவீதம் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    மாணவர்கள் 95.58 சதவீதமும், மாணவிகள் 98.05 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 14 ஆயிரத்து 705 பேரும், மாணவிகள் 17, 990 பேரும் என மொத்தம் 32 ஆயிரத்து 695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன்க ளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. இருப்பினும் சில மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து தங்கள் முடிவுகளை பார்த்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    ×