என் மலர்
நீங்கள் தேடியது "பனி மூட்டம்"
- பொதுமக்கள் பனிப்பொழிவு காரணமாக கடும் அவதி அடைந்தனர்.
- பனிப்பொழிவு இருந்து வந்த காரணத்தினால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் புதுப்பேட்டை பகுதியில் இன்று காலை வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் பனிப்போர்வையால் மூடப்பட்டு பனிப்பொழிவு ஏற்பட்டு இருந்தது.
இந்நிலையில், பண்ருட்டி கும்பகோணம் சாலை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் சாலை, புதுப்பேட்டை அரசூர் சாலை, அண்ணாகிராமம்-பண்ருட்டி சாலை, கண்டரக்கோட்டை சென்னை சாலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் காலை 8 மணி வரை தொடர்ந்து பனிப்பொழிவு இருந்து வந்த காரணத்தினால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.
மேலும், பொதுமக்கள் பனிப்பொழிவு காரணமாக கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில், பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் சீதோஷ்ண மாற்றம் அதிகரித்து பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
விழுப்புரம் பகுதியில் நேற்று இரவு முதல் பனி மூட்டம் மிகக்கடுமையாக இருந்தது. அதுவும் குறிப்பாக காலை 8.30 மணி வரை பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது.
இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட வண்ணம் எறும்புகள் ஊர்ந்து செல்வதுபோல் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றன.
மேலும் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் பனிப்பொழிவு டெல்லியை மிஞ்சும் வண்ணம் இருந்தது. இதன் காரணமாக காலை 8.30 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைந்தே காணப்பட்டது.
- ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது.
- பனி மூட்டத்தால் குளிர் அதிகமாக காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிரால் பாதிக்கப்பட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனி மூட்டம் மற்றும் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி 2 மாதங்கள் நீர்பனி காணப்படும். அதன்பின் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனி விழும். இச்சமயங்களில் கடும் குளிர் நிலவுவது மட்டுமின்றி, தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் மலர் செடிகள் பாதிக்கும். அதேபோல், புற்கள் மற்றும் வனப்பகுதிகளும் காய்ந்துவிடும்.
இந்த நிலையில் இன்று மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது.
பனி மூட்டத்தால் குளிர் அதிகமாக காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிரால் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டனர்.
மேட்டுபாளையம்-குன்னூர் சாலையில் பனி மூட்டம் காரணமான காட்டேரி பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டது. எனவே பனி மூட்டம் காணப்படுவதால் மலை பாதைகளில் வளைவுகளில் கவனமாக செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.
- குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ் காட்சி முனைகளிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.
- கடும் குளிா் காரணமாக பல்வேறு தனியாா் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்கள் பணிக்குச் செல்லாமல் வீடுகளில் முடங்கினா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ் போன்ற காட்சி முனைககள் உள்ளது.
இதனை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.
இங்கு நிலவும் இதமான காலநிலையையும், இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள்.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து இடங்களிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
நேற்று குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ் காட்சி முனைகளிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக காட்சி முனைகளை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகளில் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
குன்னூரில் இருந்து காட்சி முனைகளை காண்பதற்காக செல்லும் சாலைகளில் அடா்ந்த பனி மூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறினா்.
காலை முதல் குளிா் அதிகரித்துக் காணப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
மேலும், கடும் குளிா் காரணமாக பல்வேறு தனியாா் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்கள் பணிக்குச் செல்லாமல் வீடுகளில் முடங்கினா்.
மூடுபனி காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க வேண்டும் என்று காவல் துறையினா் அறிவுறுத்தினா்.