என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234783"

    • மரங்கள் எரிந்து நாசம்
    • தீயணைக்கும் படை வீரர்கள் தீயை அணைத்தனர்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.நேற்று இரவு பட்டாசு வெடித்ததில் 5 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் ராக்கெட் வெடித்ததில் தென்னை மரம் ஒன்றில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

    இதேபோல் தெங்கம் புதூர் பகுதியில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தக்கலை அருகே புலியூர் குறிச்சி பகுதியில் ராக்கெட் வெடித்து சிதறியதில் தென்னை மரம் எரிந்தது.

    கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால் விளை யில் நேற்று இரவு 8.30 மணிக்கு தீபாவளி ராக்கெட் பட்டாசு வெடித்ததில் ஊர் தலைவர் பாலசுந்தரம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியதாஸ் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.

    இதே போல நேற்று இரவு 9.30 மணிக்கு சாமிதோப்பை சேர்ந்த பையன் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நின்ற பனை மரத்தில் தீபாவளி ராக்கெட் பட்டாசு வெடித்து சிதறியதில் தீப்பிடித்து எரிந்தது. கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியதாஸ் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
    • வேம்பனூர், சுசீந்திரம், தேரூர் குளங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பிற்படு த்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உல மாக்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் தனபதி வரவேற்று பேசினார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு உலமாக்களுக்கு சைக்கிள் வழங்கினார். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சிறப்பாக பணிபுரிந்த 7 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மேலும் நீர் நிறை குமரி இணைய தளத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் மட்டுமின்றி அறிவிக்காத திட்டங்களை யும் செயல்படுத்தி வருகிறது.

    தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.மீதமுள்ள திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.குப்பை இல்லா மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது நாகர்கோவில் மாநகரப் பகுதியில் வீடுகளில் இருந்து வாங்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.

    குளங்கள், ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மக்களின் பிரச்சினை களுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு பகுதியாக சென்று மனுக்களை பெற்று அந்த மனுக்க ளுக்கு உடனடி தீர்மான நடவடிக்கை எடுத்து வருகிறோம். குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற வும் முயற்சிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பறவைகள் வந்து செல்கின்றன.வேம்பனூர், சுசீந்திரம் தேரூர் குளங்க ளுக்கு அதிகளவு பறவைகள் வருகின்றன. பறவைகளை பாதுகாக்க நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இந்த மூன்று குளங்களுக்கும் ராம்சர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், வன அதிகாரி இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
    • இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

    இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர். மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை முதலான துறையினர்கள் இணைந்து வழிகாட்டுதல் வழங்கினர்.

    முகாமில் உயர்கல்வி தொடராத 11 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இணையதள பதிவேற்றத்தில் 9 மாணவர்களுடைய விபரம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    5 மாணவர்களில் 2 மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். 2 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை. ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் 5 மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் புதிதாக 5 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், உதவி திட்ட அலுவலர்துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று மாலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது
    • பயிற்சி பள்ளியின் முதல்வராக கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் இருந்து வருகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான பயிற்சி மறவன்குடியிருப்பு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெற்ற 199 காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    பயிற்சி பள்ளியின் முதல்வராக கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை முதல்வராக ஆயுதப்படை துணை சூப்பிரண்டு சேம் வேதமாணிக்கம் ஆகியோர் இருந்து வருகிறார்கள். பயிற்சி காவலர்களுக்கு சிறந்த முறையில் சட்ட வகுப்புகள் மற்றும் கவாத்து பயிற்சி சிறப்பான முறையில் கொடுக்கப்பட்டு வருகிறது.

    பயிற்சி காவலர்களின் நிறைவு விழா இன்று (19-ந் தேதி) மாலை 3.30 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் பங்கேற்று பயிற்சி காவல்களின் கவாத்து அணிவகுப்பினை பார்வையிடுகிறார்.

    பயிற்சி காவலர்கள் தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவரால் வழங்கப்பட்ட கொடி அங்கீகார லோகோவை தங்கள் சீருடையில் அணிந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார்கள்.

    மேலும் சிறந்த முறையில் கவாத்து, சட்டப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு காவல்துறை தலைவர் பதக்கங்களை வழங்குகிறார். நிறைவு விழாவில் பயிற்சி காவலர்களின் களரி, கராத்தே நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவு
    • பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் பணி கள் குறித்து, உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக் டர் அரவிந்த் தலைமை யில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

    இதில் வருவாய்த்துறை, பொதுப்ப ணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாநகராட்சி, நகராட் சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், வேளாண் மைத்துறை, தோட்டக்க லைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சா ரத்துறை, மீன்வளத்துறை, போக்குவரத்துத்துறை, காவல் துறை, கூட்டுறவுத் துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் நடை பெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் முன்னேற் றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஒவ்வொரு துறையிலும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

    பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, கட்டடம், கடலரிப்பு தடுப் புக்கோட்டம், நெடுஞ் சாலை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சி திட் டப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. வளர்ச்சி பணிகளின் செயலாக்கத் தின் போது ஏற்படும் தடை களுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட் டது. குடிநீர், சாலை வச திகள், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட அத்தி யாவசிய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக் டர் கூறினார். மாவட்டத் திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் ஏதேனும் தடைகள் மற்றும் இடர் பாடுகள் இருந்தால் அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப் பிரியா, மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், திட்ட இயக் குநர்கள் ச.சா.தன பதி (ஊரக வளர்ச்சி முகமை), மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ (மக ளிர் திட்டம்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) திருப்பதி உட்பட அனைத் துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிக்கை
    • வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28 - ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் முக்கிய தோட்டக் கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முக்கிய பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    சுமார் 5063 ஹெக்டர் பரப்பளவில் வாழை மற்றும் 1437 ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பயிர்கள் சாகுபடி செய்யும்போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, மழை பொய்த்தல் , வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் இழப்பு ஏற்படும் போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படு கிறது.

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. குத்தகை விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன் பெற லாம். வாழை விவ சாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,182 பிரீமியமாக செலுத்தி ரூ. 83,650 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரிமியமாக ரூ.1420 செலுத்தி ரூ.28,400 இழப்பீடா கவும் பெறலாம்.

    கடன் பெறும் விவ சாயிகளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் பிடித்தம் செய்து காப்பீட்டு நிறுவ னங்களுக்கு செலுத்தலாம். கடன் பெறாத விவசாயிகள் தங்களது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தலாம். அருகாமையிலுள்ள தேவையான ஆவணங்கள் நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம், காப்பீடு செய்வதற்கான காலக்கெடு விபரம், வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28 - ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம்.

    மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலு வலகங்களை அணுகி பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது.

    • மாவட்டம் முழுவதும் 82 சதவீதம் பேர் முதல்டோஸ் தடுப்பூசியும் 72 சதவீதம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
    • தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் குவிந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் 82 சதவீதம் பேர் முதல்டோஸ் தடுப்பூசியும் 72 சதவீதம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். குறிப்பிட்ட நாள் கழிந்த பிறகும் பலரும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளது தெரிய வந்துள்ளது.மேலும் முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

    அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வசதியாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருக்கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் குவிந்தனர். மெகா தடுப்பூசி முகாமில் 1452 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 1894 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும், 13 ஆயிரத்து 800 பேருக்கு 3-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 72 பேருக்கும் 12 வயது முதல் 14 வயது உட்பட்டவர்கள் 81 பேருக்கு என மொத்தம் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 17299 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    மாவட்டத்திலுள்ள 9 ஒன்றியங்கள் மற்றும் நாகர்கோவில் மாநகரப் பகுதியை பொருத்தமட்டில் தோவாளை ஒன்றியத்தில் மட்டுமே குறைவான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு நேற்று நடந்த தடுப்பூசி முகாமில் 1329 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 1436 பேரும் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் 1750 பேரும் குருந்தன் கோடு ஒன்றியத்தில் 1988 பேரும் கிள்ளியூர் ஒன்றியத்தில் 2123 பேரும் முன்சிறை ஒன்றியத்தில் 1794 பேரும் மேற்புறம் ஒன்றியத்தில் 1694 பேரும் திருவட்டார் ஒன்றியத்தில் 1727 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தக்கலை ஒன்றியத்தில் 1556 பேரும் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 1502 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    • பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி
    • பஸ், ரெயில் நிலையங்களிலும் சோதனை

    நாகர்கோவில்:

    கோவை, சேலம், மதுரையை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் பாரதிய ஜனதா ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்திப்புகள், தலைவர்கள் சிலைகள், பாரதிய ஜனதா நிர்வாகிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நேற்று இரவு விடிய விடிய போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். இரண்டு ஷிப்டுகளாக கண்காணிப்பு பணி நடந்தது.நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    இன்று 2-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ரெயிலில் வரும் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ெரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, வள்ளி யூர், இரணியல், நாங்குநேரி, குழித்துறை ரெயில் நிலை யத்திலும் பாதுகாப்பு அதிக ரிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலய சாமி கோவில், மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அரசு அலுவலகங்களி லும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொது மக்கள் அனைவரும் பரிசோ தனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.பொதுமக்கள் கொண்டு வந்த பேக்குகள் முழுமை யாக சோதனை செய்யப்பட் டது.

    ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களிலும் போலீசார் போலீஸ் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங் களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் 1200 போலீ சார் ஈடுபட்டுள்ளனர்

    பாதுகாப்பு மாவட்டம் முழுவதும் பலப்படுத்தப்பட் டுள்ள நிலையில் பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் அலைமோதல்
    • காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த முன் ஏற்பாடு

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு சமீபகாலமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சுகாதாரத்துறை அதி காரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள். குமரி மாவட்டத்தி லும் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த முன் ஏற்பா டுகள் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிகளில் காய்ச்சல் பாதிப்பு உள்ள வர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.குமரி மாவட்டத்திலும் இன்று அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் சுமார் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த மருத்துவ முகாமில் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். ராஜாக்க மங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராஜக்கமங்கலம் அரசு ஆஸ்பத்திரி, ராஜாக்க மங்கலம் அரசு பள்ளி, புதூர் சுண்டப்பற்றிவிளை அரசு பள்ளிகளிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ குழுவினர் கா ய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர்.

    பள்ளிகளில் காய்ச்சல் பாதிப்புடன் யாராவது மாணவர்கள் வந்துள்ளா ர்களா ? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களிடம் அவர்களது குடும்பத்தினர் யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தனர். அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் அகஸ்தீஸ்வரம் தென்தாமரைகுளம் கொட்டாரம் பள்ளிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது.

    முன்சிறை ஒன்றியத்தில் காப்புக்காடு பள்ளியிலும், திருவட்டார் ஒன்றியத்தில் ஏற்ற கோடு பள்ளிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் குழுவினர் மாணவ , மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வழக்கமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். ஆனால் சமீ பகாலமாக ஆஸ்பத்திரிக்கு வருகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் வந்து செல்கிறார்கள்.

    இன்றும் புற நோயாளிகள் பிரிவில் கூட்டம் அலைமோதியது. காய்ச்சல் பாதிப்பை பொருத்தமட்டில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மற்றவர்களுக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
    • மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே மேவலூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 40). இவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான பிரபல உணவு தயாரிப்பு நிறுவனத்தின் தமிழக பிரிவின் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறேன். எங்களது நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் பிரபலமாகும். முறையாக காப்புரிமை பெற்று பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பொதுமக்களின் நலனுக்காக உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறோம்.

    இந்த நிலையில் எங்களது உணவுப் பொருட்களின் தயாரிப்புகளை குமரி மாவட்டத்தில் போலியாக ஆலை நடத்தி தயார் செய்து எங்களது நிறுவனத்தின் போலியான முத்திரையை பயன்படுத்தி தரமற்ற முறையில் பொருள்களை விற்பனை செய்து எங்களது நிறுவனத்திற்கு களங்கம் விளைவித்து, தவறான ஆதாயம் பெற்றுள்ளனர்.

    எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தர விட்டார்.

    அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா, சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி, குமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த ரெஜி (34 ) என்பவர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது
    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை குமரி மாவட்டத்தில் 82 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும் சுமார் 75 சதவீதம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதே போல் முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை.

    இதையடுத்து அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வசதியாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று மாவட்டம் முழுவதும் 1400 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் 50 இடங்களில் மெகா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வடிவீஸ்வரம், வடசேரி, தொல்லை விளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், வேப்பமூடு பூங்கா பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள்.

    இதேபோல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரெயில் நிலையத்திலும் தடுப்பூசி போடப்பட்டது. கோவாக்சின், கோவிஷீல்டு 2 தடுப்பூசிகளும் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மெகா தடுப்பூசி முகாம்களில் கூட்டம் குறைவாக இருந்தது. இதையடுத்து தடுப்பூசி செலுத்த வந்தவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடப்பட்டது. கன்னியாகுமரியிலும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டது.

    வெளியூரில் இருந்த சுற்றுலா பயணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சித் பிரதிநிதிகள் உதவியுடன் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்து விவரங்களை சேகரித்து தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. மெகா தடுப்பூசி முகாமில் இன்று கூட்டம் குறைவாகவே இருந்தது. பூஸ்டர் தடுப்புச் செலுத்துவதற்கு இளைஞர்கள் இளம் பெண்கள் ஆர்வமாக வந்திருந்தனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த மெகா தடுப்பூசி முகாமில் மதியம் 1 மணி வரை சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தனர். தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.மாலை வரை தடுப்பூசி போடப்படும். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தி ரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக அந்தந்த பகுதிகளில் உள்ள மையங் களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளு மாறு கலெக்டர் அரவிந்த் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

    • கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து இயக்க திட்டம்
    • தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி பேட்டி

    கன்னியாகுமரி:

    சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி நேற்று கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்றார்.

    அவரை கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அவருடன் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய அறங்காவலர்குழு உறுப்பினர்கள் மற்றும் தென்தாமரைகுளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் தாமரைதினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் சேகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜனவரி மாதம் வருஷாபிஷேக விழாவும் பிப்ரவரி மாதம் முதல் முறையாக பிரமோற்சவ திருவிழாவும் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ திருவிழாவின் போது 12 வாகனங்கள் பயன் படுத்தப்பட உள்ளன.

    கன்னியாகுமரியில் மார்ச் மாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படும். கன்னியா குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தற்போது லட்டு விற்பனை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. அந்த குறை விரைவில் போக்கப்படும். அதேபோல திருப்பதியில் மட்டும் தான் முடி காணிக்கை செலுத்தப்படும். இங்கு அதற்கான ஏற்பாடுகள் இதுவரை செய்யப்படவில்லை. மேலும் கோசாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்வதற்கு வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச பஸ் விடப்படும். இந்த இலவச பஸ் சேவை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற டிசம்பர் மாதம் முதல் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×