என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்டியானோ ரொனால்டோ"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாங் ரேஞ்சில் இருந்து அடித்த கோல் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
    • மறுபுறம் ஜார்ஜியா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் ஆடினர்.

    யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பாரா திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், க்ரூப் எஃப் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் துருக்கி மற்றும் ஜார்ஜியா அணிகள் மோதின.

    இந்த போட்டியில் இளம் வீரர் அர்டா குலெர் லாங் ரேஞ்சில் இருந்து அடித்த கோல் துருக்கி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்திய துருக்கி அணி கோல் அடிப்பதில் தீவிரம் காட்டியது.

    இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 25-வது நிமிடத்தில் துருக்கியின் மெர்ட் முல்துர் வேகமாக அடித்த ஷாட் கோலாக மாறியது. மேலும், போட்டியில் துருக்கி அணிக்கு முன்னிலையை பெற்றுக் கொடுத்தது.

    மறுபுறம் ஜார்ஜியா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் ஆடினர். இதன் காரணமாக ஜார்ஜியா அணி போட்டியன் 32-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இதையடுத்து போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்த சமனில் இருந்தன.

    போட்டியின் இரண்டாம் பாதி எந்த அணி இன்னொரு கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் துவங்கியது. இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். முடிந்த வரை போட்டியில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த துருக்கி வீரர்கள், இடையில் கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றும் முயற்சியிலும் இறங்கினர்.

     


    அந்த வகையில், போட்டியின் 65-வது நிமிடத்தில் துருக்கி அணிக்காக களமிறங்கிய 19 வயது இளம் வீரர் அர்டா குலெர் யாரும் எதிர்பாரா நிலையில் கோல் அடித்தார். இதன் மூலம் துருக்கி அணி 2-1 என்ற வகையில் போட்டியில் முன்னிலை பெற்றது. போட்டி முடிவில் துருக்கி அணி 3 கோல்களை அடித்து இருந்தது. இதன் மூலம் இந்த போட்டியில் துருக்கி அணி 3-1 என்ற வகையில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் துருக்கி வீரர் அர்டா குலெர் கோல் அடித்ததன் மூலம் யூரோ கோப்பையில் சாதனை ஒன்றை படைத்துள்ளார். யூரோ கால்பந்து வரலாற்றின் அறிமுக போட்டியில் முதல் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை அர்டா குலெர் பெற்றிருக்கிறார்.

    முன்னதாக 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 19 வயது 128 நாளில் முதல் கோல் அடித்தது சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில் கோல் அடித்த அர்டா குலெர் தனது 19 வது 114-வது நாளில் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். 

    • ஜார்ஜியா அணிக்காக பெனால்டி முறையில் கோல் அடித்தார்.
    • இந்த போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.

    யூரோ கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் எஃப் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் ஜார்ஜியா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த போட்டி துவங்கிய 2-வது நிமிடத்தில் ஜார்ஜிாய வீரர் விச்சா குவார்ட்ஸ்கெலியா (khvicha kvaratskhelia) முதல் கோலை அடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது.

    பிறகு போட்டியின் 57-வது நிமிடத்தில் மிகுடாட்ஸ் ஜார்ஜியா அணிக்காக பெனால்டி முறையில் கோல் அடித்தார். இதன் காரணமாக ஜார்ஜியா அணி 2-0 என்ற அடிப்படையில் போர்ச்சுகலை வீழ்த்தி வரலாற்று பெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் ஏற்கனவே போர்ச்சுகல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    எனினும், ஜார்ஜியா அணியின் வெற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஜார்ஜியா நாட்டில் ரொனால்டோ துவங்கி வைத்த கால்பந்து பயிற்சி மையத்தில் சிறுவர்களாக பயிற்சி பெற்றவர்களில் ஒருவர்தான் குவார்ட்ஸ்கெலியா.

     


    அன்று ரொனால்டோ துவங்கி வைத்த பயிற்சி மையத்தை சேர்ந்த சிறுவன் இன்று ரொனால்டோ அணிக்கு எதிரான போட்டியில் ஜார்ஜியா அணிக்காக விளையாடி உள்ளார். மேலும், தனது அணி வெற்றி பெறவும் காரணமாக விளங்கினார். இந்த போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருதும் வென்றுள்ளார்.

    இந்த நிலையில், நேற்றைய போட்டிக்கு பிறகு ஜார்ஜிய வீரர் குவார்ட்ஸ்கெலியா போர்ச்சுகவல் வீரரும், கால்பந்து ஜாம்வானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜெர்சியை வாங்கிக் கொண்டார். பிறகு, ரொனால்டோவின் ஜெர்சி மற்றும் ஆட்டநாயகன் விருது ஆகியவற்றின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு அதற்கு "கனவு" என தலைப்பிட்டுள்ளார்.

    கடந்த பத்து நாட்களுக்கு முன், "போட்டிக்கு பிறகு கிறிஸ்டியானோவிடம் அவரது ஜெர்சியை கேட்கலாமா? ஏன் கேட்க கூடாது? அவர் எனது ரோல்மாடல். அவரிடம் அதை தெரிவிப்பேன். இதனால் எங்களால் அவரை வீழ்த்த முடியாது என்றில்லை," என்று பதிவிட்ட குவார்ட்ஸ்கெலியோ நேற்றைய போட்டியில் வெற்றியை பெற்றதோடு ரொனால்டோவின் ஜெர்சியையும் வாங்கிக் கொண்டுள்ளார். 

    • கிறிஸ்டியானோ ரொனால்டோ 6-வது முறையாக யூரோ தொடரில் விளையாடி வருகிறார்.
    • 2016-ல் இவரது தலைமையில் போர்ச்சுக்கல் சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். தற்போது யூரோ கோப்பையில் போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    இதுதான் தன்னுடைய கடைசி யூரோ கோப்பை தொடர் என ரொனால்டோ தெரிவித்துள்ளார். ரொனால்டோ 6-வது முறையாக யூரோ கோப்பை தொடரில் விளையாடுகிறார். அடுத்த தொடர் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் நடைபெற இருக்கிறது. அப்போது ரொனோல்டாவுக்கு 43-வது வயதாகிவிடம்.

    "சந்தேகமின்றி இது எனக்கு கடைசி யூரோ. நிச்சயமாக இதுதான். ஆனால் அதைப்பற்றி நான் உணர்ச்சிவசப்படுவதில்லை. கால்பந்து விளையாட்டின் மீது எனக்கு இருக்கும் உற்சாகம், ரசிகர்களிடம் நான் காணும் உற்சாகம், எனது குடும்பம், மக்களின் ஆர்வம்... கால்பந்து உலகை விட்டு வெளியேறுவது அல்ல. நான் வெற்றி பெறுவதற்கு வேறு என்ன இருக்கிறது?. கால்பந்து பயணத்தில் நான் கொண்டுள்ள உற்சாம் காரணமாக இன்னும் இங்கே இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    2003-ம் ஆண்டு போர்ச்சுக்கல் அணியில் அறிமுகம் ஆனார். 2016-ம் ஆண்டு இவரது தலைமையில் போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. போர்ச்சுக்கல் அணிக்காக 130 கோல்கள் அடித்துள்ளார்.

    • அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
    • எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக.. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம்.

    ஜெர்மனியில் 2024 ஆம் ஆண்டுகான யூரோ கால்பந்து கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கால்பந்துலகின் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகள் அணி நேற்று முன் தினம் பிரான்ஸுடன் காலிறுதியில் மோதியது. இந்த போட்டியில் 120 நிமிடங்கள் வரை யாரும் கோல் அடிக்காததால் பெனால்டி மூலம் வெற்றியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.

    பெனால்டியில் ரொனால்டோவின் 1 கோலையும் சேர்த்து மொத்தம் 3 கோல்களை மட்டுமே போர்ச்சுகல் அடித்த நிலையில் பிரான்ஸ் 5 பெனால்டி கோல்களை விளாசி போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மைதானத்தில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்ட ரொனால்டோ தோல்வியால் அழுத்த பெபேவை தேற்றினார். முன்னதாக காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் சுற்றில் ஸ்லோவேனியாவுடன் போர்ச்சுகல் மோதும் போட்டியில் கோல் ஒன்றை தவறவிட்டதற்காக ரொனால்டோ கதறி அழுத வீடியோ அனைவரையும் கண்கலங்க செய்தது.

    இந்த வருட தொடருடன் யூரோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து விலகுவதாக ரொனால்டோ அறிவித்திருந்த நிலையில் அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தோல்வி குறித்து ரொனால்டோ தற்போது மனம் திறந்துளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'போர்ச்சுகலின் பெருமையை வருங்காலங்களில் உயர்த்தும் பணி தொடரும். [இந்த தொடரை பொறுத்தவரை] நாங்கள் அதிகமாக எதிர்பார்த்தோம், நாங்கள் இன்னும் அதிகமானவைக்கு தகுதியுடவர்கள்.

    எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம். நாங்கள் இதுவரை செய்த சாதனைகள் அனைத்துக்கும் நீங்கள் அளித்த ஆதரவு தான் காரணம் மைதானத்துக்கும் உள்ளேயும், வெளியேயும் இந்த பெருமை தொடரும். ஒன்றாக இணைந்து தொடர்ந்து அதைக் கட்டி  எழுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார். 

    • கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.
    • ரொனால்டோ 'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

    உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 39 வயதான ரொனால்டோ கால்பந்து வாழ்க்கையில் தனது கடைசி கட்டத்தை எட்டியுள்ளார்.

    கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

    'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை அவர் தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளேன். அதை அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்" என்று காமெடியாக பேசியுள்ளார்.

    ரொனால்டோவின் யூட்யூப் சேனலை 1 மணிநேரத்திற்குள் 1 மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இதுவரை இந்த சேனலில் 18 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூடியூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.
    • யூடியூப் சேனல் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்களை பெற்றார்.

    உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 39 வயதான ரொனால்டோ கால்பந்து வாழ்க்கையில் தனது கடைசி கட்டத்தை எட்டியுள்ளார்.

    கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூடியூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

    'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை அவர் நேற்று தொடங்கினார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளேன். அதை அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்" என்று காமெடியாக பேசியிருந்தார்.

    இதுவரை இந்த சேனலில் 18 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சேனல் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்களை ரொனால்டோ பெற்றுள்ளார்.

    இந்நிலையில், சேனல் தொடங்கிய 24 மணிநேரத்தில் 20 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். மேலும், யூடியூபில் விரைவாக 20 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்ற சேனல் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்துள்ளார்.

    • நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
    • 34-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.

    போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகம் முழுவதும் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். இதுவரை கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

    இவர் படைக்காத சாதனை, தொட முடியாத ஒரு கோப்பை என்றால் அது உலகக்கோப்பை தான். கிளப் போட்டிகளில் கிட்டத் தட்ட அனைத்து கோப்பையும் வென்று விட்டாலும், உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணி காலிறுதி வரை வந்தாலும் அதைத் தாண்டி அடுத்த கட்டமான அரை இறுதிப் போட்டிக்கு இது வரை தகுதி பெற்றதே இல்லை.

    இந்தநிலையில், ரொனால்டோ கால்பந்து உலகில் புதிய சாதனை படைத்துள்ளார். நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 34-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.

    இதன் மூலம் தற்போது வரை கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மெஸ்ஸி 838 கோல் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.



    • ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 33-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
    • ஸ்டெபனோ பியோலி அர்-நஸர் அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

    கால்பந்து விளையாட்டின் சிறந்த வீரரான போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியில் உள்ள அல்-நஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    சுவுதி ப்ரோ லீக்கில் அல்-நஸர் நேற்று எத்திஃபாக் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அல்-நஸர் அணி 3-0 என வெற்றி பெற்றது. அந்த அணிக்கு 33-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை பதிவு செய்தார்.

    அதன்பின் சலீம் அல்-நஜ்தி 56-வது நிமிடத்திலும், தலிஸ்கா 70-வது நிமிடத்திலும் கோல் அடிக்க அல்-நஸர் அணி 3-0 என வெற்றி பெற்றது.

    அல்-நஸர் அணியின் பயிற்சியாளராக இருந்த லூயிஸ் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஸ்டெபனோ பியோலி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் அல்-நஸர் அணியின் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டியில அல்-நஸர் வெற்றி பெற்றது. இந்த வெற்றி அணியின் முயற்சிக்கு கிடைத்தது. இன்றிரவு (நேற்று) மிகப்பெரிய வெற்றி. ரசிகர்களுக்காக இது... என ரொனால்டா தனது சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அல்-ஷார்ட்டா அணிக்கெதிரான போட்டியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ரொனால்டோ விளையாடவில்லை. அதில் அல்-நஸர் 1-1 என போட்டியை டிரா செய்தது.

    • கிட்டத்தட்ட 6 மாதங்கள் 20 நாட்களில் இந்த பயணத்தை காங் முடித்துள்ளார்.
    • ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்துள்ளார்.

    உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கால்பந்து ஆட்டத்தில் சிறந்த வீரராக வலம் வரும் இவரை நேரில் பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். அந்த வகையில் சீன ரசிகர் ஒருவர் ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ரொனால்டோ, கடந்த பிப்ரவரி மாதம் சீனா செல்வதாக இருந்தது. ஆனால் அந்த பயணம் எதிர்பாராதவிதமாக ரத்து செய்யப்பட்டது. அவரை பார்க்க ஆவலாக இருந்த சீன ரசிகர் காங் இதனால் மிகவும் வருத்தமடைந்தார். இதனையடுத்து அவரை நேரில் பார்க்க சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டார்.

    அதன்படி சீனாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சைக்கிளில் வந்து ரொனால்டோவை சந்தித்துள்ளார். இந்த பயணத்தை கடந்த மார்ச் 18-ந் தேதி சீனாவில் தொடங்கிய அவர் 7 நாடுகளை கடந்து அக்டோபர் 20-ந் தேதி சவுதி அரேபியாவை வந்தடைந்தார். கிட்டத்தட்ட 6 மாதங்கள் 20 நாட்களில் இந்த பயணத்தை காங் முடித்துள்ளார்.

    இறுதியாக ரொனால்டோவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் ரொனால்டோ ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியையும் காங் பரிசாக பெற்றுக் கொண்டார்.


    • நேற்றைய போட்டியில் தொடர்ச்சியாக 2 கோல்களை அடித்துள்ளார்.
    • ஸ்போர்டிங் சிபி அணிக்காக 13 ஆட்டங்களில் வென்றுள்ளார்.

    ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட் கால்பந்து தொடரில் அல் நாசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஆட்டத்தில் 39 வயதான ரொனால்டோ தொடர்ந்து 2 கோல்களை அடித்து அசத்தினார். அல் வாசில் அணிக்கு எதிராk நடந்த இப்போட்டியில் அல் நாசர் 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

    இது கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்ற 700-வது கிளப் போட்டியாக அமைந்தது. இன்னும் இரு தினங்களில் ரொனால்டோ தனது 40-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்த நிலையில், அவர் நேற்றைய போட்டியில் தொடர்ச்சியாக 2 கோல்களை அடித்துள்ளார்.

     


    ஐந்து முறை பாலன் டி'ஓர் விருது வென்றுள்ள ரொனால்டோ கடந்த ஆகஸ்ட் 2002 இல் தனது தொழில்முறை வாழ்க்கையை தொடங்கி வெற்றிகளை குவித்து வருகிறார். 2003 இல் ஓல்ட் டிராஃபோர்டு அணிக்கு வரும் முன்பு ரொனால்டோ ஸ்போர்டிங் சிபி அணிக்காக விளையாடி 13 ஆட்டங்களில் வென்றுள்ளார்.

    யுனைடெட் அணிக்காக 346 போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ 145 கோல்களை அடித்துள்ளார். இவற்றில் ரியல் மாட்ரிட்டில் தான் ரொனால்டோ தனது பெரும்பாலான வெற்றிகளை பெற்றார். அவர் லாஸ் பிளாங்கோஸ் அணிக்காக 315 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் நான்கு சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் உட்பட 15 பட்டங்களை வென்றுள்ளார்.

    ரொனால்டோ ஆகஸ்ட் 2021-இல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்புவதற்கு முன்பு மூன்று சீசன்களில் ஜுவென்டஸ் அணியுடன் 92 ஆட்டங்களில் வென்றார். இன்டர் மியாமி ஃபார்வர்ட் லியோனல் மெஸ்ஸி 613 கிளப் கேரியர் கிளப் ஆட்டங்களில் வென்றுள்ளார். இதில் பார்சிலோனாவுடன் 542 கோல்களும் அடங்கும்.

    ஜனவரி 30 ஆம் தேதி வரை ரொனால்டோ 921 கோல்களை அடித்துள்ளார். நேற்றைய போட்டியின் மூலம் அவர் தனது கேரியரில் அடித்த கோல்களின் எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தனது 30 வயது வரை 463 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ 30 வயதுக்கு பிறகு 460 கோல்களை அடித்துள்ளார்.

    உலகளவில் அதிக சர்வதேச கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 135 கோல்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். 

    • என்னைப் பொறுத்த வரை பும்ராவுக்கு எந்த நேரத்திலும் உங்களால் மாற்று வீரரை கண்டறிய முடியாது.
    • மற்ற வீரராக இருந்தால் மாற்று வீரர்கள் நீங்கள் பயன்படுத்தலாம்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் காயத்தை சந்தித்தார். இதனால் அவர் வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

    இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஹர்மிசன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் பும்ரா. என்னைப் பொறுத்த வரை பும்ராவுக்கு எந்த நேரத்திலும் உங்களால் மாற்று வீரரை கண்டறிய முடியாது. அதனால் தொடர் முழுவதும் விளையாடாவிட்டாலும் இறுதிப்போட்டி நடைபெறும் நாளின் காலையில் அவரை நான் அணியில் எடுப்பேன். ஏனெனில் அவர் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் உலகில் மிகவும் சிறந்தவர்.

    இதுதான் இந்திய அணியின் பார்வையிலிருந்து என்னுடைய கருத்து. அது உங்களுடைய சிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் உலகக்கோப்பைக்கு செல்வது போன்ற விஷயமாக இருக்கும்" முக்கியமான பும்ரா: "15 வருடங்களுக்கு முன்பாக ரெனால்டோவை நீங்கள் அணியில் இருந்து மாற்ற முடியாது. அதைத் தான் பும்ராவிடம் இந்தியா செய்யும் என்று நான் நினைக்கிறேன்.

    அவர் இல்லாமல் 14 பேர் கொண்ட அணியாகும். குரூப் சுற்றுப்போட்டிகளை விளையாடுவதற்கு அவர்களை எனக்குப் போதும். அவரை நாம் அரையிறுதி விளையாட வைக்க முடியும். மற்ற வீரராக இருந்தால் மாற்று வீரர்கள் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவர் பும்ரா என்பதால் மாற்று வீரர் இல்லை.

    என்று கூறினார். 

    • கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது.
    • காரின் முன்பகுதியில் சில கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன.

    போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கால்பந்தாட்டத்தை தாண்டி ரொனால்டோ ஒரு கார் பிரியர் ஆவார்.

    இவரின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் ஸ்பெயினில் விடுமுறையில் இருக்கிறார். இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெய்னின், மஜோர்காவில் உள்ள ஒரு வீட்டின் மீது கார் மோதியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்தின் போது காரை ஓட்டிச் சென்றது ஊழியர் தான் என்றும் ரொனால்டோ அல்ல என்றும் முதல்கட்ட தகவல்கள் உறுதி செய்துள்ளன. மேலும் இந்த விபத்தில் ஓட்டுநருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் காரின் முன்பகுதியில் சில கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன

    ×