search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்"

    • வக்கீல்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
    • ஆம்ஸ்ட்ராங் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்.

    சென்னை:

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வக்கீலுமான ஆம்ஸ்ட்ராங்க், ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலையில் மறைமுகமாக ஈடுபட்டவர்களையும், உண்மைக் குற்றவாளிகளையும் கைது செய்யவேண்டும். வக்கீல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, வக்கீல்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அப்போது வக்கீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு புகை படத்தை வைத்து மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், வக்கீல்கள் சங்கரசுப்பு, சத்தியச்சந்திரன், ரஜினிகாந்த், ரமேஷ் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்துக் கொண்டனர்.

    • பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    சென்னை பெருங்குடி ராஜீவ் நகரை சேர்ந்த ஜெய்கணேஷ் சைதாப்பேட்டை கோர்ட் டில் வழக்கறிஞராக பணி யாற்றி வந்தார்.

    அவர் கடந்த 25-ந் தேதி இரவு தனது வீட்ட ருகே நின்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக் களில் வந்த மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப் பியது. இது பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்திற்கு கண்ட னம் தெரிவித்து அரக்கோ ணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அரக் கோணம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் லோகபிரா மன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

    வழக்கறி ஞர்களுக்கு பாதுகாப்பு சட் டத்தை மத்திய, மாநில அரசு கள் விரைவாக இயற்றக்கோரி கோஷமிட்டனர். இதில் 80-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    • அந்த பணியிலும் கூட 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கூலி ஆட்களை எடுக்க துணிந்து இருக்கிறது மத்திய அரசு. இது மிகப்பெரிய மோசடி ஆகும்.
    • இளம் வயதினரை ஆர். எஸ். எஸ்.சின் ஊழியர்களாக மாற்றி ராணுவ ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் திட்டமாகும்.

    கோவை:

    கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புல்டோசர் பாசிசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகில இந்திய வக்கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் ஜோதிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாசேதுங், செயலாளர் கோபால் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டம் குறித்து வக்கீல்கள் கூறியதாவது:-

    ஆபத்தான சூழலில் இருந்து இந்திய நாட்டை பாதுகாக்கும் உச்சபட்ச கடமையை ஆற்றுவோர் ராணுவ வீரர்களே. அந்த பணியிலும் கூட 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கூலி ஆட்களை எடுக்க துணிந்து இருக்கிறது மத்திய அரசு. இது மிகப்பெரிய மோசடி ஆகும்.

    ஓய்வூதியம், பணி பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்து நிரந்தரமற்ற சூழலில் 4 ஆண்டுகளுக்குப்பின் கைவிடப்படும் வீரர்களின் நிலைமை என்ன ஆகும். ராணுவ வீரர்களுக்கு இதுதான் நிலை என்றால் மற்ற பல துறைகளிலும் இதைவிட மோசமான நிலை ஏற்படுத்தப்படும்.

    இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பது மகத்தான தேசபக்த கடமை. இளம் வயதினரை ஆர். எஸ். எஸ்.சின் ஊழியர்களாக மாற்றி ராணுவ ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் திட்டமாகும். இந்தியா முழுவதும் தங்களது வாழ்வியல் உரிமைக்காக போராடும் சிறுபான்மை மக்களின் வாழ்விடங்களை புல்டோசர் கொண்டு அரசியலமைப்பு சட்ட மாண்புகளை குழிதோண்டி புதைக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புல்டோசர் பாசிசத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    ×