என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மா சுப்பிரமணியம்"

    • தமிழ்நாட்டிற்கு தேவையான வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு நிதி ஆதாரங்களை பெற்றிருக்கின்றோம். எய்ம்ஸ் நிதி ஆதாரத்தை கேட்டிருக்கின்றோம்.
    • ஏப்ரல் மாதத்தில் டெண்டர் முடிந்தவுடன் கட்டுமானத்திற்கான ஒப்பந்தங்கள் பெறப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா நடைபயிற்சி மைதானத்தில் இன்று காலை அமைச்சர் மா. சுப்பிரமணியம் யோகா மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஈரோடு மாநகராட்சி 2008-ல் உருவாக்கப்பட்டாலும் 10 ஆண்டுகளாக மாநகராட்சி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.480 கோடி மதிப்பில் திட்டங்களை கொண்டு வந்து முதல்-அமைச்சர் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

    ஈரோடு கிழக்குக்கு முதல்-அமைச்சர் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார். ஈரோடு கிழக்கு உதிக்கும். ஈரோட்டில் மக்களை சந்திக்கும் போது 3 பிரதான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.

    ஜவுளி துறைக்கு நிரந்தரமான கண்காட்சி அமைக்கப்பட வேண்டும். சாலை வசதி மேம்படுத்த வேண்டும். சாயகழிவு அதனால் ஏற்படும் புற்றுநோய்க்கு தீர்வு காணப்பட வேண்டும் என கேட்டிருக்கிறார்கள்.

    தேர்தல் முடிந்த பிறகு ஈரோடு நகரின் புற்றுநோய்க்கான நிரந்தர தீர்வு நிதிநிலை அறிக்கையில் கிடைக்கும்.

    நீட் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவர் மேல் நடவடிக்கைக்காக அனுப்பியதை உள்துறை அமைச்சகம் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும், ஆயுஷ் அமைச்சகத்திற்கும் அனுப்பி உள்ளது. 2 அமைச்சகமும் சிறு விளக்கம் கேட்டு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கடிதம் அனுப்பியது. அதற்கும் விளக்கம் அனுப்பி இருக்கின்றோம்.

    ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து கடிதம் மீண்டும் வந்துள்ளது. அதற்கு பதில் அனுப்பும் பணி நடந்து வருகிறது. நீட் விலக்கு பெற தொடர்ச்சியாக பணி நடந்து வருகிறது. ஏற்கனவே எடப்பாடி தலைமையிலான அரசு நீர்த்துப்போன சட்டம் 1956-ல் வந்த பழைய சட்டத்தை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

    அந்த வழக்கை தொடர்ந்து நடத்தினால் பாதகமான தீர்ப்பு வரும். இந்த நிலையில் தான் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி புதிய வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ளார்.

    இவ்வாறு பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. முதல்-அமைச்சர் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். எனவே தமிழகத்திற்கு நிச்சயம் நீட்டிலிருந்து விலக்கு கிடைக்கும்.

    எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக 2015-ல் அறிவிப்பு வெளியானது. 2018-ல் அமைச்சரவை ஒப்புதல் தந்தது. 2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 8 ஆண்டு காலம் இதற்கான முயற்சி நடைமுறையில் இருக்கிறது என்றாலும் அதற்கான நிதி ஆதாரம் கிடைக்கவில்லை.

    மற்ற மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி ஆதாரமாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஜெய்க்கா நிதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு பணிகளுக்கு கடன் பெறுவதற்கான விளக்கங்களையும் வரைபடங்களையும் டோக்கியோவில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெயிக்கா நிறுவனத்திடம் விளக்கி இருக்கின்றோம்.

    தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே நிதி ஆதாரம் கிடைக்கும். ஒன்றிய அரசு நிதி ஆதாரம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்போதுதான் இதற்கான தனி அலுவலர் ஒன்றிய அரசு நியமித்திருக்கிறது. இதை முதலிலேயே செய்திருந்தால் அங்கிருந்து நிதி பெற்று எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டியிருக்கலாம்.

    தமிழ்நாட்டிற்கு தேவையான வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு நிதி ஆதாரங்களை பெற்றிருக்கின்றோம். எய்ம்ஸ் நிதி ஆதாரத்தை கேட்டிருக்கின்றோம். ஏப்ரல் மாதத்தில் டெண்டர் முடிந்தவுடன் கட்டுமானத்திற்கான ஒப்பந்தங்கள் பெறப்படும்.

    அவை இறுதி செய்யப்பட்டு 2024 இறுதியில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என தெரிவித்திருக்கிறார்கள். 2024-ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கினால் 2028 இறுதியில் தான் பணிகள் முடியும். இது தான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளித்திட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
    • சோனா இயற்கை மற்றும் யோகா கல்லூரி நடைபெறும் யோகா தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.

    சேலம்:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று சேலம் வந்தார். அவர் இன்று காலை ஏற்காடு மலைப்பாதையில் 7 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து சேலம் அருகே உள்ள சர்க்கார்கொல்லப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தடுப்பூசி செலுத்தியது தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் புற நோயாளிகள் எண்ணிக்கை பிரசவத்திற்கு வரும் தாய்மார்களின் எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு செய்து மருந்துகள் இருப்பு குறித்தும் ஆவணங்களை பார்வையிட்டார்.

    ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா. சுப்ரமணியன் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடமும், சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்தும் மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளித்திட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

    இன்று காலை சோனா இயற்கை மற்றும் யோகா கல்லூரி நடைபெறும் யோகா தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். மதியம் சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டம் வழங்குகிறார்.

    ஆத்தூர் அருகே மல்லியகரையில் நடைபெறும் விழாவில் இளம்பிள்ளை, மல்லூர், மல்லியகரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1 கோடியே 44 லட்சம் செலவில் புதிய கட்டிடம், வனவாசி புள்ளிபாளையம் மற்றும் குட்டப்பட்டியில் ரூ.75லட்சம் மதிப்பில் செவிலியர்கள் குடியிருப்புகள், கூனாண்டியூர் மற்றும் மோரூரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஆரோக்கிய நல மையக் கட்டிடம், சங்ககிரியில் ரூ.25 லட்சத்தில் கலப்பு உயர் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

    ×