search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு"

    • நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைத்தனர்.
    • வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுதனர்.

    திருவள்ளூர்:

    ஆர்.கே.பேட்டை தாலுகா எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 100 பேருக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருத்தணி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மூலம் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    பட்டா வழங்கி பல ஆண்டுகளாகியும், ஒரு சிலர் மட்டுமே அப்பகுதியில் வீடு கட்டினர். இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது அந்த இடத்தில் யாரும் வீடுகள் கட்டக்கூடாது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைத்தனர்.

    எனினும் வீட்டுமனை பட்டா பெற்றுள்ள பயனாளிகள் வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கி இருந்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை ஆர்.கே.பேட்டை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் வருவாய் துறையினர் 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுதனர்.

    சுமார் 50-க்கும்மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது. திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.வி.ஜி.புரத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்புணியில் ஈடுபட்டனர்.

    • சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எவ்வித சமரசமும் இன்றி அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
    • பதட்டத்தை தணிக்க சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தாம்பரம்:

    சென்னை அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து 700 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. அவற்றில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பிறகு நீர் நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை உயர்நீதிமன்றமும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எவ்வித சமரசமும் இன்றி அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அடையாறு ஆற்றின் கரையோரம் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை ஏற்கனவே இருமுறை வருவாய் துறை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள டோபிகானா தெருவில் ஆக்கிரமிப்பு வீடுகளை ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணிகளை பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஈடுபட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அங்கு பதட்டத்தை தணிக்க சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் பல்லாவரம்- குன்றத்தூர் சாலையில் அனகாபுத்தூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    • வீடுகளை இழந்த குடும்பத்தினர் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் மாற்று இடம் இல்லாததால் தங்குவதற்கு வழி இல்லாமல் குழந்தைகளுடன் சாலையோரம் தங்கினர்.
    • மழையிலும் வெயிலிலும் இரவு பகலாக அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த கொடூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறையினர் முன்னிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

    இதனால் வீடுகளை இழந்த குடும்பத்தினர் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் மாற்று இடம் இல்லாததால் தங்குவதற்கு வழி இல்லாமல் குழந்தைகளுடன் சாலையோரம் தங்கினர்.

    மழையிலும் வெயிலிலும் இரவு பகலாக அவர்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., ஊராட்சி தலைவர் கஸ்தூரி மகேந்திரன் ஆகியோர் சாலையோரம் தங்கி இருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

    மேலும் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்தார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் கண்ணீருடன் பேசியது அனைவரையும் கலங்க வைத்தது.

    ×