என் மலர்
நீங்கள் தேடியது "டைடல் பூங்கா"
- மதுரையில் டைடல் பூங்காவுக்கு இடம் கேட்டு மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பி வைத்து உள்ளார்.
- அப்போது தான் அங்கு பணிகளை விரைவாக தொடங்க முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.
மதுரை
தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்காக சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் டைட்டல் பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. இதே போல மதுரை மாநகராட்சியுடன் இணைந்து மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடியில் டைட்டல் பூங்கா, 5 ஏக்கரில் கட்டப்படும். இதன்மூலம் 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்தபடியாக மேலும் 5 ஏக்கரில் டைட்டல் பூங்கா விரிவுபடுத்தப்படும்" என்று தமிழக அரசு அறிவித்தது.
மதுரையில் கடந்த செப்டம்பர் மாதம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் நடந்த தெற்கு மண்டல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் கலோன் மற்றும் வருவாய்த்துறை, நில அளவை, நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
அப்போது மதுரை மாட்டுத்தாவணி மைதா னத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பூர்வாங்க பணிகள் குறித்து கேட்ட றிந்தார். அப்போது டைடல் பார்க் அமைக்க தேவையான நிலம் உள்ளதா? என்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இந்த நிலையில் டைடல் பார்க் நிர்வாக இயக்குனர் வந்தனா கார்க், மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார்.
அந்த கடிதத்தில், மாட்டுத்தாவணியில் ஒதுக்கீடு செய்ய உள்ள 5 ஏக்கர் நிலத்தின் சர்வே எண், பரப்பளவு, நிலத்தின் மதிப்பு ஆகியவை தொடர்பான விவரங்களை விரைவாக அனுப்பி வையுங்கள். அப்போது தான் அங்கு பணிகளை விரைவாக தொடங்க முடியும்" என்று கூறப்பட்டுள்ளது.
- 24 மணிநேர பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
- 6 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டிடம் வழிமுறைகளின்படியும் இக்கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டப்பட்டு உள்ளது.
இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இக்கட்டிடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், கண்காணிப்பு கேமரா வசதிகள், 24 மணிநேர பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
6 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டிடம் வழிமுறைகளின்படியும் இக்கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பட்டாபிராமில் இப்புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் வடபகுதியைச் சார்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அந்த மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்.
- டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழக அரசிடம் டைடல் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.
- மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா அமைகிறது.
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் உரையின்போது, திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்கா நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்காவை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழக அரசிடம் டைடல் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.
இந்நிலையில் மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகே டைடல் பூங்கா 14.16 ஏக்கரில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.315 கோடியில் அமைகிறது. 6 தளங்களுடன் அமைய உள்ளது.
மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா அமைகிறது. மதுரையில் ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் டைடல் பூங்காவில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த டைடல் பார்க் அமைய உள்ளது.
- ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் இந்த டைடல் பூங்காவில் 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை தரமணி, பட்டாபிராம், கோவையை தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சியிலும் தமிழக அரசு டைடல் பூங்கா அமைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பஸ்நிலையத்துக்கு அருகில் இந்த புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் இந்த பூங்கா அமைகிறது. தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த டைடல் பார்க் அமைய உள்ளது.
இதே போல் மதுரையில் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதன்படி தரை மற்றும் 12 தளங்களுடன் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் இந்த டைடல் பூங்காவில் 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், டைடல் பூங்கா அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்.
- 2000-ம் ஆண்டு கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார்.
- விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
அந்த இலக்கினை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
2000-ம் ஆண்டு கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதன் அடுத்தகட்டமாக, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூரில், ரூ.403 கோடி மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் 6 தளங்களுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ., ஸ்டார்ட் அப் போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
மேலும், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மாட்டுத்தாவணியில் 314 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.34 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 12 தளங்களுடன், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ., ஸ்டார்ட் அப்போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இப்பூங்காக்கள் சுமார் 12,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு, குளிர்சாதன வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.
இதன்மூலம், திருச்சி, மதுரை மாவட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தொழிற்வளர்ச்சி 4.0 மூலம் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும்.
- இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை தரமணியில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் விழுப்புரம், திருப்பூரில் மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, தரமணி டைடல் பார்க்கில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையத்தையும், ஸ்ரீபெரும்புதூர், ஓசூர் சிப்காட்டில் தொழில் புத்தாக்க மையங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு என்ற கணக்கெடுப்பையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை ஸ்மார்ட் தொழிற்சாலைகளாக மாற்ற வேண்டும். புதிய டைடல் பூங்காக்கள் மூலம் இளைஞர்களுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தொழிற்வளர்ச்சி 4.0 மூலம் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். உற்பத்தியில் தெற்காசிய அளவிலேயே தமிழகம் சிறந்த இடத்தை அடைந்துள்ளது.
2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.