என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய தூதரகம்"

    • என்ஜினீயர் வீரமணி பாண்டியன் ரியாத் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
    • சமூக ஆர்வலர் ஷாஹிப் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வீரமணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருச்சி:

    திருச்சியை சேர்ந்தவர் வீரமணி பாண்டியன் (வயது 45). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் கடந்த செப்டம்பர் மாதம் சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்காக புறப்பட்டுச் சென்றார். பின்னர் புதிய வேலையில் சேர்ந்த அவர் வேலை பிடிக்காமல் ஓரிரு தினங்களில் ஊர் திரும்ப முடிவு செய்தார்.

    அதற்காக அவர் ரியாத் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சுமார் 2 மாத சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு சுய நினைவு திரும்பி உள்ளது. அதைத்தொடர்ந்து மீண்டும் ஊர் திரும்புவதற்கு அவர் முயற்சித்தார். ஆனால் அவரது மருத்துவ செலவினத்தை பார்த்தபோது அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு 1.4 லட்சம் சவுதி ரியால்கள் மருத்துவ கட்டணமாக செலுத்தக் கூறி இருந்தது.

    இது இந்திய ரூபாயின் பண மதிப்பில் ரூ.30 லட்சம் ஆகும். இப்போது அவர் சமூக ஆர்வலர் ஷாஹிப் என்பவரது பராமரிப்பில் இருந்து வருகிறார். அவர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வீரமணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, சம்பவம் நடந்தபோது சுயநினைவின்றி இருந்ததால், குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிப்பது வீரமணியின் விருப்பமாக இருக்க வாய்ப்பு இல்லை. இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.

    மருத்துவமனையில் வீரமணி அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அடையாளம் தெரியாத சிலர் மருத்துவமனை பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளனர். வீரமணி கடந்த செப்டம்பர் 24-ந்தேதி நஜ்ரான் மினரல் வாட்டர் பாட்டில் ஆலையில் பணியில் சேர்ந்தார். இரண்டு நாட்களில் வேலை பிடிக்காததால் வீடு திரும்ப முடிவு செய்தார். அவரை பணியமர்த்திய ஒப்பந்ததாரரும் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு செல்ல அனுமதித்தார்.

    இப்போது மீண்டும் ஊர் திரும்ப மருத்துவமனையின் அனுமதிக்காக வீரமணி காத்திருக்கிறார். உறவினர்களும் இந்திய தூதரகத்தின் உதவியை நாடி இருக்கின்றனர்.

    மருத்துவக்கட்டணத்தை செலுத்தாததால் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வரும் அவரை பத்திரமாக அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளளதோடு, அவரது வருகையை எதிர்பார்த்துள்ளனர்.

    • இலங்கைக்கு வரும் இந்தியர்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுரை வழங்கி உள்ளது.
    • தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பயணிகள் இலங்கை வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்

    கொழும்பு:

    இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அந்த நாட்டின் சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டது.

    அதன்படி இலங்கை வரும் சர்வதேச பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பயணிகள் இலங்கை வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இலங்கைக்கு வரும் இந்தியர்கள் இலங்கையின் புதிய கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைக்கு வருகை தரும் இந்திய குடிமக்கள் சமீபத்திய கொரோனா வழிகாட்டுதல்களுக்கு இணங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.

    • போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நெருங்கிவிடாதபடி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
    • போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், முட்டை மற்றும் மைகளை வீசினர். மேலும் புகை குண்டுகளை வீசினர்.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த 19-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்தியாவின் பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால்சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூதரகத்தில் இருந்த இந்திய தேசிய கொடியை அகற்றினர்.

    இந்நிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு ஏராளமானோர் திரண்டு கோஷம் எழுப்பினர். இதையடுத்து தூதரகத்தில் இருந்து பல அடி தூரத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டனர். அப்பகுதியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூதரகத்துக்குள் யாரும் நுழைந்து விடாதபடி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நெருங்கிவிடாதபடி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், முட்டை மற்றும் மைகளை வீசினர். மேலும் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, இந்திய தூதரகம் முன்பு போராட்டம் சிறியதாக தொடங்கினாலும் மாலையில் எண்ணிக்கை அதிகரித்தது. சுமார் 2 ஆயிரம் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் தடுப்புகளை உடைக்க முயன்றனர். அப்போது போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், மை மற்றும் வண்ண பொடிகளை வீசினர் என்றனர்.

    இந்திய தூதரகத்தில் தேசியக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அகற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தூதரக கட்டிடம் முன்பு பெரிய அளவில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு இருக்கிறது.

    • சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் வெடித்தது.
    • இருதரப்பினர் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    கார்டோம்:

    சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

    துணை ராணுவக் குழுவினரின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், அவை சட்டவிரோதமானவை எனவும் ராணுவம் கூறியிருந்தது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து, அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

    இந்நிலையில், சூடானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூடானின் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் தொடர்கின்றன. எனவே சூடானில் வசிக்கும் இந்தியர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

    • ராணுவ தளங்கள் மீது துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.
    • போர் விமானங்கள் பறந்ததால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். தலைநகரில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றிலும் தாக்குதல் நடந்தது.

    ஹர்டோம்:

    வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

    இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அதே போல் ஆட்சியின் துணை தலைவராக துணை ராணுவ படை தளபதி ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ உள்ளார்.

    இதற்கிடையே துணை ராணுவ படை பிரிவான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ராணுவ தளங்கள் மீது துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.

    துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படை (ஆர்.எஸ்.எப்.) தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் தலைநகர் ஹர்டோமில் பதற்றம் நீடித்து வருகிறது.

    போர் விமானங்கள் பறந்ததால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். தலைநகரில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றிலும் தாக்குதல் நடந்தது.

    விமான நிலையத்தில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட தயாராக இருந்த பயணிகள் விமானம் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இது தொடர்பாக சவுதி அரேபியா கூறும்போது, ஏர்பஸ் ஏ330 விமானம் ரியாத்துக்கு புறப்படுவதற்கு முன்பு துப்பாக்கி சூட்டில் சேதம் அடந்தது. அனைத்து பயணிகள், விமான ஊழியர்களும் சூடானில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

    சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ராணுவ வாகனங்கள், வீரர்கள் சாலைகளில் சுற்றி வருகிறார்கள்.

    இதற்கிடையே சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    வீட்டுக்குள்ளேயே இருக்கவும் வெளியில் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அமைதியாக இருந்து மறு தகவலுக்கு காத்திருக்க கேட்டுக கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

    • ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர்.
    • சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஹர்டோம்:

    சூடானில் ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

    சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ராணுவ வாகனங்கள், வீரர்கள் சாலைகளில் சுற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார்.

    தால் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆல்பெர்ட் அகஸ்டின் என்ற இந்தியர் உயிரிழந்துள்ளார்.

    இதையடுத்து சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதல் வெடித்துள்ளது.
    • சூடானில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் ராணுவத்தின் கை ஓங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதல் வெடித்துள்ளது.

    இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைநகர் ஹர்டோமில் உள்ள அதிபர் மாளிகை, சர்வதேச விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக துணை ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனால் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடைந்தது. நாடு முழுவதும் பெரும் கலவரம் பரவியுள்ளது. இந்த மோதலில் இந்தியர் உள்பட 56 பேர் உயிரிழந்தனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் துணை ராணுவ படை தளங்களை குறி வைத்து ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. அந்த படை தளங்கள் மீது குண்டு வீசப்பட்டன.

    ஹர்டோமில் உள்ள நைல் ஆற்றின் குறுக்கே துணை ராணுவத்தின் ஆர்.எஸ்.எப். தளம் மீது பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.

    அதே போல் கபூரி, ஷார்க் எல்-நில மாட்டங்களில் துணை ராணுவ தளங்கள் தாக்கப்பட்டன.

    இதனால் சூடானில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் ராணுவத்தின் கை ஓங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதற்கிடையே காயம் அடைந்தவர்களை வெளியேற்றுவது உள்ளிட்டவற்றுக்காக மனிதாபிமான அடிப்படையில் ஒரு மணி நேரம் சண்டை நிறுத்தத்துக்கு ராணுவமும், துணை ராணுவமும் ஒப்புதல் அளித்து உள்ளது.

    • சூடானில் ராணுவத்தினர் இடையேயான மோதலில் பொது மக்கள் பலியானார்கள்.
    • சூடானில் ராணுவ படைகள் இடையேயான தொடர் மோதலில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்து உள்ளது.

    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் நாட்டின் அதிகாரத்தை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது.

    துணை ராணுவ படைகளை ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்துல் பதா அல்-பர்ஹான் இடையே சுமூக முடிவு ஏற்படவில்லை.

    இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம், துணை ராணுவ படைகள் இடையே மோதல் வெடித்தது. வான்வெளி தாக்குதலும் நடத்தப்பட்டது. சூடானில் ராணுவத்தினர் இடையேயான மோதலில் பொது மக்கள் பலியானார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    தற்போது சூடானில் ராணுவ படைகள் இடையேயான தொடர் மோதலில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்து உள்ளது. 2,600 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் உள்நாட்டு சண்டையால் சூடானில் 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    சூடானில் உள்நாட்டு சண்டை தீவிரம் அடைந்து உள்ளது. அங்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிக்கிறார்கள். கேரளாவை சேர்ந்த 200 பேர் சிக்கி உள்ளனர்.

    மீட்பு பணிகள் குறித்து தூதரக அதிகாரிகள் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது.

    மத்திய அரசும், சூடான் தூதரக அதிகாரிகளும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளுடன் மீட்பு பணிகள் பற்றி தூதரக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது.
    • இந்தியர்கள் உள்பட 150 பேரை சவூதி அரேபியா மீட்டு சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது.

    கார்டூம்:

    வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்டு உள்ளது.

    சாலைகளில் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சு காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதலில் அப்பாவி மக்கள் உள்பட 413 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள சூடானில் இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்து உள்ளது.

    இதனால் அங்கிருந்து விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே சூடானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை மீட்டு கொண்டு வர, ராணுவ துடுப்புகளை அனுப்ப அதிபர் ஜோபைடன் உத்தர விட்டார்.

    அதன்படி சூடானுக்கு சென்ற அமெரிக்க ராணுவத்தினர் அங்கிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர்.

    தலைநகர் கார்டூமில் இருந்து விமானம் மூலம் அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய ராணுவம் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றது.

    சுமார் 70 பேர் வரை மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எத்தனை பேர் மீட்கப்பட்டனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

    அதேபோல் அவர்கள் எங்கு அழைத்து செல்லப்பட்டனர் என்ற தகவலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, கார்டூமிலில் இருந்து தூதரக ஊழியர்களை விமானம் மூலம் வெளியேற்றும் அமரிக்க ராணுவம் சூடான் வான்வெளியில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியது என்றனர்.

    இதற்கிடையே சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பணி நிறைவடைந்து உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, எனது உத்தரவின் பேரில் சூடானில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றும் பணியை ராணுவம் மேற் கொண்டது.

    அப்பணியை ராணுவம் வெற்றிகரமாக முடித்து விட்டது. அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்பணிக்கு உதவிய ஜிபூட்டி, எத்தியோப்பியா, சவூதி அரேபியாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    சூடானில் நடந்த இந்த துயரமான வன்முறை ஏற்கனவே நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பலி கொண்டு உள்ளது. இது மனசாட்சியற்றது. இச்சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

    சூடானில் உள்ள அமெரிக்கர்களை ஒருங்கிணைந்து வெளியேற்றும் திட்டம் தற்போது ஏதும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியர்கள் உள்பட 150 பேரை சவூதி அரேபியா மீட்டு சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது.

    சூடானில் முக்கிய துறைமுகமாக போர்ட் சூடானில் இருந்து கப்பல் மூலம் சவூதி அரேபியாவை சேர்ந்தவர்கள், 91 வெளிநாட்டினர் என சுமார் 150 பேரை ஜெட்டாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இதில் சவூதி தூதரக அதிகாரிகள் விமான ஊழியர்கள், இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, கனடா, வங்காளதேசம் பிலிப்பைன்ஸ், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புர்கினா பாசோ ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர்.

    அவர்கள் சவூதி அரேபியா ராணுவ அதிகாரிகளை பூங்கொத்து சாக்லேட் கொடுத்து வரவேற்றனர்.

    சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது குறித்து இந்திய வெளியுறவு மந்திரி ஜெங்சங்கர் சவூதி அரேபிய மந்திரியுடன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படைக்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
    • விமானங்கள் சூடானுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் அவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆலோசித்து வருகிறது.

    ஜெனீவா:

    ஆப்பிரிக்கா நாடான சூடானில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அங்குள்ள ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படைக்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் அங்கு சண்டை ஓய்ந்தபாடில்லை.

    தலைநகர் கார்ட்டூம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வருவதாகவும் , குண்டு மழை பொழிந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தொடர் சண்டை நடந்து வருவதால் பொதுமக்கள் சூடானை விட்டு வெளியேறி வருகின்றனர்.

    இந்த போரால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இந்த சண்டைக்கு இதுவரை 413 பேர் இறந்து விட்டதாகவும், 3,551 பேர் படுகாயம் அடைந்ததாகவும் உலக சுகாதார மைய செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஹாரீஸ் தெரிவித்து உள்ளார். மேலும் இதில் ஏதும் அறியாத அப்பாவி குழந்தைகள் 9 பேர் பலியாகி விட்டனர். 50 குழந்தைகள் காயம் அடைந்து உள்ளனர். மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் காயம் அடைந்தவர்கள் மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். தொடர் போரால் சாவு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப் படுகிறது.

    சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போரால் பொது மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சூடானில் தமிழர்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சவூதி அரேபியாவில் உள்ள செட்டாநகர் விமான நிலையத்தில் இந்திய விமான படையை சேர்ந்த 2 விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இந்திய கப்பல் படையை சேர்ந்த ஐ.என்.எஸ். சுமேகா என்ற போர் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சூடான் தனது வான் வெளியை மூடி உள்ளதால் உலக நாடுகள் தங்கள் நாட்டினரை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. விமானங்கள் சூடானுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் அவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆலோசித்து வருகிறது.

    • இந்தியாவும் ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.
    • சூடானில் இருந்து வசதியான சிலர் தங்களது சொந்த செலவிலும் தமிழகம் வந்துள்ளனர்.

    சென்னை:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே உள் நாட்டு போர் நடந்து வருகிறது.

    அந்த நாட்டில் பல பகுதிகளில் கடுமையான சண்டை நடைபெறுவதால் அங்குள்ள வெளிநாட்டினரை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்தியாவும் ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் ஐ.என்.எஸ். சுமேதா, ஐ.என்.எஸ்.தர்காஷ் மற்றும் விமானப் படையின் விமானங்கள் மீட்பு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இதன்மூலம் அங்கு பரிதவிக்கும் இந்தியர்களை சூடான் துறைமுகம் வர வழைத்து அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்து அதன்பிறகு சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வருகின்றனர்.

    இதுவரை சூடானில் இருந்து சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அதில் தமிழ்நாட்டிற்கு நேற்று 22 பேர் வந்துள்ளனர். இன்று 33 பேர் வரை வர உள்ளனர்.

    இதுகுறித்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:-

    சூடானில் உள்நாட்டு போர் நடைபெறுவதை அறிந்ததும் அங்குள்ள தமிழர்களை பத்திரமாக மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார். சுமார் 400 பேர் வரை சூடானில் இருப்பதாக அறிந்தாலும் இதுவரை 160 பேர் தாயகம் வருவதற்காக பதிவு செய்துள்ளனர்.

    அவர்களை பற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். இன்னும் 2 நாளில் அவர்களை ஒருங்கிணைத்து தமிழகம் அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்வதாக மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சூடானில் கலவரம் ஏற்பட்டுள்ளதை அறிந்ததும் அங்குள்ள தமிழர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு வருவதற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு பணியாற்றி வருகிறது.

    சென்னை, மதுரை, கோவைக்கு நேற்று 22 பேர் வந்தனர். இன்று 33 பேர் மீட்கப்பட்டு வர உள்ளனர். இவர்களுக்கு தங்கும் இடம், சாப்பாடு, டிக்கெட் செலவு உள்ளிட்ட அனைத்தையும் அரசு செய்து வருகிறது.

    சூடானில் இருந்து வசதியான சிலர் தங்களது சொந்த செலவிலும் தமிழகம் வந்துள்ளனர். அவர்களுக்கும் உதவி தேவையா என கேட்டு அதன் அடிப்படையில் உதவி செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளது.
    • துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு என தாக்குதல் நடப்பதால் சூடான் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    கார்டூம்:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவமும், துணை ராணுவமும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு என தாக்குதல் நடப்பதால் சூடான் மக்கள் தவித்து வருகிறார்கள். 3 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டு போரால் ஆயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வருகிறார்கள்.

    இந்த சண்டையில் அப்பாவி மக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் சூடானில் சண்டையை நிறுத்துமாறு ஐ.நா.சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

    சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காக போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள், கப்பல், விமானங்களை அனுப்பி தங்களது குடிமக்களை மீட்டு வருகின்றன.

    போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டாலும் சில இடங்களில் தொடர்ந்து சண்டை நடந்தது. இதற்கிடையே பேச்சு வார்த்தைக்கு ராணுவ தளபதியும், துணை ராணுவ தளபதியும் ஒப்புக் கொண்டனர். இந்த நிலையில் சூடானில் மேலும் 7 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தெற்கு சூடானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு சம்மதம் வழங்கி உள்ளனர்.

    அதன்படி மே 4-ந்தேதி (நாளை) முதல் 11-ந்தேதி வரை 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். இதற்காக தெற்கு சூடான் அதிபர் சால்வா கீர் மயார்தீத்துடன் இரு தரப்பினரும் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டனர்.

    அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதிகள் விவரங்கள், தேதி, இடம் ஆகியவற்றை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

    ×