என் மலர்
நீங்கள் தேடியது "வர்ணம் பூச்சு"
- சாலையில் குவிந்த மணல் அகற்றப்பட்டது.
- தடுப்பு சுவரை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மணல் குவிந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மணல்களை அகற்றி சாலையை சீரமைக்க உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலை வரை மணல் குவியலை அகற்றி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்தது.
இதே போல் நகராட்சியில் மற்ற பகுதியில் உள்ள சாலைகளிலும் மணல் குவியலை அகற்றி சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
- செங்கோட்டை அரசு மருத்துவ மனையின் பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- காந்தி செல்வின் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் தொகைக்கு பிரசவ வார்டு கட்டிடம் முழுவதும் வர்ணம் தீட்டி தந்துள்ளார்.
செங்கோட்டை:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற இயக்கத்தை மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலா் அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி செங்கோட்டை அரசு மருத்துவமனையில் நமது மருத்துவ மனை மகத்தான மருத்துவ மனை என்ற மாபெரும் சுகாதார திட்டத்தின் கீழ் செங்கோட்டை அரசு மருத்துவ மனையின் பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செங்கோட்டையை சேர்ந்த தொழிலதிபரும் பாவூர்சத்திரம் அருகில் மேலமெஞ்ஞானபுரம் குஷி வாட்டர் பார்க் அதிபருமான காந்தி செல்வின் தனது சொந்த செலவில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் தொகைக்கு பிரசவ வார்டு கட்டிடம் முழுவதும் வெள்ளையடித்து வர்ணம் தீட்டி தந்துள்ளார்.
அவருக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் அனைத்து பணியாளர்கள் சார்பாக நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.