search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.2"

    • 93 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
    • கிட்டத்தட்ட 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் வெளியிட்டது.

    2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும், 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வங்கிக்கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

    கிட்டத்தட்ட 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், பலர் இன்னும் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் தற்போது வரை 93 சதவீத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. திரும்ப பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 76 சதவீத வைப்புத் தொகையாகவும் 13 சதவீதம் மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    • அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடந்து வருகிறது.
    • இதில் பி.டி ரகப் பருத்தி குவின்டால் குறைந்த பட்சமாக 102 ரூபாய் 17 காசுக்கும், அதிகபட்சமாக ரூ.110 ரூபாய் 99 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்து 980-க்கு விற்பனையானது.

    அம்மாப்பேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடந்து வருகிறது. ஆனால் இந்த வாரம் பருத்தி வரத்து அதிகமானதால் நேற்று (வெள்ளிக்கிழமை) வரை பருத்தி ஏலம் நடைபெற்றது.

    இந்த ஏலத்திற்கு தருமபுரி,சேலம், கொளத்தூர், கொங்கணாபுர ம், மேட்டூர், பெருந்துறை,அந்தியூர், அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4 ஆயிரத்து 899 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் பி.டி ரகப் பருத்தி குவின்டால் குறைந்த பட்சமாக 102 ரூபாய் 17 காசுக்கும், அதிகபட்சமாக ரூ.110 ரூபாய் 99 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்து 980-க்கு விற்பனையானது.

    இதில் கோவை, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், தர்மபுரி, கொங்கணா புரம், பெருந்துறை, அந்தியூர் ஆகிய பகுதிகளை சேர்நத வியாபாரிகள் பலர் வந்து போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

    ×