search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோள்கள்"

    • வானில் 8 கோள்களும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
    • சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழையும், ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    சென்னை:

    வானில் கிழக்கு திசையில் நேற்று காலை சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அடி வானில், வியாழன் (ஜூபீடர்), புதன் (மெர்குரி), யுரேனஸ் (வருணன்), செவ்வாய் (மார்ஸ்), நெப்டியூன், சனி (சார்டுன்) என்ற வரிசையில், 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை பூமியில் இருந்து பார்க்கலாம். இதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் சற்று தூரமாக இருப்பதால் இதனை பார்ப்பது கடினம். வானம் தெளிவாக இருந்தால் கடற்கரை பகுதிகளில் பார்க்க முயற்சிக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் அறிவித்து இருந்தனர்.

    இந்த அபூர்வ நிகழ்வை பார்ப்பதற்காக சென்னை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நேற்று காலை 4 மணி அளவில் தூக்கத்தில் இருந்து எழுந்து மொட்டை மாடியில் சென்று வானை பார்த்தனர். ஆனால் சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழையும், ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் நிலாவும் அதன் அருகில் செவ்வாய் கோளும் இருப்பதை மட்டும் காணமுடிந்தது. வேறு எந்த கோள்களையும் பொதுமக்களால் பார்க்க முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.

    வானில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என்ற 8 கோள்களும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இந்த நிலையில், வியாழன் (ஜூபீடர்), புதன் (மெர்குரி), யுரேனஸ் (வருணன்), செவ்வாய் (மார்ஸ்), நெப்டியூன், சனி (சார்டுன்) ஆகியவை நேற்று காலை சூரிய உதயத்திற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு நேர்கோட்டில் வரும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் சென்னை மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மேகமூட்டமும், ஒரு சில இடங்களில் மழையும் பெய்தததால் பொதுமக்களால் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதேபோன்ற நிகழ்வு வருகிற ஆகஸ்டு 28-ந்தேதி, 2025-ம் ஆண்டு ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்டு 29 ஆகிய தேதிகளில் தெரியும். அதேபோல், 2025-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி 7 கோள்களையும் பூமியில் இருந்து பார்க்கலாம். இதனை ஆபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது' என்று சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் லெனின் தமிழ்கோவன் கூறினார்.

    • வானில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என்ற 8 கோள்கள் உள்ளன.
    • செவ்வாய், சனி வெறும் கண்ணுக்கு மங்கலாக தெரியும்.

    சென்னை:

    சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இதில் பூமி ஒருமுறை சூரியனை சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. இதேபோல, ஒவ்வொரு கோள்களுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஆகின்றன. கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூா்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுகிறது. இதுதவிர சமீபத்தில் வானில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நகர்ந்து சென்றதையும் வெறும் கண்களால் காண முடிந்தது. இவ்வாறு அவ்வப்போது விண்ணில் ஏதாவது ஒரு வர்ண ஜாலத்தை காணமுடிகிறது. அந்தவகையில் ஒரு அரிய காட்சி விண்ணில் அரங்கேற இருக்கிறது.

    வானில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என்ற 8 கோள்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.

    வரும் ஜூன் 3-ந்தேதி, கிழக்கு திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அடி வானில், வியாழன் (ஜூபீடர்), புதன் (மெர்குரி), யுரேனஸ், செவ்வாய் (மார்ஸ்), நெப்டியூன், சனி என்ற வரிசையில், 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை, பூமியில் இருந்து பார்க்கலாம். இதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் சற்று தூரமாக இருப்பதால் இதனை பார்ப்பது கடினம். வானம் தெளிவாக இருந்தால் கடற்கரை பகுதிகளில் பார்க்க முடியலாம். மீதம் உள்ளவற்றை பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்கலாம்.

    நமது சூரியப் பாதையில் ஒவ்வொரு கோளும் வெவ்வேறு (பல நூறு கோடி கிலோ மீட்டர்) தூரத்திலும், வெவ்வேறு சாய்வு கோணத்திலும் சுற்றி வருவதால் அவை எப்போதும் ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பதற்கு வாய்ப்பில்லை. அவ்வாறு ஒரே வரிசையிலும் ஒரே நேர்கோட்டிலும் அணிவகுத்து வருவது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    அதேநேரம், கோள்கள் ஒரே நேர்கோட்டில் காணப்படவில்லை. மாறாக பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை நமக்கு தருகிறது. இதனை காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது.

    செவ்வாய், சனி வெறும் கண்ணுக்கு மங்கலாக தெரியும். ஜூன் 3-ந்தேதி சனிக்கோளுக்கு கீழேயும், 4-ந்தேதி செவ்வாய் கோளுக்கு கீழேயும் பிறைச் சந்திரனையும் காணலாம். இது கண்ணுக்கு விருந்தாக அமையும். 5-க்கும் மேற்பட்ட கோள்கள் அரிதாக வருகிற ஆகஸ்டு 28-ந்தேதி, 2025-ம் ஆண்டு ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்டு 29 ஆகிய தேதிகளில் தெரியும்.

    இதனை சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் லெனின் தமிழ்கோவன் கூறினார்.

    • திருப்பூர் வாழ் மக்கள் பலரும் வெறும் கண்களாலே பார்த்து பரவசமடைந்தனர்.
    • வானியியல் சிந்தனையை தூண்ட முடியும்.

    திருப்பூர்:

    சூரிய குடும்பத்தில் 9 கோள்கள் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து நீள் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. அவ்வகையில் சில கோள்கள் நேர்கோட்டில் வரும் நிகழ்வும் நடக்கிறது. அந்த வரிசையில் செவ்வாய், வெள்ளி, சனி, வியாழன் ஆகிய நான்கு கோள்கள் கடந்த ஏப்ரல் 29-ந்தேதி ஒரே நேர்கோட்டில் சந்தித்தன.

    இந்த அணிவகுப்பில், நேற்று முன்தினம் புதன் கோளும் இணைந்தது. சூரியன் உதயமாவதற்கு சற்று முன்பு புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் காட்சியளித்ததை திருப்பூர் வாழ் மக்கள் பலரும் வெறும் கண்களாலே பார்த்து பரவசமடைந்தனர். இதுகுறித்து கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:-

    தென் கிழக்கு வானில் சூரியன் உதிப்பதற்கு முன் இந்நிகழ்வு தென்பட்டது. இவற்றில் வெள்ளி கோள், மிகுந்த வெண்ணிற ஒளியுடனும், வியாழன் ஒளி வீசக் கூடியதாகவும், சந்திரன் மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது.செவ்வாய்க்கோள் மட்டும் அதன் சிவப்பு நிறத்தன்மையால் மற்ற கோள்களில் இருந்து மாறுபட்ட ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது.இந்திய நேரப்படி இங்கு மட்டுமே கோள்களை ஒரே நேர்கோட்டில் வருவதை முழுமையாக காண முடியும். மற்ற நாடுகளில் ஓரிரு கோள்கள் வேண்டுமானால் தென்படக்கூடும்.

    இவ்வாறு ஒரே நேர்கோட்டில் ஐந்து கோள்கள் தோன்றும் நிகழ்வு 2002ல் நடந்தது. அடுத்த, 2040ல் தான் நிகழும். இதுபோன்ற நிகழ்வை பள்ளி மாணவர்களை உற்று நோக்க செய்வதன் வாயிலாக வானியியல் சிந்தனையை தூண்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தென் கிழக்கு அடிவானத்தில் முதலில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி கோள் இத்துடன் பிறை நிலாவும் சேர்ந்துள்ளதால் மிகவும் அழகாகவும் அரிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
    • கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

    கொடைக்கானல்:

    சூரியக்குடும்பத்தில் இருக்கும் 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்து வருகிறது. இதனை விடியற்காலை கிழக்கு அடிவானத்தில் அனைவரும் வெறும் கண்களால் பார்க்கலாம். தென் கிழக்கு அடிவானத்தில் முதலில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி கோள் இத்துடன் பிறை நிலாவும் சேர்ந்துள்ளதால் மிகவும் அழகாகவும் அரிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

    கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் பின்னர் 2040-ஆம் ஆண்டு தான் இது போன்ற நிகழ்வு ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

    குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் சுமார் 2400 அடி உயரத்தில் தூசி மண்டலங்கள் இல்லாமல் இந்த அரிய நிகழ்வை எளிதாக காண முடியும். எனவே இந்த நிகழ்வை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் இதற்காக கொடைக்கானல் வானியற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் அதிகாலை நேரங்களில் மக்கள் அனுமதிக்கப்படுவர் என கொடைக்கானல் வானியற்பியல் ஆராய்ச்சி நிலைய தலைவி விஞ்ஞானி எபினேசர் மற்றும் உதவியாளர் கணேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ×