என் மலர்
நீங்கள் தேடியது "கம்பங்கூழ்"
- கம்பங்கூழில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றது.
- கம்பு ரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி உடல் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
கோடைவெயிலில் இருந்து நமது உடலை குளிர்ச்சியாக வைக்க கம்பங்கூழை அருந்தலாம். கம்பங்கூழ் என்பது நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகவே உள்ளது.
கம்பு, கேப்பை உள்ளிட்ட தானிய வகைகளை நமது முன்னோர்கள் பாரம்பரியமாக கூழ் கஞ்சி போல செய்து தங்களின் பிரதான உணவாகவே சாப்பிட்டு வந்தனர்.

20 வருடங்களுக்கு முன்பு தினசரி தமிழகத்தில் உள்ள அனைவரது வீட்டிலும் இந்த கம்பங்கூழை சாதாரணமாக தயாரித்து சாப்பிட்டு வந்தனர். இன்னும் அம்மன் கோவில் திருவிழாக்களில் திருவிழா நிறைவு பெறும் நாளிலும், ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் கம்பங்கூழ், கேப்பைகூழை அம்மனுக்கு பிரசாதமாக படைத்து ஊர் மக்களுக்கு அதனை பருகி வருகின்றனர்.
இந்த கம்பங்கூழில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றது. சுட்டெரிக்கும் கோடை காலம் வந்துவிட்டது. இந்த கோடை காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது வழக்கம்.
மிக முக்கியமாக உடல் சூட்டின் காரணமாக இளம் வயது வாலிபர்கள் முதல் முதியவர்கள் வரை பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அவர்களுக்கான பாரம்பரியமான அற்புத பானம் தான் இந்த கம்பங்கூழ். இது எங்கு கிடைத்தாலும் நாம் தாராளமாக வாங்கி சாப்பிடலாம். அந்த அளவிற்கு ஆரோக்கியமானது இது.
உடல் சூட்டை தணிப்பதாக நினைத்து சாலையோரங்களில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர்பானங்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதே சாலையோரங்களில் விற்கப்படும் பாரம்பரிய உணவான கம்பங்கூழ் வாங்கி சாப்பிட்டால் நமது உடல் சூடு முழுவதுமாக குறையும்.
பாரம்பரிய தானிய வகைகளில் ஒன்றான கம்பு ரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி உடல் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். கம்பில் அதிகளவு புரதம், இரும்புச்சத்து நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவைகள் நிறைந்துள்ளது.
வைட்டமின் ஈ, பி மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கனிம சக்திகள் பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை கம்பில் நிறைந்துள்ளது.
தினமும் காலை மோர் கலந்த குளிர்ச்சியான கம்பங்கூழ் குடிக்கும்போது உடல் சூடு குறைந்து நாள் முழுவதும் பசி உணர்வு இல்லாமல் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். கம்பங்கூழ் உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் வழங்கும்.
கம்பை தினமும் உணவில் நீங்கள் சேர்த்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல், ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும். கம்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சினையையும் இது போக்க உதவுகிறது.
கம்பங்கூழில் உள்ள ட்ரிப்டோ பேன் என்ற அமினோ அமிலம் நம் பசி உணர்வை குறைத்து உடல் எடையை நிர்வகிக்க உதவும். கம்பங்கூழை தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுக்குள் வரும்.
இதேபோல கோடைவெயில் காலத்தை பொருத்தவரை தாகம் தணிப்பதில் தர்பூசணி முக்கிய இடத்தை பெறுகிறது. விலையும் மலிவு என்பதால் சாலையோர தர்பூசணி கடைகளில் விற்பனை தற்போது களைகட்டி வருகிறது.

அங்கு தற்போது ஒரு பிளேட் அல்லது ஒரு சிறு துண்டு தர்பூசணி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முழு பழமாக வாங்கினால் கிலோ ரூ.25-க்கு தருகின்றனர்.
மேலும் சாலையோர பகுதிகளில் கரும்பு மற்றும் சாத்துக்குடி சாறு பிழியும் விற்பனை கடைகளையும் அதிகளவில் பார்க்க முடிகிறது. அங்கு இளைஞர்களில் பலர் ஐஸ் கட்டி போட்ட கரும்பு ஜூஸை அதிகம் விரும்பி பருகுகின்றனர். பெண்கள் பெரும்பாலும் சாத்துக்குடி ஜூஸை விரும்பி குடித்து செல்கின்றனர்.
அதுவும்தவிர சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் நன்னாரி சர்பத், ஐஸ் மோரின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

நன்னாரி சர்பத்தின் சுவை பலருக்கும் பிடிக்கும் என்பதால், மதிய நேரங்களில் தள்ளு வண்டி குளிர்பான சர்பத் கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது.
அதே போல நீர்மோர் விற்பனையும் களைகட்டத் தொடங்கி உள்ளது. அங்கு ஒரு டம்ளர் சர்பத் ரூ.25-க்கும், மோர் ரூ.20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சாலையோர கடைகளில் இளநீர் எல்லா நாட்களில் கிடைக்கிறது.
ஆனால் பதநீரும், நுங்கும் கோடை சீசனில் மட்டுமே கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் பதனீர் கடைகளை பார்த்தவுடன் வாகனங்களை நிறுத்தி விட்டு பதனீர் குடித்து செல்கின்றனர். அங்கு ஒரு டம்ளர் பதநீர் ரூ.30-க்கும், நுங்கு கலந்த பதநீர் ரூ.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
- குளிர்ந்த மோரில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்புடன் சீரகம் தூள் தூவி விற்பனை செய்யப்படுகிறது.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக, அதிக வெப்பம் நிலவுகிறது. வெயிலில் வேலை செய்பவர்கள், வெளியில் பயணிப்போர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதன் காரணமாக, குளிர்பானம் மற்றும் பழரச கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. சீசனுக்கேற்ற தற்காலிக கம்பங்கூழ், நீர் மோர், மிக்ஸர் பழரசம் என நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பலரும் மோர் மற்றும் கம்பங்கூழ் குடித்து வெயில் தாக்கத்தை தணித்து வருகின்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், குளிர்ந்த மோரில் கொத்த மல்லி, கறிவேப்பிலை, மிதமான உப்புடன் சீரகம் தூள் தூவி விற்பனை செய்யப்படுகிறது. மண்பானையில் ஊற்றி வைத்து மோர் மற்றும் கம்பங்கூழ் விற்பதால் குளிர்ச்சியாக உள்ளது. மக்கள் விரும்பி பருகுகின்றனர் என்றனர்.
- உடன்குடி பஜார் பகுதியில் வீதிவீதியாக பதனீர், கம்பங்கூழ், நுங்கு விற்பனை செய்யப்படுகிறது.
- இளநீர் ரூ.25-க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
உடன்குடி:
உடன்குடி பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் வாட்டுகிறது.
இதனால் வீட்டுக் குள்ளே மக்கள் முடங்குகின்றனர். அவசர தேவைக்கு மட்டும்தான் வெளியில் வருகின்ற னர். இதனால் உடன்குடி பஜார் பகுதியில் வீதிவீதியாக பதனீர், கம்பங்கூழ், நுங்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினசரி காலையில் பதனீர் ஒரு லிட்டர் ரூ.80-க்கும் கம்பங்கூழ் ஒரு டம்ளர் ரூ.20-க்கும், நுங்கு ரூ.10-க்கும், இளநீர் ரூ.25-க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
இது தவிர கரும்பு சாறு, எலுமிச்சை ஜூஸ், பழ ஜூஸ் என்று வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான பொருட்களை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.