என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் படுகாயம்"

    • ராட்டினம் தலைகீழாக சுற்றியபோது கால்களை தொங்கிய நிலையில் நிலை தடுமாறி இருக்கையில் இருந்து கவுசல்யா கீழே விழுந்தார்.
    • ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விருதுநகரில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளியில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோல் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பொருட்காட்சி கடந்த 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த பொருட்காட்சியில் சுனாமி என்று பெயரிடப்பட்ட ராட்சத ராட்டினம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு அங்கு வந்த விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த கவுசல்யா (வயது 22) என்ற பெண் கட்டணம் செலுத்தி சுனாமி ராட்டினத்தில் ஏறினார்.

    ராட்டினத்தில் ஏறியதும் கால்களை அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து பூட்டிக் கொள்ளுமாறும், பெல்ட் அணிந்துகொள்ளுமாறும் அதனை இயக்குபவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆனால் கவுசல்யா பாதுகாப்பு சாதனத்தை காலில் மாட்டாததால் ராட்டினம் தலைகீழாக சுற்றியபோது கால்களை தொங்கிய நிலையில் நிலை தடுமாறி இருக்கையில் இருந்து கீழே விழுந்தார்.

    உடனடியாக எந்திரத்தால் இயக்கப்பட்ட ராட்டினம் நிறுத்தப்பட்டது. கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த கவுசல்யாவை மீட்ட பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுனாமி ராட்டினம் என்று அழைக்கப்படும் அந்த ராட்டினத்தில் ஹைட்ராலிக் லாக் செய்யப்பட்டிருந்தும் ராட்டினத்தில் அமர்ந்திருந்த அந்த பெண் காலை ராட்டினத்தில் உள்ள பாதுகாப்பு லாக் செய்யாததால் அந்த பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    இச்சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி விழுந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராட்டின உரிமையாளர் சிட்டிபாபு, மேற்பார்வையாளர், ஆபரேட்டர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகரில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளியில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோல் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பொருட்காட்சி கடந்த 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள், உணவு பண்டங்கள், சிறுவர்களை குதூகலமாக்க செய்யும் விளையாட்டு அம்சங்கள், பிரமாண்ட ராட்டினங்கள் ஆகியவவை இந்த பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தற்போது பெரும்பாலான பள்ளிகளுக்கு முழு ஆண்டுத்தேர்வு முடிவடைந்த நிலையில் இந்த பொருட்காட்சியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த பொருட்காட்சியில் சுனாமி என்று பெயரிடப்பட்ட ராட்சத ராட்டினம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு அங்கு வந்த விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த கவுசல்யா (வயது 22) என்ற பெண் கட்டணம் செலுத்தி சுனாமி ராட்டினத்தில் ஏறினார். அப்போது அதனை இயக்குபவர் பல்வேறு விதிமுறைகளை பக்குவமாக எடுத்துக்கூறினார்.

    அதன்படி ராட்டினத்தில் ஏறியதும் கால்களை அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து பூட்டிக் கொள்ளுமாறும், பெல்ட் அணிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கவுசல்யா பாதுகாப்பு சாதனத்தை காலில் மாட்டாததால் ராட்டினம் தலைகீழாக சுற்றிய போது கால்களை தொங்கிய நிலையில் நிலை தடுமாறி இருக்கையில் இருந்து கீழே விழுந்தார்.

    இதைப்பார்த்த ராட்டினத்தில் அமர்ந்திருந்த மற்றவர்கள் கூச்சல் போட்டனர். உடனடியாக எந்திரத்தால் இயக்கப்பட்ட ராட்டினம் நிறுத்தப்பட்டது. கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த கவுசல்யாவை மீட்ட பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுனாமி ராட்டினம் என்று அழைக்கப்படும் அந்த ராட்டினத்தில் ஹைட்ராலிக் லாக் செய்யப்பட்டிருந்தும் ராட்டினத்தில் அமர்ந்திருந்த அந்த பெண் காலை ராட்டினத்தில் உள்ள பாதுகாப்பு லாக் செய்யாததால் அந்த பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



    • கவிதா திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக நேற்று கோவை கோர்ட்டிற்கு வந்தார்.
    • ஆசிட் வீசியதில் கவிதாவின் கழுத்துக்கு கீழ் அனைத்து பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

    கோவை:

    கோவை சூலூர் கண்ணம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் சிவா (வயது40). லாரி டிரைவர். இவருக்கு கவிதா(35) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு கவிதா மீது ஆர்.எஸ்புரம் போலீசில் 2 திருட்டு வழக்குகள் பதிவானது. இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    பின்னர் வெளியில் வந்த அவருக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த கவிதாவின் கணவர் மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கவிதா குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு விட்டு பிரிந்து சென்று விட்டார். அவரை சிவா தேடி வந்தார்.

    இதற்கிடையே கவிதா திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக நேற்று கோவை கோர்ட்டிற்கு வந்தார். இதனை அறிந்ததும் சிவா தனது பெற்றோர், குழந்தைகளுடன் கோர்ட்டிற்கு வந்தார்.

    அங்கு நின்ற தனது மனைவியிடம் நீ இல்லாமல் நமது குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகிறது. நீ எங்களுடன் வந்துவிடு சந்தோஷமாக வாழலாம் என தெரிவித்தார். ஆனால் அவர் வருவதற்கு மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கவிதா முதலாவது தளத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்றார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற சிவா, தான் பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த ஆசிட்டை கவிதா மீது ஊற்றினார். பின்னர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை வக்கீல்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆசிட் வீசியதில் கவிதாவின் கழுத்துக்கு கீழ் அனைத்து பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆசிட் வீசியதில் அவர் 80 முதல் 85 சதவீத தீக்காயம் அடைந்துள்ளது. அவருக்கு டாக்டர்கள் இன்று 2-வது நாளாக தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இருந்த போதிலும் அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறும் போது, ஆசிட் வீசியதில் கவிதாவுக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளோம். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

    ஆசிட் என்பதால் அவரது உடல் முழுவதும் அரித்துள்ளது. இதுவரை 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டவர்கள் யாரும் உயிர் பிழைத்தது இல்லை. இருப்பினும் அவரது உயிரை காப்பாற்ற போராடி வருகிறோம். இருந்தபோதிலும் தற்போது வரை அவர் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளார். தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

    • மொபட்டில் சென்றபோது நகை பறிக்க முயற்சி:
    • போலீஸ் கமிஷனர் நேரில் ஆறுதல்

    கோவை :

    கோவைப்புதூர் குளத்துபாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவரது மனைவி தங்கமணி (வயது 35). இவர் நேற்று இரவு மொபட்டில் கோவைப்புதூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிள் துரத்திய 2 வாலிபர்கள் தங்கமணியின் கழுத்தில் இருந்த செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்றனர். இதில் நகையை பறிக்க விடாமல் கைகளில் பிடித்தவாறு நிலைதடுமாறி தங்கமணி கீழே விழுந்ததில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

    அந்த வழியாக சென்றவர்கள தங்கமணியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில், தங்கமணி அணிந்திருந்தது கவரிங் செயின் என்பதும் அது தெரியாமல் தங்கம் என நினைத்து வாலிபர்கள் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் நகை பறிக்க முயன்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். நகை பறிக்க முயன்றதில் பெண் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் நகை பறிப்பில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தங்கமணியை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று காலை நேரில் சென்று நலம் விசாரித்தார். அவரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    ×