search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதி பெயர்"

    • இம்மண்ணில் சாதி, மதம் என்ற எந்த காழ்ப்புகளும் இருக்கக்கூடாது.
    • இந்த விழா அழைப்பிதழில் பலரின் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் உள்ளது.

    சென்னையில் இன்று நாடார் சங்க கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார்.

    இந்நிகழ்வில் பேசிய எம்.பி. கனிமொழி, "தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஐ.ஏ.அஸ் அதிகாரி படித்துக் கொண்டிருக்கும்போது அவரது வகுப்பு ஆசிரியர் ஒருவர் தமிழ்நாடு மட்டும் தனியாக தெரிகிறது. ஏன் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட மறுக்கிறீர்கள் என்று கூறினார். அப்போது வகுப்பின் பெயர் பட்டியலை எடுத்து உங்கள் பெயர்களை பாருங்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் பெயர்களை பாருங்கள். எங்கள் பெயருக்கு பின்னால் எங்கள் தந்தை பெயரோடு நிறுத்தி கொண்டோம். உங்கள் பெயருக்கு பின்னால் என்ன சாதி என்று வெளிப்படையாக உள்ளது.

    தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இம்மண்ணில் சாதி, மதம் என்ற எந்த காழ்ப்புகளும் இருக்கக்கூடாது. நாம் எல்லோரும் மனிதர்கள், சமமானவர்கள். இந்த விழா அழைப்பிதழில் பலரின் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் உள்ளது. நாம் எல்லோரும் உழைப்பை நம்பக் கூடியவர்கள். அதனால் இப்படி சாதி பெயரைப் போட வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்தார். 

    • கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    • மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தமிழ்மணியின் நேர்காணலை அடிப்படையாக வைத்து கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நடைபெற்று வருகிறது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாட்டுக்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்' என அரசு தரப்பில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி பழங்குடியினர் நலத்துறை இயக்குனரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

    இதை படித்து பார்த்த நீதிபதிகள், 'கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு உள்ளன என கூறப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பொத்தாம் பொதுவாக கடந்த 10 ஆண்டுகளில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்

    மேலும், 'மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன அவற்றை அகற்ற அரசு முன்வர வேண்டும். தெரு பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கியது போல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் சாதி பெயர்களை நீக்க நடவடிக்கை எடுங்கள்' என கருத்து தெரிவித்தனர்.

    பின்னர், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கல்வராயன் மலைப்பகுதிக்கு மீண்டும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த குழுவுடன் ஐகோர்ட்டுக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வக்கீல் தமிழ்மணியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அப்போது, வக்கீல் மோகன்தாஸ் ஆஜராகி தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    அப்போது அவர், 'பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக மாநில அரசு 9 கோடி 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஆனால் அந்த தொகை இன்னமும் முழுமையாக செலவிடப்படவில்லை' என்று கூறி அதுதொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்தார். அதற்கு நீதிபதிகள், 'தங்களது கோரிக்கையை ஏற்கிறோம். அரசு குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தனியாக சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யலாம்' என்றனர்.

    • சுதந்திரப் போராட்ட வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்களின் நினைவாக அல்லது சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டது.
    • சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்கள் இளைஞர்களிடையே பிரச்சினைகளை உருவாக்கும்.

    திருப்பூர் :

    பெயர்களில் சாதி அடையாளத்தைப் பயன்படுத்துவதை தமிழ்நாடு முற்றிலும் ஒழித்துவிட்டது. ஆனால் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள சாலைகளில் ெதரு பெயர் பலகைகளில் இன்னும் சாதி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலகைகள் அகற்றப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    இது குறித்து பல்லடம் நுகர்வோர் விழிப்புணர்வு பேரவை தலைவர் கே.வி.எஸ்.மணிகுமார் கூறியதாவது:-பல்லடத்தில் சாதி பெயர்களை கொண்ட தெருப் பலகைகளின் பெயர்கள் உள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்களின் நினைவாக அல்லது சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டது.

    அந்தக்காலங்கள் போய்விட்டன. சமூக நீதி மற்றும் சமூக சீர்திருத்தங்கள் பற்றி பேசுகிறோம் .ஆனால் சாதி பெயர்களை காட்ட அனுமதிக்கிறோம். சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்கள் இளைஞர்களிடையே பிரச்சினைகளை உருவாக்கும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக தெரு பலகைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க கோரி வருகிறோம். பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பல தெரு பெயர்களில் சாதி பெயர்கள் உள்ளன. வார்டு இரண்டில்பட்டியல் சாதி சமூகத்தை குறிக்கும் தெரு உள்ளது.இதே வார்டில் மற்றொரு சாதி பெயருடன் முடிவடையும் பல தெருக்கள் உள்ளன.இந்த பெயர்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. எனவே சாதி பெயர்களை அகற்ற வேண்டும் என்றார்.

    இதுகுறித்து பல்லடம் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், தெருக்களின் பெயர்களை மாற்ற நகராட்சிக்கு அதிகாரம் இல்லை. அனைத்து கவுன்சிலர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்துவோம். சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ஒரு முன்மொழிவை அனுப்புவோம். அவர்கள் இந்த விஷயத்தில் முடிவு செய்வார்கள் என்றார்.

    ×