என் மலர்
நீங்கள் தேடியது "நாதன் லயன்"
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.
- இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் என் நண்பரை 24 மணிநேரமும் பின்தொடர்கிறேன் என்று கூறினார்.
இந்திய ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த 2 டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவின் ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயனை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஜடேஜாவால் பின்தொடரும் ஒரே ஒரு நபர் நாதன் லயன் மட்டுமே.
ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் "என் நண்பர் நாதன் லயனை 24 மணிநேரம் பின்தொடர்கிறேன்" என்று கூறினார்.
- அஸ்வின் ஆஸ்திரேலியாவிலும் அபாரமாக பந்து வீசி இருந்தார்.
- அஸ்வினை போல முயற்சிக்காமல் நாதன் லயன் தனது ஸ்டைலில் பந்துவீச வேண்டும்.
சிட்னி:
பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவும் அமைந்துள்ளனர். இருவரும் இதுவரையில் 31 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் வீழ்த்தி உள்ளனர். ஜடேஜா 17 விக்கெட்டுகளும், அஸ்வின் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.
அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். 'நீங்கள் நீங்களாகவே இருங்கள்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்தியாவில் விளையாடும்போது எதிரணியினர் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல பந்துவீச முயற்சிப்பார்கள். அவர்கள் இருவருக்கும் இந்தியாவில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது நன்கு தெரியும். அஸ்வின் ஒரு ஸ்மார்ட்டான பவுலர். அவர் ஆஸ்திரேலியாவிலும் அபாரமாக பந்து வீசி இருந்தார். அவர் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். ஜடேஜா தனது பவுலிங் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.
டெல்லி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அபாரமாக பந்து வீசி இருந்தார். ஆனாலும், ஜடேஜா அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். சில நேரங்களில் அப்படி நடக்கும். களத்தில் அவர்கள் செய்வதை உங்களால் (ஆஸி. வீரர்கள்) செய்ய முடியாது. அஸ்வினை போல முயற்சிக்காமல் நாதன் லயன் தனது ஸ்டைலில் பந்துவீச வேண்டும்.
என சேப்பல் தெரிவித்துள்ளார்.
- இருநாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் கும்ப்ளே 111 விக்கெட் எடுத்து (20 போட்டி) முதல் இடத்தில் இருந்தார்.
- இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்து வீரரான முரளீதரனையும் லயன் முந்தினார்.
இந்தூர் டெஸ்டில் இந்தியாவின் சரிவுக்கு நாதன் லயன் காரணமாக இருந்தார்.
35 வயது சுழற்பந்து வீரரான அவர் 23.3 ஓவர்கள் வீசி 64 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் லயன் புதிய வரலாறு படைத்தார். உமேஷ் யாதவ் விக்கெட்டை கைப்பற்றியபோது அவர் கும்ப்ளேயை முந்தினார்.
இருநாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் கும்ப்ளே 111 விக்கெட் எடுத்து (20 போட்டி) முதல் இடத்தில் இருந்தார். அவரை முந்தி புதிய சாதனை புரிந்தார். லயன் 25 டெஸ்டில் 113 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். கும்ப்ளே 111 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும் அஸ்வின் 106 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.
மேலும் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்து வீரரான முரளீதரனையும் லயன் முந்தினார்.
- ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு விதமாக வீசினேன்.
- புஜாராவின் கேட்ச்சை ஸ்டீவ் சுமித் பிடித்தது மிகவும் சிறப்பானது.
இந்தூர்:
இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 197 ரன்களில் ஆல் அவுட் ஆனதுடன் 88 ரன்கள் முன்னிலை பெற்றது.
2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய பேட்ஸ்மேன்களில் புஜாரா ஒருவர் மட்டுமே லயன் பந்துவீச்சை தாக்குபிடித்து ஆடினார். அவர் 142 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 59 ரன் எடுத்தார்.
இந்த நிலையில் இளம் வீரர்கள் புஜராவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று லயன் கூறியுள்ளார். போட்டிமுடிந்த பிறகு இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-
டெல்லி டெஸ்ட் தோல்விக்கு பிறகு அணியை கட்டமைக்க நீண்ட ஓய்வு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டோம். இந்திய அணி திறமையானது. அவர்களுக்கு எதிராக சொந்த மண்ணில் ஆடுவது சவாலானது. நான் நம்பிக்கையுடன் பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தேன். ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு விதமாக வீசினேன். புஜாராவின் கேட்ச்சை ஸ்டீவ் சுமித் பிடித்தது மிகவும் சிறப்பானது.
இக்கட்டான நேரத்திலும் எப்படி விளையாடுவது என்பதை இளம் வீரர்கள் புஜாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு லயன் கூறி உள்ளார்.
- தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 பேட்ஸ்மேன்கள் சாதனை படைத்துள்ளனர்.
- இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரராக சுனில் கவாஸ்கர் 4-வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் படைத்துள்ளார்.
தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தவர்கள் பட்டியலில் 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இடம் பிடித்த நிலையில் 6-வது வீரராக லாதன் லயன் பந்து வீச்சாளராக இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரராக சுனில் கவாஸ்கர் 4-வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்:-
159 - அலஸ்டர் குக்
153 - ஆலன் பார்டர்
107 - மார்க் வாக்
106 - சுனில் கவாஸ்கர்
101 - பிரண்டன் மெக்கல்லம்
100* - நாதன் லயன்
- நேற்றைய ஆட்டத்தின் போது நாதன் லயனுக்கு வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.
- உண்மையில் எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் நன்றாக இல்லை என்றால், அது எங்களுக்கு பெரிய இழப்பு என ஸ்மித் கூறினார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். அவர் 13 ஓவர்கள் மட்டுமே வீசி 1 விக்கெட்டை வீழ்த்தினார். லயனின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.
அவர் முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகள் என 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பந்து வீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அவர் ஜொலித்தார். முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கம்மின்சுடன் ஜோடி சேர்ந்து நாதன் லயன் சிறப்பான பார்னர்ஷிப்பை அமைத்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் அவர் மீண்டும் அணியின் இணைவாரா என்பது சந்தேகம்தான்.
இது குறித்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், அவர் உண்மையில் எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் நன்றாக இல்லை என்றால், அது எங்களுக்கு பெரிய இழப்பு. அவரது கை விரலில் ஏதும் பிரச்சினை இல்லை. அவர் வருகிற டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினால் அவருக்கு பதிலாக டோட் மர்பி இடம் பெறுவார் என ஸ்மித் கூறினார்.
- தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி நாதன் லயன் சாதனை படைத்திருந்தார்.
- அவர் விலகிய நிலையில் அவருக்கு மாற்று வீரரை ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து விளையாடிய 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி சாதனை படைத்த நாதன் லயன் ஆஷஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார். 2-வது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு காலில் அடிப்பட்டது. இதனையடுத்து அவர் ஓவர் வீசவில்லை.
2-வது இன்னிங்சின் போது மட்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அதுவும் நொண்டி நொண்டியே ரன்களை சேர்த்தார். அவர் விலகிய நிலையில் அவருக்கு மாற்று வீரராக மர்ஃபி ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார்.
- எனது பயிற்சியாளர்களில் அஸ்வினும் ஒருவர் என ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் கூறினார்.
- அஸ்வினிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்றார்.
சிட்னி:
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தனியார் நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்தவர். நிச்சயமாக அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு வகையில் அவர் எனது மிகப்பெரிய பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.
நான் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நாங்கள் இருவரும் அந்த 500 விக்கெட்களை எட்டுவதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என புகழாரம் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 489 விக்கெட்களும், நாதன் லயன் 496 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் (62), ஷான் மசூத் (54) நல்ல தொடக்க கொடுத்தனர்.
- கம்மின்ஸ் 5 விக்கெட்டும், லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தி பாகிஸ்தான் கட்டுப்படுத்தினர்.
மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் (62), ஷான் மசூத் (54) நல்ல தொடக்க கொடுத்தனர். இருந்த போதிலும் பாபர் அசாம் (1), சாத் ஷஹீல் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரிஸ்வான் பொறுப்புடன் நின்று விளையாட நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. ரிஸ்வான் 29 ரன்களுடனும், ஆமிர் ஜமால் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஸ்வான் மேலும் 13 ரன்கள் சேர்த்து 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜமால் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுக்க பாகிஸ்தானில் முதல் இன்னிங்சில் 264 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், நாதன் லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
- முதல் இன்னிங்சில் கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 174 ரன்கள் குவித்தார்.
- நாதன் லயன் 4 விக்கெட் வீழ்த்த நியூசிலாந்து சொற்ப ரன்களில் சுருண்டது.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கேமரூன் கிரீன் சதத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் 103 ரன்னுடனும், ஹேசில்வுட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. கேமரூன் கிரீன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஹேசில்வுட் உறுதுணையாக இருந்தார். கேமரூன் கிரீன் 150 ரன்னை கடந்தார். கடைசி விக்கெட்டாக ஹேசில்வுட் 22 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 115.1 ஓவர்களில் 383 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேமரூன் கிரீன் 174 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.
கடைசி விக்கெட்டுக்கு கிரீன்- ஹேசில்வுட் ஜோடி 116 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு மெக்ராத்- கில்லஸ்பி ஜோடி 114 ரன்கள் சேர்த்ததே அதிக பட்சமாக இருந்தது.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. அந்த அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. பின்னர் பிலிப்ஸ்- ப்ளண்டெல் ஜோடி நிதானமாக விளையாடியது. பிலிப்ஸ் அரை சதம் அடித்தார்.
அவர் 72 ரன்னிலும், ப்ளெண்டெல் 33 ரன்னிலும், ஹென்றி 42 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனால் நியூசிலாந்து 43.1 ஓவரில் 179 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

கேமரூன் கிரீன்
204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 4 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும், லபுசேன் 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்து இருந்தது. கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில இருந்தனர். தற்போது வரை ஆஸ்திரேலியா 217 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- கிளென் பிலிப்ஸ் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.
- நாதன் லயன் அதிகபட்சமாக 41 ரன்கள் சேர்த்தார்.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்றுமுன்தினம் வெலிங்டனில் தொடங்கியது.
நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்து இருந்தது. கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்னில் சுருண்டது.
கவாஜா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நைட்வாட்ச்மேன் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய நாதன் லயன் 41 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய கிரீன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டிராவிஸ் ஹெட் 29 ரன்னில் வெளியேற, மிட்செல் மார்ஷ் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அலேக்ஸ் கேரி 3 ரன்னிலும், ஸ்டார்க் 12 ரன்னிலும், கம்மின்ஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
127 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலியா அடுத்த 37 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் மொத்தமாக ஆஸ்திரேலியா 368 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 369 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
முன்னதாக,
கேமரூன் கிரீன் சதத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் 103 ரன்னுடனும், ஹேசில்வுட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய கிளென் பிலிப்ஸ்
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. கேமரூன் கிரீன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஹேசில்வுட் உறுதுணையாக இருந்தார். கேமரூன் கிரீன் 150 ரன்னை கடந்தார். கடைசி விக்கெட்டாக ஹேசில்வுட் 22 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 115.1 ஓவர்களில் 383 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேமரூன் கிரீன் 174 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.
கடைசி விக்கெட்டுக்கு கிரீன்- ஹேசில்வுட் ஜோடி 116 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு மெக்ராத்- கில்லஸ்பி ஜோடி 114 ரன்கள் சேர்த்ததே அதிக பட்சமாக இருந்தது.

கேமரூன் கிரீன்
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. அந்த அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. பின்னர் பிலிப்ஸ்- ப்ளண்டெல் ஜோடி நிதானமாக விளையாடியது. பிலிப்ஸ் அரை சதம் அடித்தார்.
அவர் 72 ரன்னிலும், ப்ளெண்டெல் 33 ரன்னிலும், ஹென்றி 42 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனால் நியூசிலாந்து 43.1 ஓவரில் 179 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட் கைப்பற்றினார்.
204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 4 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும், லபுசேன் 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
- 2-வது இன்னிங்சில் நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய நாதன் லயன் 41 ரன்கள் சேர்த்தார்.
- இதுவரை 1500 ரன்களுக்கு மேல் அடித்தும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்கடனில் நடைபெற்று வருகிறது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் 6 பவுண்டரியுடன் 46 பந்தில் 41 ரன்கள் எடுத்தார்.
நாதன் லயன் இதுவரை 128 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 162 இன்னிங்சில் 1501 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 12.72 ஆகும். ஆனால் ஒரு அரைசதம் கூட இதுவரை அடித்ததில்லை.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் அடிக்காமல் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற அரிய சாதனை படைத்துள்ளார். அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1174 ரன்கள் எடுத்து 2-வது இடத்திலும் உள்ளார். இவரும் அரைசதம் அடித்தது கிடையாது. 41 அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் 87 டெஸ்ட் போட்டிகளில் 1010 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்துள்ளார்.
வெலிங்டன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நாதன் லயன் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.