search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை மாநகராட்சி"

    • கோவை மேயர் தேர்தலையொட்டி, இன்று காலை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் ரங்கநாயகி, புதிய மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா பதவி வகித்து வந்தார். கடந்த 2¼ ஆண்டுகளாக மேயராக இருந்த அவர் கடந்த மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் தலைமையில் கோவையில் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் தி.மு.க. மேயர் வேட்பாளராக 29-வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் ரங்கநாயகி, புதிய மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையாளர் அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முன்னதாக, கோவை மேயர் தேர்தலையொட்டி, இன்று காலை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பணிகள் குழு தலைவரும், கவுன்சிலருமான சாந்தி முருகன், "கட்சிக்காக உழைச்சு ஓடா தேஞ்சுட்டோம். கட்சிக்காக 50 வருஷம் கஷ்டப்பட்டு, கோடிக்கணக்குல இழந்து ஒடுக்கப்பட்டிருக்கோம். சும்மா ஒன்னும் வரலை. இதையெல்லாம் பார்த்து பொறுத்துட்டு இருக்க முடியாது..." என அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி முன்னிலையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, நீங்கள் பொதுவாக பேசுறீங்க. நீங்கள் எல்லாம் எப்படி உறுப்பினராகி வந்தீங்களோ.. அதுமாதிரி தான் நான் சேர்மன் ஆகி இந்த இடத்துக்கு வந்துருக்கேன். உள்ளாட்சிக்கு கடந்த காலத்தில் எவ்வளவு பணம் ஒதுக்கியிருக்காங்க, தளபதி ஆட்சியில் எவ்வளவு பணம் ஒதுக்கியிருக்காங்கன்னு உங்களுக்கு சொல்றேன். கோவைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிங்க என்று முதலமைச்சர் என்னிடம் கேட்டார். அதற்கு 3 கோடி ஒதுக்கியிருக்கோம்னு சொன்னேன், அதற்கு 3 கோடி பத்தாது 300 கோடி ஒதுக்குன்னு முதலமைச்சர் சொன்னார். பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே நேரத்தில் பத்தாண்டு காலம் நிறுத்திவைக்கப்பட்ட பணி 2 ஆண்டு காலத்தில் நடக்கணும் என்பது இயலாத காரியம். எனவே உங்களுக்கும் ஆதங்கம் இருக்கும். இப்ப சொல்லியிருக்கிங்க.. அதை செய்து கொடுப்போம். உறுதியா செய்கிறோம். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை என்றார்.

    • புதிய மேயரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடந்தது.
    • மேயர் தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும் புறக்கணித்தனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 96 பேர் உள்ளனர். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள். ஒருவர் சுயேச்சை கவுன்சிலர் ஆவார்.

    கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா பதவி வகித்து வந்தார். கடந்த 2¼ ஆண்டுகளாக மேயராக இருந்த அவர் கடந்த மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் தலைமையில் கோவையில் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் தி.மு.க. மேயர் வேட்பாளராக 29-வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே புதிய மேயரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடந்தது. இன்று காலை 10.30 மணிக்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் கூடியது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் தலைமையில் மறைமுகத் தேர்தல் நடந்தது.

    தி.மு.க. மேயர் வேட்பாளரான ரங்கநாயகி தனது வேட்பு மனுவை சமர்ப்பித்தார். வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் முடியும் வரை தேர்தல் அதிகாரி சிவகுருபிரபாகரன் காத்திருந்தார்.

    அதன்பிறகு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் ரங்கநாயகி, புதிய மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையாளர் அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேயர் தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும் புறக்கணித்தனர். 

    • மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

    கோவை:

    தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.

    கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

    மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

    இந்தநிலையில் மேயர் கல்பனா, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இதுதொடர்பான கடிதத்தை அவர் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் கோவை அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதற்காக கல்பனா தற்போது சென்னையிலேயே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கோவை அரசியல் கட்சியினர் மத்தியிலும், தி.மு.க.வினர் மத்தியிலும் இதுவே பேச்சாக உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சியில் நேற்று நடைபெற இருந்த குறைதீர் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். மேயர் வழங்கிய ராஜினாமா கடிதத்தை ஆணையர் ஏற்றுக் கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நெல்லை ஆணையருக்கு சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.

    இதையடுத்து மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரை இப்போதே தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இதற்காக பலர் சென்னைக்கு படையெடுத்துச் சென்றுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

    • கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வருகிறார்.
    • மேயர் பங்கேற்கவிருந்த சில நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    கோவை:

    தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.

    கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வருகிறார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

    மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

    இந்தநிலையில் மேயர் கல்பனா, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இதுதொடர்பான கடிதத்தை அவர் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் கோவை அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதற்காக கல்பனா தற்போது சென்னையிலேயே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கோவை அரசியல் கட்சியினர் மத்தியிலும், தி.மு.க.வினர் மத்தியிலும் இதுவே பேச்சாக உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சியில் இன்று நடைபெற இருந்த குறைதீர்க்கும் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். அதேபோல் இன்றும் வழக்கம் போல் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் திடீரென குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதேபோல மேயர் பங்கேற்கவிருந்த சில நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குறைதீர்க்கும் கூட்டம் ரத்தானது கோவையில் மேலும் பரபரப்பை அதிகரித்து உள்ளது.


    இதுதொடர்பாக மேயர் கல்பனாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது கணவர் ஆனந்தகுமார் பேசினார். அவர் கூறுகையில் மேயருக்கு தற்போது உடல் நலம் சரியில்லை. இதனால் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்றார்.

    இதுதொடர்பாக தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது மேயர் ராஜினாமா செய்வார் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான் என கூறி தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

    கோவை மாநகராட்சி தேர்தல் நடந்தபோது பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, மாநகராட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்பட்டார். இதனால் தி.மு.க. அபார வெற்றி பெற்றது.

    கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஏற்கனவே கவுன்சிலர்களாக இருந்தவர்கள் என பலர் தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மேயராக அறிவிக்கப்பட்டவர் தான் கல்பனா.

    சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து அவர் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார். அதன்பிறகு சில பிரச்சனைகள் அவரை தொடர்ந்தது. மேயரின் தாயார் வசித்த வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணுடன் தகராறு ஏற்பட்டு அந்த பெண் போலீஸ்நிலையம் வரை சென்றார். போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று மேயர் மீதே அவர் புகார் கொடுத்தார். அப்போது இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின் சந்தையில் வசூல் செய்வது தொடர்பான பிரச்சனையில் மேயரின் கணவர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


    இதெல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலும் மேயருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வைச் சேர்ந்த கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ஆனால் மேயர் கல்பனா வார்டில் தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுகள் குறைவாகவே கிடைத்திருந்தது.

    அந்த வார்டில் அண்ணாமலை 330 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். மிக முக்கிய பொறுப்பில் உள்ள மேயரின் வார்டில் வாக்குகள் குறைந்தது தி.மு.க. மேலிடத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இதுதொடர்பாக கட்சி மட்டத்தில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் தான் மேயர் கல்பனா ராஜினாமா செய்யப்போவதாக தகவல் பரவியுள்ளது.

    இந்தநிலையில் கல்பனாவிடம் இருந்து மேயர் பதவி பறிக்கப்படும் பட்சத்தில் அந்த பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் பலர் கோதாவில் குதித்துள்ளனர். மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரை இப்போதே தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். பலர் சென்னைக்கு படையெடுத்துச் சென்றுள்ளனர்.

    ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

    • தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை
    • வருகிற 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    கோவை,

    கோவை மாநகராட்சியில் தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை, டிரைவர் மற்றும் சுகாதார பணிகளில் சுமார் 4,000 தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களுக்கு தின கூலியாக 323 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டாக ஊதிய உயர்வு எதுவும் செய்யப்படவில்லை.

    தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் வழங்கு வதாக அறிவிக்க ப்பட்ட ஊக்கத்தொகையும் இதுவரை வழங்கப்ப டவில்லை.கடந்த சில ஆண்டுகளாக முறையான ஊதியம் மற்றும் தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்க கோரிக்கை விடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15 ஆயிரம் ரூபாய் போனஸாக வழங்க கோரிக்கை விடப்பட்டது.

    தொழிலாளர்களின் 19 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் சார்பில் நிர்வாகிகள் பன்னீர்செ ல்வம், செல்வராஜ், மணியரசு, செல்வம் உள்ளி ட்டோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கோவை மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முறையான ஊதிய உயர்வு மற்றும் போனஸ் தொடர்பாக பதில் தரவில்லை.

    கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 3000 ரூபாய் போனஸ் ஆக வழங்கப்பட்டது. இந்தத் தொகை கூட இந்த ஆண்டில் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் சங்கங்க ளை சார்ந்தவர்கள் கூறியதாவது:-

    தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அரசாணைப்படி சம்பளம் வழங்கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நிறுவனங்களுடன் பேசி முறையான சம்பளம் மற்றும் போனஸ் பெற்று தர முன் வரவில்லை. ஊதியம் போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் வருகிற 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

    கோவை மாநகராட்சியில் தினமும் சுமார் ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. போராட்டம் காரணமாக குப்பை அகற்றும் பணி நடத்தப்பட மாட்டாது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்.‌ எங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெற தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாநகராட்சி நிர்வாகத்தின் மீது பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
    • ஆண்களுக்கான கழிப்பறையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கோவை:

    கோவை புலியகுளம் பகுதியில் 2 பேர் ஒரே அறையில் அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட கழிவறை குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவை மாநகராட்சி 66வது வார்டில் இந்த கழிப்பிடம் அமைந்துள்ளது. 1995ஆம் பொதுமக்களுக்காக இந்த கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த கழிப்பிடம் செயல்படாமல் இருந்துள்ளது.

    இந்நிலையில், அதில் உள்ள கழிவறையில் இரண்டு பேர் அமர்ந்து பயன்படுத்தும் வகையில் இரண்டு கோப்பைகள் பதிக்கப்பட்டிருந்த புகைப்படம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கழிவறையில் கதவுகள் இல்லை. மாநகராட்சி நிர்வாகத்தின் மீது பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டதாகவும், அதை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் சிலர் கருத்து பதிவிட்டனர். சிலர் கிண்டலான கருத்துக்களையும் பகிர்ந்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

    1995ல் கழிப்பிடம் கட்டப்பட்டபோது குழந்தைகளுக்காக கட்டப்பட்டது. கதவுகள் இருந்தால் தாழ்ப்பாள் போட்டு வெளிவர முடியாத நிலையில் குழந்தைகள் சிக்கிக்கொள்ளும் என்பதால், பெற்றோரின் கண்காணிப்பில் குழந்தைகள் அந்த கழிவறையை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அது நீண்டகாலம் செயல்பாட்டில் இல்லாததால் தற்போது ஆண்களுக்கான கழிப்பறையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் பயன்பாட்டிற்காக கதவின்றி கழிப்பிடம் அமைக்கப்பட்டதை தவறான வகையில் சித்தரித்து புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். விரைவில் ஆண்களுக்கான கழிப்பிடமாக மாற்றப்பட்டு செயல்பாட்டிற்கு வரும்.

    இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • 20-வது வார்டு ராஜீவ்காந்தி நகரில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, ஸ்ரீநக் முதல் எப்.சி.ஐ.ரோடு வரை தார்சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது.
    • ஐஸ்வர்யா கார்டனில் கடந்த 11 ஆண்டுகளாக ரோடு, மழைநீர் வடிகால் வசதி இல்லை.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுணன், கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை வடக்கு சட்டமன்ற ெதாகுதியில் கோவை மாநகராட்சி 20-வது வார்டு ராஜீவ்காந்தி நகரில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, ஸ்ரீநக் முதல் எப்.சி.ஐ.ரோடு வரை தார்சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. அதை விரைந்து முடிக்க வேண்டும்.

    29-வது வார்டு அப்பநாயுடு லே-அவுட், வரதராஜ் லே-அவுட் ஆகிய இடங்களில் தார்சாலை மற்றும் மழைநீர்வடிகால் அமைக்க வேண்டும். ஐஸ்வர்யா கார்டனில் கடந்த 11 ஆண்டுகளாக ரோடு, மழைநீர் வடிகால் வசதி இல்லை. 47-வது வார்டு பூங்காவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை போடப்பட்டும் பணிகள் இதுவரை தொடங்கவில்லை.

    மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பூங்கா போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் அவை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

    மேலும் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. 42-வது வார்டு வ.உ.சி.நகர், சிவகாமி நகர் வீதிகளில் கான்கிரீட் நடைபாதை, தார்ரோடு, சாஸ்திரி ரோடு, கண்ணபிரான் நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்.

    ரத்தினசபாபதி வீதி, சின்னம்மாள் வீதி, மணியம்காரியப்பன் வீதி, மருதகுட்டி வீதி, ஜானகி நகர், உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளன. இதனால் போக்குவரத்து பரிப்பு ஏற்படுகிறது. எனவே சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    45-வது வார்டு அம்மாசை வீதி, நர்மதா வீதி, கோகுலம் வீதி, பழனிக்கோனார் வீதி, நஞ்சம்மாள் வீதி உள்ளிட்ட இடங்களில் தார்சாலை அமைக்க வேண்டும். 43, 44 மற்றும் 45-வது வார்டுகளிலும் சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

    1,22,35 ஆகிய வார்டுகளில் புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும். இங்கு கடை திறக்க வேண்டும். இங்கு குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது அவருடன் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம், மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் ஆகியோர் உள்ளனர்.

    • வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • நாட்டில் 75 சிறந்தநகரங்களில் 4-வது சிறந்த நகரமாக கோவை உள்ளது.

    கோவை:

    கோவை மாநகரை தூய்மை மற்றும் பசுமை நகரமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் ஜூலை 1-ந் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணிநடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள தொழில் வரி தற்போது ரூ.4 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

    வரும் வாரம் முதல் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெறும். பொதுமக்கள் தங்களது புகார்களை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கலாம்.

    டவுன்ஹால், நஞ்சுண்டாபுரம், புலியகுளம், ராமநாதபுரம், வ.உ.சி. பூங்கா உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேர குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகளை 2023-ம் ஆண்டு ஜனவரிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிச்சி பகுதி மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதி என்பதால் குடிநீர் விநியோகம் செய்யும் அளவு அதிகரிக்கப்படும்.

    மேலும், அங்கு எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு திட்டம் ஏதேனும் செயல்படுத்த இயலுமா என்பதும் ஆய்வு செய்யப்படும். தேவைப்படும் இடங்களில் தண்ணீரின் அளவை அதிகரித்து வழங்கிட பூஸ்டர் பம்ப்' பொருத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தரமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து மாதந்தோறும் மாதிரி குடிநீர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்படும்.

    போலந்து நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் ஸ்மார்ட் சிட்டி, நகரமைப்பு திட்டமிடுதல். தூய்மை மற்றும் பசுமை நகரம் (கிளீன் அன்ட் கிரீன் சிட்டி) குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் கோவை, கொச்சி, புவனேஸ்வர் மாநகராட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றோம். கோவை மாநகராட்சியை தூய்மை மற்றும் பசுமை நகரமாக மாற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

    அதற்காக சிறிது சிறிதாக திட்டமிடப்பட்டு வருகிறது. 100 வார்டுகளிலும் மியாவாகி திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துரிதப் படுத்தப்படும். மழைநீர் சேகரிப் புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    நாட்டில் 75 சிறந்தநகரங்களில் 4-வது சிறந்த நகரமாக கோவை உள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்றுள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், திவான் பகதூர் (டி.பி.) சாலை, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்டவை சிறந்த பகுதிகளாக உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. கவுன்சிலர்கள், மேயரின் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டதை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
    • பின்னர் மாநகராட்சி வளாகம் முன்பு தரையில் அமர்ந்து கைகளில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா அரங்கில் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க கவுன்சிலர்கள் வந்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர்களான பிரபாகரன், ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரும் வந்தனர்.

    அவர்கள் மேயரின் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டதை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் மாநகராட்சி வளாகம் முன்பு தரையில் அமர்ந்து கைகளில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்த பதாகைகளில், ஊழல் ஊழல் ஊழல் நடக்குதுங்கோ நடக்குதுங்கோ கோடியில் மேயர் வீடு சுண்ணாம்பு அடிக்கிறாங்கோ மக்கள் வரிப்பணம் விரயம் ஆகுதுங்கோ விரயம் ஆகுதுங்கோ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

    • கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில் இருந்து அதிகளவிலான தண்ணீர் பெற்று தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • துணை மேயர் வெற்றி செல்வன், கோவை குனியமுத்தூர் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.

    கோவை:

    கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா அரங்கில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும், மேயர் கல்பனா தீர்மானங்கள் கொண்டு வாசித்தார். முதலில் கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில் இருந்து அதிகளவிலான தண்ணீர் பெற்று தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறுவாணி அணையில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து துணை மேயர் வெற்றி செல்வன், கோவை குனியமுத்தூர் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து இந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து தார்சாலை, குடிநீர், மழைநீர் வடிகால், வளர்ச்சி பணிகள் உள்பட மேலும் 32 தீர்மானங்கள் இந்த மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

    7-வதாக பாதாள சாக்கடை இணைப்பு திட்டத்திற்கான வைப்பு தொகையை 10 தவணையாக செலுத்தலாம் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு கவுன்சிலர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

    ×