search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுநிலை"

    • முதுநிலை வேளாண் படிப்புகளுக்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது.
    • நுழைவுத்தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    வடவள்ளி:

    கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளும் 28 இணைப்பு கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது.

    இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை வேளாண் படிப்புகளுக்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது.

    இந்த தேர்வினை ஏராளமான மாணவர்கள் எழுதி, முதல்நிலை படிப்பில் சேர்வதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் இ-மெயில் முகவரிக்கு நேற்று இரவு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

    வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இ-மெயிலில், ஜூன் 23-ல் நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் செலுத்திய விண்ணப்ப கட்டணம் திரும்பி வழங்கப்படும்.

    2024-2025-ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நுழைவுத்தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் நுழைவுத் தேர்வு நடைபெறுவது குறித்தும், தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

    சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும். இளநிலை படிப்பு செப்டம்பர் மாதம் முடியும் நிலையில், செப்டம்பர் இறுதியிலேயே முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் ஆரம்பமாகும். மாணவர்கள் சேர்க்கை தாமதம் இன்றி நடைபெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதுநிலை ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடங்கி ஜூன் 13-ந் தேதி வரை நடைபெற்றது.

    நாமக்கல்:

    முதுநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நேர்மையான முறையில் நடைபெற்றது. 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடங்கி ஜூன் 13-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்தக் கல்வி ஆண்டில் முதுநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை, தரம் உயா்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டு அதற்கான பணியிடங்களை உருவாக்கிய பிறகு நடத்த வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வில் முதலில் முதுநிலை ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வை நடத்த வேண்டும்.

    அதன்பிறகு முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதலும், தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். மேலும், உள் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு ஆசிரியா்கள் கலந்தாய்வில் சென்றபிறகு ஏற்படும் காலிப் பணியிடங்களை உள் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வுக்கு உரிய விதிகளை பின்பற்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும் கலந்தாய்வின்போது மலைகளில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×