search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழா ஏற்பாடு"

    • உத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி அபிஷேக நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • திருவிழா முன்னேற்பாடு பணிகளை ராமநாதபுரம் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த கோவிலில் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் 9 மணி வரை மரகத நடராஜப் பெருமானுக்கு சந்தனம் படி களைதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட உள்ளன.

    திருஉத்தரகோசமங்கை ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் டாக்டர்கள் அடங்கிய மருத்துவ முகாம் ராஜகோபுரம் முன்பும், நடராஜர் சன்னதி அருகிலும் அமைக்கப்படுகிறது. 2 108 அவசர ஊர்திகள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஆருத்ரா தரிசனம் நடைபெறும் மரகத நடராஜர் சன்னதியின் உள் வளாகத்தில் சமஸ்தான தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் பாதுகாப்பு செய்யவும், ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் தரிசனத்திற்கு பக்தர்களின் வரிசையினை ஒழுங்குபடுத்தி அனுப்பவும் ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்வார்கள்.

    ஆங்காங்கே ஒலி பெருக்கி வசதிகள் அமைத்து பக்தர்களை வரிசைப்படுத்தவும், தேவையான உதவிகளை மேற்கொள்ளவும் துறை யினருக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சி பொதுக்கழிவறை மற்றும் கோவில் கழிவறைகள், கோவில் நுழைவாயிலுக்கு வெளியே மொபைல் டாய்லெட் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    பக்தர்கள் வசதிக்காக தடையில்லா மின்சாரம் வழங்க தெரிவிக்கப்ப ட்டுள்ளது. இரவு நேரங்களில் பூஜைகள் நடைபெறும் என்பதால் போதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் ஜெனரேட்டர் வசதியும் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி நிகழ்வுகளைக் கண்டுகளிக்க கோவிலில் முக்கிய இடத்தில் பெரிய அளவில் மின்னணு திரை அமைத்து அபிஷேக நிகழ்வுகளை காண ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழி மற்றும் வெளியில் வரும் வழி எனத் தனித்தனியாக பிரிக்கப்பட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போதுமான வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகன காப்பகம் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, வருவாய் கோட்டாட்சியர் கோபு, கீழக்கரை துணைக் காவல் கண்காணிப்பாளர் சுபாஷ், வட்டாட்சியர் சரவணன், திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் 1,600 ஆண்டு பழமை வாய்ந்த நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் பிரம்ம உற்சவம் விழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து பிரம்ம உற்சவ விழா கடந்த 30 -ந் தேதி பிடாரி அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.

    நேற்று (1 -ந் தேதி) விநாயகர் பூஜை மற்றும் பெரியசாமி வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இன்று பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. தொடர்ந்து நடன பாதேஸ்வரர் மற்றும் அஸ்தாளம்பிக்கை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியத்துடன் சிறப்பு அலங்காரத்தில் சாமி புறப்பட்டு கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

    பின்னர் வேத மந்திரம் முழங்க மங்கள இசை வாசித்தபடி கொடியேற்று விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை சூரிய பிரபை வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. பின்னர் தினந்தோறும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று, இரவு பல்வேறு வாகனத்தில் சாமி மீது நடைபெற உள்ளது. 7-ம் நாள் உற்சவமான வருகிற 8- ந்தேதி காலையில் அதிகார நந்தி மற்றும் மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 10 -ந் தேதி முக்கிய விழாவான தேர்த்திருவிழா காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெற உள்ளது. அன்று இரவு தேரடி இறங்குதல், மறுநாள் (11- ந்தேதி) காலை நடராஜர் தரிசனம், மாலை தீர்த்தவாரி மற்றும் 12- ந்தேதி காலை சண்டிகேஸ்வரர் உற்சவம், இரவு ரிஷப வாகனம் வீதி உலா, 13- ந் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் கணக்கர் சரவணன், கவுன்சிலர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ×