search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுபான்மை"

    • குர்திய இனக்குழுவைக் சேர்ந்த தாய்க்கு பிறந்த மசூத் பெசெஸ்கியன் இரானின் பலதரப்பட்ட சிறுபான்மை இனக்குழுக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவராக உள்ளார்.
    • கடந்த 2016 முதல் 2020 வரை பாராளுமன்ற துணை சபாநாயராகவும் பணியாற்றினார்.

    ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்த மசூத் பெசெஸ்கியன் பெற்றுள்ள வெற்றி வரும் காலங்களில் அந்நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1954 செப்டம்பர் 29 ஆம் தேதி மேற்கு அஜர்பைஜானை ஒட்டியுள்ள மஹாபத் நகரில் அசர்பைஜானிய தந்தைக்கும் குர்து இனக்குழுவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் மசூத் பெசெஸ்கியன்.

    வரலாறு நெடுகிலும் இன்னலைகளை சந்தித்த ஈரானில் சிறுபான்மையாக உள்ள குர்திய இனக்குழுவைக் சேர்ந்த தாய்க்கு பிறந்த மசூத் பெசெஸ்கியன் இரானின் பலதரப்பட்ட சிறுபான்மை இனக்குழுக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவராக உள்ளார்.

     

    1980 முதல் 1988 வரையிலான காலகட்டத்தில் ஈர்க்க - ஈரான் போரில் ராணுவ சேவை ஆற்றிய மசூத், தொழில்முறையாக இதய அறுவை சிகிச்சை நிமுபாரகாவும்தாபிர்ஸ் பல்கலைக்கழகக்த்தின் மருத்துவ படிப்புகள் பிரிவின் தலைவராகாவும் பணியாற்றியவர் ஆவார்.

    கடந்த 1994 ஆம்ஆண்டு நடந்த கார் விபத்தில் தனது மனைவி மற்றும் மகளை இழந்த மசூத், அதன்பின் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். அதிபர் முகமது கதாமியின் ஆட்சியில் 2001 முதல் 2005 வரை சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார் மசூத். அதன்பின் பாராளுமன்ற எம்.பியாக தேர்வான மசூத், கடந்த 2016 முதல் 2020 வரை பாராளுமன்ற துணை சபாநாயராகவும் பணியாற்றினார்.

    அதிபர் முகமது ரைசி ஹெலிகாப்ட்டர் விபத்தில் இறந்ததால் தற்போது நடந்த அதிபர் தேர்தலில் சீர்திருத்தக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்கிய மசூத் முக்கிய போட்டியாளரான தீவிர வலதுசாரி கொள்கைகள் உடைய சயீத் ஜலீலிக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

    முந்தைய அரசுகளை போல் அல்லாமல் மேற்கு நாடுகளுடன் இணக்கமான உறவை ஏற்படுத்த விழைபவராக மசூத் உள்ளார். மேலும் ஈரானில் இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து கடந்த 1079 முதல் பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கியதற்கு எதிராக மசூத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.

     

    கடந்த 2017 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்குள்ளும, மருத்துவமனைகளுக்குள்ளும் ஹிஜாப் அணியாத பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு முதல் ஆளாக கண்டனம் தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாததற்காக மாஷா ஆமினி என்ற இளம்பெண் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மசூத் ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்துக்காக பெண்ணை கைது செய்து உயிறற்ற உடலாக அவரை குடும்பத்திடம் திருப்பியளிப்பது என்பத , இஸ்லாமியக் குடியரசில் ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தற்போது ஈரான் அதிபராக உள்ள மசூத் பெசெஸ்கியன் கட்டாய ஹிஜாப் கொள்கைகளை தளர்த்துளார் என்றும், முற்போக்கான சீர்த்திருத்தங்களை கொண்டு வருவார் என்றும் எதிர்பாக்கப்படுகிறது. 

    • தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பா.ஜ.க. அரசை விரைவில் அகற்ற உறுதியேற்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் கே.அலாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் லூர்து, மாவட்டக்குழு உறுப்பினர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைேமயர் நாகராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    யூனியன் முஸ்லீம் லீக் மண்டல பொறுப்பாளர் அவ்தா காதர், சமய உரையாடல் குழு செயலர் பெனடிக் பர்ணபாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். அங்குள்ள மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும். பா.ஜ.க. அரசை விரைவில் அகற்ற உறுதியேற்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

    • சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுக்க வேண்டும்.

    மதுரை

    மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுக்கவும், இங்கு சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க தவறியதாக மத்திய அரசை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் அலாவுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் லூர்து, அருட்தந்தையர்கள் பெனடிக் பர்னபாஸ், லாரன்ஸ் ஆகியோர் பேசினர்.

    இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • ஆதிக்க எண்ணம் ஒருபோதும் தலை தூக்கக்கூடாது என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
    • சிறுபான்மையினருக்கு அனைத்து உரிமை களும் வழங்கப்பட்டு உள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில் மதுரையில் இன்று சிறப்பு கருத்தரங்கு நடந்தது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கி னார். சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வரவேற்றார்.

    அமைச்சர்கள் கீதா ஜீவன், பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

    அரசியலமைப்பு சட்டத்தில் சிறுபான்மையி னருக்கு அனைத்து உரிமை களும் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பெரு பான்மையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்க ளுக்கு அரணாக இருக்க வேண்டும்.

    தற்போதைய சூழ்நிலை யில் மக்களிடையே சாதி-மதம் அடிப்படையில் பிரி வினை ஏற்படுத்தி விடலாம் என்று நோட்டாவோடு போட்டி போடும் ஒரு குழு திட்டமிட்டு வருகிறது. மத உணர்வை மதிப்போம், மதவெறி கொள்ளாதே என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. நம்மிடம் ஆதிக்க எண்ணம் ஒருபோதும் தலை தூக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், நமது கலாச்சாரத்தில் சிறப்பான அடையாளங்கள் அனைத்தும் சிறுபான்மையி னரால் வந்தது. அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் நன்றாக திறமைகளை வெளிப்படுத்து கின்றனர். எல்லோரும் இணைந்து சமுதாயத்தை வழிநடத்தி செல்கிறோம். தமிழக வளர்ச்சிக்கு பல சமுதாயத்தினர் பெரிய அளவில் பங்களிப்பு கொடுத்துள்ளனர். எனக்கு கல்வி, திறமை இருந்தாலும் முதல்வர் தரும் ஆதரவும் ஊக்கமும் மட்டுமே என் பணி சிறப்பாக அமைய ஊன்றுகோலாக விளங்கி வருகிறது.

    இந்திய அரசு ரத்து செய்த சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொகையை, மாநில அரசு வழங்குவது தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதில் எம்.பி.க்கள் வெங்கடேசன், நவாஸ்கனி, மாணிக்கம்தாகூர், எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதய ராஜ், ஆளூர் ஷா நவாஸ், பிரின்ஸ், அப்துல் வஹாப், கோ.தளபதி, அப்துல்சமது, ராஜேஷ்குமார், புதூர் பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், சிறு பான்மையினர் ஆணைய துணைத் தலைவர் மஸ்தான், மதுரை கத்தோலிக்க உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, சி.எஸ்.ஐ. பேராயர் ஜெயசிங்பிரின்ஸ் பிரபாகரன், பெந்த கோஸ்தே திருச்சபை தேசிய துணை தலைவர் எடிசன், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத்அலி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, இயக்குநர் சுரேஷ்குமார், கலெக்டர் அனீஸ்சேகர், மேயர் இந்திராணி, அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 -ந்தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆ லோசனை நடைபெற்றது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள்கூட்டம் திருப்பூரில் உள்ளஅலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டதலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். செயலாளர் யாசர் அராபத், பொருளாளர் அப்துல் ரகுமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 -ந்தேதி திருச்சியில் நடக்கும்மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும், 15வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில்இயங்கி வரும் பள்ளிவாசலை மூட முயற்சிக்கும் காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டிப்பதுடன், சிறுபான்மையினரின் வழிபாட்டுஉரிமையை தமிழக அரசுபாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    ×