என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது விற்ற"

    • கோபிசெட்டிபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அப்போது அந்த பகுதியில் ஒருவர் அரசு அனுமதி இன்றி மது விற்றது தெரியவந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கோபிசெட்டிபாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த பகுதியில் ஒருவர் அரசு அனுமதி இன்றி மது விற்றது தெரியவந்தது.

    அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் தாலுகா பகுதியை சேர்ந்த ஆனந்த் (29) என்பது தெரிய வந்தது.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.1,500 மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். 

    • ரகுநாத், செல்லமுத்து அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
    • கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகுநாத்தை கைது செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளை யம் பகுதியில் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கடத்தூர் போலீசார் சிங்கிரிபாளை யம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மது கடை அருகே சோதனை செய்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் அனுமதி யின்றி மது விற்று கொண்டு இருந்தனர்.

    இதையடுத்து போலீசார் மது விற்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரித்த னர்.

    இதில் அவர்கள் கோபி செட்டிபாளையத்தை அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்த ரகுநாத் (32), புதுகோட்டை மாவட்ட த்தை சேர்ந்த செல்லமுத்து என்றும் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகுநாத்தை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.2,340 மதிப்புள்ள 18 மது பாட்டில்கள் மது விற்று வைத்து இருந்த ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசாரை கண்டதும் செல்லமுத்து அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வரு கிறார்கள்.

    • பவானி பழைய பாலம் அருகில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி பழைய பாலம் அருகில் பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில் மறைவான இடத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பவானி கல்தொழிலாளர் மூன்றாவது வீதியில் வசிக்கும் கண்ணன் (23) என்பது தெரிய வந்தது அதிக விலைக்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் பவானி அந்தியூர் மெயின் ரோடு பண்டாரப்பச்சி கோவில் பின்பகுதியில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்துக் கொண்டு விற்பனை செய்த குற்றத்திற்காக கல் தொழிலாளர் 1-வது வீதியில் வசிக்கும் பிரபாகரன் (31) என்பவர் கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை
    • பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர்

    பவானி,

    பவானி அருகில் உள்ள சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் பவானி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சிங்காரவேலன் பெட்டிக்கடை அருகே மறைவான இடத்தில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து பவானி சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் வசிக்கும் சிங்காரவேலன் (39) என்பவர் கைது செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் பவானி அந்தியூர் ஜங்ஷன் பூக்கடை அருகில் மறைவான பகுதியில் மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    • சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • அவர்களிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 15 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    ஈரோடு

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, பங்களாபுதூர் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் அதிக விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்களை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் கோபி, டி.என்.பாளையத்தை சேர்ந்த நன்மணி முத்து (25), ரவிவர்மா (31) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 39 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பழனிகவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படு வதாக கடத்தூர் போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசாரை கண்டவுடன் மொபட்டில் தப்பி செல்ல முயன்ற நபர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர்.

    அப்போது அவர்களிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 15 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் சிவங்கங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்துள்ள கண்டியூரை சேர்ந்த விக்னேஷ்வரன், கோவை ரத்தினபுரியை சேர்ந்த பசுபதி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 15 மதுபாட்டில்கள், மொபட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • கருங்கல்பாளையம் போலீசார் கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • செந்தில்குமார் சட்டவிரோதமாக விற்பனை செய்ய 5 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கே.என்.கே. ரோட்டில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47) என்பதும், சட்டவிரோதமாக விற்பனை செய்ய 5 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    அதேபோல மூலப்பட்டறை பகுதியில் உள்ள பேக்கரி அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் மூலப்பட்டறை, காந்திபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் (35) என்பதும், 6 மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேர் மீதும் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 11 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பெருந்துறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் ஒருவர் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (37) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • மது பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து 33 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி கடம்பூர், மலையம்பாளையம், பெருந்துறை போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 33 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து 35 மதுபான பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், அறச்சலூர் போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.

    அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ரமேஷ் (24), ராமச்சந்திரன் (60), சடையப்பன் (61) ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 35 மதுபான பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • முட்புதரில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி, நல்லூர் பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது பு.புளியம்பட்டி அடுத்த புங்கம்பள்ளி சாணார்பதி அருகே ஒரு பகுதியில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (60) என்பதும், அவர் அந்த பகுதியில் முட்புதரில் மது பாட்டில்களை மறைத்து வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மறைத்து வைத்து இருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அந்தியூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர்.
    • மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையம் கசாப் கடை வீதியில் அந்தியூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த நபர் அதேபகுதியை சேர்ந்த அய்யாசாமி (40) என்பதும், அவரது மொபட்டை சோதனை செய்தபோது மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் அதிக லாபத்தில் விற்பனை செய்வதற்காக எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அய்யாசாமியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்கள் மற்றும் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பெரியசெம்மாண்டாம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட அதேபகுதியை சேர்ந்த சாமியப்பன் (80) என்பவரை மலையம்பாளையம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சிறுவலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

    கெட்டிசெவியூர், சாந்தகடை பகுதி அருகே ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்த போது அவர் நம்பியூர் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (34) என்பதும் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கருங்கல்பாளையம், கொடுமுடி, கடம்பூர் பகுதிகளிலும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • தாலுகா போலீசார் ரோந்து சென்றனர்.
    • அப்போது சட்டவிரோதமாக மது விற்ற விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோடு பகுதியில் தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டு சட்டவிரோதமாக மது விற்ற திங்களூா் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் சோலார் டாஸ்மாக் கடை அருகே நின்றுகொண்டு சட்டவிரோதமாக மது விற்ற சாஸ்திரி நகரை சேர்ந்த சிவக்குமாரை தாலுகா போலீசாரும்,

    ஈரோடு ரெயில்நிலையம் அருகில் மதுவிற்ற சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியராஜூவை (31) சூரம்பட்டி போலீசாரும்,

    சூளை குப்புக்காடு பகுதியில் மது விற்ற சுக்கிரமணியன் வலசை சேர்ந்த சொக்கலிங்கம் (47) என்பவரை வீரப்பன்சத்திரம் போலீசாரும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×