search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்ற வாலிபர் கைது
    X

    மது விற்ற வாலிபர் கைது

    • கோபிசெட்டிபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அப்போது அந்த பகுதியில் ஒருவர் அரசு அனுமதி இன்றி மது விற்றது தெரியவந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கோபிசெட்டிபாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த பகுதியில் ஒருவர் அரசு அனுமதி இன்றி மது விற்றது தெரியவந்தது.

    அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் தாலுகா பகுதியை சேர்ந்த ஆனந்த் (29) என்பது தெரிய வந்தது.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.1,500 மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.

    Next Story
    ×