என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளர்"

    • உள்ளூர் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் வடமாநிலத்தவருக்கான சம்பளம் மிகவும் குறைவு.
    • பண்டிகை முடிந்த அடுத்த சில நாட்களில், அவர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி விடுவர்

    கோவை,

    தமிழகத்தில் முக்கிய தொழில் நகரமாக கோவை உள்ளது. ஆனாலும் இங்கு வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது குதிரை க்கொம்பாக இருக்கிறது. எனவே இங்கு உள்ள பல்வேறு தொழிற்சா லைகள், வடமாநில தொழி லாளிகளை வேலை க்கு அமர்த்தி உள்ளன.

    உள்ளூர் தொழிலா ளர்களுடன் ஒப்பிடுகையில் வடமாநி லத்தவருக்கான சம்பளம் மிகவும் குறைவு. எனவே அவர்களுக்கு கோவை மாவட்டத்தில் மிகுந்த வரவேற்பு உள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். பொதுவாக பண்டிகை முடிந்த அடுத்த சில நாட்களில், அவர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி விடுவர். ஆனால் சொந்த ஊருக்கு சென்றவர்களில் 30 சதவீதத்துக்கும் மேற்ப ட்டோர் வேலைக்கு திரும்ப வில்லை. இது கோவை மாவட்ட தொழி ற்சாலை நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்கள் சொந்த ஊருக்கு சென்ற ஊழியர்களை மீண்டும் கோவைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பல்வேறு சலுகைகள் அளிப்பதாக வாக்குறுதி தரப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான வேலைகள் அப்படியே நிற்கிறது.

    எனவே வடமாநில தொழிலாளிகள் கோவைக்கு உடனடியாக புறப்பட்டு வருவதற்கு ஏதுவாக, தொழிற்சாலைகள் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக அவர்களை விமானத்தில் திருப்பி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில், ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட்டுகள் பதிவு செ ய்யப்ப ட்டு வருகின்றன. வடமாநிலங்களில் வசிக்கும் தொழிலாளிகளை கோவைக்கு விமானத்தில் அழைத்து வரவேண்டும் என்றால், ஒருவருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் செலவு பிடிக்கும். கோவையில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு, வெளிமாநில ஆர்டர்களை குறிப்பிட காலத்துக்குள் முடித்து தரவேண்டும் என்ற காலவரையறை நிர்ணயிக்க ப்பட்டு உள்ளது. எனவே அந்த நிறுவனங்கள் கூடுதல் செலவை கருத்தில் கொள்ளா மல் வடமாநில ங்களில் வசிக்கும் தொழி லாளர்களை விமானத்தில் மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுக ளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே அரசு தொழிற்சாலை கன்யா ஸ்பின் கூட்டுறவு நூற்பாலை.
    • தமிழ்நாட்டில் இயங்கி வரும் 6 ஆலையில் இதுவும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே அரசு தொழிற்சாலை கன்யா ஸ்பின் கூட்டுறவு நூற்பாலை.

    தமிழ்நாட்டில் இயங்கி வரும் 6 ஆலையில் இதுவும் ஒன்று. இந்த ஆலையில் 94 நிரந்தர தொழிலாளர்களும், தினக்கூலியாக 206 பேரும் வேலை செய்து வருகிறார்கள். தற்போது ஆைல நிர்வாகம் பஞ்சு விலை அதிகரிப்பை காரணம் காட்டி பாதிக்குமேல் எந்திரங்களை நிறுத்திவிட்டது.

    மேலும் தொழி லாளர்களை விடுப்பு களை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறி வேலைக்கு வரவேண்டாம் என கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் குறைந்த சம்பளத்துக்கு படிப்படியாக வடநாட்டு வாலிபர்களை வேலைக்கு அமர்த்த முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

    இதற்காக சிலருக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., அ.தி.மு.க., சி.ஐ.டி.யு .தொழிற்சங்கம் ஆகியவை ஆலைக்கு முன்பு சி.ஜ.டி.யு. சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் தி.மு.க. தொழில் சங்க பொதுச்செயலாளர் மகாராஜாபிள்ளை, மாவட்ட தலைவர்மாடசாமி மாநில தி.மு.க. தொழிற்சங்க பேரவை செயலாளர் இளங்கோ, அழகம்பெருமாள், நம்பி ராஜன் சி.ஐ.டி.யு. சங்க பொறுப்பாளர் வடிவேல், குமார், தாலுகா செயலாளர் மிக்கேல், அண்ணா தொழிற்சங்க செயலாளர் மாசானம் ஜெயக்குமார் உள்பட பலர் கொட்டும் மழையில் ஆண்களும், பெண்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் அறைக்கு முன்பு அவர்களை வெளியேறும் வரை காத்திருப்புப் போராட் டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உள்ளூர் தொழிலாளர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை சரியான முறையில் வழங்க வேண்டும், வடமாநில தொழிலாளர்கள் உள்ளே புகுவதை நிறுத்த வேண்டு மென்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

    • மோட்டார் சைக்கிளில் 150 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
    • 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

    இந்தத் தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இசக்கி, கார்த்தி மற்றும் போலீஸ்காரர்கள் திருப்பூர் தாராபுரம் பகுதியில் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்போது தாராபுரம் மூலனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் 150 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது அவர் குளத்துப்பாளையம் குலுக்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்த உமாநாத் (வயது 47) என்பதும் மேலும் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உமாநாத் பல்வேறு இடங்களில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    ×