என் மலர்
நீங்கள் தேடியது "ஈரோடு விபத்து"
- தாமரைபாளையம் அருகே உள்ள கோட்டைக்கட்டு வலசு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
- நிலை தடுமாறி அருண்குமார் மற்றும் மணிகண்டன் ரோட்டில் விழுந்துள்ளனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சிவகிரி அம்மன் நகர், ஈ.பி.ஆபிஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது22). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனது.
அதேபோல் சிவகிரி திரு.வி.க. பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது19). இவர் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் நேற்று இரவு அருண்குமார், மணிகண்டன் 2 பேரும் கொடுமுடிக்கு ஒரு வேலையாக சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது தாமரைபாளையம் அருகே உள்ள கோட்டைக்கட்டு வலசு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி அருண்குமார் மற்றும் மணிகண்டன் ரோட்டில் விழுந்துள்ளனர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இந்த விபத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருண்கு மாரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருண்குமாரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் உடலை பிரேத பரிசோத னைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 பேர் உடலையும் பார்த்து அவர்களது உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் 2 பேர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ்சுக்காக ரோஷன் வழி விட ஒதுங்கினார்.
- மோட்டார் சைக்கிளில் சென்ற ரோஷன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ரோஷன் பிஜி (வயசு 19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை ரோஷன் பிஜி மோட்டார் சைக்கிளில் தனது நண்பரை ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இறக்கி விட்டு மீண்டும் மணல் மேட்டில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஈரோடு சென்னிமலை ரோடு, பழைய கூட் செட் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ்சுக்காக ரோஷன் வழி விட ஒதுங்கினார். அந்த பகுதியில் புதிதாக ரோடு போடுவதற்காக சாலையை தோண்டி வைத்துள்ளனர்.
இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற ரோஷன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் பின் சக்கரம் ரோஷன் தலையில் ஏறி இறங்கியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய ரோசனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரோஷன் பிஜி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாணவனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கான்கிரீட் கலவை எந்திரம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வன், சக்திவேல் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலியானார்கள்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் காசிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (55). ஈரோடு- கரூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (45). இவர்கள் 2 பேரும் தொழிலாளர்கள்.
இன்று காலை 11.30 மணி அளவில் இவர்கள் கவுந்தப்பாடி அருகே ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் செம்புத்தம்பாளையம் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கான்கிரீட் கலவை எந்திரம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய அவர்கள் கீழே விழுந்தனர். அப்போது கான்கிரீட் கலவை எந்திரம் மோட்டார் சைக்கிளுடன் 2 பேரையும் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து சென்றது.
இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வன், சக்திவேல் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலியானார்கள். இதுகுறித்து தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு கவுந்தப்பாடி போலீசார் விரைந்து சென்று பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கான்கிரீட் கலவை எந்திரத்தை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் மேட்டூர் விருத்தாசம்பட்டியை சேர்ந்த திவ்யநாதன் (40) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- படுகாயம் அடைந்த மாதேஸ்வரி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- விபத்து குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மாதேஸ்வரி (50). இவர்களது ஒரே மகன் சிவானந்தம் (18).
இந்நிலையில் நேற்று காலை மாதேஸ்வரி தனது மகன் சிவானந்தத்துடன் அவிநாசியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நேற்று இரவு உறவினர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிவானந்தத்துடன் மாதேஸ்வரி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சிவானந்தம் மோட்டார் சைக்கிள் ஓட்ட பின்னால் மாதேஸ்வரி அமர்ந்து வந்து கொண்டிருந்தார்.
நம்பியூர் பவர் ஹவுஸ் மேடு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நூற்பாலையில் வேலை செய்யும் தொழிலாளி தீபக் (எ) திம்பா செட்டோம் தான் தங்கி இருக்கும் விடுதிக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவானந்தம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், தீம்பா செட்டோம் ஓடி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இது குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவக் குழுவினர் படுகாயம் அடைந்த மாதேஸ்வரி மற்றும் சிவானந்தம் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் இருவரையும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைப்போல் படுகாயம் அடைந்த வடமாநில வாலிபர் தீம்பா செட்டோமை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவானந்தம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அதேபோல் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீம்பா செட்டோமும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். படுகாயம் அடைந்த மாதேஸ்வரி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நம்பியூர் போலீசார் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- காரில் அந்தியூரில் இருந்து புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்றனர்.
- விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அ.தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சண்முகானந்தம். இவர் இவரது மனைவி புஷ்பவல்லி (வயது 47), இவர்களது மகன் மோகன் மற்றும் உறவினர் சரஸ்வதி ஆகியோர் குடும்பத்தினருடன் நேற்று காரில் அந்தியூரில் இருந்து புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்றனர்.
காரை திருக்குமரன் என்பவர் ஓட்டி சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் அந்தியூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கரூர் அருகே அரவக்குறிச்சி என்ற இடத்தில் கார் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் எஸ்.ஜி.சண்முகானந்தம் சீட்பெல்ட் அணிந்திருந்தார். இதனால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதில் அ.தி.மு.க. பிரமுகரின் மனைவி புஷ்பவல்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இவரது மகன் மோகன் மற்றும் உறவினர் சரஸ்வதி ஆகியோரும் லேசான காயம் அடைந்தனர்.
டிரைவர் திருக்குமரன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
- ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக பிரசாந்த் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
- விபத்து தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜன் மகன் பிரசாந்த் (வயது 28). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று தனது சொந்த ஊருக்கு வந்த பிரசாந்த் வேலை நிமர்த்தமாக இன்று காலை ஈரோட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது கருங்கல்பாளையம் அடுத்துள்ள கிருஷ்ணம்பாளையம் சின்னப்பா லே அவுட் அருகே ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக பிரசாந்த் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த கருங்கல்பாளையம் போலீசார் பிராசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விபத்தில் 4 மாத பெண் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை:
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள சக்தி பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 17-ந்தேதி இவரது மனைவி பாரதி (25), மகன் ஸ்ரஏயன் (4) மற்றும் 4 மாத குழந்தை மேக்னா ஆகியோருடன் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை ராஜேஷ் ஓட்டி சென்றார்.
ஈரோடு மேட்டூர் ரோட்டில் அம்மாபேட்டை அடுத்து கோனேரிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் அதிகாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை உள்ள தனியார் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் 4 மாத குழந்தை மேக்னா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் 4 மாத பெண் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வீடியோவில், கார் மோதியதில் சில அடி தூரங்கள் இளம்பெண் தூக்கி வீசப்படுகிறார்.
- காயமடைந்த பெண்ணை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்படுகிறார்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி தூக்கி வீசும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில், கார் மோதியதில் சில அடி தூரங்கள் இளம்பெண் தூக்கி வீசப்படுகிறார். காயமடைந்த பெண்ணை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்படுகிறார். விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.
கடந்த மாதம் 27-ந்தேதி அன்று நடைபெற்ற விபத்து தொடர்பான வீடியோவை ஆய்வு செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் மீது கார் மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி#Erode #accident #CCTV #MMNews #Maalaimalar pic.twitter.com/UXpnBYjl8w
— Maalai Malar தமிழ் (@maalaimalar) May 2, 2024
- இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
- விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் புஞ்சை துறையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நந்தகுமார் (24). இவரது பாட்டி சரஸ்வதி (62).
இந்த நிலையில் நந்தகுமார் மோட்டார் சைக்கிளில் தனது பாட்டி சரஸ்வதியை ஜம்பையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து கொண்டு சென்றார். மோட்டார் சைக்கிளை நந்தகுமார் ஓட்டினார். அவரது பாட்டி சரஸ்வதி பின்னால் அமர்ந்து கொண்டு ஜம்பை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
இதை தொடர்ந்து உறவினர் வீட்டில் இருந்து துறையம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக மீண்டும் மோட்டார் சைக்கிளில் பாட்டியுடன் நந்தகுமார் பவானி ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் இரவு நேரத்தில் துறையம்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஜம்பை கலுங்கு ஏரி அருகே உள்ள வளைவு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஒரு கார் நந்தகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நந்தகுமார் மற்றும் அவரின் பாட்டி சரஸ்வதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொருங்கியது.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பவானி அருகே விபத்தில் பாட்டி, பேரன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- பஸ் திரும்பிய போது மொபட்டில் சென்று கொண்டிருந்த சண்முகம் மீது பஸ்சில் படிகட்டில் பயணம் செய்த நவீன்குமார் மோதினார்.
- பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 20). இவர் கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக நவீன்குமார் தினமும் சத்தியமங்கலத்தில் இருந்து பஸ் மூலம் கோபி செட்டிபாளையத்துக்கு செல்வது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் நவீன்குமார் சத்தியமங்கலத்தில் இருந்து தனியார் பஸ் மூலம் கோபி செட்டிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். நவீன்குமார் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்து வந்துள்ளார். பஸ் புதுவள்ளிபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் (55) என்பவர் தனது மொபட்டில் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுவள்ளிபாளையம் பிரிவு சின்ன வளைவில் பஸ் திரும்பிய போது மொபட்டில் சென்று கொண்டிருந்த சண்முகம் மீது பஸ்சில் படிகட்டில் பயணம் செய்த நவீன்குமார் மோதினார்.
இதில் நவீன் குமாருக்கும், சண்முகத்திற்கும் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தை கண்டு பஸ்சில் இருந்த பயணிகள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் வாலிபர் உட்பட 2 பேர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக ராணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- 5 வயது குழந்தைக்கு வலது நெற்றியில் சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யூனியன் ஆபீஸ் அருகே பாரதி நகரை சேர்ந்தவர் அமரேஸ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராணி (வயது 38). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் என 2 மகன்கள் உள்ளனர். தினமும் காலை ராணி தனது மோட்டார் சைக்கிளில் மூத்த மகனை பள்ளியில் கொண்டு விடுவது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் ராணி தனது மகனை பள்ளியில் விடுவதற்காக அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மொடக்குறிச்சி யூனியன் ஆபீஸ் மெயின் ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது வெள்ளகோவிலில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக ராணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ராணி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 5 வயது குழந்தைக்கு வலது நெற்றியில் சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் ராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
5 வயது குழந்தையை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணியின் உடலை பார்த்து அவரது கணவர் மற்றும் பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- செட்டிபாளையம் பிரிவு என்ற பகுதியில் சென்ற போது திடீரென மொபட்டில் இருந்து நிலை தடுமாறி தம்பதியினர் ரோட்டில் கீழே விழுந்தனர்.
- அந்த வழியாக வந்த ஒரு கிரேன் வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் தம்பதி மீது ஏறி இறங்கியது.
ஈரோடு:
ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (75). ஓய்வுபெற்ற வன ஊழியர். இவரது மனைவி பாப்பாத்தி (65). இவர்கள் 2 பேரும் இன்று காலை 9 மணி அளவில் நாதகவுண்டம்பாளையத்திற்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மொபட்டில் புறப்பட்டனர்.
அவர்கள் செட்டிபாளையம் பிரிவு என்ற பகுதியில் சென்ற போது திடீரென மொபட்டில் இருந்து நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு கிரேன் வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் சுப்பிரமணி அவரது மனைவி பாப்பாத்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இந்த விபத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் 2 பேர் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் கிரேன் எந்திரத்தில் சிக்கி இருந்த மொபட்டை மீட்டனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேன் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் வயதான தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.