search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீருடைகள் வழங்கல்"

    • மாணவர்கள் கல்வியில் மட்டுமில்லாமல் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கி நாட்டிற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
    • விழாவிற்கான ஏற்பாடு களை பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம்மன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் 340 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த மாணவ, மாணவிகளின் நலன் கருதி 2023-2024-ம் ஆண்டு கல்வி ஆண்டிற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 462 மதிப்பில் விளையாட்டு சீருடைகள் மற்றும் ரூ.29 ஆயிரத்து 736 மதிப்பில் தினசரி நாட்டு குறிப்பேடுகள் என மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான சீருடைகள், நாட்குறிப்பேடு களை ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

    விழாவிற்கு தருமபுரி வட்டார கல்வி அலுவலர்கள் சுமதி, பரமசிவம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் ஐ.வி.டி.பி. நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் மாணவர்கள் கல்வியில் மட்டுமில்லாமல் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கி நாட்டிற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம்மன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் இந்த பள்ளிக்கு கல்வி வளர்ச்சிக்காக ரூ.13 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    • நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார்.
    • 90 பேருக்கு சீருடைகள் உள்ளிட்ட பொருட்களை தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வழங்கினர்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சியின் பொது சுகாதாரப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, தையல் கூலி ரூ.500, காலணிகள், அடையாள அட்டை , முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி நகராட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் முன்னிலை வகித்தார். ஒப்பந்ததாரர் ஜப்பார் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் 90 பேருக்கு சீருடைகள் உள்ளிட்ட பொருட்களை தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வழங்கினர்.

    தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிக்கு செல்லும் போது முறையாக சீருடையுடன், அடையாள அட்டை, கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் அணிந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணாசரன், சீனிவாசலு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×