என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய மாணவர் சங்கம்"
- தடுப்புகளை தாண்டி குதித்து அஞ்சல் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர்.
- போலீசாரும், மாணவர்களும் சாலையில் புரண்டு உருண்டனர்.
திருச்சி:
இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநாடு மாவட்ட தலைவர் சூர்யா தலைமை தாங்கினார். திருநகர் மாவட்ட தலைவர் வைரவளவன், மாவட்ட செயலாளர் ஆமோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீட் தேர்வு குளறு படிகளை சுட்டிக்காட்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவர் சங்கத்தினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்ய முயன்ற போது, மாணவர் சங்கத்தினர் சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சூர்யா மற்றும் சிலர் அஞ்சல் அலுவலகம் முன்பு அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி குதித்து அஞ்சல் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் கே.முருகவேல் தலைமை யிலான போலீசார் தடுப்புகளை தாண்ட முயன்ற மாணவர்களை இழுத்தனர். இதில் போலீசாரும், மாணவர்களும் சாலையில் புரண்டு உருண்டனர்.
ஒரு மாணவர் தடுப்பு களை தாண்டி அஞ்சல் அலுவலக நுழைவாயில் கதவு மீது ஏற முயன்றார். அவரையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கி வந்தனர்.
பத்து நிமிட போராட்டத்திற்கு பிறகு போலீசார் நான்கு மாணவிகள் உட்பட 11 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- யுசிஜி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை திரும்ப வேண்டும் என தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.
- கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுக்கிறது.
அதனால் யுசிஜி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை திரும்ப வேண்டும் என தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இதுதவிர மத்திய அரசு தமிழ்நாடு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,158 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் தாமதம் செய்கிறது. இது குறித்த சமீபத்திய கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை இதுவரை ஏற்காமல் உள்ளனர். மும்மொழி கொள்கையை ஏற்காத வரை தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க இயலாது" என்று கூறினார்.
இவரது கருத்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு இடமே இல்லை என ஒருமித்த குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதிய யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெறவும், மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரை போலீசார் தடுக்க முயன்றதால் போலீசார் மற்றும் மாணவர் அமைப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- இந்திய மாணவர் சங்கத்தின் 21வது மாவட்ட மாநாடு 30-ந் தேதி வேலம்பாளையத்தில் நடக்கிறது.
- மாநாட்டு ஏற்பாடு குறித்து வேலம்பாளையத்தில் வரவேற்பு குழு கூட்டம் நடந்தது.
திருப்பூர் :
இந்திய மாணவர் சங்கத்தின்21வது மாவட்ட மாநாடு 30-ந் தேதி வேலம்பாளையத்தில் நடக்கிறது.மாநாட்டு ஏற்பாடு குறித்து வேலம்பாளையத்தில் வரவேற்பு குழு கூட்டம் நடந்தது. நிர்வாகி சுகுமார் தலைமை வகித்தார்.மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது, மாநாட்டின் முக்கியத்துவம் குறித்தும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நகர செயலாளர் நந்தகோபால், வரவேற்பு குழு மற்றும் பணிக்குழுக்களை முன்மொழிந்தும் பேசினர்.
குழு தலைவராக சுப்ரமணியம், செயலாளராக ஆறுமுகம், பொருளாளராக சின்னசாமி, துணை தலைவர்களாக விஸ்வநாதன், கவிதா, துணை செயலாளராக ராம் கிருபாகர், ஹரிஹரன் உட்பட, 60 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. மாணவர் சங்க மாவட்ட தலைவர் பிரவீன்குமார், பொருளாளர் கல்வி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நகர குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.