என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் கவர்"

    • 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு.
    • தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

    பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

    14 பொருட்களுக்கு தடை விதித்து 2018ல் உத்தரவிட்ட நிலையில், உணவுப் பொருட்களை அடைக்கும் கவர்களுக்கு 2020ல் தடை விதித்ததையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    அதில், " பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை" என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், "அன்றாட உணவுப் பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், அதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக" அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • பிளாஸ்டிக் கவரில் உணவு இருப்பதாக நினைத்து பூனை அதனுள் தலையை விட்டது.
    • பொதுமக்கள் பூனையை காப்பாற்ற நினைத்து அதனை பிடிக்க முயன்றனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அச்சரப்பாக்கம் சாலையில் பூனை ஒன்று சுற்றி திரிந்தது.

    அப்போது யாரோ ஒருவர் உணவை வாங்கி சாப்பிட்டுவிட்டு மீதம் உள்ளதை சாலையில் வீசி சென்றுள்ளார். தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் கவரில் உணவு இருப்பதாக நினைத்து பூனை அதனுள் தலையை விட்டது. இதில் பூனையின் தலை சிக்கியது.

    இதனால் பிளாஸ்டிக் கவருடன் சாலையில் அங்கும் இங்கும் ஓடியது. பூனை சாலையில் ஓடியதால் விபத்தில் சிக்கும் இறக்கும் நிலை ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் பூனையை காப்பாற்ற நினைத்து அதனை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் யாரிடமும் சிக்காமல் ஆட்டம் காட்டியது. இந்த நிலையில் சிறுவன் ஒருவன் சாலையில் ஓடிய பூனையை லாவகமாக பிடித்து தலையில் சிக்கிய பிளாஸ்டிக் கவரை அகற்றினான். பிளாஸ்டிக் கவரை எடுத்தவுடன் நிம்மதியுடன் மூச்சு விட்ட பூனை மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடியது. சிறுவனை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.

    • சிவகாசி அருகே பிளாஸ்டிக் கவர் விழுங்கிய 7 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி துரைசாமிபுரம் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (வயது 26).இவருக்கு கலைக்கதிர் என்ற 7 மாத ஆண் குழந்தை இருந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் விளையாடிகொண்டிருந்த கலைக்கதிர் கீழே கிடந்த பிளாஸ்டிக் கவர் துண்டு பேப்பரை எடுத்து விழுங்கி உள்ளான்.

    சிறிது நேரத்தில் குழந்தை மயங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு நிலைமை மோசமானதால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை சேர்க்கப்பட்டது. அங்கும் சிகிச்சை பலனளிக்க வில்லை. இறுதியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கலைக்கதிர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தான்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன.
    • சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்

    உடுமலை :

    உடுமலையில் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் குப்பைகளை கொட்டக்கூடாது என நகராட்சி நிர்வாகம் அறிவித்து வருகின்ற நிலையில் சில பகுதிகளில் ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. உடுமலை ெரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள பழனி ஆண்டவர் நகருக்கு செல்லும் ரோட்டில் தொடர்ந்து ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

    இதில் பிளாஸ்டிக் கவர்களும் கிடக்கின்றன. அந்த இடத்தில் வரும் கால்நடைகள் அந்த குப்பைகளை கலைத்து உணவை தேடுகின்றன. அப்போது அவை கிடைப்பதை சாப்பிடுகின்றன .அதில் பிளாஸ்டிக் கவர்களையும் மாடுகள் சாப்பிட்டால் மாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×