என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓவியங்கள்"

    • ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

    தியாகராஜர் கோவில்-ஆலய திருப்பணிகள்

    முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலக் கல்வெட்டு முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

    முற்கால சோழர்கள் ஆட்சியில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே வலிவு பெற்றிருக்கிறது.

    அருட்திரு தியாகராஜசாமி கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு போர்த்திய முதலாம் இராஜேந்திரன் குடமுழுக்கும் செய்வித்ததாக இக்கோவிலின் கல்வெட்டு கூறுகிறது.

    இக்கோவிலின் ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்று திருபுவனம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

    இரண்டாம் இராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான்.

    இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கர் எழுந்தருளியுள்ள கர்ப்ப கிரகத்தையும், வன்மீகநாதர் கருவறையையும் பொன் வேய்ந்தான் என்பதும்,

    திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும்,

    திருவிளக்குப் பணிக்காகவும் பூசை முதலியவற்றுக்காகவும் சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

    • 330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன.
    • 63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும்.

    திருவாரூர் கோவில்-புலவர்களால் பாடப்பெற்ற தலம்

    திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர்.

    330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன.

    இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது.

    அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார்,

    மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் முதலியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சமஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன.

    63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும்.

    இக்கோவிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபம், கல்தூண்களை மட்டுமே உடையது. விழாக்களின்போது அவற்றின் மீது பந்தல் அமைத்துக் கொள்வர்.

    இம்மண்டபத்தை சேக்கிழார் பாடியுள்ளார்.

    இக்கோவிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில்தான் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையை இயற்றப்பட்டதாக கூறுவர்

    • மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் காணப்படுகிறது.
    • இவ்வாலயம் கோவில்களின் கூடாரமாக விளங்குகிறது.

    திருவாரூர் கோவிலின் சிறப்புகள்

    இவ்வாலயம் கோவில்களின் கூடாரமாக விளங்குகிறது.

    9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 100-க்கும் மேற்பட்ட சன்னதிகள் ஆகியவற்றுடன் இத்திருக்கோவில் பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்து சிறப்பாக அமைந்துள்ளது.

    கண்டீசர் இருக்குமிடத்தில் எமன் இருப்பதும் நின்ற நிலையில் நந்தி அமைந்திருப்பதும் இக்கோவிலின் பிற சிறப்புகளாகும்.

    இக்கோவிலிலுள்ள தியாகராசருடைய 'அசபா நடனம்' இவ்வூர்த் திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகிறது.

    மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் கீழைக் கோபுர வாயிலருகே காணப்படுகிறது.

    சுந்தரரின் மனைவியரான பரவையார் பிறந்த ஊர் இதுவே.

    பரவை நாச்சியாருக்கென தியாகராசர் கோவில் தெற்குக் கோபுரத்தின் தென்புறத்தில் தனி ஆலயம் உள்ளது.

    தண்டபாணிக் கோவில், இராஜதுர்கை கோவில், மாணிக்க நாச்சியார் கோவில், திருவாரூர்ப் பரவையுண் மண்டலி முதலியன இவ்வூரில் காணத்தக்கவை.

    • ‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்’ என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது.
    • தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர்

    இக்கோவிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.

    இக்கோவிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுர ஆதீன நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது.

    17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    இவரும் இவருக்குப் பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார்.

    அவருடைய மந்திரியாய் பணிபுரிந்தவர் சிங்காதனம்.

    இவர் சிறந்த ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களில் கோவிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது.

    அதன் வாயிலாக 17 ஆம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோவில் எப்படித் திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல், இசை, கூத்துக்கள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது.

    'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?

    • நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.
    • 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

    300 டன் எடையுடன் அசைந்தாடி வரும் ஆழித்தேர்

    'திருவாரூர்த் தேரழகு' என்றும் 'திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்' என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம்.

    'ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே' என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.

    அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு.

    இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம்.

    மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.

    தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும்.

    இதனால் இதனை 'ஆழித்தேர்' என்று அழைக்கின்றனர்.

    'ஆழி' என்பது சக்கரமாகும்.

    மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது.

    1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

    1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர்.

    பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது.

    இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது.

    1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.

    அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும்.

    விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும்.

    இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும்.

    இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன.

    திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர்.

    10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும்.

    நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.

    வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும்.

    இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகர்ந்து விடுகிறது.

    • யானை படமாக இருந்தால் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது சிறப்பு.
    • மான்கள் துள்ளி ஓடும் படத்தையும் மாட்டி வைக்கலாம்.

    தன்னம்பிக்கையை அளிக்கும் படங்கள், இயற்கை அழகு மிகுந்த வண்ண ஓவியங்கள் ஆகியவற்றால் சுவர்கள் அலங்கரிக்கப்படும்போது மங்களம் தரும் சுப அதிர்வுகள் மனதில் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுக்கும் அதன் காரணமாக மனதில் உற்சாகம் உண்டாவதோடு, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் அந்த உற்சாகம் பரவும்.

    வீடுகள் சிறிய அளவு கொண்டதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவற்றில் செய்யப்பட்டிருக்கும் அலங்காரம் அனைவரையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமாக இருக்கும். அதற்காக விலை உயர்ந்த பொருட்களை கொண்டு வீடுகளை அழகுபடுத்த வேண்டும் என்பதில்லை. கண்கவரும் வண்ணங்களில் அழகிய ஓவியங்களை ஆங்காங்கே மாட்டி வைத்தும் அறையின் சூழலை இனிமையாக மாற்ற இயலும்.

    அவ்வாறு ஓவியங்கள், சிற்பங்கள் அல்லது படங்களை அறைகளில் வைப்பது அல்லது சுவர்களில் மாட்டுவதை பொறுத்து வீடுகளில் நேர்மறை சக்திகள் அல்லது எதிர்மறை சக்திகள் வெளிப்படுகின்றன என்று வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் வீடுகளில் சிலைகள் அல்லது படங்களை மாட்டும் முன்னர் மனதில் கொள்ளவேண்டிய விஷயங்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

     * ஒற்றைக் கொம்பு கொண்ட யூனிகார்ன் குதிரை படம் அல்லது மான்கள் துள்ளி ஓடும் படத்தையும் மாட்டி வைக்கலாம். அவை, பெருமை மற்றும் செல்வத்தை குறிக்கக்கூடியவையாக சொல்லப்படுகின்றன.

     * வீடுகள் அல்லது அறைகளில் கிழக்கு பகுதிகளில் அறிவு மற்றும் சக்தி ஆகியவற்றின் உருவகமாக உள்ள யானைகள் கூட்டமாக இருக்கும் படங்கள் அல்லது இரண்டு கொக்குகள், இரண்டு அன்னங்கள், பறந்து செல்லும் பறவைகள் கொண்ட படங்களையும் மாட்டலாம். அவை ஒற்றுமையை குறிப்பிடுவதாக அமையும்.

    * ஒரு யானை கொண்ட படமாக இருந்தால் அதன் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது சிறப்பு.

    * தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றை காட்டும் குட்டிகளுடன் கூடிய தாய் சிங்கத்தின் படம், வளத்தை எடுத்துச்சொல்லும் பெரிய பாய்மர கப்பல் ஆகிய படங்களையும் வீடுகளில் பயன்படுத்தலாம்.

     * சமையலறை சுவர்களில் அல்லது சாப்பிடும்போது கண்களில் படும்படி விதவிதமான காய்கறிகள், பழங்கள் போன்றவை அடங்கிய படங்களை மாட்டி வைக்கலாம்.

    * படுக்கையறை சுவர்களுக்கு மென்மையான நீல மலர்கள் கொண்ட படம் மற்றும் மேஜையில் அலாரம் கொண்ட கடிகாரம் ஆகியவை பொருத்தமாக இருக்கும்.

    * போர்க்களத்தில் பயன்படுத்தும் ஆயுதங்கள், போரை நினைவு படுத்தும் சிற்பங்கள் அல்லது புகைப்படங்கள், பீரங்கி பொம்மைகள், பெருக்கல் குறி போன்ற வாள்கள் ஆகியவற்றை வீடுகளில் வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

    * சிங்கம், புலி போன்ற விலங்குகள் இரையை துரத்துவது அல்லது அவற்றை வாயில் கவ்வி கொண்டிருப்பது போன்ற படங்களும் எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தும் என்ற நிலையில் அவற்றை தவிர்க்க வேண்டும்.

    • நாமக்கல் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான கொல்லிமலை உள்ளது.
    • மலைப்பாதை தடுப்பு சுவர்களில், வல்வில் ஓரி மன்னனின் புகழைப் பரப்பும் வகையில், ஆங்காங்கே வண்ண ஓவியங்கள் வரைந்துள்ளனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான கொல்லிமலை உள்ளது. கொல்லிமலைக்கு, அடிவாரத்தில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். கொல்லிமலைக்கு வரலாற்று பெருமையும், அகத்தியர், திருமூலர், போகர், கோரக்கர், கொங்கணவர், பாம்பாட்டி உள்ளிட்ட, 18 சித்தர்கள் இங்கு தவம் செய்த பெருமையும் உள்ளது. இதற்கு சான்றாக, குகைகள் அமைந்துள்ளன. கடையேழு வள்ளல்களின் ஒருவரான வல்வில் ஓரி ஆண்ட நாடாகவும் கொல்லிமலை திகழ்கிறது.

    இங்கு ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, சிற்றருவி என பல அருவிகள் உள்ளன. இதனால், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த கொல்லிமலையில், ஆண்டுதோறும் ஆடி, 18-ல், ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இங்குள்ள ஆற்றில், பொதுமக்கள் புனித நீராடி, அறப்பளீஸ்வரரை வழிபடுவர்.

    மேலும், தமிழக அரசு சார்பில், கொண்டாடப்படும் வல்வில் ஓரி விழா, நேற்று தொடங்கியது. சிறந்த சுற்றுலாதலமாக விளங்கும் கொல்லிமலைக்கு, தமிழகம் முழுவதும் இருந்து, ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கவரும் வகையில், நெடுஞ்சாலை, வனம், சுற்றுலா மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், மலைப்பாதை தடுப்பு சுவர்களில், வல்வில் ஓரி மன்னனின் புகழைப் பரப்பும் வகையில், ஆங்காங்கே வண்ண ஓவியங்கள் வரைந்துள்ளனர். அவற்றை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். பலர் ஆர்வமாக, தங்களது மொபைல் போனில் 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர்.

    கொல்லிமலை வரும் சுற்றுலா பயணிகளை கவர மலைப்பாதை தடுப்பு சுவர்களில் வண்ண ஓவியம்.

    • சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
    • இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சேலம்:

    சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற நாளை(வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளில் 188 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். சேலம் மாவட்டத்தில் அதனைப் பிரபலப்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. மலைப் பகுதியான ஏற்காட்டிற்கு நாள்தோறும் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து சேலம் மாவட்டத்தில் பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சதுரங்கப் போட்டிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வுக் கோலங்கள் வரைதல், பேரணிகள், காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்கான செஸ் போட்டிகள் உள்ளிட்ட விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், பள்ளி வாகனங்கள், பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம் அடங்கிய ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்தல், செல்பி பாயிண்ட் அமைத்தல் மற்றும் வண்ண பலூன்களை பறக்க விடுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

    • பஸ் நிலைய சுற்றுச்சுவரில் ஓவியங்களை வரைந்து ஓவியர் அழகுப்படுத்தி உள்ளார்.
    • பொருட்கள் வாங்க நிதி கொடுத்து நிர்வாகம் உதவியது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் அரியலூர், துறையூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே சுற்றுச்சுவரில் பயணிகள் சிறுநீர் கழித்து வந்தனர். இதனால் அந்த சுற்றுச்சுவர் மோசமாக காணப்பட்டு வந்ததுடன், துர்நாற்றமும் வீசி வந்தது.

    இதனை கண்ட பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள எம்.எம்.நகரை சேர்ந்த செல்வராஜ்-கோகிலா தம்பதியின் மகனும், ஓவியருமான அஜீத் (வயது 23) என்பவர் அந்த சுற்றுச்சுவரை அழகுபடுத்த எண்ணினார்.இதையடுத்து அவர் நகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் அந்த சுற்றுச்சுவரில் துர்நாற்றத்துக்கு இடையே நின்று தனது சொந்த செலவில் ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். பின்னர் அவருக்கு நகராட்சி நிர்வாகம் ஓவியங்கள் வரைவதற்கு தேவைப்படும் பொருட்கள் வாங்க நிதி கொடுத்து உதவியது.

    சுற்றுச்சுவரில் தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் கிடா சண்டை, சேவல் சண்டை மற்றும் கோவில் யாழி சிற்பம், பூம் பூம் மாடு, கோவில் திருவிழாவுக்கு பக்தர்கள் செல்வதும், பூ கட்டும் பெண்மணியும், பரத நாட்டியம் மற்றும் தண்ணீர் குடங்களை தலையில் சுமந்து செல்லும் சிறுமிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட அழிந்து போன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ் ஆகியவற்றின் படங்கள் ஓவியங்களாக தத்ரூபமாக வரைந்தார். அஜீத் வரைந்த ஓவியங்களால் அந்த சுற்றுச்சுவர் தற்போது அழகாக காட்சியளிக்கிறது. 

    ×