என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெளியுறவுத்துறை"
- கடந்த 6 ஆண்டில் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
- விபத்துகள், மருத்துவ காரணங்கள், தாக்குதல்களால் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் வெளிநாடுகளில் தங்கிப் படிக்கும் இந்தியர்கள் குறித்த கேள்வி இன்று எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகள் சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
2019-ம் ஆண்டில் 6,75,541 மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை 13,35,878 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.
கனடாவில் 4,27,000 பேரும், அமெரிக்காவில் 3,37,630 பேரும், இங்கிலாந்தில் 1,85,000 பேரும், ஆஸ்திரேலியாவில் 1,22,202 பேரும் படித்து வருகின்றனர்.
இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் எண்ணிக்கை வரும் காலங்களில் தொடர்ந்து உயரும் என தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்துகள், மருத்துவ காரணங்கள் மற்றும் தாக்குதல்களால் 41 நாடுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கனடாவில் 172, அமெரிக்காவில் 108, இங்கிலாந்தில் 58, ஆஸ்திரேலியாவில் 57, ரஷ்யாவில் 37, ஜெர்மனியில் 24 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், 19 உயிரிழப்புகள் கொலைகளால் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 3 ஆண்டில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க தூதராக பதவி வகித்த தரன்ஜித் சிங் சந்து கடந்த ஜனவரியில் ஓய்வுபெற்றார்.
- வினய் குவாத்ரா விரைவில் அமெரிக்க தூதராக பதவி ஏற்பார் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவி வகித்த தரன்ஜித் சிங் சந்து கடந்த ஜனவரி மாதம் ஓய்வுபெற்றார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் குவாத்ராவை நியமனம் செய்து இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வினய் குவாத்ரா விரைவில் அமெரிக்க தூதராக பதவி ஏற்பார் என தெரிவித்துள்ளது.
வரும் நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால், இந்தியா-அமெரிக்க உறவுகளில் உறுதியையும் தொடர்ச்சியையும் கொண்டு வருவார் என்பதற்காக வினய் குவாத்ராவுக்கு தூதர பதவி வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
வினய் குவாத்ரா சமீபத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வன்முறையில் போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
- பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
டாக்கா:
வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள் அறிக்கையில், வங்காளதேசத்தில் உள்ள இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியேவர வேண்டாம் என்றும், அவசர உதவி என்றால் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக வேண்டும் என தெரிவித்துள்ளது.
- வளைகுடா பகுதியில் 17 இந்தியர்களுடன் சென்ற இஸ்ரேல் கப்பலை ஈரான் சிறைபிடித்தது.
- இஸ்ரேல் கப்பலில் இருந்த இந்தியர்களில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் நாடு திரும்பினார்.
புதுடெல்லி:
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா பகுதியில் சென்ற இஸ்ரேலுக்குச் சொந்தமான சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது. விசாரணையில், கப்பலில் இருப்பவர்களில் 17 பேர் இந்தியர்கள் என தெரியவந்தது.
இதற்கிடையே, சரக்கு கப்பலில் உள்ள 17 ஊழியர்களை மீட்கும் பணி நடந்துவந்தது.
இந்நிலையில், கப்பலில் இருந்த இந்திய ஊழியர்கள் 17 பேரில் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர் இன்று பத்திரமாக நாடு திரும்பியதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கப்பலில் மீதமுள்ள 16 இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளோம். பாதுகாப்பாக இருக்கும் அவர்களை விரைவில் மீட்போம் என தெரிவித்துள்ளது.
- போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதில் உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள இந்தியர்களை அதில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என ரஷிய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொய் வாக்குறுதிகள் அளிக்கும் ஏஜெண்ட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், ஆள் கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏஜெண்ட் அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் யாரும் நம்பவேண்டாம். அந்த வாக்குறுதிகள் சிக்கலை ஏற்படுத்துவதுடன் ஆபத்தை ஏற்படுத்தும்.
ரஷிய ராணுவத்திற்கு உதவியாகப் பணிபுரியும் இந்தியர்களை உடனே அந்தப் பணியில் இருந்து விடுவிப்பதுடன் அவர்களை தாயகம் அழைத்து வர உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
- தகவல்களை உறுதிசெய்யாமல் பணம், பாஸ்போர்ட் சான்றிதழ் உள்ளிட்ட எதையும் வழங்கக் கூடாது.
- போலி முகவர்கள் மீது புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
வெளிநாடுகளில் வேலைகளுக்குச் செல்ல விரும்புவோர் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு:
பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடி நியமன முறையில் மட்டுமே செல்லவேண்டும்.
புலம்பெயர்வு சட்டம் 1983-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனத்திற்கான பதிவு சான்றிதழை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.
வெளிநாட்டு நேரடி வேலைவாய்ப்பு அழைப்பு வருகிறது எனில் அந்நிறுவனத்தின் முகவரி, தொடர்பு எண்கள், என்ன வேலை, எவ்வளவு ஊதியம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சரிபார்க்க வேண்டும். தேவை என்றால் புலம்பெயர்வு அதிகாரியிடம் சரிபார்த்துக் கொள்ளலாம்.
www.meaindia.nic.in, www.india.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு ஆட்சேர்ப்பு முகவர் குறித்த தகவல்களை சரிபார்த்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தகவல்களை உறுதிசெய்யாமல் ஒருபோதும் பணம், பாஸ்போர்ட் சான்றிதழ்கள் உள்ளிட்ட எதையும் கட்டாயம் வழங்கக்கூடாது.
முகவருக்கான கட்டணமாக ஒன்றரை மாத ஊதியம் அல்லது அதிகபட்சமாக 20,000 ரூபாய்க்கு மேல் உரிய ரசீதுகள் இல்லாமல் கொடுக்க வேண்டாம்.
விசா எந்த நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறதோ, அதற்காக மட்டுமே வெளிநாட்டில் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் சிறைத்தண்டனை வரை கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவதற்கான உரிய வங்கிக்கணக்கை வைத்திருப்பது போன்றவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
பாஸ்போர்ட்டை தொலையாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு ஒப்பந்தத்திலோ, வெற்று காகிதத்திலோ கையொப்பமிட்டு தரக்கூடாது. வெளிநாட்டில் நடைபெறும் போராட்டங்களில் பங்கெடுக்கக் கூடாது.
சம்பந்தப்பட்ட நாட்டில் இந்திய தூதரகம் எங்கே உள்ளது, அதன் தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
போலி முகவர்கள் மீது புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இவைதவிர டெல்லியில் உள்ள புலம்பெயர்வு அலுவலகத்திலும் புகார் அளிக்கவும் வழிவகை உள்ளது உள்பட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
- கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தை வெளியுறவுத்துறை கவனித்து வருகிறது.
- அவர்களுக்கு தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் விரிவுபடுத்தி உள்ளது.
புதுடெல்லி:
வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:
இதுவரை 2 விசாரணைகள் நடந்துள்ளன. குடும்பத்தினரிடம் இருந்து மேல்முறையீடு செய்தோம், கைதிகள் இறுதி மேல்முறையீடு செய்தோம். அதன்பிறகு 2 விசாரணைகள் நடைபெற்றன.
இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் விரிவுபடுத்துகிறது.
இதற்கிடையே, டிசம்பர் 3-ம் தேதி சிறையில் இருக்கும் 8 பேரையும் சந்திக்க எங்கள் தூதருக்கு தூதரக அனுமதி கிடைத்தது. இது ஒரு முக்கியமான பிரச்சினை. அதனால் நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம், நாங்கள் எதைப் பகிர்ந்து கொள்ள முடியுமோ அதை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.
- சீன எல்லை அருகே 100 கிமீ தொலைவில் ராணுவ வீரர்கள் இணைந்து பயிற்சி.
- கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மீறுவதாக சீனா கருத்து.
பெய்ஜிங்,
இந்தியா-அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சியின் 18வது பதிப்பு தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில், சீன எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் நடைபெற்று வருகிறது. பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் இரு படையினரும் இணைந்து பணியாற்றுவதை மேம்படுத்துதல், போர் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவையை நோக்கமாக கொண்டு இந்த கூட்டு பயிற்சி நடைபெறுகிறது.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளதாவது: எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்தியாவும் அமெரிக்காவும் நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியானது 1993 மற்றும் 1996ல் சீனாவும் இந்தியாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மீறுவதாகும்.
மேலும் இருதரப்பு நம்பிக்கையை வளர்க்க அழ உதவவில்லை. இது குறித்த தனது கவலையை சீனா, இந்தியா தரப்பிற்கு பகிர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன, இந்திய ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
லடாக் எல்லை அருகே சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தியா ராணுவத்தை குவித்துள்ளது. சீனாவுடனான இருதரப்பு உறவு வளர்ச்சி அடைய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைதி முக்கியம் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
புதுடெல்லி:
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர்.
போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் அந்நாட்டு மக்களுடன் இந்தியா துணை நிற்கும். இலங்கையும், அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது. இலங்கையில் நெருக்கடி சூழலை சமாளிக்க இதுவரை 3.8 பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்