என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை ஆதினம்"

    • மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து வர வேண்டும்.
    • மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கஞ்சனூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் தரிசனம் செய்ய வருகை தந்தார்.

    அவருக்கு விழா கமிட்டியினரும், கிராம மக்களும் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்துள்ளது. பிரகாரங்கள் மற்றும் விமானங்களின் திருப்பணிகள் நடந்து வருகிறது.

    2028-ம் ஆண்டு வரும் கும்பகோணம் மகாமக பெருவிழா மிகப்பெரிய விழாவாக நிச்சயமாக கொண்டாட அரசு முயற்சிக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

    அரசியல் என்பது யார் வேண்டுமானாலும் வருவது என்பது கூடாது. கடுமையாக உழைத்து அனுபவரீதியாக மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அரசியலுக்கு வர வேண்டும். சினிமா அரசியல் தேவையில்லை. சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும்.

    சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என்று நினைப்பது தவறு. மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல். மக்களுக்காக பல்வேறு துறைகளில் தொண்டு செய்யக் கூடியவர்கள் போற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 293-வது மதுரை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிகர தேசிக பரமாச்சர்ய சுவாமிகள் நேற்று கன்னியாகுமரி வந்தார்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்

    கன்னியாகுமரி :

    293-வது மதுரை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிகர தேசிக பரமாச்சர்ய சுவாமிகள்நேற்று கன்னியாகுமரி வந்தார். அவர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.

    அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அங்குஉள்ளஸ்ரீ கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன்சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திரா காந்த விநாயகர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர் ஸ்ரீ சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

    பின்னர் அவர் கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அவருடன் இந்து முன்னணி மாநில பேச்சாளர்வக்கீல்எஸ்.பி.அசோகன், இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர். ராம்ரவிக்குமார், பா.ஜ.க.வின்பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர்சி.எஸ்.சுபாஷ் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    ×