என் மலர்
நீங்கள் தேடியது "சமூக வலைத்தளம்"
- இளம்பெண் அவருக்குப் பதிலளிக்கும்படியாக செய்யும் செயல்தான் வீடியோவை வைரலாக்கி இருக்கிறது.
- வீடியோவை பல லட்சம் பேர் ரசித்து உள்ளனர்.
வாலிபர் ஒருவர், பூங்காவில் அமர்ந்திருக்கும் இளம் பெண்ணை கவர்வதற்காக சாகசம் செய்து சொதப்பும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், பூங்காவில் உள்ள கம்பியில் இளம்பெண் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். அப்போது அங்கு வரும் வாலிபர், அவரது மனதை கவர்வதற்காக அருகில் உள்ள மற்றொரு கம்பியில் தாவி நின்று, சறுக்குவதுபோல பாவனை செய்து, அப்படியே தலைகீழாக சுழன்று வந்து தரையில் நின்றபடி இளம்பெண்ணின் மனநிலையை நோட்டம் விடுகிறார்.
அப்போது அந்த இளம்பெண் அவருக்குப் பதிலளிக்கும்படியாக செய்யும் செயல்தான் வீடியோவை வைரலாக்கி இருக்கிறது. அந்த இளம்பெண், கம்பியில் தலைகீழாக பலமுறை சுழன்று சுழன்று சாகசம் செய்து அசர வைக்கிறார். இதைப் பார்க்கும் வாலிபர், இவர் எத்தனை முறை சுழல்வார் என்பதைப்போல தலையை சுழற்றி சுழற்றி... யப்பா தலை சுற்றுதப்பா... என்று அங்கிருந்து நகர்ந்து செல்வதுடன் வீடியோ முடிகிறது.
சாகசம் செய்து மனதை கவர முயன்ற வாலிபருக்கு, பதில் சாகசத்தால் வாயடைக்கச் செய்த இளம்பெண்ணின் செயலுக்கு வலைத்தளவாசிகள் பாராட்டு கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை பல லட்சம் பேர் ரசித்து உள்ளனர்.
- வீட்டு செல்ல நாய், லேசாக சத்தம் எழுப்பியபடி குழந்தையை விளையாட அழைத்துவிட்டு ஓடுகிறது.
- குழந்தையும் நாயின் மொழியை புரிந்து கொண்டு எழுந்து செல்கிறது.
குழந்தையுடன், நாய் கண்ணாமூச்சி ஆடும் வீடியோ சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது. நடைபழகிய சுமார் ஒன்றரை வயது குழந்தை வீட்டில் தரையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அப்போது அவர்கள் வீட்டு செல்ல நாய், லேசாக சத்தம் எழுப்பியபடி குழந்தையை விளையாட அழைத்துவிட்டு ஓடுகிறது.
குழந்தையும் நாயின் மொழியை புரிந்து கொண்டு எழுந்து செல்கிறது. அப்போது நாய் ஒரு அறையின் வழியாகச் சென்று சுற்றி, மறுவழியாக வந்து விளையாடுகிறது. குழந்தை அந்த வழியில் சுற்றி வரும் முன்பாக எதிர்திசையிலும் ஓடி விளையாட்டு காட்டும் நாய், குழந்தையுடன் அருமையான கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி மகிழ்கிறது.
குழந்தையும் சந்தோஷமாக சிரித்தபடி அங்கும் இங்குமாக நடந்தபடி நாயுடன் விளையாடுகிறது. இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து வலைத்தளத்தில் வெளியிட, அந்த காட்சிகள் 6 நாட்களில் சுமார் 1 கோடியே 44 லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்துள்ளது.
- குழந்தையை அவர் தன் கைகளில் ஏந்தி பரமாரிப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது.
- அந்த பெண்மணிக்கும் அவருடைய மருமகளுக்கும் வயது வித்தியாசமே தெரியாத வகையில் அவர் காட்சியளிக்கிறார்.
உணவு பழக்கம், வேலைப்பளு மற்றும் பொருளாதாரநிலை முதலியவற்றால் ஒருவருடைய முகம் பொலிவை இழந்து இளம்வயதிலேயே வயதானவர்போல காட்சியளிக்கிறார்கள். ஆனால் இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டு பெண் ஒருவர் பாட்டியானாலும் இளமை ததும்ப காட்சி அளிக்கிறார்.
சீனாவின் சூசோ நகரை சேர்ந்த அந்த பெண் 1985-ல் பிறந்தவர். 39 வயதே ஆன இவருடைய மகனுக்கு திருமணமானது. தற்போது அவருடைய மருமகளுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையை அவர் தன் கைகளில் ஏந்தி பரமாரிப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. வீடியோவில் பேரக்குழந்தையை கைகளில் ஏந்தி பாட்டி பால் கொடுக்கிறார்.
பள்ளி மாணவிப்போல காணப்படும் அந்த பெண்மணிக்கும் அவருடைய மருமகளுக்கும் வயது வித்தியாசமே தெரியாத வகையில் அவர் காட்சியளிக்கிறார். பள்ளி மாணவிப்போல் உள்ளீர்கள், ''அழகிய கிழவி'' உள்ளிட்ட கருத்துகளை பதிவிட்டு இதனை வைரலாக்கி வருகிறார்கள்.
- கிட்டத்தட்ட மனிதனின் குணாதிசயங்களை ஒத்து இருக்கும் விலங்கு என்றால் அது குரங்குதான்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தே மனித இனம் உருவானது என்பார்கள் உயிரிலாளர்கள். மொழி தவிர கிட்டத்தட்ட மனிதனின் குணாதிசயங்களை ஒத்து இருக்கும் விலங்கு என்றால் அது குரங்குதான். புத்திசாலி விலங்கு என குரங்கு கூறப்படுவதற்கு வங்காளதேசத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அங்குள்ள மெஹர்பூரில் குரங்குகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது.
இந்தநிலையில் குரங்கு ஒன்றுக்கு கையில் அடிபட்டது. அப்போது அந்த குரங்கு அங்குள்ள மருந்துக்கடைக்கு தானாக சென்றது. முதலில் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர், குரங்குக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்தார். அங்கு கடைக்கு வந்த வாடிக்கையாளர்களும் குரங்குக்கு உதவி செய்ய முற்பட்டனர். அப்போது அதன் கையில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து தடவி முதலுதவி சிகிச்சை அளித்தனர். குரங்கும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
- ஒரு சில வீடியோக்கள் மட்டும் மொழி, மாநிலம் கடந்து ரசிகர்களின் அன்பை பெறுகின்றன.
- இதுவரை லட்சக்கணக்கானோரின் லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகிறது.
சமூகவலைத்தளங்களில் பலரும் நடனம் மற்றும் பாடல்களை பாடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். எனினும் எல்லா வீடியோக்களும் மக்களின் கவனம் பெறுவதில்லை. ஒரு சில வீடியோக்கள் மட்டும் மொழி, மாநிலம் கடந்து ரசிகர்களின் அன்பை பெறுகின்றன.
அந்தவகையில் ஒரு பெண் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பிரபல இந்தி பாடலான `உயி அம்மா' பாடலுக்கு சிறுமியுடன் சேர்ந்து அவர் நடனமாட அதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றினர்.
அதில் சேலை அணிந்து கொண்டு அவர் ஆடிய நடனம் பலரையும் ஈர்த்துள்ளது. இதுவரை லட்சக்கணக்கானோரின் லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகிறது.
- வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின.
- பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனை தொடர்ந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் இந்த வெள்ளம் ரத்தம்போல செந்நிறத்தில் பாய்ந்தது. இந்த தண்ணீர் கடலில் கலந்ததால் கடலும் சிவப்பாக மாறியது.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின. இதனை பார்த்த பலரும் இது என்ன ரத்த மழையா? அல்லது கடவுளின் கோபமா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஆனால் உண்மையில் இது அந்த பகுதியின் இயற்கை அதிசயம் ஆகும். அதாவது ஹோர்மோஸ் தீவில் உள்ள மண்ணில் அதிகளவு இரும்பு ஆக்சைடு இருப்பதால் இதுபோன்று ஏற்படுவதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இயற்கையின் இந்த அழகை காணவே அங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் எனவும் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
- டுவிட்டர் நிறுவனத்தை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் பிரீமியம் சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- முதற்கட்டமாக கட்டண முறை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகமாக இருக்கிறது.
டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டர் புளூ சந்தா முறையை அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. புதிய டுவிட்டர் புளூ சந்தாவில் வெரிஃபிகேஷன் புளூ டிக் மற்றும் தேடல்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதுதவிர ஏராளமான சேவைகள் டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில், தற்போது இன்ஸ்டாகிராம் இணைந்து இருக்கிறது. இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான மெட்டா புதிய கட்டண முறையை அறிவித்து இருக்கிறது. இந்த சந்தா மெட்டா வெரிஃபைடு என அழைக்கப்படுகிறது. புதிய மெட்டா வெரிஃபைடு மூலம், மெட்டா நிறுவனம் போலி அக்கவுண்ட்கள் மற்றும் ஆள்மாறாட்டத்தை குறைக்க செய்வது மற்றும் இதர பலன்களை வழங்குகிறது.
மெட்டா தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பர்க் இன்ஸ்டாகிராம் கட்டண முறையை அறிவித்தது. மெட்டா வெரிஃபைடு கட்டண முறை வலைத்தளத்திற்கு மாதம் 11.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 990 என்றும் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வலைத்தளங்களில் மாதம் 14.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,240 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கட்டண முறையின் கீழ் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்கு வெரிஃபைடு டிக் வழங்கப்படுகிறது. புதிய முறை மெட்டா சேவைகளின் கீழ் தனித்துவம் மற்றும் செக்யுரிட்டியை வழங்கும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். முதற்கட்டமாக மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இந்த வாரம் வழங்கப்படுகிறது.
இதை் தொடர்ந்து விரைவில் மற்ற நாடுகளில் மெட்டா வெரிஃபைடு சேவை வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. மெட்டா வெரிஃபைடு சந்தாதாரர்களுக்கு வெரிஃபைடு பேட்ஜ், கூடுதல் செக்யுரிட்டி மற்றும் நேரடி வாடிக்கையாளர் சேவை மைய வசதி வழங்கப்படும் என மெட்டா தெரிவித்து இருக்கிறது.
- டுவிட்டரை தொடர்ந்து மெட்டா நிறுவனமும் கட்டண முறையில் வெரிஃபைடு சேவையை வழங்க துவங்கியது.
- டுவிட்டர் மட்டுமின்றி டெலிகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற தளங்களிலும் இதே போன்ற கட்டண முறை அமலில் இருந்துவருகிறது.
மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கட்டண சந்தா முறையை அறிவித்து இருக்கிறது. புதிய கட்டண சந்தா முறையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பணம் கொடுத்து வெரிஃபிகேஷன் பெற முடியும். முன்னதாக இதே போன்ற சேவையை எலான் மஸ்க்-இன் டுவிட்டர் அறிமுகம் செய்தது.
மெட்டா வெரிஃபைடு சேவை பயனர்களுக்கு புளூ பேட்ஜ் மூலம் அக்கவுண்ட்களை அரசு அடையாள அட்டை மூலம் வெரிஃபை செய்கிறது. இதற்கான கட்டணம் வெப் வெர்ஷனில் மாதம் 11.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 990 என்றும் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் மாத கட்டணம் 14.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,240 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பிப்ரவரி மாத வாக்கில் இந்த சேவைக்கான டெஸ்டிங் துவங்கிய நிலையில், தற்போது வெளியாகி இருக்கிறது. முன்னதாக ஸ்னாப்சாட் மற்றும் டெலிகிராம் போன்ற சேவைகளிலும் இதேபோன்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சேவையின் மூலம் சமூக வலைத்தள நிறுவனங்கள் வருவாய் ஈட்ட துவங்கி இருக்கின்றன.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது அமெரிக்கா மற்றும் மேலும் சில நாடுகளில் அறிமுகமாகி இருக்கிறது. முறையான அரசு அடையாள அட்டையுடன் மாத சந்தா செலுத்தும் பட்சத்தில் வெரிஃபைடு வசதி வழங்கப்படும்.
- டுவிட்டர் நிறுவனத்தின் சான்ஃபிரான்சிஸ்கோ அலுவலகம் நேற்று ஊழியர்கள் இன்றி காலியாக இருந்தது.
- ஊழியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருக்கிறார். கடந்த புதன் கிழமை அனுப்பிய மின்னஞ்சல் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் படி, எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது குறித்து டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை 2.30 மணிக்கு எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில், "Office is not optional" அதாவது அலுவலகம் விருப்பம் இல்லை என தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் சான்ஃபிரான்சிஸ்கோ அலுவலகம் நேற்று ஊழியர்கள் இன்றி காலியாக இருந்தது என்று எலான் மஸ்க் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இரவு நேரத்திலோ அல்லது அதிகாலை சமயங்களிலோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் நள்ளிரவு 2.30 மணிக்கு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் அவர்களுக்கு பழகிப் போன ஒன்றுதான்.
எலான் மஸ்க் கைப்பற்றுவதற்கு முன் டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவதற்கான அனுமதி பரவலாக வழங்கப்பட்டு இருந்தது. நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க் ஊழியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை எலான் மஸ்க் ஆரம்பத்தில் இருந்தே ஊக்குவித்தது இல்லை. கடந்த ஆண்டு டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க், "டெஸ்லா ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணி நேரம் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு செய்யாதவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கருதப்படுவர்," என்று தெரிவித்து இருந்தார்.
- அயன்சென் என்ற புகைப்படக்காரர் பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
- இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோக்கள் 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
சமீப காலமாக திருமணங்களில் மணமக்களை வைத்து எடுக்கப்படும் வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் அயன்சென் என்ற புகைப்படக்காரர் பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட போது அவர் தனது கேமிராவில் மணமகளை சரியான வெளிச்சத்தில் எடுக்க முடிவு செய்தார். அதன்படி அவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோக்கள் 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இசை எவ்வாறு ஆன்மாவை எளிதில் குணப்படுத்தும் என்பதற்கு வீடியோ உதாரணமாக உள்ளது.
- வீடியோவில் தாத்தா பியானோவில் பெப்பியான டிராக் வாசிக்கிறார்.
இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் வைரலாக பரவுவது உண்டு. அந்த வகையில் 100 வயது தாத்தா ஒருவர் பியானோ வாசிக்கும் வீடியோ டுவிட்டரில் அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது.
இசை எவ்வாறு ஆன்மாவை எளிதில் குணப்படுத்தும் என்பதற்கு இந்த வீடியோ உதாரணமாக உள்ளது. வீடியோவில் தாத்தா பியானோவில் பெப்பியான டிராக் வாசிக்கிறார். வீடியோ முழுவதும் அவர் பியானோவில் மிகவும் சீராக வாசிக்கிறார். இந்த வீடியோ 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
சில பயனாளர்கள் தாத்தாவின் திறமையை வியந்து பாராட்டுகின்றனர். இந்த வீடியோ அழகாக மட்டுமல்ல பலருக்கு உத்வேகமாகவும் இருப்பதாக பாராட்டுக்கள் பெற்றுள்ளது.
- திருப்தியான உறவில் இருப்பதாக ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
- மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
டென்மார்க்கில் உள்ள மகிழ்ச்சிக்கான ஆய்வு மையம், சமூக வலைத்தளங்களை அடிப்படையாக வைத்து ஒரு ஆய்வை நடத்தியது. அதில் சமூக ஊடகங்களில் வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான படங்களைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் காதலர்கள், தம்பதிகளிடையே பெருகிவருவதாக கண்டறிந்துள்ளனர். இதுமட்டுமல்ல, பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்திருக்கின்றன.
இதுபற்றிய ஆய்வு நடத்திய மார்ட்டீன் கூறுகையில்... ''சமூக வலைத்தளங்களில், தங்களது குடும்ப வாழ்க்கை பற்றியும், காதல் வாழ்க்கை பற்றியும் அதிகமாக பகிர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை வெளிகாட்டிக்கொள்ள இப்படியான படங்களை அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
தங்களுடைய காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்ற அந்தரங்கமான தருணங்களின்போது எடுக்கப்பட்ட படங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பேரார்வத்துடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
தங்களை மகிழ்ச்சியானவர்களாக சமூக ஊடகங்களில் காட்டிக்கொள்ளும் காதலர்களும், தம்பதிகளும் உண்மையில் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறார்களா? 'இல்லை' என்றே பல உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஏனென்றால், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் காதலர்களும், தம்பதிகளும் தங்களுடைய உறவை வெளியுலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள்.
காதலர்கள் இப்படி தொடர்ந்து தங்களுடைய பரஸ்பர அன்பை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திக்கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் தங்களுடைய உறவு வெற்றிகரமாக இருக்கிறது என்று மற்றவர்களை நம்ப வைப்பதற்குத்தான். மற்றவர்களை நம்பவைப்பதோடு மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியான, திருப்தியான உறவில் இருப்பதாக ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
மகிழ்ச்சியாக இருக்கும் காதலர்கள், தங்களுடைய உறவைப் பற்றி சமூக ஊடகங்களில் வாயே திறப்பதில்லையாம். மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தாம் வெளி உலகுக்கு தங்களை மகிழ்ச்சியானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். குறிப்பாக சமூக ஊடகங்களில் தங்களுடைய மகிழ்ச்சியான உறவை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்'' என்று கூறினார்.
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் காதலர்களும், தம்பதிகளும் தங்களுடைய உறவை வெளியுலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.