என் மலர்
நீங்கள் தேடியது "உத்தர பிரதேசம்"
- எவ்வளவு தேடியும் அவரால் தனது மொபைல் போனை கண்டறிய முடியவில்லை.
- புகார் கொடுத்த குமாரை அதிரச் செய்யும் வகையில் பதில் அளித்தார்.
உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 91 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள கிராமம் கனௌர். பாஹதுர்கார் காவல் நிலைய வட்டத்திற்குள் வரும் இந்த கிராமத்தை சேர்ந்தவர் குமார். கடந்த சனிக்கிழமை அன்று மருந்து வாங்கச் சென்ற இடத்தில் தனது மொபைல் போனை குமார் தவறவிட்டுள்ளார். எவ்வளவு தேடியும் அவரால் தனது மொபைல் போனை கண்டறிய முடியவில்லை.
இதன் காரணமாக காவல் நிலையம் விரைந்த குமார் தனது மொபைல்போன் காணாமல் போனதை கூறி, அதனை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார். மொபைல் போனை பறிக்கொடுத்த குமார் மனவேதனையில் கூறிய புகாரை முழுமையாக கேட்டுக் கொண்ட போலீஸ் அதிகாரி, இறுதியில் புகார் கொடுக்க குமாரை அதிரச் செய்யும் வகையில் பதில் அளித்தார்.
மொபைல் பறிக்கொடுத்த குமாரிடம் அதனை சீக்கிரம் கண்டுபிடிக்கலாம் என்று கூறுவதற்கு பதில் போலீஸ் அதிகாரி- முதலில் கடைக்குச் சென்று சூடான பாதுஷா அல்லது ஜிலேபி ஆகியவற்றில் ஒரு கிலோ வாங்கி வருமாறு கூறினார். இனிப்பு வாங்காமல் போலீசார் புகாரை பதிய மாட்டார்கள் என்று உணர்ந்தவராக மொபைலை பறிக்கொடுத்த குமார் இனிப்பு கடைக்கு சென்று ஜிலேபி வாங்கி வந்தார்.
குமார் வாங்கி வந்த ஜிலேபியை பெற்றுக் கொண்ட போலீசார், அதன்பிறகு மொபைல் போன் காணாமல் போனதை பதிவு செய்து கொண்டனர். முன்னதாக இதே மாதத்தில் காவலர் ஒருவர் பணியில் இருக்கும் போது உருளைக் கிழங்குகளை லஞ்சமாக பெற்றதற்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
- இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- 20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் இந்த பகுதிக்கு திரும்பி உள்ளன.
உத்தர பிரதேசத்தின் இந்தோ-நேபாள எல்லை மாவட்டமான பஹ்ரைச்சில் உள்ள மஹாசி தொகுதியின் 30 கிராமங்களில் ஓநாய்கள் கூட்டத்தால் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளனர்.
ஓநாய்கள் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால், இப்பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கமின்றி தவிக்கும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் காவல் காத்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வனத்துறையினர், தெர்மல் ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களுடன் ஓநாய்களை தேடிவருகின்றனர்.
இது தொடர்பாக பஹ்ரைச் மாவட்டத்தின் வனத்துறை அதிகாரி அஜீத் பிரதாப் சிங் கூறுகையில், "ஜூலை 17 அன்று ஓநாய் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக முதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
தெர்மல் ட்ரோன்களின் உதவியுடன் ஓநாய்களின் கூட்டத்தை பிடிக்க அதிகாரிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். 6 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓநாய்கள் வழித்தடங்களில் 4 பொறிகள் வைத்துள்ளோம்" என்று கூறினார்.
வன அதிகாரிகளின் மதிப்பீட்டில், மனிதர்களை மட்டுமே தாக்கும் 5-6 ஓநாய்கள் இப்பகுதியில் உள்ளன.
20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் இந்த பகுதிக்கு திரும்பி உள்ளன. 2004-ம் ஆண்டில், ஓநாய்களின் வெவ்வேறு தாக்குதல்களில் சுமார் 32 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 2020-ம் ஆண்டிலும் ஓநாய் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.
குழந்தைகளுடன் குடும்பமாக திறந்த வெளியில் தூங்க வேண்டாம் என அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- பெண்கள் ஆணைய துணைத் தலைவர் பதவி ஒரு வருட கால பதவியாகும்.
- இல்லையெனில் உ.பி. அரசு முடிவு எடுக்கும் வரை பதவியில் நீடிக்க முடியும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உ.பி.யில் பாஜக-வுக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையில்தான் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சி தலைவர்களும் பரஸ்பர கருத்து விமர்சனங்களவை முன்வைப்பது உண்டு. இதனால் அரசியலில் எலியும் பூனையுமாக திகழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் மாநில பெண்கள் ஆணையத்தின் துணைத் தலைவராக அகிலேஷ் யாதவின் சகோதரர் மனைவி அபர்னா யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல், பபிதா சவுகானை தலைவராகவும், அபர்னா யாதவ் மற்றும் சாரு சவுத்ரி ஆகியோரை துணைத் தலைவராகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர்களுடைய பதவிக்காலம் ஒரு வருடம் அல்லது உ.பி. அரசு முடிவு எடுக்கும்வரை ஆகும்.
சமாஜ்வாடி கட்சியை நிறுவிய மறைந்த முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்னா யாதவ் ஆவார். இவர் பிரதீக் யாதவ் மனவைி ஆவார். அகிலேஷ் யாதவின் வளர்ப்பு சசோதரர் பிரதீக் யாதவ் ஆவார்.
அபர்னா யாதவ் 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் லக்கோன் கான்ட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2022-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
- உ.பி.யில் ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
- உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓநாய்களை கூண்டு வைத்து பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன. மயக்க மருத்து கொடுத்து ஓநாய்களை சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அது பயனளிக்காதநிலையில் அவற்றை சுட்டு கொல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசை விட ஓநாய்கள் அதி புத்திசாலிகளாக இருப்பதால் அவற்றை பிடிப்பது எளிதான காரியமில்லை அம்மாநில பெண் அமைச்சர் பேபி ராணி மவுரியா பேசியுள்ள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "பல குழுக்கள் அமைக்கப்பட்டு ஓநாய்கள் தேடப்பட்டு வருகின்றன. நாங்கள் அவற்றைப் பிடித்து விடுவோம். ஆனால் ஓநாய்கள் அரசாங்கத்தை விட, புத்திசாலித்தனமாக இருப்பதால் பிடிப்பதற்கு நேரம் எடுக்கிறது. வனத்துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தேடுதலை மேற்பார்வையிட்டு வருகிறார்"என்று தெரிவித்துள்ளார்.
- பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும்
- மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லை.
உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் மாட்டு தொழுவத்தில் படுத்திருப்பது புற்றுநோயை குணப்படுத்தும் என்றும் பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும் என்றும் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. அமைச்சர் சஞ்சய் கங்வார் நவ்காவா பகடியாவில் கோசலா ஒன்றை திறந்து வைத்தார். அதன்பிறகு பேசிய அவர், "மாட்டு தொழுவத்தில் படுத்து அதை சுத்தம் செய்வதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும். பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும்."
"ரத்த அழுத்த நோயாளி ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பசுவின் முதுகில் தடவினால் அவர்களின் மருந்து அளவை 10 நாட்களில் 20 மில்லி கிராமில் இருந்து 10 மில்லி கிராமாக குறைக்கலாம்."

"இங்கே ரத்த அழுத்த நோயாளி இருந்தால் பசுக்கள் உள்ளன. அந்த நபர் தினமும் காலை, மாலை நேரங்களில் மாட்டின் முதுகில் தடவிக் கொடுக்க வேண்டும். மாடுகள் மூலம் உருவாகும் பொருட்கள் ஏதோ ஒருவகையில் நமக்கு பயனுள்ளதாகவே இருக்கும். மாட்டு சாணம், புண்ணாக்குகளை எரிப்பதன் மூலம் கொசுக்களை ஒழிக்க முடியும்."
"தாய்க்கு சேவை செய்யவில்லை என்றால் அம்மா யாருக்காவது தீங்கு செய்வாரா? மாடுகள் விளை நிலங்களில் மேய்வதாக கூறுகின்றனர். மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லை. மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லாததால் இந்த பிரச்சினை உருவாகிறது. ஈத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் மாட்டு தொழுவத்திற்கு வரவேண்டும். ஈத் அன்று செய்யப்படும் வரமிளகாய் பசும் பாலில் செய்யப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.
- பெட்ரோல் பங்க் வந்த எம்.எல்.ஏ. ஊழியரின் கோரிக்கையால் அதிர்ச்சி.
- இருவரின் உரையாடல் வீடியோவை எம்.எல்.ஏ. முகநூலில் பதிவேற்றம் செய்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் போட வந்த உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரிடம், பெட்ரோல் பங்க் ஊழியர் விடுத்த கோரிக்கை அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
44 வயதான அகிலேந்திர கரே என்ற பெட்ரோல் பங்க் உதவியாளர், தனக்கு மணப்பெண் கண்டுபிடிக்க உதவுமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத சரகாரி தொகுதி எம்.எல்.ஏ. பிரிஜ்பூஷன் ராஜ்புத் அதிர்ச்சியடைந்தார்.
சமீபத்திய தேர்தல்களில் ராஜ்புத்துக்கு வாக்களித்ததாகக் கூறிய காரே, எம்.எல்.ஏ.வின் வெற்றியில் தனது பங்கு இருந்ததாக தெரிவித்தார். இதற்கு கைமாறு செய்யும் வகையில், எம்.எல்.ஏ. தனக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் உதவ வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
எம்.எல்.ஏ. மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர் இடையிலான இந்த உரையாடல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதனை அந்த எம்.எல்.ஏ. தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
- நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்கு இடையூறாக இருந்த நூரி மசூதியின் சுமார் 20 மீட்டர் கட்டடப் பகுதிகள் இடிப்பு.
- மசூதி 1839-ல் கட்டப்பட்டது. அப்பகுதியில் சாலை போடப்பட்டது 1956-ல் எனத் தெரிவித்தது மசூதி நிர்வாகம்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 185 வருட பழமையான மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் இடிக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் ஃபதேபூரில் உள்ள பண்டா-பஹ்ரைச் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒருபகுதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பகுதி இடிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் புல்டோசர் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
செயற்கைக்கோள் மற்றும் மசூதியின் வரலாற்றுப் படங்களை மேற்கொள் காட்டி கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்த கட்டடம் ஆக்கிரமித்து கட்டப்பட்டது என மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி பொதுப்பணித்துறையால், இந்த பகுதியை இடிப்பதற்கு அதிகாரிகளால் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
பொதுப்பணித்துறையால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஒருமாதம் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. அதை பின்பற்ற அவர்கள் உறுதி அளித்தனர். ஆனால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பண்டா-பஹ்ரைச் நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்கு இடையூறாக இருந்த நூரி மசூதியின் சுமார் 20 மீட்டர் கட்டடப் பகுதிகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.
லலாவுலி நூரி மசூதி 1839-ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த பகுதியில் சாலை 1956-ல் போடப்பட்டது. இருப்பினும், மசூதியின் சில பகுதிகள் சட்டவிரோதம் என பொதுப்பணித்துறை கூறுகிறது என மசூதியின் நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது.
அதேவேளையில் மாவட்ட கூடுதல் கலெக்டர் "ஆகஸ்ட் மாதம் மசூதி நிர்வாகம் உள்பட 139 நிறுவனங்களுக்கு (நில உரிமையாளர்கள்) நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பகுதியை நீக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாலை சரிசெய்யும் மணி, பாதாள சாக்கடை திட்டம் கட்டுமான பணிக்காக இந்த இடம் பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில் நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பு பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது" என்றார்.
கடந்த காலங்களில் மாவட்ட நிர்வாகம் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் முறையாக தெரிவித்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.
- நூரி மசூதியின் சுமார் 20 மீட்டர் கட்டடப் பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளது.
- மசூதியின் சில பகுதிகள் சட்டவிரோதம் என பொதுப்பணித்துறை கூறுகிறது
உத்தர பிரதேச மாநிலத்தில் 180 வருட பழமையான மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் இடிக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் ஃபதேபூரில் உள்ள பண்டா-பஹ்ரைச் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒருபகுதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பகுதி இடிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் புல்டோசர் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
லலாவுலி நூரி மசூதி 1839-ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த பகுதியில் சாலை 1956-ல் போடப்பட்டது. இருப்பினும், மசூதியின் சில பகுதிகள் சட்டவிரோதம் என பொதுப்பணித்துறை கூறுகிறது என மசூதியின் நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 180 ஆண்டு பழமையான மசூதி இடிக்கப்பட்டதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "உ.பி. மாநிலத்தில் 180 ஆண்டு கால நூரி மசூதியை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் 'அரசியல் புல்டவுசர்' தகர்த்துள்ளது. சாலை விரிவாக்கம் எனில், அது மசூதிகளுக்கு மட்டும்தானா? அவர்களது நோக்கம் என்பது சாலை விரிவாக்கமல்ல. அதன் பெயரால் கலவரம் உருவாக்குவதே நோக்கம்" என்று பதிவிட்டுள்ளார்.
- முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 68 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
- இதனையடுத்து ஷாருக்கான் - முகமது அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
விஜய் ஹசாரே கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் உத்தர பிரதேசம்- தமிழ்நாடு அணிகள் மோதி வருகிறது.
இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய தமிழ்நாடு அணி 68 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஷாருக்கான் - முகமது அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரை சதம் கடந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷாருக்கான் சதம் விளாசி அசத்தினார்.
இறுதியில் தமிழ்நாடு அணி 47 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 132 ரன்களும் முகமது அலி 76 ரன்களும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் மத நிகழ்ச்சி ஒன்றுக்காக போடப்பட்ட மேடை சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மூங்கில் மூலம் போடப்பட்டு இருந்த மேடை பாரம் தாங்க முடியாமல் திடீரென சரிந்து கீழே விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
சம்பவம் நடைபெற்ற கோவிலில் "லட்டு மஹோத்சவம்" என்ற நிகழ்வுக்கு ஜெயின் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதையடுத்து, திரளானோர் கோவிலுக்கு வருகை தந்து லட்டு வழங்கி வந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் அருகே மூங்கிலில் மேடை போன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பக்தர்கள் ஏறி சென்ற நிலையில், அதிக பாராம் தாங்க முடியாமல் மேடை சரிந்தது.
மேடை சரிந்ததை அடுத்து, காயமுற்றவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிறு காயங்களுடன் தப்பியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலத்த காயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ராகேஷ் ஜெயின் என்பவர் கூறும் போது, இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இதற்காக மேடை அமைக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், பூசாரிகள் லட்டு வழங்க சென்ற போது, மேடை சரிந்து கீழே விழுந்தது. அப்போது நூற்றுக்கும் அதிகமானோர் மேடையில் இருந்தனர், என்று தெரிவித்தார்.
கோவில் நிகழ்வில் மேடை சரிந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மேலும், மீட்பு பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார். காயமுற்றோர் விரைந்து குணமடைய முதலமைச்சர் பிரார்த்தனை செய்து கொள்வதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
- பாஜக ஆட்சியின் கீழ் உத்தர பிரதேசம் பயம், அநீதி, அட்டூழியங்கள் நிறைந்ததாகியுள்ளது.
- உங்களுடைய சட்டம்-ஒழுங்கு எங்கே?, உங்களுடைய போலியான பெட்டி பசாயோ (Beti Bachao) தற்போது எங்கே?.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஒரு கிராமத்தில் 22 வயதான இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 30-ந்தேதி காணாமல் போன நிலையில், அடுத்த நாள் காலையில் கிராமத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் கண்கள் நோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும், எலும்புகள் முறிந்து இருந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தலித் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்படடு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு மிகப்பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேற்கு வங்காள மாநில ஆளுங்கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
பாஜக ஆட்சியின் கீழ் உத்தர பிரதேசம் பயம், அநீதி, அட்டூழியங்கள் நிறைந்ததாகியுள்ளது. 22 வயது இளம் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் பாஜக இதுவரை மவுனமாக உள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உங்களுடைய சட்டம்-ஒழுங்கு எங்கே?, உங்களுடைய போலியான பெட்டி பசாயோ (Beti Bachao) தற்போது எங்கே?. தலித் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். நீங்கள் வேறுவிதமாக பார்க்கிறீர்கள். பாஜக-வின் இரட்டை என்ஜின் அரசு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பு வாக்குறுதி வெற்று வார்த்தைகளாகவே உள்ளன.
இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
- சட்டசபையில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா எச்சில் கறைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
லக்னோ:
உத்தர பிரதேச சட்டசபையில் சில எம்.எல்.ஏ.க்கள் பான் மசாலாவை மென்று எச்சில் துப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபையில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா எச்சில் கறைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, எச்சில் கறைகளை சுத்தம் செய்யவேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்கவேண்டும் என்றும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.
மேலும், இந்த செயலை செய்த எம்.எல்.ஏ. தாமாக முன் வந்து செயலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், உத்தர பிரதேச சட்டசபையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்து சபாநாயகர் சதீஷ் மஹானா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பிறகு பேசிய சபாநாயகர், சட்டசபை வளாகத்திற்குள் ஊழியர்கள், அதிகாரிகள் அல்லது வேறு எந்த தனிநபர்கள் உட்பட எவரும் குட்கா அல்லது பான் மசாலா உட்கொள்வது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். விதிகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.