search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தர பிரதேசம்"

    • ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தது உத்தர பிரதேச அரசு
    • உயிரிழந்த 6 பேரில் 3 பேர் குழந்தைகள் என காவல்துறை தகவல்

     ஃபிரோசாபாத்:

    உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் வீட்டு உபயோகத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் பொருட்களை விற்கும் கடை செயல்பட்டு வந்துள்ளது. கடைக்கு மேலே உள்ள முதல் தளத்தில் உரிமையாளரின் குடும்பத்தினர் வசித்து வந்தனர். நேற்று இந்த கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.

    இந்த தீ முதல் தளத்திற்கு வேகமாக பரவியது. ஆக்ரா, மெயின்புரி, எட்டா மற்றும் ஃபிரோசாபாத் ஆகிய இடங்களில் இருந்து 18 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மேலும் 12 காவல் நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரண்டரை மணி நேரம் இந்த பணி நீடித்தது.

    இந்த தீ விபத்தில் கடை உரிமையாளரின் வீடு எரிந்து நாசமானது. தீயில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி தெரிவித்துள்ளார். தீக் காயங்களுடன் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி என்பதால், மீட்பு பணியில் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆஷிஷ் திவாரி கூறியுள்ளார். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
    • சிறுமியை போலீஸ்காரர்கள் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் நகரில் அரசு விருந்தினர் இல்லம் அருகே நேற்று முன்தினம் 13 வயது சிறுமி தலையில் பலத்த காயமடைந்து கிடந்தார். ரத்தம் சொட்டச் சொட்ட வலியால் துடித்த அந்த சிறுமி தனக்கு உதவி செய்யும்படி அழைத்தார். சத்தம் கேட்டு அங்கு பலர் திரண்டனர். ஆனால் யாரும் அந்த சிறுமிக்கு உதவி செய்ய முன்வரவில்லை. மாறாக, அந்த சிறுமியை செல்போனில் வீடியோ எடுப்பதிலும் புகைப்படம் எடுப்பதிலும் பிசியாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    சிறுமி தனது ரத்தக்கறை படிந்த கைகளை நீட்டி, உதவிக்காக அழைப்பதும், சுற்றி நிற்கும் ஆண்கள் அவளை வெவ்வேறு கோணங்களில் படம்பிடிப்பதில் மும்முரமாக இருப்பதும் அந்த வீடியோவில் உள்ளது. போலீசுக்கு தகவல் கொடுத்தாச்சா? என ஒரு குரல் கேட்கிறது. இன்னொருவர் காவல்துறை தலைவரின் போன் நம்பரை கேட்கிறார். ஆனால் அந்த சிறுமிக்கு உதவ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தகவல் அறிந்து போலீசார் வரும் வரை அந்த சிறுமி வலியால் துடித்தபடி காத்திருந்தார். இதேபோல் அந்த சிறுமியை போலீஸ்காரர் தூக்கிக்கொண்டு ஓடி, ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவும் வெளியாகி உள்ளது.

    விசாரணையில் அந்த சிறுமி, உண்டியல் வாங்குவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தும், ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சிறுமியுடன் ஒரு வாலிபரும் சென்றுள்ளார். அது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அவர் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. எனவே, அந்த பெண் தாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. எனினும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது உறுதி செய்யப்படும்.

    சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    • காவல்துறையில் 22,000 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • காவலர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    லக்னோ:

    காவலர் நினைவுத் தினத்தையொட்டி உத்தர பிரதேசத்தில் பணியின் போது உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத், நிகழ்ச்சியில் பேசியதாவது:

    நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது. கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டர்களில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். 4,453 பேர் காயமடைந்தனர்.

    காவலர்களின் குடும்ப நலன் மற்றும் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறையில் 22,000 பெண்கள் உட்பட 1,50,231 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    45,689 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுதப்படை காவலர்கள், தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கு தொலைபேசி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.2,000 கூடுதலாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சிசிடிவி பதிவை கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
    • நாயை செங்கல்லால் அடித்துக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    கான்பூர்:

    உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தெருநாயை அடித்துக் கொன்ற வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி என்ற நபர் சாலையில் நடந்துசெல்லும்போது அவரைப் பார்த்து தெருநாய் தொடர்ந்து குரைத்து பயமுறுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், செங்கல்லை நாயின் தலையில் போட்டு கொன்றுள்ளார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதனை கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாக்கியை கைது செய்தனர். அவர் நாயை அடித்துக்கொல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • அலிகர் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

    இந்நிலையில் மழையைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுதல், வீடு இடிந்து விழுதல், இடிமின்னல் போன்ற விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 7 பேர் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 11 பேர் காயமடைந்துள்ளனர்.

    அலிகர் மாவட்டத்தில் மூன்று நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிப்பதால், சனிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    நேற்று காலை முதல் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 140 மி.மீ மழை பதிவானதாக எட்டாவா வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆக்ராவிலும் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது.

    • கள ஆய்வின்போது, மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
    • ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து என்பதால் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என வாதம்

    வாரணாசி:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றததில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதை அடுத்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு மசூதி வளாகத்தில் 3 நாட்கள் வீடியோ ஆய்வு பணிகளை நடத்தியது. அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி வழக்கு தொடர்ந்தது.

    வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்து பெண்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாமா? என்பதை வாரணாசி மாவட்ட நீதிமன்றமே விசாரித்து முடிவு செய்யலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்தன. மஸ்ஜித் கமிட்டி தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து. எனவே, இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை. மசூதி தொடர்பான விவகாரத்தை வக்பு வாரியம் மட்டுமே விசாரிக்க உரிமை உண்டு,' என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது,' என்றார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், தீர்ப்பை ஒத்திவைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது முஸ்லிம் அமைப்பு தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்துவதற்காக இந்து மத பெண்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறிய நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தகுதியின் அடிப்படையில் வாதங்கள் நடைபெறும் என நீதிபதி கூறினார்.

    இந்த உத்தரவை எதிர்த்து, இஸ்லாமிய தரப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. தீர்ப்பையொட்டி வாரணாசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மசூதி வளாக சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்கும்படி வழக்கு
    • ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து என்பதால் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என வாதம்

    வாரணாசி:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றததில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதை அடுத்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு மசூதி வளாகத்தில் 3 நாட்கள் வீடியோ ஆய்வு பணிகளை நடத்தியது. அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி வழக்கு தொடர்ந்தது.

    வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்தன. மஸ்ஜித் கமிட்டி தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து. எனவே, இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை. மசூதி தொடர்பான விவகாரத்தை வக்பு வாரியம் மட்டுமே விசாரிக்க உரிமை உண்டு,' என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது,' என்றார்.

    காசி விஸ்வநாதர் கோவிலில் பாதுகாப்பு

    காசி விஸ்வநாதர் கோவிலில் பாதுகாப்பு

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், தீர்ப்பை செப்டம்பர் 12ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். அதன்படி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படஉள்ளது. தீர்ப்பையொட்டி வாரணாசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெருக்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    • பாலியல் வன்கொடுமையால் சிறுமிக்கு குழந்தை பிறந்ததும் அதனை தத்து கொடுக்க கூறி மிரட்டி உள்ளனர்.
    • குற்றவாளி முகமது ரஜி என்பவரே பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரியல் தந்தை என உறுதியானது.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பிறந்த குழந்தை, 28 ஆண்டுகளுக்கு பின் தன் தாயை கண்டுபிடித்து நீதி கிடைக்க போராடிய சம்பவம் நடந்துள்ளது.

    உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. அவர்களுடன் முகமது ரஜி என்ற குட்டு ஹசன் மற்றும் நாக்கி ஹசன் ஆகிய இரு சகோதரர்கள் நெருங்கி பழகியுள்ளனர். ஓரளவு பரிச்சயம் ஆனதும், அந்த குடும்பத்தினரின் நம்பிக்கையை அவர்கள் பெற்றுள்ளனர். அதனை பயன்படுத்தி கொண்டு அந்த குடும்பத்தில் இருந்த சிறுமியை 2 பேரும் பல முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதில், 12 வயதில் சிறுமி கர்ப்பமுற்றுள்ளார். சிறுமிக்கு குழந்தை பிறந்ததும், அதனை தத்து கொடுக்க கூறி மிரட்டிய முகமது ரஜி, போலீசுக்கு போக கூடாது என எச்சரிக்கையும் விடுத்து உள்ளார். இந்த சம்பவம் 1994ல் நடந்துள்ளது.

    சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனது. 2021-ம் ஆண்டு அந்த சிறுமியின் மகன், பாதிக்கப்பட்ட தனது தாயாரை அலைந்து, தேடி கண்டுபிடித்து உள்ளார். நடந்த குற்ற சம்பவத்திற்கு நீதி கிடைக்க முயற்சிக்கும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு மார்ச் 4ல் ஷாஜகான்பூரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. வழக்கு கோர்ட்டுக்கு சென்றது.

    இதன்பின் நடந்த விசயங்களை பற்றி ஷாஜகான்பூர் சிறப்பு போலீஸ் சூப்பிரெண்டு எஸ். ஆனந்த் விவரிக்கிறார். அவர் கூறியதாவது:-

    2021-ம் ஆண்டு மார்ச் 4ல் ஷாஜகான்பூரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பின்னர், கோர்ட்டு உத்தரவின்படி, இந்த குற்ற சம்பவம் எனது கவனத்திற்கு வந்தது. குற்றவாளிகளின் முழுமையான பெயர் தெரியவில்லை. அவர்களது முகவரியும் அப்போது பதிவு செய்யப்படவில்லை. இது முற்றிலும் ஒரு பழைய வழக்கு. ஆனால், புகாரானது உண்மை தன்மை வாய்ந்தது போல் தோன்றியது. அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஏனெனில் குழந்தை பருவத்தில் இருந்தே அவர் பல வகையில் பாதிக்கப்பட்டு போயுள்ளார். ஒரு விரிவான தேடுதலுக்கு பின்னர், குற்றவாளிகளான சகோதரர்களை நாங்கள் அடையாளம் காண முடிந்தது. அவர்கள் ஹடாப் பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. அவர்களை அதிகாரிகள் நெருங்கி விசாரிக்கும்போது, அப்படி ஒரு பெண்ணை வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து மரபணு சோதனை நடந்தது. 2021-ம் ஆண்டு ஜூலையில் ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் முடிவுகள் வெளிவந்தன. அதில், குற்றவாளி முகமது ரஜி என்பவரே பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனுக்கு உயிரியல் தந்தை என உறுதியானது. உடனடியாக கோர்ட்டில் இருந்து வாரண்ட் பெற்று அவரை கைது செய்ய காவலர்கள் முயன்றனர். ஆனால், அதற்கு முன்பே அவர்கள் தப்பி விட்டனர். கிட்டத்தட்ட வழக்கு முடிவடையும் சூழலை நாங்கள் நெருங்கி இருந்தோம். இதனால், பல தனிப்படைகளை அமைத்து பல்வேறு இடங்களில் சகோதர்கள் இருவரையும் தேடினோம். இருவரின் இருப்பிடம் பற்றி அறிவதில் கண்காணிப்பு குழுவின் பணி முக்கியம் வாய்ந்தது. பல ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களை கண்டறிவது அவ்வளவு எளிய பணியல்ல.

    இறுதியாக, முகமது ரஜி கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 2வது குற்றவாளியான, நாக்கி ஹசன் ஒடிசாவில் மறைந்துள்ளார் என கூறப்படுகிறது. அவரை தேடும் பணி தொடர்கிறது.

    இவ்வாறு சிறப்பு எஸ்.பி. கூறியுள்ளார்.

    12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது தாயை, தனித்து விடப்பட்ட அவரது மகன் 28 ஆண்டுகளுக்கு பின் தேடி கண்டுபிடித்து நீதி கிடைக்க உதவிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்புடன் பேசப்பட்டுகிறது.

    • அதிக பயணிகள் ஏற்றி வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை.
    • ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன், உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.

    பதேபூர்:

    உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் பிந்த்கி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தினர். அதில் வழக்கத்திற்கு மாறாக அதிக பயணிகள் இருப்பதை பார்த்த போலீசார் அவர்களை வெளியே வருமாறு கூறினர். 

    #WATCH | Uttar Pradesh | Police seized an auto and imposed a fine of Rs 11,500 after 27 people were found traveling in it in the Bindki PS area of Fatehpur district, yesterday

    அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஆட்டோவில் இருந்து 4 பெண்கள், 16 குழந்தைகள் என மொத்தம் 27 பேர் இருந்தனர். அவர்களை எச்சரிக்கை செய்த அனுப்பிய போலீசார், உடனடியாக அந்த ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன், அதன் உரிமையாளருக்கு 11,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. 

    ×