என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல் உதவி செயலி"

    • அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
    • செயலியை Google Play Store, App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் கோவி.செழியன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் 'காவல் உதவி' (Kaaval Uthavi) செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    அவசர காலங்களில் சிவப்பு நிற `அவசரம்' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும்.

    மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இச்செயலியை Google Play Store, App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று காவல் உதவி செயலியை தங்களது செல்போனில் பயன்படுத்த பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
    • பெண்கள் பாதுகாப்பு குறித்து கமிஷனர் சங்கர் துண்டு பிரசுரம் வழங்கினார்.

    ஆவடி:

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பூந்தமல்லி பஸ்நிலையத்தில் காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து மாணவிகள் பெண்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்து கொண்டு பெண்களிடையே காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவல் உதவி செயலியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்து அதன் பயன்பாடு குறித்து பள்ளி-கல்லூரி மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களிடையே செயல்முறை விளக்கம் அளித்தார்.

    அப்போது ஏராளமான பெண்கள், மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று காவல் உதவி செயலியை தங்களது செல்போனில் பயன்படுத்த பதிவிறக்கம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு குறித்து கமிஷனர் சங்கர் துண்டு பிரசுரம் வழங்கினார்.

    இதேபோல் கூடுதல் போலீஸ் கமிஷனர் பவர்னீஸ்வரி, போக்கு வரத்து துணை போலீஸ் கமிஷனர் அன்பு ஆகியோர் ஆவடி, திருவேற்காடு பஸ்நிலையத்தில் பஸ்சில் பயணம் செய்து பெண்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செங்குன்றம் பஸ்நிலையத்தில் துணை கமிஷனர்கள். மகேஷ்வரன், பால கிருஷ்ணன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி
    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு

    நாகர்கோவில்:

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது.

    சாலை விதிகள் அதன் முக்கியத்துவம், காவல் உதவி செயலி ,காவல்துறை உங்கள் நண்பன்,பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து இருந்தனர். அந்த ஓவியங்கள்நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பார்வை யிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

    காவல்துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படு த்தும் வகையில் இந்த ஓவிய ப்போட்டி நடத்தப்பட்டு உள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை மாணவர்கள் வரைந்து அனுப்பி உள்ளனர்.இதை ஒரு குழுவினர் ஆய்வு செய்து சிறந்த ஓவியத்தை தேர்வு செய்ய உள்ளனர்.

    பொதுமக்கள் காவல் உதவி செயலி என்ற ஆப்பை பயன்படுத்தி புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.போலீஸ் நிலையங்களுக்கு நேரில் வந்து புகார் அளிப்ப தை விட காவல் உதவி செயலி என்ற ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம். அனைவரும் உடனடியாக உங்களது செல்போனில் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதில் அளிக்கப்படும் புகார்கள் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கூட செல்லும்.

    பூதப்பாண்டியில் குளத்தில் மாணவன் ஆதில் பிணமாக கிடந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஏ.டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×