search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிழற்குடை"

    • சாலை விரிவாக்கத்தின் போது பஸ் நிலையம் எடுக்கப்பட்டது
    • குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர்கள் நிலை மிகவும் கஷ்டமாக இருந்து வருகிறது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கம் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டி பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் வண்டலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பஸ் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மார்க்கத்தில் மகேந்திரா சிட்டி தொடங்கி சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், பொத்தேரி, காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் வரை சாலையோரத்தில் எந்த பஸ் நிறுத்த நிழற்குடையும் இல்லை.

    இதனால் பயணிகள் சாலையோரத்தில் வெட்ட வெளியில் பஸ்களுக்கு காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விபத்து அபாயமும் உள்ளதால் பயணிகள் அச்சத்துடன் சாலையில் காத்திருக்கிறார்கள்.

    மகேந்திரா சிட்டி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகளும், மறைமலைநகர், பொத்தேரியை சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான தனியார் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. தினந்தோறும் மாணவ, மாணவிகள் பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலில் சாலையோரம் பஸ்களுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மதிய வேளையில் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் தவித்து வருகிறார்கள்.

    இதேபோல் ஊரப்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் வழித் தடங்களிலும் பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி வரை சாலையோரத்தில் பஸ்நிறுத்த நிழற்குடை இல்லை.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, சாலை விரிவாக்கத்தின் போது பஸ் நிலையம் எடுக்கப்பட்டது, சாலை விரிவாக்கம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பஸ்பயணிகளுக்கு நிழற்குடை, பஸ்நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்று தெரியவில்லை. சாலையோரத்தில் எது பஸ் நிறுத்தம் என்று தெரியாமல் பயணிகள் கூட்டமாக நிற்கும் போது சிறிது தூரம் தாண்டி பஸ்கள் நிறுத்தப்படுகிறது.

    பின்னர் பயணிகள் முண்டியடித்து ஓடிச்சென்று ஏறும் நிலை உள்ளது. குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர்கள் நிலை மிகவும் கஷ்டமாக இருந்து வருகிறது. மதியம் வெயிலில் வெட்டவெளியில் நிற்கமுடியாமல் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் விரைவில் இந்த பகுதியில் பஸ்நிறுத்த நிழற்குடை அமைக்க சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    • சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் இருந்து திருக்கோவிலுார்-தியாகதுருகம் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ரிஷிவந்தியம் பெருமாள் கோவில் பஸ் நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக சாலையை ஆக்கி ரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், டீக் கடைகள், ஜெராக்ஸ் கடை, பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நேற்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சவுரிராஜ், வாணாபுரம் தாசில்தார் குமரன், துணை தாசில்தார் சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணையன், வருவாய் ஆய்வாளர் சங்கீதா, ஊராட்சி தலைவர் வினிதாமகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் தோப்புக்காரன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். அப்போது ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நாலுகோட்டையில் ரூ.5 ½ லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைத்தற்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி கூறப்பட்டது.
    • வார்டு உறுப்பினர் கண்ணன், அழகர் ஆகியோர் பெற்று கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை வடக்கு ஒன்றியம் நாலுகோட்டை கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைத்திட சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நிர்வாக அனுமதியினை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் வழங்கினார்.

    இதனை நாலு கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் துரைப்பாண்டி, முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கிளைச் செயலாளர் உடையப்பன், வார்டு உறுப்பினர் கண்ணன், அழகர் ஆகியோர் பெற்று கொண்டனர்.

    நிழற்குடை அமைத்து நிதிஒதுக்கிய செந்தில்நாதன் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • சாக்கடையை கடந்து சென்று அமரும் அவலம்
    • இருக்கைகள் சிதலமாகி உடைந்து விழும் அபாயநிலையில் உள்ளது

    குனியமுத்தூர்,

    கோவை ஹோப்ஸ் காலேஜில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் காமராஜர் ரோட்டில், மணிஸ் தியேட்டர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன்வழியாக காந்திபுரம், டவுன்ஹாலுக்கு எண்ணற்ற பஸ்கள் சென்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பயணிகளின் பயன்பாட்டிற்காக ஒரு நிழற்குடை அமைக்க ப்பட்டது. ஆனால் இதன் முன்பாக சாக்கடை ஓடுகிறது.

    அதனை கடந்து தான் நிழற்குடைக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே பயணிகள் யாரும் சாக்கடையை தாண்டி செல்வது இல்லை. சாலையில் நின்றபடி பஸ் ஏறி செல்லும் சூழ்நிலை உள்ளது.இந்த பகுதியில் ஏராளமான பள்ளி-கல்லூரி மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் காந்திபுரம் செல்வதற்கு இந்த நிழற்குடையை தான் பயன்படுத்த வேண்டி உள்ளது.

    அப்படியே ஒருவேளை சாக்கடையை தாண்டி உட்காருவதற்கு சென்றால், அங்கு இருக்கை வசதிகள் மோசமான நிலையில் உள்ளன. உடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே ஹோப் கல்லூரி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் முகம் சுளித்தபடி நிற்பதை பார்க்க முடிகிறது.

    கோவை நகரின் முக்கியமான பிரதான சாலையில் அமைக்கப்பட்டு உள்ள பயணிகள் நிழற்குடை இந்த அளவு மோசமாக இருக்குமா? என்று பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    எனவே போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்து, சாக்கடை மேல் கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 25 காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு நிழற்குடைகள் வழங்கினார்.
    • விளம்பு நிலை குடும்பத்தினருக்கு புதிய தையல் எந்திரமும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சாலையோரம் காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகள் தற்போது ஆரம்பித்துள்ள மழை காலத்திலும் தங்களது தொழிலை தடங்கலின்றி தொடர்ந்து செய்யும் வகையில் பெரிய அளவிலான நிழற்குடைகள் ஜோதி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

    தஞ்சை நகர பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 25 காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு அவரவர் பணி செய்யும் இடத்துக்கே நேரில் சென்று இந்த குடையை ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினார். மேலும் கோரிக்கையின் அடிப்படையில் விளிம்பு நிலை குடும்பத்தை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் புதிய தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

    இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறும்போது, "ஜோதி அறக்கட்டளை மூலம் மாநிலம் முழுவதும் விளிம்பு நிலை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு மழை காலத்திலும் தங்களது வேலை தடைபடாமல் தொடர நிழற்குடைகள் தொழிலாளிகள் பணி செய்யும் இடத்துக்கே நேரில் சென்று வழங்கப்பட்டது. மேலும் விளம்பு நிலை குடும்பத்தினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு புதிய தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது . மொத்தத்தில் ரூ. 65,000 மதிப்பீட்டில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன " என்றார்.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்கு மார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன
    • பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவட்டார் :

    பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் பேரூராட்சி தலைவர் அகஸ்டினிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று விஜய்வசந்த் எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.40 லட்சம் மதிப்பீட்டில் பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிந்து நேற்று பயணிகள் நிழற்குடையை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். நகர தலைவர் ஜான் போஸ்கே, வினுகுமார், மார்டின், அஜிகுமார், ஜெகன், ஜெயசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

    அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜான் இக்னோசியஷ், முன்னாள் வட்டார தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், மாவட்ட செயலாளர் கோபகுமார், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அவனியாபுரத்தில் நிழற்குடை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.
    • உட்காரக்கூட இட வசதியின்றி மாணவ, மாணவிகள் தவித்த வண்ணம் உள்ளனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் பகுதியில் சுமார் ஒரு லட் சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இப்ப–குதியில் இருந்து மதுரை பெரியார், அண்ணா, மாட் டுத்தாவணி, ஆரப்பாளை–யம் ஆகிய பேருந்து நிலை–யங்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆயி–ரத்திற்கும் மேற்பட்டோர் காலையில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில் அவனி–யாபுரத்தில் இரண்டு நிழற் குடைகள் இருந்தன. இதில் ஒன்று மிகவும் பழு–தடைந்து உடையும் தருவா–யில் இருந்த–தால் ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டு விடும் என்று கருதி சமீபத்தில் இடித்து அகற்றப் பட்டு விட்டது.

    மீதமுள்ள ஒரு நிழல் குடையும் இலை கடை ஆக்கிரமிப்பில் இருக்கிறது. இதனால் பொது மக்கள், மாணவ, மாணவிகள் உட்கா–ரவோ, நிற்கவோ கூட இட மின்றி தவித்து வருகிறார் கள். அதிலும் தற்போது கொளுத்தி வரும் வெயிலின் தாக்கத்தால் அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

    இந்த நிழற்குடையில் இருந்த பயணிகள் அமரும் இருக்கைகளையும், 92-வது வார்டு பகுதியில் தண்ணீர் திறந்து விடும் ஒப்பந்த ஊழியர்கள் உடைத்து சென்று தங்கள் அமர்வதற் காக நீர் தேக்கும் மேல் நிலைத் தொட்டிக்கு கீழே வைத்துள்ளனர்.

    எனவே வயது முதிர்ந்த பயணிகள் பேருந்து நிலை–யத்தில் நிழற்குடை இல்லாம–லும், அமருவதற்கு வசதி இல்லாமலும் மிகவும் தவித்து வருகின்றனர். இந்த நிழற்குடை ஆக்கிரமிப்பை அகற்ற அரசு அதிகாரிகள், உதவி பொறியாளர் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நிழற்குடை அருகே உள்ள முட்புதருக்குள் வீசப்பட்டு பயனற்று கிடக்கிறது.
    • உலகநாதபுரம் மெயின் ரோட்டில் மழைநீர் கால்வாய் பணிக்காக பஸ்நிறுத்த நிழற்குைடயை அகற்றினர்.

    திருவொற்றியூர்:

    எண்ணூர் உலகநாதபுரம் மெயின் ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் பணி நடைபெற்றது. இதற்காக அங்கிருந்த பஸ் நிறுத்த நிழற்குடையை தற்காலிகமாக அதிகாரிகள் அகற்றினர்.

    கடந்த 3 மாதத்துக்கு முன்பு மழைநீர் வடிகால் பணி முடிந்த நிலையில் பஸ் நிறுத்த நிழற்குடையை அதே இடத்தில் வைக்கப்படவில்லை. இதையடுத்து அந்த நிழற்குடை அருகே உள்ள முட்புதருக்குள் வீசப்பட்டு பயனற்று கிடக்கிறது.

    நிழற்குடை இல்லாததால் அப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயில் மற்றும் மழை நேரத்தில் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் அவர்கள் பஸ்சுக்காக பஸ்நிறுத்தம் இல்லாத இடத்தில் சாலையோரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    மழைநீர் வடிகால்வாய் பணி முடிந்து நிலையில் அப்பகுதியில் மீண்டும் பஸ்நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து எண்ணூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, உலகநாதபுரம் மெயின் ரோட்டில் மழைநீர் கால்வாய் பணிக்காக பஸ்நிறுத்த நிழற்குைடயை அகற்றினர்.

    இந்த பணி முடிந்தும் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த நிழற்குடை முட்புதரில் வீசப்பட்டு கிடக்கிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள். சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் பயணிகள் பயன்பாட்டிற்கு அதே பகுதியில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்
    • இந்த நிகழ்ச்சியில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி மேட்டுப்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் பாப்பு என்ற திருஞானசம்பந்தம், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாமணி, கிணத்துக்கடவு ஒன்றிய குழு தலைவர் நாகராணி கனகராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் சிங், ஒன்றிய பொருளாளர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற சாந்தலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தாமரை தென்னரசு, வசந்தி ராசு, கலைக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சபரி கிரிவாசன், கன்னிகா பரமேஸ்வரி, பாலு, வலசு ரவி மற்றும் கனகராஜ், விஸ்வநாதன், ஞானவேல், சதிஷ்குமார், கனகராஜ், வலசு ரவி, சுப்பிரமணியம், வடிவேல், சக்திவேல், குணா, கோவிந்தராஜ், மாரியப்பன், சின்ன நெகமம் மயில்சாமி, சண்முகம், கருப்புச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சீவலப்பேரி ஊராட்சியில் உள்ள எஸ்.என். பள்ளிவாசல் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.
    • நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    களக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீவலப்பேரி ஊராட்சியில் உள்ள எஸ்.என். பள்ளிவாசல் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், ராஜகோபால், சீவலப்பேரி ஊராட்சி தலைவர் அய்யம்மாள், துணை தலைவர் லலிதா, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், மத்திய வட்டார தலைவர் காளப்பெருமாள், நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், துணை தலைவர் காமராஜ், மூலைக்கரைப்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், கிழக்கு வட்டார தலைவர் சங்கரபாண்டி, கவுன்சிலர்கள் சங்கீதா ஆண்ட்ரூ, முத்துபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் ஓபேத், முன்னாள் ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் வசந்தா, மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், மாநில இணை செயலாளர் கமலா, காங்கிரஸ் ஊடகத்துறை ஆறுமுகராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆர்.ஆர்.துரை, வில்சன், தங்கராஜ், வேலுச்சாமி, வேலம்மாள், ஶ்ரீ தேவி, முருகன், சுகுமார், தி.மு.க. நிர்வாகி செந்தில் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ் போன்ற பொருட்களை வைப்பதற்கு மட்டுமே இந்த நிழற்குடை பயன்பட்டு வருகிறது.
    • வயதான முதியோர்கள் இதில் ஏறுவதற்கு முயற்சி செய்தால் தடுமாறி கீழே விழும் அவல நிலைதான் உள்ளது.

     குனியமுத்தூர்,

    கோவையின் அனைத்து பிரதான சாலைகளிலும் உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் அமருவதற்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

    அவற்றில் பெரும்பாலான நிழற்குடைகள் போதுமான வசதி இல்லாமல் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    குறிப்பாக கோவை-பொள்ளாச்சி ரோட்டில் சுந்தராபுரம் பகுதியை அடுத்த எல்.ஐ.சி காலனி பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.

    பயணிகள் ஏறி அமரும் அளவிற்கு அது இல்லாத நிலையில் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலும் இந்த பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் நின்று கொண்டுதான் இருப்பதை காண முடிகிறது. இன்னும் ஒரு சில பயணிகள் பஸ்சை எதிர்பார்த்து நீண்ட நேரம் நின்று கால் வலிக்கும் காரணத்தால், கீழே தரையில் அமர்ந்து காத்திருக்கும் அவல நிலையை காண முடிகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நிழற்குடை, தேவை இல்லாமல் இங்கு எதற்கு நின்று கொண்டி ருக்கிறது என்பது தெரிய வில்லை.

    பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்படாமல், ஏனோதானோ என்று நிறுவப்பட்ட நிழல் குடையால் யாருக்கு என்ன பயன்? குழந்தைகளை அழைத்துக் கொண்டு வரும் பெண்கள் கண்டிப்பாக இதில் ஏறி அமர முடியாது.

    மேலும் வயதான முதியோர்களும் இதில் ஏறுவதற்கு முயற்சி செய்தால் தடுமாறி கீழே விழும் அவல நிலைதான் உள்ளது .பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ் போன்ற பொருட்களை வைப்பதற்கு மட்டுமே இந்த நிழற்குடை பயன்பட்டு வருகிறது. எனவே பயணிகள் அமரக்கூடிய வகையில் நிழற்குடையை சரியான தத்தில் அமைத்தால் மட்டுமே இது பயன்பாட்டிற்கு வரும்.

    இல்லையென்றால் மழைக்கு ஒதுங்குவதற்கு மட்டுமே இது பயன்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நல்லது.

    பஸ்காக காத்திருக்கும் பயணிகளும் சற்று இளைப்பாரி அமரக்கூடிய சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அறந்தாங்கி அருகே புதிய பேருந்து நிழற்குடையை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
    • அமைச்சர் மெய்யநாதன் பள்ளி வளாகம், கழிவறைகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிட்டார்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காயக்காடு கிராமத்தில் புதிய பேருந்து நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு சுற்றுசுழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார். அதனை தொடர்ந்து ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து பள்ளி வளாகம், கழிவறைகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிட்டார். அப்போது ஆசிரியர்களை பள்ளி வளாகத்தை வீட்டை போல தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் 156 மாணவ மாணவியர்கள் படிக்கின்ற பள்ளியில் போதிய வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது. அரசு வழங்குகின்ற சலுகைகளை அரசு அதிகாரிகள் செயல்படுத்தாமல் தயக்கம் காட்டக் கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலரை சாடிய அமைச்சர் கட்டிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளியில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பீர்களா எனவும் குற்றம் சாட்டினார். எனவே உடனடியாக போதிய கட்டிட வசதிகளுக்கு பரிந்துரைக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.

    அமைச்சரின் செயலால் பொதுமக்கள் பெற்றோர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டாட்சியர் பாலக்கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×