search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ராம் ரமேஷ்"

    • 2019-ல் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்விகளை சந்தித்த நிலையில் அதிகமான இடங்கள் கிடைக்கும்.
    • பல்டி அடிப்பது நிதிஷ் குமாரின் பழைய பழக்கம். ஜூன் 4-ந்தேதி என்ன செய்யப் போகிறார் என்பது குறித்த எந்த தகவலும் என்னிடம் இல்லை.

    பாராளுமன்ற மக்களை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முழு மெஜாரிட்டியை பெறும். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள பல கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இணைய வரிசையில் நிற்கும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி தெளிவான தீர்க்கமான முழு மெஜாரிட்டியை பெறும். தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைவதற்கான வரிசையில் நிற்கும்.

    2019-ல் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்விகளை சந்தித்த நிலையில் இந்தமுறை பல மாநிலங்களில் மிகச் சிறந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும்.

    தேர்தல் முடிவுக்குப் பிறகு நிதிஷ் குமார் மற்றொரு பல்டி அடிக்க வாய்ப்புள்ளது என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பல்டி அடிப்பது நிதிஷ் குமாரின் பழைய பழக்கம். ஜூன் 4-ந்தேதி என்ன செய்யப் போகிறார் என்பது குறித்த எந்த தகவலும் என்னிடம் இல்லை. ஆனால், நாங்கள் அவர் இல்லாமல் அதிகாரத்தை பிடிக்க போகிறோம். இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கப் போகிறது. அங்கே ஐக்கிய ஜனதா தளத்தின் உதவி தேவையில்லை.

    பீகாரில் இருந்து ஆச்சர்யமான முடிவை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். அங்கே பல்டி தேவையிருக்காது. ஆனால் பல்டியடிக்க விரும்பினால், அதை நம்மால் தடுக்க முடியாது.

    ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா மாநிலங்களில் 2019-ல் நாங்கள் முற்றிலுமாக தோல்வியடைந்தோம். இந்த மாநிலங்களில் எங்களுக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும் என்பதை பார்க்கப் போகிறீர்கள். ராஜஸ்தானில் எங்களுடைய செயல்திறன் நன்றாக உள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் நாங்கள் கூட்டணியாக சிறந்த செயல்திறனை அடைவோம்.

    நான் இதை டெல்லியில் இருந்து சொல்லவில்லை. இந்த மாநிலங்களுக்கு எல்லாம் சென்றுள்ளேன். எங்களுடைய தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் சென்றுள்ளனர். 2019-ல் அவர்களுக்கு இருந்த சூழ்நிலை போன்று தற்போது எங்களுக்கு நிலவுகிறது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • வெளிப்படையாக பதில் அளிக்கக் கூடிய மற்றும் பொறுப்பான அரசை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
    • வெற்றியின் போது பெரிய மனதுடன் இருப்போம். பழி வாங்கும் அரசியல் இருக்காது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் பி.டி.ஜ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியக் கூட்டணி மக்களின் ஆதரவை பெற்று உள்ளது. 272-க்கு மேல் மிக அதிகமான இடங்களை பெறுவோம்.

    இந்தியா கூட்டணிக்கு சாதகமான முடிவுகள் வந்த 48 மணி நேரத்துக்குள் பிரதமரை இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும். 2004-ல் மன்மோகன் சிங்கை 3 தினங்களுக்குள் பிரதமராக தேர்வு செய்தோம். தற்போது 48 மணிநேரத்திலேயே முடிவு செய்து விடுவோம்.

    இந்தியா கூட்டணியில் அதிக இடங்களை பெறும் கட்சி பிரதமர் பதவிக்கு தானாகவே உரிமை கோரும். இந்தியா கூட்டணி மக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கும் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எங்கள் அணிக்கு வரலாம். அப்போது அந்த கட்சிகளை சேர்ப்பதா? இல்லையா? என்பதை காங்கிரஸ் மேலிடம் தான் தீர்மானிக்க வேண்டும்.

    மக்கள் ஆதரவை பெற்ற இந்தியா கூட்டணி அரசு நிலையாக இருக்கும். வெளிப்படையாக பதில் அளிக்கக் கூடிய மற்றும் பொறுப்பான அரசை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

    வெற்றியின் போது பெரிய மனதுடன் இருப்போம். பழி வாங்கும் அரசியல் இருக்காது. ஓய்வுக்கு பிறகு அவர் (மோடி) வாழ்க்கை எப்படி இருக்க போகிறது. தியானம் செய்யப் போகிறார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    ராஜஸ்தான், கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் எங்கள் நிலை மேம்படும். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்களை பெறும் கட்சியாக இருக்கும். பல்வேறு மாநிலங்களில் காங்கிரசுக்கு சாதகமான நிலை காணப்படுகிறது.

    ராகுல் காந்தியின் பாத யாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. வெவ்வேறு உத்திரவாதங்கள் அளிக்கப்பட்டன. இது இந்தியா கூட்டணியை மேம்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், ​​காந்தியை பற்றி மக்கள் தெரிந்து கொண்டார்கள்.
    • நாதுராம் கோட்சே காந்திஜியைக் கொன்றது அவரது சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட சூழல்தான்.

    1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

    தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "மகாத்மா காந்தி ஒரு சிறந்த ஆன்மா. கடந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியை உலகம் முழுவதும் அறியச் செய்வது நமது பொறுப்பு அல்லவா?

    தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு நிகரானவர் மகாத்மா காந்தி.

    காந்தி மூலமாக இந்தியா கவனம் பெற்று இருக்க வேண்டும். காந்தியின் தத்துவம் உலகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதை உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு நான் சொல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், காந்தி குறித்து மோடி பேசியது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "1982 க்கு முன் மகாத்மா காந்தியை உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படவில்லை என்று சொல்லும் பதவி விலகும் பிரதமர் எந்த உலகில் வாழ்கிறார் என்று தெரியவில்லை.

    மகாத்மாவின் பாரம்பரியத்தை யாராவது அழித்திருந்தால், அது பதவி விலகும் பிரதமரே. வாரணாசி, டெல்லி மற்றும் அகமதாபாத்தில் உள்ள காந்திய நிறுவனங்களை அவரது சொந்த அரசாங்கம் அழித்துவிட்டது.

    மகாத்மா காந்தியின் தேசியத்தை அறியாத ஆர்எஸ்எஸ்காரர்களின் அடையாளம் இதுதான். நாதுராம் கோட்சே காந்திஜியைக் கொன்றது அவரது சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட சூழல்தான்.

    2024 தேர்தல் மகாத்மா காந்தி பக்தருக்கும் கோட்சே பக்தருக்கும் இடையே நடைபெற உள்ளது. பதவி விலகும் பிரதமர் மற்றும் அவரது கோட்சே பக்தர் கூட்டாளிகளின் தோல்வி உறுதியாகியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    • 2004-ம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் பெயர் 4 நாட்களில் அறிவிக்கப்பட்டது.
    • குறுக்கு வழிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இது மனிதர்களுக்கு இடையிலான அழகுப் போட்டி அல்ல. நாங்கள் கட்சி சார்ந்த ஜனநாயகம். எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அதிகாரம் கிடைக்கும் என்பது கேள்வி.

    கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கும். கட்சி தனது தலைவரை தேர்ந்தெடுத்து அந்த தலைவர் பிரதமராகிறார்.

    2004-ம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் பெயர் 4 நாட்களில் அறிவிக்கப்பட்டது. இந்த முறை 4 நாட்கள் கூட ஆகாது. 2 நாளில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும். எம்.பி.க்கள் கூடி தேர்வு செய்வார்கள். இது ஒரு செயல்முறை.

    குறுக்கு வழிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் திமிர் பிடித்தவர்கள் அல்ல. சில மணி நேரத்தில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும். மிகப் பெரிய கட்சியின் வேட்பாளர் பிரதமர். 2004-ம் ஆண்டில் எப்படி நடந்ததோ அப்படியே நடக்கும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று சொல்வதை நாளை மறந்துவிடுவார். சொல்லவே இல்லை என்கிறார்.
    • அவர் காங்கிரஸ் கட்சியைத் தாக்கி வருகிறார். அவர் இந்து- முஸ்லிம் பற்றி பேசுகிறார்.

    பிரதமர் மோடி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும்போது, சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனக் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பிரதமர் தனது நினைவாற்றலை வேகமாக இழந்து வருகிறார். உண்மை மீது அவருக்கு ஒருபோதும் பற்று இருந்ததில்லை.

    அவர் ஒரு பொய்யர் (jhoothjeevi). இன்று சொல்வதை நாளை மறந்துவிடுவார். சொல்லவே இல்லை என்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியைத் தாக்கி வருகிறார். அவர் இந்து- முஸ்லிம் பற்றி பேசுகிறார். அவர் மங்களசூத்ரா பற்றி பேசுகிறார். அவர் முஸ்லிம் லீக் பற்றி பேசுகிறார். காங்கிரஸ் கட்சி மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கிறது என பேசுகிறார். இவை அனைத்தும் அவர் கூறிய பொய்யானவை.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஜாதி அடிப்படையில் நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
    • பா.ஜனதா தலைமையிலான அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவற்றை மிகவும் தவறாக வழி நடத்துகிறது.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று ராஞ்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதம் அடிப்படையில் வாக்காளர்களை பிரித்தவர் பிரதமர் மோடி. தற்போது இந்து- முஸ்லிம் அரசியல் பற்றி பேசவில்லை என பொய் சொல்கிறார். பிரதமர் மோடி தற்போது அவுட்கோயிங் (வெளியேறும்) பிரதம மந்திரியாகியுள்ளார். தொடக்க கால வாக்குப்பதிவுக்குப் பிறகு அவரின் விரக்தி இதை காட்டுகிறது. அமித் ஷா அவுட்கோயிங் உள்துறை மந்திரி. ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பொய்கள் என்ற தொற்றில் இருந்த நாம் விடுபடுவோம்.

    இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஜாதி அடிப்படையில் நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படும். பா.ஜனதா தலைமையிலான அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவற்றை மிகவும் தவறாக வழி நடத்துகிறது. அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.

    நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் பா.ஜனதா அரசு மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இந்தியா கூட்டணி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது. நாங்கள் இந்த தேர்தலில் அதுபோன்ற நிறுவனங்களை பாதுகாக்க போராடி வருகிறோம். வளங்கள் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறித்து காங்கிரஸ் பேசாது. ஆனால், உள்ளடக்கிய பகிர்ந்தளிப்பு பேசியது.

    இவ்வாறு ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
    • கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன் என்று மோடி கூறியுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். அதற்கான வேட்மனுவை இன்று பிரதமர் மோடி தாக்கல் செய்தார்.

    ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இத்தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

    அப்போது பேசிய மோடி, "கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. ரூ.140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்றார். தாய் குறித்து பேசும்போது பிரதமர் மோடி கண்கள் கலங்கி குரல் தழுதழுத்தது.

    இந்நிலையில், கங்கை நதி குறித்து மோடி பேசியது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

    • கங்கை நதியை தூய்மை செய்கிறோம் என ரூ.20,000 கோடி செலவு செய்த நிலையிலும், கங்கை தூய்மையாக இல்லையே ஏன்?

    • மோடி, தான் தத்தெடுத்த வாரணாசி கிராமங்களை கைவிட்டது எதற்கு?

    • வாரணாசியில் மகாத்மா காந்தியின் பெருமையை அழிக்க மோடி திட்டமிடுவது ஏன்?

    என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

    • நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு குற்றம்சாட்டியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
    • இது தொடர்பாக அவருக்கு தெரிந்திருந்தால், எதுவுமே செய்யாமல் இருந்தது ஏன்?.

    அதானி, அம்பானி டெம்போ மூலம் எதிர்க்கட்சிக்கு பணம் கொடுத்ததாக பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அதானி, அம்பானி குற்ச்சாட்டு குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடியை தடுப்பது எது? என ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    கடந்த 8-ந்தேதி டெம்போ மூலம் எதிர்க்கட்சிகளுக்கு அதானி மற்றும் அம்பானி பணம் சப்ளை செய்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு குற்றம்சாட்டியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இது தொடர்பாக அவருக்கு தெரிந்திருந்தால், எதுவுமே செய்யாமல் இருந்தது ஏன்?. அவரிடம் அத்தகைய விரிவான மற்றும் நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல்கள் இருந்தால் விசாரணை அமைப்புகளை (சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை) பயன்படுத்த தடுத்தது என்ன?

    கடந்த ஆண்டு ஹம் அதானி கே ஹைன் கவுன் (HAHK) சீரிஸ் கீழ் பிரதமரிடம் 100 கேள்விகளைக் கேட்டோம். தற்போது, டெம்போக்களில் பணப் பைகளைப் பெறுவது குறித்து நாட்டு மக்களுக்கு வாக்குமூலத்தோடு தனது நீண்ட மௌனத்தைக் கலைக்கிறாரா பிரதமர்?

    அதானியை சட்டத்திற்குப் புறம்பாக பாதுகாக்க பிரதமர் எவ்வளவு தூரம் சென்றார் என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு நன்கு தெரியும்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார்.
    • அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த 5-ம் கட்ட தேர்தலில்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குமிக்க தொகுதிகளாக இருக்கும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த இரு தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருந்தது. அமேதியில் ராகுலும், ரேபரேலி தொகுதியில் பிரியங்காவும் களம் இறக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியானதால் இந்த இரு தொகுதி வேட்பாளர்கள் தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

    ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று காலை அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார்.

    அதில், ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேசத்தின் அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி களமிறக்காதது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியுள்ளதாவது:-

    பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்தை தனது தீவிரமான பரப்புரையின்மூலம் ஒற்றை ஆளாக தவிடுபொடியாக்கி வருகிறார் பிரியங்கா காந்தி.

    காங்கிரஸ் கட்சிக்காக அவர் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குள் பிரியங்கா காந்தி சுருங்கிவிடக் கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டத்தில் பா.ஜ.க. மிகவும் மோசமாக செயல்பட்டது.
    • இரண்டாம் கட்டத்திலும் பா.ஜ.க. சிறப்பாக செயல்படப் போவதில்லை என காங்கிரஸ் கூறியது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இது உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் அவநம்பிக்கையான மற்றும் திட்டமிட்ட முயற்சியாகும்.

    முதல் கட்ட தேர்தலில் பா.ஜ.க. மிகவும் மோசமாக செயல்பட்டது. இரண்டாம் கட்டத்திலும் பா.ஜ.க. அவ்வளவு சிறப்பாக செயல்படப் போவதில்லை.

    மொத்தத்தில் பா.ஜ.க. பெரும்பான்மையைப் பெறப்போவதில்லை. இந்தியா கூட்டணி தெளிவான மற்றும் உறுதியான பெரும்பான்மை பெறப்போகிறது.

    பிரதமர் மோடியின் பிரசாரம் இப்போது விஷத்தால் நிறைந்துள்ளது. அவர் பேசும் மொழி அவரது கொந்தளிப்பை வெளிப்படுத்துகிறது.

    பிட்ரோடா சொல்வது அவரது சொந்த கருத்துகள். அவை இந்திய தேசிய காங்கிரசின் கருத்துக்கள் அல்ல என தெரிவித்தார்.

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் - நிர்மலா சீதாராமன்
    • பாஜக தோற்றுவிட்டால் அவர்களுக்கு இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள் - காங்கிரஸ்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

    "வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.

    தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்தது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் எம்.பி, "தேர்தல் பத்திர நன்கொடை முறையை திரும்பக் கொண்டு வருவோமென நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு பிரச்சனை என்னவென்றால், இந்த தேர்தலுக்கு அவர்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் இதில் அவர்கள் தோற்றுவிட்டால் இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என பா.ஜ.க கூறுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதையே பா.ஜ.க இப்போதும் விரும்புகிறது. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் எத்தனை கோடி கொள்ளையடிப்பார்கள் என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • எல்லைகளில் நீண்ட காலமாக நிலவும் சூழலுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டியது அவசியமென கருதுகிறேன்.
    • அப்போதுதான், இருதரப்பு உறவுகளில் உள்ள அசாதாரணத் தன்மையை நாம் பின்தள்ள முடியும்.

    இந்தியா- சீனா இடையிலான பிரச்சனை குறித்த பிரதமர் மோடியின் பதில் பயனற்றது, பலவீனமானது என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    சீனாவுக்கு ஒரு வலிமையான கருத்தை அனுப்புவதற்கு பிரதமர் மோடிக்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும், அவருடைய பயனற்ற மற்றும் பலவீனமான பதில், இந்திய பகுதிகள் தங்களுக்கானது எனக் கூறி வரும் சீனாவிற்கு மேலும் தையரித்தை கொடுப்பதை போல் இருக்கிறது.

    சீனா பிரச்சனை தொடர்பான பிரதமர் மோடியின் ரியாக்சன் அவமானகரமானது மட்டும் அல்ல. மேலும், நமது எல்லையை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்த நம்முடைய தியாகிகளை இழிவுப்படுத்துவதாகும்.

    சீனாவோடு உள்ள எல்லையை பாதுகாப்பதில் இருந்து தோல்வியடைந்த நிலையில், ஒரு அங்குல நிலம் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என டெலிவிசனில் 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பேசும்போது மறைத்ததற்காக 140 கோடி மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    'நியூஸ்வீக்' வாராந்திர செய்தி இதழுக்கு பேட்டியளித்த பிரதமா் மோடி, இந்திய- சீன எல்லை விவகாரம் குறித்து பேசியுள்ளாா். இந்திய- சீன எல்லை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

    எல்லைகளில் நீண்ட காலமாக நிலவும் சூழலுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டியது அவசியமென கருதுகிறேன். அப்போதுதான், இருதரப்பு உறவுகளில் உள்ள அசாதாரணத் தன்மையை நாம் பின்தள்ள முடியும்.

    இந்தியா- சீனா இடையிலான அமைதியான மற்றும் ஸ்திரமான உறவுகள், இரு நாடுகளுக்கும் இப்பிராந்தியத்துக்கும் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகுக்கும் முக்கியமானது. தூதரகம், ராணுவ ரீதியில் நோ்மறையான, ஆக்கப்பூா்வமான இருதரப்பு பேச்சுவாா்த்தைகள் மூலம் எல்லையில் அமைதியை மீட்டெடுக்க முடியும் என நம்புகிறேன்

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

    ×